<p><strong><ins>விதையின் கற்றல்</ins></strong></p><p>முளைவிடும் சிறுவிதை</p><p>பிரசவ சுகமளிக்கிறது பிரபஞ்சத்திற்கு</p><p>தரை நனைக்கும்</p><p>மழைத்துளி மூலம்</p><p>வாசம் பழகிக்கொள்கிறது</p><p>இரைகொத்தும்</p><p>பறவைக் கூட்டத்திடம்</p><p>சோறுண்ணும் கலை கற்று</p><p>இளநீரிலும்</p><p>பழங்களிலும் சேமிப்பைப் பயின்று</p><p>பாதைகளின் வழி</p><p>பயணங்களின் ஸ்பரிசமறிந்து</p><p>அருவி ஆறுகளில்</p><p>குளித்தலின் சுகம்தெரிந்து</p><p>வாழும் இந்த பூமியின் வாழ்க்கையை</p><p>சற்றும் புரிந்துகொள்ள முடிவதில்லை</p><p>சராசரி மனித வாழ்வால்...</p><p><em><strong> - சாமி கிரிஷ்</strong></em></p>.<p><strong><ins>விதிக்கப்பட்டவை</ins></strong></p><p>இரவு</p><p>அடுக்களையோடு இணைக்கப்பட்ட</p><p>பூஜையறை</p><p>பத்தாயத்தில் சிக்கிக்கொண்டு</p><p>தன் இஷ்ட தெய்வத்தை</p><p>வேண்டிக் கீச்சுக்கொண்டிருந்தது</p><p>எலி</p><p>பாகனுக்கு அடங்கியொடுங்கி</p><p>யாசக உலா சுற்றிவந்திருந்த களைப்பில்</p><p>பலமாக உறங்கிக்கொண்டிருந்தது</p><p>யானை</p><p>விடிந்தது</p><p>மூணு தோப்புக்கரணமும் </p><p>தலையில் குட்டும் போட்டுக்கொண்டார்கள்</p><p>எலிக்குக் கழுவேற்றம் </p><p>யானைக்கு அதே யாசகப் பிழைப்பு!</p><p><em><strong>- அர்ஜுன் ராஜ்</strong></em></p>.<p><strong><ins>கேட்காக் கதை</ins></strong></p><p>மீன் தூண்டிலிடம் ஈரம் பற்றியும்,</p><p>மண் தரையில் காற்று நுழைந்தது பற்றியும்</p><p>ஒரு கதையிருக்கிறது</p><p>தூண்டிலில் சிக்கி</p><p>முன்பொரு நாள்</p><p>மடிந்த மண்புழுக்கள் கூறியதாக.</p><p><em><strong>- நட்சத்திரா</strong></em></p>.<p><strong><ins>கணம்</ins></strong></p><p>கிளைகளில் மழையைப்</p><p>பிடித்து வைத்திருக்கிறது மரம்</p><p>இப்போது </p><p>நீங்களோ நானோ </p><p>உலுக்கி விடுவதொன்றே பாக்கி.</p><p><em><strong> - மகேஷ் சிபி</strong></em></p>.<p><strong><ins>வாழ்தலின் ஏக்கம்</ins></strong></p><p>குளம் வெட்டி</p><p>வளர்த்த மீனின்</p><p>செதில்களில்</p><p>வறண்ட ஆற்றின்</p><p>சுடு மணல் துகள்கள்</p><p>செருகிக் கிடக்கின்றன</p><p>பாசி படர்தலின்</p><p>ஏக்கத்தோடு!</p><p><em><strong>- தக்சன்</strong></em></p>.<p><strong><ins>குமிழியின் சிரிப்பு</ins></strong></p><p>காற்றை ஒருகணம்</p><p>சிறைபிடித்துவிட்ட</p><p>மகிழ்ச்சியில்</p><p>வெடித்துச் சிரித்தவாறே</p><p>மரிக்கின்றன</p><p>நீர்க்குமிழிகள்.</p><p><strong>- அஜித்</strong></p>
<p><strong><ins>விதையின் கற்றல்</ins></strong></p><p>முளைவிடும் சிறுவிதை</p><p>பிரசவ சுகமளிக்கிறது பிரபஞ்சத்திற்கு</p><p>தரை நனைக்கும்</p><p>மழைத்துளி மூலம்</p><p>வாசம் பழகிக்கொள்கிறது</p><p>இரைகொத்தும்</p><p>பறவைக் கூட்டத்திடம்</p><p>சோறுண்ணும் கலை கற்று</p><p>இளநீரிலும்</p><p>பழங்களிலும் சேமிப்பைப் பயின்று</p><p>பாதைகளின் வழி</p><p>பயணங்களின் ஸ்பரிசமறிந்து</p><p>அருவி ஆறுகளில்</p><p>குளித்தலின் சுகம்தெரிந்து</p><p>வாழும் இந்த பூமியின் வாழ்க்கையை</p><p>சற்றும் புரிந்துகொள்ள முடிவதில்லை</p><p>சராசரி மனித வாழ்வால்...</p><p><em><strong> - சாமி கிரிஷ்</strong></em></p>.<p><strong><ins>விதிக்கப்பட்டவை</ins></strong></p><p>இரவு</p><p>அடுக்களையோடு இணைக்கப்பட்ட</p><p>பூஜையறை</p><p>பத்தாயத்தில் சிக்கிக்கொண்டு</p><p>தன் இஷ்ட தெய்வத்தை</p><p>வேண்டிக் கீச்சுக்கொண்டிருந்தது</p><p>எலி</p><p>பாகனுக்கு அடங்கியொடுங்கி</p><p>யாசக உலா சுற்றிவந்திருந்த களைப்பில்</p><p>பலமாக உறங்கிக்கொண்டிருந்தது</p><p>யானை</p><p>விடிந்தது</p><p>மூணு தோப்புக்கரணமும் </p><p>தலையில் குட்டும் போட்டுக்கொண்டார்கள்</p><p>எலிக்குக் கழுவேற்றம் </p><p>யானைக்கு அதே யாசகப் பிழைப்பு!</p><p><em><strong>- அர்ஜுன் ராஜ்</strong></em></p>.<p><strong><ins>கேட்காக் கதை</ins></strong></p><p>மீன் தூண்டிலிடம் ஈரம் பற்றியும்,</p><p>மண் தரையில் காற்று நுழைந்தது பற்றியும்</p><p>ஒரு கதையிருக்கிறது</p><p>தூண்டிலில் சிக்கி</p><p>முன்பொரு நாள்</p><p>மடிந்த மண்புழுக்கள் கூறியதாக.</p><p><em><strong>- நட்சத்திரா</strong></em></p>.<p><strong><ins>கணம்</ins></strong></p><p>கிளைகளில் மழையைப்</p><p>பிடித்து வைத்திருக்கிறது மரம்</p><p>இப்போது </p><p>நீங்களோ நானோ </p><p>உலுக்கி விடுவதொன்றே பாக்கி.</p><p><em><strong> - மகேஷ் சிபி</strong></em></p>.<p><strong><ins>வாழ்தலின் ஏக்கம்</ins></strong></p><p>குளம் வெட்டி</p><p>வளர்த்த மீனின்</p><p>செதில்களில்</p><p>வறண்ட ஆற்றின்</p><p>சுடு மணல் துகள்கள்</p><p>செருகிக் கிடக்கின்றன</p><p>பாசி படர்தலின்</p><p>ஏக்கத்தோடு!</p><p><em><strong>- தக்சன்</strong></em></p>.<p><strong><ins>குமிழியின் சிரிப்பு</ins></strong></p><p>காற்றை ஒருகணம்</p><p>சிறைபிடித்துவிட்ட</p><p>மகிழ்ச்சியில்</p><p>வெடித்துச் சிரித்தவாறே</p><p>மரிக்கின்றன</p><p>நீர்க்குமிழிகள்.</p><p><strong>- அஜித்</strong></p>