<p><strong>நான்கு கால் குழந்தை</strong></p><p>பிரசவம் முடிந்து</p><p>பெண் குழந்தையோடு</p><p>ஊருக்குப் போய்விட்ட</p><p>சுசீலா அக்காவின் வீடு</p><p>பூட்டியே இருக்கிறது</p><p>அலுவலகத்திலிருந்து நேராக</p><p>பாப்பாவைப் பார்க்கப் போய்விடும்</p><p>ராசு மாமாவும் வீட்டுக்கு வருவதில்லை</p><p>வீட்டு வாசலில்</p><p>தினமும் வெள்ளைநிறப் பூனை ஒன்றுக்கு</p><p>பாலூற்றி வைக்கும் பீங்கான் பாத்திரம்</p><p>காய்ந்துபோய்க் கிடக்கிறது</p><p>யாருமற்ற வீட்டுக்கு</p><p>நாள்தோறும் வந்துபோகும்</p><p>அந்த வெள்ளைநிறப்பூனை</p><p>பீங்கான் பாத்திரத்தில்</p><p>சுசீலா அக்காவின் முகத்தைத் தேடுகிறது</p><p>திறக்கப்படாத கதவின் முன் அமர்ந்து</p><p>நான்கு கால் குழந்தையாக மாறி</p><p>அழுகின்ற பூனையின் சத்தம்</p><p>சுசீலா அக்காவுக்குக் கேட்டிருக்க வேண்டும்</p><p>இல்லையென்றால் பூனைக்குப்</p><p>பால் வைக்காமல் பாப்பாவைப் பார்க்க வராதீங்க என்று மாமாவிடம்</p><p>சொல்லியிருக்க மாட்டாள்.</p><p><em><strong>- மு.மகுடீசுவரன்</strong></em></p>.<p><strong>பீகார் 21 கிலோமீட்டர்</strong></p><p>இன்றைய முக்கியச் செய்தியினூடே</p><p>அதிர்ந்த சற்றுமுன் செய்தியில்</p><p>கிடத்தி வைத்தவர்களைக் கண்டதும்</p><p>பதறியபடி அமர்ந்தேன்.</p><p>அந்தப் பதினேழு பேரில்</p><p>தெளிவாய்த் தெரிந்தான்</p><p>அது அவன்தான் அவனேதான்.</p><p>பீகாரிலிருந்து புலம்பெயர்ந்து</p><p>தச்சூர் கூட்டுரோட்டின்</p><p>வேப்பமரத்தின் கீழ் தள்ளுவண்டியில்</p><p>இருபது ரூபாய்க்கு சாத்துக்குடி பிழிந்து</p><p>பயணிகளின் தாகம் தீர்த்தவன்.</p><p>மார்ச் இருபதாம் தேதி</p><p>`சார் கேசே' என்றவன் `மே' பத்தில்</p><p>கிடக்கிறான் கிடத்தி வைக்கப்பட்டவர்களில்</p><p>ஏழாவது நபராக.</p><p><em><strong>- துரை. நந்தகுமார்</strong></em></p>.<p><strong>எலிப்பொறி </strong></p><p>ஒரு வீட்டின்</p><p>எல்லா எலிகளும்</p><p>எலிப்பொறியில்</p><p>சிக்குவதில்லை...</p><p>எலிப்பொறியில் சிக்கிக்கொள்ள</p><p>ஒரு குறிப்பிட்ட நரம்பின் படபடப்பு</p><p>தேவைப்படுகிறது...</p><p>பார்க்கப்போனால்</p><p>அந்த நரம்பைப் படபடக்கச்செய்யும்</p><p>உந்துவிசையை</p><p>வீடானது எப்போதும்</p><p>வெளிப்படுத்தியபடியேதான்</p><p>இருக்கிறது...</p><p>இவையெல்லாவற்றையும் மீறி</p><p>எலிப்பொறியில் சிக்காமல் தப்பித்துவிடும்</p><p>எலிகளுக்கு</p><p>ஏனோ</p><p>எந்த வீட்டிலுமே</p><p>சிலைகள் வைக்கப்படுவதில்லை...</p><p><em><strong> - ராம்பிரசாத்</strong></em></p>.<p><strong>மழை</strong></p><p>கோடை வெயிலில்</p><p>காய்ந்துபோன கிணறும்</p><p>வறண்டுபோன குளமும்</p><p>தண்ணீரைத் தொலைத்திருக்க</p><p>தண்ணீர் தேடி நாக்கு வறண்டிருந்த</p><p>என் மாடுகளுக்காக</p><p>கருவேல மரத்துக்</p><p>கற்றாழைக்குருவிகளிடத்து</p><p>உதவி கேட்டிருந்தேன்</p><p>உதவுவதாய்ச் சொல்லிவிட்டு</p><p>இரண்டு நாள்களுக்கு முன்னர்</p><p>வானேறிக் கடல்நோக்கிப் பறந்த குருவிகள்</p><p>இப்போது மேகங்களை</p><p>இழுத்துக்கொண்டு வருகின்றன</p><p>எம் கிணறுகளை நோக்கியும்</p><p>எம் குளங்களை நோக்கியும்</p><p>பருவமழை தொடங்கிவிட்டதாய்</p><p>வானொலியிலும்</p><p>தொலைக்காட்சியிலும்</p><p>செய்தித்தாள்களிலும்</p><p>அறிவிப்பு செய்கிறீர்கள் நீங்கள்.</p><p><strong>-சௌவி</strong></p>
<p><strong>நான்கு கால் குழந்தை</strong></p><p>பிரசவம் முடிந்து</p><p>பெண் குழந்தையோடு</p><p>ஊருக்குப் போய்விட்ட</p><p>சுசீலா அக்காவின் வீடு</p><p>பூட்டியே இருக்கிறது</p><p>அலுவலகத்திலிருந்து நேராக</p><p>பாப்பாவைப் பார்க்கப் போய்விடும்</p><p>ராசு மாமாவும் வீட்டுக்கு வருவதில்லை</p><p>வீட்டு வாசலில்</p><p>தினமும் வெள்ளைநிறப் பூனை ஒன்றுக்கு</p><p>பாலூற்றி வைக்கும் பீங்கான் பாத்திரம்</p><p>காய்ந்துபோய்க் கிடக்கிறது</p><p>யாருமற்ற வீட்டுக்கு</p><p>நாள்தோறும் வந்துபோகும்</p><p>அந்த வெள்ளைநிறப்பூனை</p><p>பீங்கான் பாத்திரத்தில்</p><p>சுசீலா அக்காவின் முகத்தைத் தேடுகிறது</p><p>திறக்கப்படாத கதவின் முன் அமர்ந்து</p><p>நான்கு கால் குழந்தையாக மாறி</p><p>அழுகின்ற பூனையின் சத்தம்</p><p>சுசீலா அக்காவுக்குக் கேட்டிருக்க வேண்டும்</p><p>இல்லையென்றால் பூனைக்குப்</p><p>பால் வைக்காமல் பாப்பாவைப் பார்க்க வராதீங்க என்று மாமாவிடம்</p><p>சொல்லியிருக்க மாட்டாள்.</p><p><em><strong>- மு.மகுடீசுவரன்</strong></em></p>.<p><strong>பீகார் 21 கிலோமீட்டர்</strong></p><p>இன்றைய முக்கியச் செய்தியினூடே</p><p>அதிர்ந்த சற்றுமுன் செய்தியில்</p><p>கிடத்தி வைத்தவர்களைக் கண்டதும்</p><p>பதறியபடி அமர்ந்தேன்.</p><p>அந்தப் பதினேழு பேரில்</p><p>தெளிவாய்த் தெரிந்தான்</p><p>அது அவன்தான் அவனேதான்.</p><p>பீகாரிலிருந்து புலம்பெயர்ந்து</p><p>தச்சூர் கூட்டுரோட்டின்</p><p>வேப்பமரத்தின் கீழ் தள்ளுவண்டியில்</p><p>இருபது ரூபாய்க்கு சாத்துக்குடி பிழிந்து</p><p>பயணிகளின் தாகம் தீர்த்தவன்.</p><p>மார்ச் இருபதாம் தேதி</p><p>`சார் கேசே' என்றவன் `மே' பத்தில்</p><p>கிடக்கிறான் கிடத்தி வைக்கப்பட்டவர்களில்</p><p>ஏழாவது நபராக.</p><p><em><strong>- துரை. நந்தகுமார்</strong></em></p>.<p><strong>எலிப்பொறி </strong></p><p>ஒரு வீட்டின்</p><p>எல்லா எலிகளும்</p><p>எலிப்பொறியில்</p><p>சிக்குவதில்லை...</p><p>எலிப்பொறியில் சிக்கிக்கொள்ள</p><p>ஒரு குறிப்பிட்ட நரம்பின் படபடப்பு</p><p>தேவைப்படுகிறது...</p><p>பார்க்கப்போனால்</p><p>அந்த நரம்பைப் படபடக்கச்செய்யும்</p><p>உந்துவிசையை</p><p>வீடானது எப்போதும்</p><p>வெளிப்படுத்தியபடியேதான்</p><p>இருக்கிறது...</p><p>இவையெல்லாவற்றையும் மீறி</p><p>எலிப்பொறியில் சிக்காமல் தப்பித்துவிடும்</p><p>எலிகளுக்கு</p><p>ஏனோ</p><p>எந்த வீட்டிலுமே</p><p>சிலைகள் வைக்கப்படுவதில்லை...</p><p><em><strong> - ராம்பிரசாத்</strong></em></p>.<p><strong>மழை</strong></p><p>கோடை வெயிலில்</p><p>காய்ந்துபோன கிணறும்</p><p>வறண்டுபோன குளமும்</p><p>தண்ணீரைத் தொலைத்திருக்க</p><p>தண்ணீர் தேடி நாக்கு வறண்டிருந்த</p><p>என் மாடுகளுக்காக</p><p>கருவேல மரத்துக்</p><p>கற்றாழைக்குருவிகளிடத்து</p><p>உதவி கேட்டிருந்தேன்</p><p>உதவுவதாய்ச் சொல்லிவிட்டு</p><p>இரண்டு நாள்களுக்கு முன்னர்</p><p>வானேறிக் கடல்நோக்கிப் பறந்த குருவிகள்</p><p>இப்போது மேகங்களை</p><p>இழுத்துக்கொண்டு வருகின்றன</p><p>எம் கிணறுகளை நோக்கியும்</p><p>எம் குளங்களை நோக்கியும்</p><p>பருவமழை தொடங்கிவிட்டதாய்</p><p>வானொலியிலும்</p><p>தொலைக்காட்சியிலும்</p><p>செய்தித்தாள்களிலும்</p><p>அறிவிப்பு செய்கிறீர்கள் நீங்கள்.</p><p><strong>-சௌவி</strong></p>