<p>இரண்டு மணி் நேர</p><p>தோட்ட வேலைக்கு</p><p>இருநூறு கூலி பேச</p><p>அரைமணி நேரமானது</p><p>கூடுதலாய்க் கேட்ட</p><p>ஐம்பது ரூபாய் பேரத்தில்</p><p>ஒப்பந்தம் முறியும் வரை சென்று</p><p>ஒரு வழியாய் ஓகே ஆனது</p><p>காலைச் சிற்றுண்டியும்</p><p>ஒரு மணி நேர இடைவெளியில்</p><p>தேநீரும்</p><p>வேலை முடிந்தவுடன்</p><p>பழச் சாறும்</p><p>ஒப்பந்தத்தில் இல்லா</p><p>ஷரத்து இணைக்கப்பட்டு</p><p>அம்மா வேலை பார்த்தவாறே</p><p>ஊர்க் கதைகளைப் பரிமாற</p><p>தோட்டக்காரர் உறவாகிப்போனார்</p><p>பேச்சு சுவாரசியத்தில் கூடுதலாய்</p><p>நூறு ரூபாயைக் கொடுக்க</p><p>திருப்பிக்கொடுத்த</p><p>தோட்டக்காரருக்கும்</p><p>அம்மாவிற்கும்</p><p>அந்த ஐம்பது ரூபாய்</p><p>வழக்கொன்று அடுத்த வாய்தா</p><p>வாங்கியிருந்தது.</p><p><em>- காரைக்குடி சாதிக்</em></p>.<p>பத்து மணியைக் கடந்தும் </p><p>இரவெனத் தெரிந்தும்</p><p>இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கிறான்</p><p>உனக்குப் படியளக்கும் வெளிநாட்டு முதலாளி</p><p>உன் அலைபேசியில்</p><p>தாய்மொழியை மறக்கும் அளவுக்கு</p><p>அவன் மொழியைப் பழக்கிய</p><p>உன் நாக்கு இப்போதெல்லாம்</p><p>சுவை நரம்புகளுக்கு </p><p>வேலையே தருவதில்லை</p><p>அடுத்தமாத வேலைக்கான</p><p>முன் ஒத்திகைகள்</p><p>கணினியில் தொகுத்து வைக்க வேண்டிய</p><p>குறிப்புகளென ஒன்று விடாமல்</p><p>கேட்டுத் துளைத்துக்கொண்டிருப்பவன்</p><p>அவன் வேலைகளிலேயே குறியாகக் கிடக்க</p><p>அரை உறக்கத்திலும்</p><p>காத்துக்கிடக்கும் காமத்திலும்</p><p>சாபம் விடுகிறேன்</p><p>அவன் நாட்டில் இரவென்ற</p><p>ஒன்று இல்லாமல்போக</p><p>நவீன அகலிகையாய்.</p><p><em>- பிரபுசங்கர். க</em></p>.<p>மீன் வீச்சமின்றி </p><p>மிதப்பில் இருக்கிறது </p><p>நீர் வறண்ட குளம்.</p><p>தானிய மூட்டைகள் </p><p>இருந்த வீட்டில் </p><p>எலிகள் பறித்த துளைகள்</p><p>வெளிறிய கண்களென.</p><p>ஆடிப்பட்டம் அழிந்து </p><p>வெம்மை விரவிய நிலம் </p><p>அடமானம் வசம்.</p><p>நன்செய் நிலம் </p><p>கைநழுவிய தவிப்பில் </p><p>சினத்தில் இருக்கிறார் சித்தப்பா.</p><p>குலம் காக்கும் சாமிக்குப் </p><p>படையலிட்டு</p><p>காக்கும் தொழில் </p><p>கைவிரிப்பு நீட்ட </p><p>பரிகாரம் தேடுகிறார். </p><p>கொடுவாள் கொண்டு </p><p>குறுக்கு வெட்டு விழுந்த </p><p>கழுத்தை மறைக்க </p><p>மலர்மாலை சூடி மறைக்கிறார் </p><p>குலதெய்வம் மாடசாமி.</p><p><em>- முகில் முருகேசன்</em></p>.<p>ராஜா காலத்துப் புகைப்படங்களில் </p><p>தாத்தாவின் தாத்தாவும்</p><p>பாட்டியின் பாட்டியும்</p><p>புகைப்படம் பற்றிய நினைவுகள்</p><p>சிறிதுமின்றிப் </p><p>பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்</p><p>காலம் உடைத்து நுழைகிறேன்</p><p>கறுப்பு வெள்ளைக்குள் செல்வது</p><p>கண்ணாடிச் சட்டத்தைக் கடப்பது</p><p>பென்சில் மீசை வரைவது </p><p>பாட்டியின் புல்லாக்கு சரிசெய்வது </p><p>என இன்று முழு இரவும் தேவைப்படுகிறது</p><p>விடிந்தபொழுதில் நானறியா சுயத்தில்</p><p>புகைப்படத்துள் நிற்கிறேன் </p><p>என்னவோ மாற்றம் என்பதுபோல</p><p>தாத்தாவின் தாத்தாவும்</p><p>பாட்டியின் பாட்டியும்</p><p>புருவம் அசைக்கிறார்கள் </p><p>நான் பின்னாலிருக்கும் சுவரில் </p><p>பல்லியாகிறேன் </p><p>புகைப்பட கிளிக் சப்தம் எனதெங்கும்..! </p><p><em>- கவிஜி</em></p>
<p>இரண்டு மணி் நேர</p><p>தோட்ட வேலைக்கு</p><p>இருநூறு கூலி பேச</p><p>அரைமணி நேரமானது</p><p>கூடுதலாய்க் கேட்ட</p><p>ஐம்பது ரூபாய் பேரத்தில்</p><p>ஒப்பந்தம் முறியும் வரை சென்று</p><p>ஒரு வழியாய் ஓகே ஆனது</p><p>காலைச் சிற்றுண்டியும்</p><p>ஒரு மணி நேர இடைவெளியில்</p><p>தேநீரும்</p><p>வேலை முடிந்தவுடன்</p><p>பழச் சாறும்</p><p>ஒப்பந்தத்தில் இல்லா</p><p>ஷரத்து இணைக்கப்பட்டு</p><p>அம்மா வேலை பார்த்தவாறே</p><p>ஊர்க் கதைகளைப் பரிமாற</p><p>தோட்டக்காரர் உறவாகிப்போனார்</p><p>பேச்சு சுவாரசியத்தில் கூடுதலாய்</p><p>நூறு ரூபாயைக் கொடுக்க</p><p>திருப்பிக்கொடுத்த</p><p>தோட்டக்காரருக்கும்</p><p>அம்மாவிற்கும்</p><p>அந்த ஐம்பது ரூபாய்</p><p>வழக்கொன்று அடுத்த வாய்தா</p><p>வாங்கியிருந்தது.</p><p><em>- காரைக்குடி சாதிக்</em></p>.<p>பத்து மணியைக் கடந்தும் </p><p>இரவெனத் தெரிந்தும்</p><p>இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கிறான்</p><p>உனக்குப் படியளக்கும் வெளிநாட்டு முதலாளி</p><p>உன் அலைபேசியில்</p><p>தாய்மொழியை மறக்கும் அளவுக்கு</p><p>அவன் மொழியைப் பழக்கிய</p><p>உன் நாக்கு இப்போதெல்லாம்</p><p>சுவை நரம்புகளுக்கு </p><p>வேலையே தருவதில்லை</p><p>அடுத்தமாத வேலைக்கான</p><p>முன் ஒத்திகைகள்</p><p>கணினியில் தொகுத்து வைக்க வேண்டிய</p><p>குறிப்புகளென ஒன்று விடாமல்</p><p>கேட்டுத் துளைத்துக்கொண்டிருப்பவன்</p><p>அவன் வேலைகளிலேயே குறியாகக் கிடக்க</p><p>அரை உறக்கத்திலும்</p><p>காத்துக்கிடக்கும் காமத்திலும்</p><p>சாபம் விடுகிறேன்</p><p>அவன் நாட்டில் இரவென்ற</p><p>ஒன்று இல்லாமல்போக</p><p>நவீன அகலிகையாய்.</p><p><em>- பிரபுசங்கர். க</em></p>.<p>மீன் வீச்சமின்றி </p><p>மிதப்பில் இருக்கிறது </p><p>நீர் வறண்ட குளம்.</p><p>தானிய மூட்டைகள் </p><p>இருந்த வீட்டில் </p><p>எலிகள் பறித்த துளைகள்</p><p>வெளிறிய கண்களென.</p><p>ஆடிப்பட்டம் அழிந்து </p><p>வெம்மை விரவிய நிலம் </p><p>அடமானம் வசம்.</p><p>நன்செய் நிலம் </p><p>கைநழுவிய தவிப்பில் </p><p>சினத்தில் இருக்கிறார் சித்தப்பா.</p><p>குலம் காக்கும் சாமிக்குப் </p><p>படையலிட்டு</p><p>காக்கும் தொழில் </p><p>கைவிரிப்பு நீட்ட </p><p>பரிகாரம் தேடுகிறார். </p><p>கொடுவாள் கொண்டு </p><p>குறுக்கு வெட்டு விழுந்த </p><p>கழுத்தை மறைக்க </p><p>மலர்மாலை சூடி மறைக்கிறார் </p><p>குலதெய்வம் மாடசாமி.</p><p><em>- முகில் முருகேசன்</em></p>.<p>ராஜா காலத்துப் புகைப்படங்களில் </p><p>தாத்தாவின் தாத்தாவும்</p><p>பாட்டியின் பாட்டியும்</p><p>புகைப்படம் பற்றிய நினைவுகள்</p><p>சிறிதுமின்றிப் </p><p>பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்</p><p>காலம் உடைத்து நுழைகிறேன்</p><p>கறுப்பு வெள்ளைக்குள் செல்வது</p><p>கண்ணாடிச் சட்டத்தைக் கடப்பது</p><p>பென்சில் மீசை வரைவது </p><p>பாட்டியின் புல்லாக்கு சரிசெய்வது </p><p>என இன்று முழு இரவும் தேவைப்படுகிறது</p><p>விடிந்தபொழுதில் நானறியா சுயத்தில்</p><p>புகைப்படத்துள் நிற்கிறேன் </p><p>என்னவோ மாற்றம் என்பதுபோல</p><p>தாத்தாவின் தாத்தாவும்</p><p>பாட்டியின் பாட்டியும்</p><p>புருவம் அசைக்கிறார்கள் </p><p>நான் பின்னாலிருக்கும் சுவரில் </p><p>பல்லியாகிறேன் </p><p>புகைப்பட கிளிக் சப்தம் எனதெங்கும்..! </p><p><em>- கவிஜி</em></p>