<p>நான்கைந்து ஸ்பைடர் மேன்களுக்கு மத்தியில்</p><p>ஒரு ஹல்கிற்கு</p><p>ஹல்க்காகவே இருக்க முடிவதில்லை...</p>.<p>ஸ்பைடர் மேன்கள்</p><p>ஹல்க்கின் தடித்த புஜங்களைப் பார்த்துவிட்டு</p><p>``இந்த புஜங்கள் காற்றின் வேகத்தை </p><p>சாதகமாகப் பயன்படுத்த அனுமதிக்காது’’</p><p>என்று குறை சொன்னார்கள்...</p>.<p>ஹல்க் ஆக்ரோஷமாக வன்மத்துடன் கர்ஜிக்கையில் </p><p>``ஹல்க்கிற்கு புத்தியைப் பயன்படுத்தத் தெரியவில்லை’’</p><p>என்றார்கள்...</p>.<p>ஹல்க், ஒரு கண்டத்திலிருந்து</p><p>மற்றொரு கண்டத்திற்குத் தாவுகையில்</p><p>``தடித்த உடலால் அவனால் தொடர்ந்து</p><p>பறக்க முடியாது’’</p><p>என்றார்கள்...</p>.<p>ஹல்க்கின் துரதிர்ஷ்டம்,</p><p>அவனை</p><p>ஸ்பைடர் மேன்களின் கூடாரத்தை விட்டு </p><p>வெளியே தள்ளுவதுமில்லை...</p><p><em><strong> - ராம்பிரசாத்</strong></em></p>.<p>வீதிப்பெண்களுக்கு</p><p>அம்மன் வீதி உலாவென்றால்</p><p>அலாதிப் பிரியம்.</p><p>மனசின் ஆசையெல்லாம்</p><p>குழைத்து மாக்கோலம் தீட்டுவார்கள்.</p><p>இன்று எந்த வாகனத்திலென்று</p><p>தவிப்போடு</p><p>தெருமுக்குவரை தேடுவார்கள்</p><p>அருகே வந்ததும்</p><p>உருகித்தான் போவார்கள்</p><p>சிங்க வாகனத்தில் அம்மன்கூட</p><p>மங்கலாய்த்தான் தெரிவாள்</p><p>பிரியமானவா்களின் </p><p>பவனி கடக்கும்வரை.</p><p><em><strong>- காசாவயல்கண்ணன்</strong></em></p>. <p>தணியாத பசியைத்</p><p>தின்றுகொண்டிருக்கும்</p><p>குடிநீர் பாட்டில்களில்</p><p>கண்ணீரால் காய்ந்த</p><p>வியர்வையின் உப்புகள்...</p>.<p>சும்மாடு இல்லாத் தலையில்</p><p>வாழ்க்கை மூட்டையும் </p><p>உதடுசப்பும்பிள்ளையின்</p><p>கூட்டையும் சேர்த்துச் சுமப்பவனின்</p><p>உடல் முழுக்க வியர்வையின் உப்புகள்...</p>.<p>ஐவகை நிலங்களையும்</p><p>பிழைப்புக்கெனக் கடந்தவன் கால்களில்</p><p>வீக்கமாய் அப்பிக்கிடக்கிறது</p><p>பாத்தியமிட்டுக் காயவைக்காத</p><p>வியர்வையின் உப்புகள்...</p>.<p>நடைப்பயணமாயும்</p><p>நடைப்பிணமாயும் கடந்துகொண்டிருப்பவனின்</p><p>இறுகிய மூட்டையில் </p><p>தொங்கியபடி பயணிக்கும்</p><p>அனுமன் வாலிலும் ராமன் வில்லிலும்</p><p>வியர்வையின் உப்புகள்...</p>.<p>இனி எல்லோருமாய் நடக்கவிருக்கிறோம் ஏதோவொன்றிற்காய்...</p><p>வியர்வையின் உப்புகளே ஊழியமென்பதால்</p><p>எறும்புகளின் வரிசைகளை</p><p>எதுவழித்தாலும் தவறில்லை - ஆம்</p><p>யாதும் ஊரே யாவரும் கேளிர்.</p><p><em><strong>- பன்னீர்.மு</strong></em></p>
<p>நான்கைந்து ஸ்பைடர் மேன்களுக்கு மத்தியில்</p><p>ஒரு ஹல்கிற்கு</p><p>ஹல்க்காகவே இருக்க முடிவதில்லை...</p>.<p>ஸ்பைடர் மேன்கள்</p><p>ஹல்க்கின் தடித்த புஜங்களைப் பார்த்துவிட்டு</p><p>``இந்த புஜங்கள் காற்றின் வேகத்தை </p><p>சாதகமாகப் பயன்படுத்த அனுமதிக்காது’’</p><p>என்று குறை சொன்னார்கள்...</p>.<p>ஹல்க் ஆக்ரோஷமாக வன்மத்துடன் கர்ஜிக்கையில் </p><p>``ஹல்க்கிற்கு புத்தியைப் பயன்படுத்தத் தெரியவில்லை’’</p><p>என்றார்கள்...</p>.<p>ஹல்க், ஒரு கண்டத்திலிருந்து</p><p>மற்றொரு கண்டத்திற்குத் தாவுகையில்</p><p>``தடித்த உடலால் அவனால் தொடர்ந்து</p><p>பறக்க முடியாது’’</p><p>என்றார்கள்...</p>.<p>ஹல்க்கின் துரதிர்ஷ்டம்,</p><p>அவனை</p><p>ஸ்பைடர் மேன்களின் கூடாரத்தை விட்டு </p><p>வெளியே தள்ளுவதுமில்லை...</p><p><em><strong> - ராம்பிரசாத்</strong></em></p>.<p>வீதிப்பெண்களுக்கு</p><p>அம்மன் வீதி உலாவென்றால்</p><p>அலாதிப் பிரியம்.</p><p>மனசின் ஆசையெல்லாம்</p><p>குழைத்து மாக்கோலம் தீட்டுவார்கள்.</p><p>இன்று எந்த வாகனத்திலென்று</p><p>தவிப்போடு</p><p>தெருமுக்குவரை தேடுவார்கள்</p><p>அருகே வந்ததும்</p><p>உருகித்தான் போவார்கள்</p><p>சிங்க வாகனத்தில் அம்மன்கூட</p><p>மங்கலாய்த்தான் தெரிவாள்</p><p>பிரியமானவா்களின் </p><p>பவனி கடக்கும்வரை.</p><p><em><strong>- காசாவயல்கண்ணன்</strong></em></p>. <p>தணியாத பசியைத்</p><p>தின்றுகொண்டிருக்கும்</p><p>குடிநீர் பாட்டில்களில்</p><p>கண்ணீரால் காய்ந்த</p><p>வியர்வையின் உப்புகள்...</p>.<p>சும்மாடு இல்லாத் தலையில்</p><p>வாழ்க்கை மூட்டையும் </p><p>உதடுசப்பும்பிள்ளையின்</p><p>கூட்டையும் சேர்த்துச் சுமப்பவனின்</p><p>உடல் முழுக்க வியர்வையின் உப்புகள்...</p>.<p>ஐவகை நிலங்களையும்</p><p>பிழைப்புக்கெனக் கடந்தவன் கால்களில்</p><p>வீக்கமாய் அப்பிக்கிடக்கிறது</p><p>பாத்தியமிட்டுக் காயவைக்காத</p><p>வியர்வையின் உப்புகள்...</p>.<p>நடைப்பயணமாயும்</p><p>நடைப்பிணமாயும் கடந்துகொண்டிருப்பவனின்</p><p>இறுகிய மூட்டையில் </p><p>தொங்கியபடி பயணிக்கும்</p><p>அனுமன் வாலிலும் ராமன் வில்லிலும்</p><p>வியர்வையின் உப்புகள்...</p>.<p>இனி எல்லோருமாய் நடக்கவிருக்கிறோம் ஏதோவொன்றிற்காய்...</p><p>வியர்வையின் உப்புகளே ஊழியமென்பதால்</p><p>எறும்புகளின் வரிசைகளை</p><p>எதுவழித்தாலும் தவறில்லை - ஆம்</p><p>யாதும் ஊரே யாவரும் கேளிர்.</p><p><em><strong>- பன்னீர்.மு</strong></em></p>