<p><strong>யா</strong>னை வரைவதற்காக</p><p>ஒரு வெள்ளைத்தாளைக் கையில் வைத்திருந்தேன்...</p><p>முதலில் வந்த நண்பர்</p><p>தூண்கள் நான்கை வரையுங்கள்</p><p>அவை கால்களாக மாறிவிடும் என்றார்.</p><p>இன்னொரு நண்பர்</p><p>இரண்டு முறங்களைக்</p><p>காதுகளாக மாற்றிவிடலாம் என்று</p><p>அவர் திட்டத்தை விற்றுப் போனார்.</p><p>இசைமீது பிரியம் கொண்ட கடம் வாசிக்கும் நண்பர்</p><p>பானையை வரையுங்கள்</p><p>வயிற்றோடு பொருத்திக்கொள்ளலாம் என்றார்.</p><p>விவசாயம் தெரிந்த தோழர்</p><p>கீற்றுகள் தவிர்த்த</p><p>தென்னையைத் தலைகீழாக வரையுங்கள்</p><p>தும்பிக்கையாக்கிக்கொள்வோம் என்றார்.</p><p>இப்போது என்னிடம் நான்கு தூண்களும்,</p><p>இரண்டு முறங்களும்</p><p>தலைகீழாக ஒரு தென்னை மரமும்,</p><p>ஒரு பானையும் உள்ளன.</p><p>யாரும் யானை வரைவதற்கு முன்</p><p>ஒரு காடு வரையுங்கள் என்று சொல்லவே இல்லை.</p><p>எனக்கு என்னவோ மனம் முழுக்க</p><p>தண்டவாளங்கள்மீதான ரயில் சத்தம்</p><p>கேட்டுக்கொண்டே இருக்கிறது...</p><p>யானையை வரைவதற்குக்</p><p>காடு நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறேன்.</p><p>என் காதுகளுக்கு ஆலோசனைகள் ஏதும் வேண்டாம்.</p><p>ரயில் சத்தம் கேட்காமலிருந்தால் அதுவே போதும்.</p><p><em><strong>- க.இராஜாராமன்</strong></em></p>.<p>மரம் ஏதும் தென்படாததால்</p><p>மின்சாரக் கம்பிகளில்</p><p>கூடுகட்டியது ஒரு</p><p>பறவை.</p><p>ஆனால்</p><p>நிம்மதியாக இருந்தது.</p><p>வெட்ட கோடரியோடு</p><p>யாரும் வரமாட்டார்கள்.</p><p>காற்றடித்தால் வேரோடு</p><p>சாய வாய்ப்பு குறைவு.</p><p>பூக் கிள்ள</p><p>காய் பறிக்க</p><p>பழம் தின்ன என்று</p><p>மனிதர்கள் தொந்தரவு</p><p>செய்யும் மரம்போலக் கிடையாது </p><p>இந்த மின்சார மரம்.</p><p>தாறுமாறாகப் பிரியும்</p><p>ஒயருக்குள் போகும் மின்சாரம் தன்னால் பறவையை ஒன்றும் செய்ய</p><p>முடியவில்லையே என்று</p><p>மூச்சயர்ந்த நேரம்</p><p>வீட்டில் விளக்கு</p><p>அணைந்திருந்தது.</p><p><em><strong>- ந.வீரா</strong></em></p>.<p>சற்று அமர்ந்து கால் ஆறக்கூட</p><p>நாற்காலி அனுமதிக்கப்படாத</p><p>பரபரப்பான</p><p>வணிகக்கடையொன்றில்</p><p>பணிமுடித்து</p><p>பேருந்துபிடிக்க ஓடிவரும் பெண்ணிற்கு</p><p>அவ்வளவு நெரிசலிலும்</p><p>எழுந்து இடமளிக்கும்</p><p>மனமொன்றுதான்</p><p>நம்பிக்கையுடன்</p><p>நகர்த்திக்கொண்டிருக்கிறது</p><p>அவள் வாழ்வை.</p><p> <em><strong> - சாமி கிரிஷ்</strong></em></p>
<p><strong>யா</strong>னை வரைவதற்காக</p><p>ஒரு வெள்ளைத்தாளைக் கையில் வைத்திருந்தேன்...</p><p>முதலில் வந்த நண்பர்</p><p>தூண்கள் நான்கை வரையுங்கள்</p><p>அவை கால்களாக மாறிவிடும் என்றார்.</p><p>இன்னொரு நண்பர்</p><p>இரண்டு முறங்களைக்</p><p>காதுகளாக மாற்றிவிடலாம் என்று</p><p>அவர் திட்டத்தை விற்றுப் போனார்.</p><p>இசைமீது பிரியம் கொண்ட கடம் வாசிக்கும் நண்பர்</p><p>பானையை வரையுங்கள்</p><p>வயிற்றோடு பொருத்திக்கொள்ளலாம் என்றார்.</p><p>விவசாயம் தெரிந்த தோழர்</p><p>கீற்றுகள் தவிர்த்த</p><p>தென்னையைத் தலைகீழாக வரையுங்கள்</p><p>தும்பிக்கையாக்கிக்கொள்வோம் என்றார்.</p><p>இப்போது என்னிடம் நான்கு தூண்களும்,</p><p>இரண்டு முறங்களும்</p><p>தலைகீழாக ஒரு தென்னை மரமும்,</p><p>ஒரு பானையும் உள்ளன.</p><p>யாரும் யானை வரைவதற்கு முன்</p><p>ஒரு காடு வரையுங்கள் என்று சொல்லவே இல்லை.</p><p>எனக்கு என்னவோ மனம் முழுக்க</p><p>தண்டவாளங்கள்மீதான ரயில் சத்தம்</p><p>கேட்டுக்கொண்டே இருக்கிறது...</p><p>யானையை வரைவதற்குக்</p><p>காடு நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறேன்.</p><p>என் காதுகளுக்கு ஆலோசனைகள் ஏதும் வேண்டாம்.</p><p>ரயில் சத்தம் கேட்காமலிருந்தால் அதுவே போதும்.</p><p><em><strong>- க.இராஜாராமன்</strong></em></p>.<p>மரம் ஏதும் தென்படாததால்</p><p>மின்சாரக் கம்பிகளில்</p><p>கூடுகட்டியது ஒரு</p><p>பறவை.</p><p>ஆனால்</p><p>நிம்மதியாக இருந்தது.</p><p>வெட்ட கோடரியோடு</p><p>யாரும் வரமாட்டார்கள்.</p><p>காற்றடித்தால் வேரோடு</p><p>சாய வாய்ப்பு குறைவு.</p><p>பூக் கிள்ள</p><p>காய் பறிக்க</p><p>பழம் தின்ன என்று</p><p>மனிதர்கள் தொந்தரவு</p><p>செய்யும் மரம்போலக் கிடையாது </p><p>இந்த மின்சார மரம்.</p><p>தாறுமாறாகப் பிரியும்</p><p>ஒயருக்குள் போகும் மின்சாரம் தன்னால் பறவையை ஒன்றும் செய்ய</p><p>முடியவில்லையே என்று</p><p>மூச்சயர்ந்த நேரம்</p><p>வீட்டில் விளக்கு</p><p>அணைந்திருந்தது.</p><p><em><strong>- ந.வீரா</strong></em></p>.<p>சற்று அமர்ந்து கால் ஆறக்கூட</p><p>நாற்காலி அனுமதிக்கப்படாத</p><p>பரபரப்பான</p><p>வணிகக்கடையொன்றில்</p><p>பணிமுடித்து</p><p>பேருந்துபிடிக்க ஓடிவரும் பெண்ணிற்கு</p><p>அவ்வளவு நெரிசலிலும்</p><p>எழுந்து இடமளிக்கும்</p><p>மனமொன்றுதான்</p><p>நம்பிக்கையுடன்</p><p>நகர்த்திக்கொண்டிருக்கிறது</p><p>அவள் வாழ்வை.</p><p> <em><strong> - சாமி கிரிஷ்</strong></em></p>