<p>உணர்ச்சிகளை</p><p>வெளிப்படுத்தும்</p><p>ஆசையோடுதான்</p><p>நிற்கின்றன</p><p>சொற்கள்</p><p>உன் முன்.</p>.<p>ஏனோ</p><p>பதற்றத்தின் நூலிழைகள்</p><p>பின்னுகின்றன</p><p>அதனை</p><p>சிலந்தி வலையைப்போல.</p>.<p>அதனுடல் நடுங்குகிறது</p><p>சட்டென</p><p>காற்று அசைத்த</p><p>இலையைப்போல.</p>.<p>இயல்பின்</p><p>லயத்திலிருந்து</p><p>விலகித் துடிக்கிறது</p><p>அதன் இதயம்</p><p>அறுபட்ட பல்லியின்</p><p>வாலைப்போல.</p>.<p>பயத்தில் அமிழ்ந்த</p><p>சொற்கள்</p><p>தடுமாறுகின்றன</p><p>நேரெதிர்</p><p>உன் கண்களைச்</p><p>சந்திக்கும்</p><p>திராணியற்று.</p>.<p>ஏற்பாயோ</p><p>மறுப்பாயோ</p><p>என்பதற்கிடையே</p><p>சிக்கித் தவிக்கிறது.</p>.<p>எப்படித்தான்</p><p>சொல்லும்</p><p>சொற்கள்?</p>.<p>தயக்கத்தின்பால்</p><p>தன்னையே</p><p>கைவிட்டுவிட்ட</p><p>சொற்கள்</p><p>திரும்புகின்றன</p><p>சொல்ல இயலா</p><p>வலியோடு.</p><p><strong>- வேல்முருகன்</strong></p>.<p>வானம் மிகப்பெரியது</p><p>அதன் உயரம் எல்லையற்றது</p><p>இந்த அண்டமே அதன் கீழ்தான் சுழல்கிறது.</p><p>ஆனால், </p><p>ஒரு சிட்டுக்குருவி பறக்கும்போது</p><p>வானம் உற்றுக்கவனிக்கிறது. </p><p>ஒரு தும்பி பறக்கும்போது</p><p>மேலும் வளைந்து ஆர்வத்துடன் நோக்குகிறது. </p><p>ஒரு வண்ணத்துப்பூச்சி பறக்கும்போது</p><p>வானம் தரையில் இறங்கி</p><p>ஒரு சிறுமியைப்போல் அதைத் துரத்துகிறது. </p><p><strong>– தென்பாண்டியன்</strong></p>.<p>தோட்டத்திலிருந்து பறித்து வந்த</p><p>கனகாம்பரம் பூக்களை</p><p>எதிரும் புதிருமாய்</p><p>இரண்டிரண்டாய் அடுக்கி எடுத்து</p><p>சரம் தொடுக்கும் நூல் கொண்டு</p><p>அழகாய்த் தொடுக்கிறாள் அம்மா.</p>.<p>சமைத்து, துவைத்து, பாத்திரம் துலக்கி,</p><p>வீடுவாசல் கழுவித் துடைத்து எனக்</p><p>காய்த்துப்போன கைகளால்</p><p>அழுந்தப்பிடித்து சேதாரமாகிடாமல்</p><p>குட்டியைக் கவ்வும் தாய்ப்பூனையின்</p><p>லாகவத்தோடு கையாளுகிறாள்.</p>.<p>காற்றில் கலையும்</p><p>ஒன்றிரண்டு பூக்களையும்</p><p>குறும்புக்காரப் பிள்ளைகளை</p><p>செல்ல அதட்டலோடு சீர்திருத்தும்</p><p>தாயின் மனப்பாங்கில்</p><p>நேர்ப்படுத்தி எடுத்துக்கொள்கிறாள்.</p>.<p>மொத்தப்பூக்களையும்</p><p>வரிசையாய்த் தொடுத்து முடித்த பின்</p><p>அவள் கரங்களில் எடுத்துப்போவது</p><p>பிரசவித்த குழந்தையைக்</p><p>கைகளில் ஏந்தியதைப்போல இருக்கிறது.</p><p><strong>-தி.சிவசங்கரி</strong></p>.<p>ஒன்ஸ்மோர் ஒன்ஸ்மோர் கேட்கிறது</p><p>விடுமுறைக்காக கிராமத்திற்கு வந்த</p><p>நகரத்தில் வசிக்கும் சிறுமி.</p><p>வெள்ளந்திச் சிரிப்பில்</p><p>சலிக்காது கற்றுத்தருகிறாள் நுட்பத்தை</p><p>தோழிகள் புடைசூழ கிராமத்துச் சிறுமி.</p><p>அடுத்தடுத்த முறையிலும் ஏற்பட்ட பிழையில்</p><p>‘ஓ மை காட்’ என நடு நெற்றியில்</p><p>பட்டென்று அடித்த ஓசையில்</p><p>பறந்தது பூவரச மரக்கிளையில்</p><p>இளைப்பாறிக்கொண்டிருந்த பறவை.</p><p>கற்ற நுட்பம் கைதந்ததில் இறுதியில் சரியாகப்போடுகிறாள்</p><p>சா பூ த்ரீயையும்</p><p>ஒத்தையா ரெட்டையாவையும். </p><p><strong>- துரை. நந்தகுமார்</strong></p>
<p>உணர்ச்சிகளை</p><p>வெளிப்படுத்தும்</p><p>ஆசையோடுதான்</p><p>நிற்கின்றன</p><p>சொற்கள்</p><p>உன் முன்.</p>.<p>ஏனோ</p><p>பதற்றத்தின் நூலிழைகள்</p><p>பின்னுகின்றன</p><p>அதனை</p><p>சிலந்தி வலையைப்போல.</p>.<p>அதனுடல் நடுங்குகிறது</p><p>சட்டென</p><p>காற்று அசைத்த</p><p>இலையைப்போல.</p>.<p>இயல்பின்</p><p>லயத்திலிருந்து</p><p>விலகித் துடிக்கிறது</p><p>அதன் இதயம்</p><p>அறுபட்ட பல்லியின்</p><p>வாலைப்போல.</p>.<p>பயத்தில் அமிழ்ந்த</p><p>சொற்கள்</p><p>தடுமாறுகின்றன</p><p>நேரெதிர்</p><p>உன் கண்களைச்</p><p>சந்திக்கும்</p><p>திராணியற்று.</p>.<p>ஏற்பாயோ</p><p>மறுப்பாயோ</p><p>என்பதற்கிடையே</p><p>சிக்கித் தவிக்கிறது.</p>.<p>எப்படித்தான்</p><p>சொல்லும்</p><p>சொற்கள்?</p>.<p>தயக்கத்தின்பால்</p><p>தன்னையே</p><p>கைவிட்டுவிட்ட</p><p>சொற்கள்</p><p>திரும்புகின்றன</p><p>சொல்ல இயலா</p><p>வலியோடு.</p><p><strong>- வேல்முருகன்</strong></p>.<p>வானம் மிகப்பெரியது</p><p>அதன் உயரம் எல்லையற்றது</p><p>இந்த அண்டமே அதன் கீழ்தான் சுழல்கிறது.</p><p>ஆனால், </p><p>ஒரு சிட்டுக்குருவி பறக்கும்போது</p><p>வானம் உற்றுக்கவனிக்கிறது. </p><p>ஒரு தும்பி பறக்கும்போது</p><p>மேலும் வளைந்து ஆர்வத்துடன் நோக்குகிறது. </p><p>ஒரு வண்ணத்துப்பூச்சி பறக்கும்போது</p><p>வானம் தரையில் இறங்கி</p><p>ஒரு சிறுமியைப்போல் அதைத் துரத்துகிறது. </p><p><strong>– தென்பாண்டியன்</strong></p>.<p>தோட்டத்திலிருந்து பறித்து வந்த</p><p>கனகாம்பரம் பூக்களை</p><p>எதிரும் புதிருமாய்</p><p>இரண்டிரண்டாய் அடுக்கி எடுத்து</p><p>சரம் தொடுக்கும் நூல் கொண்டு</p><p>அழகாய்த் தொடுக்கிறாள் அம்மா.</p>.<p>சமைத்து, துவைத்து, பாத்திரம் துலக்கி,</p><p>வீடுவாசல் கழுவித் துடைத்து எனக்</p><p>காய்த்துப்போன கைகளால்</p><p>அழுந்தப்பிடித்து சேதாரமாகிடாமல்</p><p>குட்டியைக் கவ்வும் தாய்ப்பூனையின்</p><p>லாகவத்தோடு கையாளுகிறாள்.</p>.<p>காற்றில் கலையும்</p><p>ஒன்றிரண்டு பூக்களையும்</p><p>குறும்புக்காரப் பிள்ளைகளை</p><p>செல்ல அதட்டலோடு சீர்திருத்தும்</p><p>தாயின் மனப்பாங்கில்</p><p>நேர்ப்படுத்தி எடுத்துக்கொள்கிறாள்.</p>.<p>மொத்தப்பூக்களையும்</p><p>வரிசையாய்த் தொடுத்து முடித்த பின்</p><p>அவள் கரங்களில் எடுத்துப்போவது</p><p>பிரசவித்த குழந்தையைக்</p><p>கைகளில் ஏந்தியதைப்போல இருக்கிறது.</p><p><strong>-தி.சிவசங்கரி</strong></p>.<p>ஒன்ஸ்மோர் ஒன்ஸ்மோர் கேட்கிறது</p><p>விடுமுறைக்காக கிராமத்திற்கு வந்த</p><p>நகரத்தில் வசிக்கும் சிறுமி.</p><p>வெள்ளந்திச் சிரிப்பில்</p><p>சலிக்காது கற்றுத்தருகிறாள் நுட்பத்தை</p><p>தோழிகள் புடைசூழ கிராமத்துச் சிறுமி.</p><p>அடுத்தடுத்த முறையிலும் ஏற்பட்ட பிழையில்</p><p>‘ஓ மை காட்’ என நடு நெற்றியில்</p><p>பட்டென்று அடித்த ஓசையில்</p><p>பறந்தது பூவரச மரக்கிளையில்</p><p>இளைப்பாறிக்கொண்டிருந்த பறவை.</p><p>கற்ற நுட்பம் கைதந்ததில் இறுதியில் சரியாகப்போடுகிறாள்</p><p>சா பூ த்ரீயையும்</p><p>ஒத்தையா ரெட்டையாவையும். </p><p><strong>- துரை. நந்தகுமார்</strong></p>