<ul><li><p>கனமழை</p><p>நாளை பகல் மட்டுமே</p><p>பள்ளிக்கு விடுமுறை</p><p>மனதிற்கோ இரவிலிருந்து.</p></li><li><p>மழையை ரசிக்க</p><p>கார் கண்ணாடியைப்</p><p>பாதி இறக்கினேன்</p><p>முகத்தில் அடித்தது சாரல்</p><p>முழுதாய் இறக்கிவிடச் சொல்லி.</p></li></ul>.<ul><li><p>மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்</p><p>மீன்கள் மழையில் நனையட்டும்.</p></li><li><p> அம்மா ஒரு பெருமழையைத் </p></li></ul><p> தன் முந்தானையால்</p><p> மறைத்துப் பள்ளி அழைத்துச் சென்றார்</p><p> உடைகள் மட்டும் நனைந்திருந்தன...</p><p><em><strong>- வீ.ப.ஜெயசீலன்</strong></em></p>.<p><strong>ஒ</strong>ரு குழந்தை</p><p>யானை வரைந்தது.</p> <p>முடித்த தருணம்</p><p>யானை கேட்டது</p><p>``செல்லக் குட்டி, இது யார் வீடு?''</p>.<p>``என் வீடுதான்...</p><p>ஆமாம் உன் வீடு?’’</p><p>குழந்தை கேட்டது.</p> <p>``காடு!</p><p>அடர் மரங்கள் நிறைந்த வனம்’’</p><p>குழந்தையின் விரல்கள்</p><p>காடென ஒன்றை வரையத் தொடங்கிய தருணம்...</p> <p>``சொன்னதை மட்டும் செய்.</p><p>தேவையில்லாம வரையாதே’’</p> <p>அதிகாரத்தின் குரல் யானைக்கு மதிப்பெண் போட,</p><p>அத்துடன் முடிந்தது ஆர்ட் கிளாஸ்</p> <p>குழந்தையின் தீராத பக்கங்களில் உயிர்பெற்றது காடு!</p><p>அடர் வனத்தின் பசுமையில்</p><p>யானைகள் சிரித்தபடி கையசைக்க...</p><p>துதிக்கை காட்டிச் சிரித்தது குழந்தை!</p><p><em><strong>- புரட்சிக்கனல்</strong></em></p>.<p><strong>மா</strong>நகரத்தில் புலம்பெயர்ந்தனர்</p><p>கிராமவாசிகள்.</p><p>உலக்கைகள், திருகைகள்</p><p>ஏர்பூட்டிய மாடுகள்</p><p>குதிரை வண்டிகளோடு</p><p>பாண்டியாட்டமும் பதனிப் பானையும்</p><p>புலம்பெயர்ந்தன</p><p>மாநகரில் சுவர்ச் சித்திரங்களாய்…</p><p><em><strong>- வல்லம் தாஜுபால்</strong></em></p>.<p><strong>ப</strong>றவைகள்மீதான ஆசையிலேயே</p><p>மீன்களை அள்ளித்தருகிறது நதி</p><p>மாறாகப் பறவைகள் செய்யவேண்டியதெல்லாம்</p><p>நதியின் மேல் சற்று நேரம் பறக்க வேண்டும்</p><p>அப்போதுதான் அவற்றின்</p><p>நிழலைப் பருகி தாகம் தீர்த்துக்கொள்ளும் நதி.</p><p><em><strong>- வலங்கைமான் நூர்தீன்</strong></em></p>
<ul><li><p>கனமழை</p><p>நாளை பகல் மட்டுமே</p><p>பள்ளிக்கு விடுமுறை</p><p>மனதிற்கோ இரவிலிருந்து.</p></li><li><p>மழையை ரசிக்க</p><p>கார் கண்ணாடியைப்</p><p>பாதி இறக்கினேன்</p><p>முகத்தில் அடித்தது சாரல்</p><p>முழுதாய் இறக்கிவிடச் சொல்லி.</p></li></ul>.<ul><li><p>மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்</p><p>மீன்கள் மழையில் நனையட்டும்.</p></li><li><p> அம்மா ஒரு பெருமழையைத் </p></li></ul><p> தன் முந்தானையால்</p><p> மறைத்துப் பள்ளி அழைத்துச் சென்றார்</p><p> உடைகள் மட்டும் நனைந்திருந்தன...</p><p><em><strong>- வீ.ப.ஜெயசீலன்</strong></em></p>.<p><strong>ஒ</strong>ரு குழந்தை</p><p>யானை வரைந்தது.</p> <p>முடித்த தருணம்</p><p>யானை கேட்டது</p><p>``செல்லக் குட்டி, இது யார் வீடு?''</p>.<p>``என் வீடுதான்...</p><p>ஆமாம் உன் வீடு?’’</p><p>குழந்தை கேட்டது.</p> <p>``காடு!</p><p>அடர் மரங்கள் நிறைந்த வனம்’’</p><p>குழந்தையின் விரல்கள்</p><p>காடென ஒன்றை வரையத் தொடங்கிய தருணம்...</p> <p>``சொன்னதை மட்டும் செய்.</p><p>தேவையில்லாம வரையாதே’’</p> <p>அதிகாரத்தின் குரல் யானைக்கு மதிப்பெண் போட,</p><p>அத்துடன் முடிந்தது ஆர்ட் கிளாஸ்</p> <p>குழந்தையின் தீராத பக்கங்களில் உயிர்பெற்றது காடு!</p><p>அடர் வனத்தின் பசுமையில்</p><p>யானைகள் சிரித்தபடி கையசைக்க...</p><p>துதிக்கை காட்டிச் சிரித்தது குழந்தை!</p><p><em><strong>- புரட்சிக்கனல்</strong></em></p>.<p><strong>மா</strong>நகரத்தில் புலம்பெயர்ந்தனர்</p><p>கிராமவாசிகள்.</p><p>உலக்கைகள், திருகைகள்</p><p>ஏர்பூட்டிய மாடுகள்</p><p>குதிரை வண்டிகளோடு</p><p>பாண்டியாட்டமும் பதனிப் பானையும்</p><p>புலம்பெயர்ந்தன</p><p>மாநகரில் சுவர்ச் சித்திரங்களாய்…</p><p><em><strong>- வல்லம் தாஜுபால்</strong></em></p>.<p><strong>ப</strong>றவைகள்மீதான ஆசையிலேயே</p><p>மீன்களை அள்ளித்தருகிறது நதி</p><p>மாறாகப் பறவைகள் செய்யவேண்டியதெல்லாம்</p><p>நதியின் மேல் சற்று நேரம் பறக்க வேண்டும்</p><p>அப்போதுதான் அவற்றின்</p><p>நிழலைப் பருகி தாகம் தீர்த்துக்கொள்ளும் நதி.</p><p><em><strong>- வலங்கைமான் நூர்தீன்</strong></em></p>