<p>பூனை வளர்க்க ஆசைப்படுபவளுக்குத்</p><p>தெரிந்திருக்க வேண்டும்</p><p>பூனை எலியைத் துரத்திப் பிடித்துப்</p><p>பசியாறாது</p><p>பூனைக்கு தினமும் அரைலிட்டர்</p><p>பால் வாங்க வேண்டும்</p><p>இரண்டு நாள்களுக்கொருமுறை</p><p>பூனையைக் குளிப்பாட்டிவிட வேண்டும்</p><p>தினமும் பூனையோடு விளையாட வேண்டும்</p><p>விளையாட்டால் ஏற்படும்</p><p>சின்னச் சின்னக் கீறல்களை</p><p>சகஜமாய் எடுத்துக்கொள்ள வேண்டும்</p><p>குர் குர் தொடரொலியையும்</p><p>பூனை தன் படுக்கையில் உறங்குவதையும்</p><p>பழகிக்கொள்ள வேண்டும்</p><p>ஏதேனுமொரு நாள் பூனை தன்னிஷ்டத்திற்கு</p><p>எங்கேனும் போய்விடும் திரும்பிவராமல்</p><p>இவையெல்லாம் தெரிந்துகொண்ட அவள்</p><p>இப்போது </p><p>பூனை வளர்த்துக்கொண்டிருக்கிறாள். </p><p><em><strong>- சௌவி</strong></em></p>.<p>உச்சக் கட்டுப்பாடுள்ள</p><p>கோழியூர் பள்ளியில்</p><p>பேனா பென்சில்</p><p>நோட்டு புத்தகம்</p><p>ரப்பர் எரேசர்</p><p>எதையுமே தொலைத்ததில்லை</p><p>என் சிறகுகளையும்</p><p>கனவுகளையும் தவிர.</p><p><em><strong>- வல்லம் தாஜுபால்</strong></em></p>.<p>தேநீர்</p><p>ஐம்புலன்களையும் இணைத்து</p><p>நம்மை நொடிகளில்</p><p>நினைக்க வைக்கும் அதிசயம்.</p><p>கடந்து போகையில்.</p><p>மூக்கின் மேல் அமர்ந்துகொள்ளும் வாசனை</p><p>குடிக்கச் சொல்கிறது.</p><p>கண் கடையைப் பார்க்கிறது.</p><p>காது அருவியின் பேரதிசயம்போல தூக்கி ஆற்றும் இசையைக் கேட்கிறது.</p><p>மெய் சரணாகதி அடைந்து கடையை நோக்கி நகர்கிறது.</p><p>வாய் அவரவர் </p><p>உணர்ச்சிகளுக்கேற்ப</p><p>முத்தமிடுகிறது.</p><p>ஒரு தேநீரைத்தொலைப்பது</p><p>ஐம்புலன்களையும் புதைப்பதற்குச் சமமாயிருக்கிறது.</p><p>அவ்வளவு எளிதில்</p><p>புதைக்கவிடாத தேநீர் தயாரிப்பவர்</p><p>கள்ளச்சாராயம் போல</p><p>கள்ளத்தேநீரைக்</p><p>காய்கறி வாங்கும்பையில் மறைத்துத்தந்து</p><p>உயிர்த்தெழச்செய்கிறார்.</p><p>எங்கள் உயிர்த்தெழுதலால்</p><p>இந்த ஊரடங்கில் </p><p>கை தட்டாமல்</p><p>விளக்கேற்றாமல்</p><p>மரிக்காமலிருக்கிறார். </p><p><em><strong>- சுந்தர்</strong></em></p>
<p>பூனை வளர்க்க ஆசைப்படுபவளுக்குத்</p><p>தெரிந்திருக்க வேண்டும்</p><p>பூனை எலியைத் துரத்திப் பிடித்துப்</p><p>பசியாறாது</p><p>பூனைக்கு தினமும் அரைலிட்டர்</p><p>பால் வாங்க வேண்டும்</p><p>இரண்டு நாள்களுக்கொருமுறை</p><p>பூனையைக் குளிப்பாட்டிவிட வேண்டும்</p><p>தினமும் பூனையோடு விளையாட வேண்டும்</p><p>விளையாட்டால் ஏற்படும்</p><p>சின்னச் சின்னக் கீறல்களை</p><p>சகஜமாய் எடுத்துக்கொள்ள வேண்டும்</p><p>குர் குர் தொடரொலியையும்</p><p>பூனை தன் படுக்கையில் உறங்குவதையும்</p><p>பழகிக்கொள்ள வேண்டும்</p><p>ஏதேனுமொரு நாள் பூனை தன்னிஷ்டத்திற்கு</p><p>எங்கேனும் போய்விடும் திரும்பிவராமல்</p><p>இவையெல்லாம் தெரிந்துகொண்ட அவள்</p><p>இப்போது </p><p>பூனை வளர்த்துக்கொண்டிருக்கிறாள். </p><p><em><strong>- சௌவி</strong></em></p>.<p>உச்சக் கட்டுப்பாடுள்ள</p><p>கோழியூர் பள்ளியில்</p><p>பேனா பென்சில்</p><p>நோட்டு புத்தகம்</p><p>ரப்பர் எரேசர்</p><p>எதையுமே தொலைத்ததில்லை</p><p>என் சிறகுகளையும்</p><p>கனவுகளையும் தவிர.</p><p><em><strong>- வல்லம் தாஜுபால்</strong></em></p>.<p>தேநீர்</p><p>ஐம்புலன்களையும் இணைத்து</p><p>நம்மை நொடிகளில்</p><p>நினைக்க வைக்கும் அதிசயம்.</p><p>கடந்து போகையில்.</p><p>மூக்கின் மேல் அமர்ந்துகொள்ளும் வாசனை</p><p>குடிக்கச் சொல்கிறது.</p><p>கண் கடையைப் பார்க்கிறது.</p><p>காது அருவியின் பேரதிசயம்போல தூக்கி ஆற்றும் இசையைக் கேட்கிறது.</p><p>மெய் சரணாகதி அடைந்து கடையை நோக்கி நகர்கிறது.</p><p>வாய் அவரவர் </p><p>உணர்ச்சிகளுக்கேற்ப</p><p>முத்தமிடுகிறது.</p><p>ஒரு தேநீரைத்தொலைப்பது</p><p>ஐம்புலன்களையும் புதைப்பதற்குச் சமமாயிருக்கிறது.</p><p>அவ்வளவு எளிதில்</p><p>புதைக்கவிடாத தேநீர் தயாரிப்பவர்</p><p>கள்ளச்சாராயம் போல</p><p>கள்ளத்தேநீரைக்</p><p>காய்கறி வாங்கும்பையில் மறைத்துத்தந்து</p><p>உயிர்த்தெழச்செய்கிறார்.</p><p>எங்கள் உயிர்த்தெழுதலால்</p><p>இந்த ஊரடங்கில் </p><p>கை தட்டாமல்</p><p>விளக்கேற்றாமல்</p><p>மரிக்காமலிருக்கிறார். </p><p><em><strong>- சுந்தர்</strong></em></p>