<p> எல்லாவற்றிலிருந்தும் மௌனமாயிருக்கிறது</p><p>தனித்த இரவின் கடைசிச் சொட்டு.</p><p>ஊருக்குத் திரும்பும் அப்பாவின் பாதையில்</p><p>பூத்தபடி இருக்கும் கண்களை</p><p>சோடியம் வேபர் விளக்கு வெளிச்சத்தில்</p><p>பறக்கும் தட்டான்கள் ஈர்க்கின்றன.</p><p>சாலையோரப் போக்குவரத்துகள்</p><p>காத்திருப்பின் பொழுதுபோக்குகளாகின்றன.</p><p>அடைக்கப்பட்ட வீடுகளில் அணைக்கப்பட்ட விளக்குகள்</p><p>அப்பாக்கள் இருப்பதை உறுதிப்படுத்துகின்றன.</p><p>தேடலின் மணித்துளிகளை</p><p>நிலவொளியின் பிரவாகம் குளிரச் செய்கிறது.</p><p>ஊரடங்கியபின் இயற்கையை ஊதும் காற்றின் ஓசையில்</p><p>தென்றல் கொஞ்சம் பருத்திருக்கிறது.</p><p>நிசப்தத்தின் வெகுதூரத்தில் உதிக்கும் நாய்க்குரைப்பு</p><p>யாரோ வருவதை ஊருக்கே அம்பலப்படுத்துகிறது.</p><p>எதிர்பாராத தருணம்</p><p>மெல்லிய வெளிச்சத்தின் தொலைதூரக் குறுக்கிடலில்</p><p>இரவைக் கிழித்து முன்னேறுகிறது</p><p>டார்ச் லைட் ஒளி.</p><p>சமிக்ஞை உறுதிப்படுத்தப்பட்டதும்</p><p>எந்தவித நிர்பந்தமும் பூசிக்கொள்ளாத இரவு</p><p>தனது கடைசிச் சொட்டிலிருந்து</p><p>ஒருதுளி குழைந்து</p><p>அப்பா என்றவிழ்கிறது.</p><p><em><strong>- பிறைநிலா</strong></em></p>.<p>மலைக்காடுகளை</p><p>வரைகிறது குழந்தை</p><p>மேகம் முட்டும் மலை</p><p>மலையிலிருந்து</p><p>நீர்வீழ்ச்சி, நீலநிற நதி...</p><p>மீன்கள், நாரை அல்லது கொக்கு</p><p>கரையில் </p><p>குடிசை, பசு, நாய், ஆடு, கோழி</p><p>பறவைகள் </p><p>பெருமரங்களுக்கு இடையே</p><p>ஒற்றையடிப்பாதை</p><p>பாதையில் நடந்து செல்லும் இருமனிதர்கள்</p><p>இருவரின் தோள்களிலும்</p><p>கோடரி!</p><p><em><strong>- கோ.காளீஸ்வரன்</strong></em></p>.<p>அப்பாவின் சுவைக்காகவே </p><p>வீட்டின் நடை தூரத்தில் </p><p>அமைக்கப்பட்டிருத்த சமையலறைக்கு</p><p>அம்மா ஊரில் இல்லாதபோது </p><p>வரநேர்ந்தது</p><p>அம்மாவின் ஆயிரம் கைகளில் </p><p>தொள்ளாயிரத்துத் தொண்ணூறு கைகள் </p><p>இங்கேதான் அடுக்கியிருந்தன</p><p>உணவில் உப்பு குறைவாகவும் </p><p>காரம் அதிகமாகவும் இருந்ததற்காக </p><p>நான் கத்தியபோதெல்லாம் </p><p>இங்குவரை கேட்டிருக்க வேண்டும்...</p><p>என்னைப் பார்த்ததும்</p><p>அந்தக் கைகள் மட்டும் சற்றே </p><p>நடுங்கத் தொடங்கின</p><p>ஒருநாளேனும் அப்பாவை இங்கு அழைத்து வரவேண்டும்.</p><p><em><strong>- ஆண்டன் பெனி</strong></em></p>.<p>ஓடி ஓடிக் களைத்துப்போகிறாள் பொம்மி</p><p>முடிவில் அது</p><p>தானாக அவள் கையில் வந்தமர்கிறது </p><p>ஒரு வண்ணத்துப்பூச்சியைப் போலவே.</p><p><em><strong>- விருட்சகன்</strong></em></p>
<p> எல்லாவற்றிலிருந்தும் மௌனமாயிருக்கிறது</p><p>தனித்த இரவின் கடைசிச் சொட்டு.</p><p>ஊருக்குத் திரும்பும் அப்பாவின் பாதையில்</p><p>பூத்தபடி இருக்கும் கண்களை</p><p>சோடியம் வேபர் விளக்கு வெளிச்சத்தில்</p><p>பறக்கும் தட்டான்கள் ஈர்க்கின்றன.</p><p>சாலையோரப் போக்குவரத்துகள்</p><p>காத்திருப்பின் பொழுதுபோக்குகளாகின்றன.</p><p>அடைக்கப்பட்ட வீடுகளில் அணைக்கப்பட்ட விளக்குகள்</p><p>அப்பாக்கள் இருப்பதை உறுதிப்படுத்துகின்றன.</p><p>தேடலின் மணித்துளிகளை</p><p>நிலவொளியின் பிரவாகம் குளிரச் செய்கிறது.</p><p>ஊரடங்கியபின் இயற்கையை ஊதும் காற்றின் ஓசையில்</p><p>தென்றல் கொஞ்சம் பருத்திருக்கிறது.</p><p>நிசப்தத்தின் வெகுதூரத்தில் உதிக்கும் நாய்க்குரைப்பு</p><p>யாரோ வருவதை ஊருக்கே அம்பலப்படுத்துகிறது.</p><p>எதிர்பாராத தருணம்</p><p>மெல்லிய வெளிச்சத்தின் தொலைதூரக் குறுக்கிடலில்</p><p>இரவைக் கிழித்து முன்னேறுகிறது</p><p>டார்ச் லைட் ஒளி.</p><p>சமிக்ஞை உறுதிப்படுத்தப்பட்டதும்</p><p>எந்தவித நிர்பந்தமும் பூசிக்கொள்ளாத இரவு</p><p>தனது கடைசிச் சொட்டிலிருந்து</p><p>ஒருதுளி குழைந்து</p><p>அப்பா என்றவிழ்கிறது.</p><p><em><strong>- பிறைநிலா</strong></em></p>.<p>மலைக்காடுகளை</p><p>வரைகிறது குழந்தை</p><p>மேகம் முட்டும் மலை</p><p>மலையிலிருந்து</p><p>நீர்வீழ்ச்சி, நீலநிற நதி...</p><p>மீன்கள், நாரை அல்லது கொக்கு</p><p>கரையில் </p><p>குடிசை, பசு, நாய், ஆடு, கோழி</p><p>பறவைகள் </p><p>பெருமரங்களுக்கு இடையே</p><p>ஒற்றையடிப்பாதை</p><p>பாதையில் நடந்து செல்லும் இருமனிதர்கள்</p><p>இருவரின் தோள்களிலும்</p><p>கோடரி!</p><p><em><strong>- கோ.காளீஸ்வரன்</strong></em></p>.<p>அப்பாவின் சுவைக்காகவே </p><p>வீட்டின் நடை தூரத்தில் </p><p>அமைக்கப்பட்டிருத்த சமையலறைக்கு</p><p>அம்மா ஊரில் இல்லாதபோது </p><p>வரநேர்ந்தது</p><p>அம்மாவின் ஆயிரம் கைகளில் </p><p>தொள்ளாயிரத்துத் தொண்ணூறு கைகள் </p><p>இங்கேதான் அடுக்கியிருந்தன</p><p>உணவில் உப்பு குறைவாகவும் </p><p>காரம் அதிகமாகவும் இருந்ததற்காக </p><p>நான் கத்தியபோதெல்லாம் </p><p>இங்குவரை கேட்டிருக்க வேண்டும்...</p><p>என்னைப் பார்த்ததும்</p><p>அந்தக் கைகள் மட்டும் சற்றே </p><p>நடுங்கத் தொடங்கின</p><p>ஒருநாளேனும் அப்பாவை இங்கு அழைத்து வரவேண்டும்.</p><p><em><strong>- ஆண்டன் பெனி</strong></em></p>.<p>ஓடி ஓடிக் களைத்துப்போகிறாள் பொம்மி</p><p>முடிவில் அது</p><p>தானாக அவள் கையில் வந்தமர்கிறது </p><p>ஒரு வண்ணத்துப்பூச்சியைப் போலவே.</p><p><em><strong>- விருட்சகன்</strong></em></p>