<p>அப்பா கொடுக்கும் முத்தங்களில்</p><p>பீடி வாடைதான் பிரதானமாய் மணக்கும்.</p><p>சட்டைப்பை துழாவி அவர் தரும்</p><p>ஒன்றிரண்டு காசுகளில்கூட</p><p>பீடி வாசனையே பிசுபிசுக்கும்.</p><p>இடைவெளியின்றி </p><p>வாயில் மினுமினுக்கும்</p><p>செந்நிறத் தீக்கங்குகள்</p><p>பீடியைவிடவும் </p><p>அதிகம் எரித்தது</p><p>அவரது நுரையீரலைத்தான்.</p><p>தினமும் </p><p>போட்டு வதைக்கும்</p><p>இருமல் இரைச்சல்களில்</p><p>எங்களின் அக்கறைகளும் அறிவுரைகளும்</p><p>அவர் காதுகளைச் சேரவேயில்லை.</p><p>கடைசிப்பீடி வாயிலிருக்க</p><p>அப்படியே இறந்துபோன அப்பா</p><p>இப்போதும் </p><p>ஆவியாக </p><p>அடிக்கடி வந்துபோகிறார்</p><p>யாரோ ஒருவர் இழுத்து விடும்</p><p>புகை வழியாக.</p><p><em><strong>- சாமி கிரிஷ்</strong></em></p>.<p>சுகவீனப்பட்ட நாளிலிருந்து</p><p>தனையொரு குழந்தையென </p><p>கவனித்து வந்த அத்தையின் </p><p>கத்தரிப்பூ நிறத்துச் சேலைமீது</p><p>அளவிலா பிரியங்களைப்</p><p>படரவிட்டிருந்தார் மாமா.</p><p>நோய்மையின் ஆழம் அதிகரிக்க</p><p>கத்தரிப்பூச் சேலையைக்</p><p>கொஞ்சம் கொஞ்சமாய்க் கிழித்து</p><p>மாமாவின் கடைவாய் ஒழுகுதலை</p><p>துடைத்துக்கொண்டிருந்தார் அத்தை.</p><p>வாழ்வின் இறுதித் தருணங்களில்</p><p>மிச்சம் மீதியிருந்த</p><p>சேலையைத் துவைத்து உலர வைக்க</p><p>புழக்கடை சென்ற</p><p>அத்தையின் நாசிக்கருகே </p><p>மாமாவின் சுவாச வாசம் வந்து உரச</p><p>பதற்றத்தில் வீடடைந்த அத்தையின்</p><p>பார்வைக்குக் கிடைத்தது</p><p>விட்டத்தைப் பார்த்தபடியே</p><p>மலர்ச்சியோடு மரணித்திருந்த</p><p>மாமாவின் முகத்தில் நிறைந்திருந்த</p><p>கத்தரிப்பூ வண்ணம்.</p><p><em><strong>- தமிழ்த்தென்றல்</strong></em></p>.<p>தன் சிறிய கடையை</p><p>ஞாயிற்றுக்கிழமை என்பதாலும்</p><p>வியாபாரமில்லை என்பதாலும்</p><p>நேரத்திலேயே பூட்டிவிட்டு</p><p>இரவைப் பொட்டலமாக்கி</p><p>கையில் எடுத்துச்செல்கிறான் அவன்</p><p>பொட்டலமாக்கிய இரவுக்குள்</p><p>கொஞ்சம் நட்சத்திரங்களிருக்கின்றன</p><p>கொஞ்சம் மேகங்களிருக்கின்றன</p><p>கொஞ்சம் விளக்குகளிருக்கின்றன</p><p>வீட்டை அடைந்ததும்</p><p>அப்பா ஏதேனும் தனக்கு </p><p>வாங்கி வந்திருப்பாரென</p><p>ஓடிவந்து</p><p>அப்பாவென கால்களைக் கட்டிக்கொண்ட</p><p>மகளிடத்து</p><p>பொட்டலத்தைப் பிரித்து</p><p>நட்சத்திரங்களையும் மேகங்களையும்</p><p>எடுத்துக்கொடுத்தவன்</p><p>விளக்குகளை அணைத்துவிட்டு</p><p>பொட்டலத்தில் மீதமிருந்த இரவை</p><p>தன்மீதெடுத்துப் போர்த்திக்கொண்டு</p><p>உறங்கத் தொடங்குகிறான்</p><p>உறங்கத் தொடங்கிய அவன்மீது</p><p>நட்சத்திரங்களையும் மேகங்களையும் பரப்பி</p><p>அவனை வானமாக்கிய மகள்</p><p>பௌர்ணமி நிலவாக மாறி</p><p>வானத்தைக் கட்டிப்பிடித்து</p><p>உறங்கத் தொடங்குகிறாள்</p><p>நட்சத்திரங்களின்</p><p>சின்னச் சின்ன வெளிச்சத்திலும்</p><p>பௌர்ணமி நிலவின்</p><p>குளிர் வெளிச்சத்திலும்</p><p>அழகாக நகரத்தொடங்குகிறது இரவு.</p><p><em><strong>- சௌவி</strong></em></p>
<p>அப்பா கொடுக்கும் முத்தங்களில்</p><p>பீடி வாடைதான் பிரதானமாய் மணக்கும்.</p><p>சட்டைப்பை துழாவி அவர் தரும்</p><p>ஒன்றிரண்டு காசுகளில்கூட</p><p>பீடி வாசனையே பிசுபிசுக்கும்.</p><p>இடைவெளியின்றி </p><p>வாயில் மினுமினுக்கும்</p><p>செந்நிறத் தீக்கங்குகள்</p><p>பீடியைவிடவும் </p><p>அதிகம் எரித்தது</p><p>அவரது நுரையீரலைத்தான்.</p><p>தினமும் </p><p>போட்டு வதைக்கும்</p><p>இருமல் இரைச்சல்களில்</p><p>எங்களின் அக்கறைகளும் அறிவுரைகளும்</p><p>அவர் காதுகளைச் சேரவேயில்லை.</p><p>கடைசிப்பீடி வாயிலிருக்க</p><p>அப்படியே இறந்துபோன அப்பா</p><p>இப்போதும் </p><p>ஆவியாக </p><p>அடிக்கடி வந்துபோகிறார்</p><p>யாரோ ஒருவர் இழுத்து விடும்</p><p>புகை வழியாக.</p><p><em><strong>- சாமி கிரிஷ்</strong></em></p>.<p>சுகவீனப்பட்ட நாளிலிருந்து</p><p>தனையொரு குழந்தையென </p><p>கவனித்து வந்த அத்தையின் </p><p>கத்தரிப்பூ நிறத்துச் சேலைமீது</p><p>அளவிலா பிரியங்களைப்</p><p>படரவிட்டிருந்தார் மாமா.</p><p>நோய்மையின் ஆழம் அதிகரிக்க</p><p>கத்தரிப்பூச் சேலையைக்</p><p>கொஞ்சம் கொஞ்சமாய்க் கிழித்து</p><p>மாமாவின் கடைவாய் ஒழுகுதலை</p><p>துடைத்துக்கொண்டிருந்தார் அத்தை.</p><p>வாழ்வின் இறுதித் தருணங்களில்</p><p>மிச்சம் மீதியிருந்த</p><p>சேலையைத் துவைத்து உலர வைக்க</p><p>புழக்கடை சென்ற</p><p>அத்தையின் நாசிக்கருகே </p><p>மாமாவின் சுவாச வாசம் வந்து உரச</p><p>பதற்றத்தில் வீடடைந்த அத்தையின்</p><p>பார்வைக்குக் கிடைத்தது</p><p>விட்டத்தைப் பார்த்தபடியே</p><p>மலர்ச்சியோடு மரணித்திருந்த</p><p>மாமாவின் முகத்தில் நிறைந்திருந்த</p><p>கத்தரிப்பூ வண்ணம்.</p><p><em><strong>- தமிழ்த்தென்றல்</strong></em></p>.<p>தன் சிறிய கடையை</p><p>ஞாயிற்றுக்கிழமை என்பதாலும்</p><p>வியாபாரமில்லை என்பதாலும்</p><p>நேரத்திலேயே பூட்டிவிட்டு</p><p>இரவைப் பொட்டலமாக்கி</p><p>கையில் எடுத்துச்செல்கிறான் அவன்</p><p>பொட்டலமாக்கிய இரவுக்குள்</p><p>கொஞ்சம் நட்சத்திரங்களிருக்கின்றன</p><p>கொஞ்சம் மேகங்களிருக்கின்றன</p><p>கொஞ்சம் விளக்குகளிருக்கின்றன</p><p>வீட்டை அடைந்ததும்</p><p>அப்பா ஏதேனும் தனக்கு </p><p>வாங்கி வந்திருப்பாரென</p><p>ஓடிவந்து</p><p>அப்பாவென கால்களைக் கட்டிக்கொண்ட</p><p>மகளிடத்து</p><p>பொட்டலத்தைப் பிரித்து</p><p>நட்சத்திரங்களையும் மேகங்களையும்</p><p>எடுத்துக்கொடுத்தவன்</p><p>விளக்குகளை அணைத்துவிட்டு</p><p>பொட்டலத்தில் மீதமிருந்த இரவை</p><p>தன்மீதெடுத்துப் போர்த்திக்கொண்டு</p><p>உறங்கத் தொடங்குகிறான்</p><p>உறங்கத் தொடங்கிய அவன்மீது</p><p>நட்சத்திரங்களையும் மேகங்களையும் பரப்பி</p><p>அவனை வானமாக்கிய மகள்</p><p>பௌர்ணமி நிலவாக மாறி</p><p>வானத்தைக் கட்டிப்பிடித்து</p><p>உறங்கத் தொடங்குகிறாள்</p><p>நட்சத்திரங்களின்</p><p>சின்னச் சின்ன வெளிச்சத்திலும்</p><p>பௌர்ணமி நிலவின்</p><p>குளிர் வெளிச்சத்திலும்</p><p>அழகாக நகரத்தொடங்குகிறது இரவு.</p><p><em><strong>- சௌவி</strong></em></p>