<p><strong>பார்வை</strong></p><p>முன்வாசலின்</p><p>கண்ணாடிக் கதவில்</p><p>தன்முகம் பார்த்து</p><p>தினமும் வந்து</p><p>வலுவாகக் கொத்தித் தள்ளும்</p><p>ஒரு கறுப்புவெள்ளைக்குருவி.</p><p>கண்ணாடி உடைந்துவிடுமோ என்று </p><p>கவலைப்படுகிறாய் நீ...</p><p>அலகு உடைந்துவிடுமோ என்று </p><p>பயப்படுகிறேன் நான்!</p><p><em><strong>- ராகவ்.மகேஷ்</strong></em></p>.<p><strong>வெயில் வீதி</strong></p><p>கூடுதலாய் வானம் </p><p>தெருவிற்குள் நுழைந்திருக்கிறது</p><p>திண்ணையின்மேல் கால்களைப் </p><p>பரப்பிக்கொண்டு படுத்திருக்கிறது வெயில் </p><p>வெறுமையின் சிறகுகள் படபடத்துக் கொண்டிருக்கின்றன</p><p>எல்லாவிடத்திலும் இறுக்கத்தின் முணுமுணுப்பை</p><p>நன்றாய்க் கேட்கமுடிகிறது </p><p>எதையோவொன்றை இழந்துவிட்டதற்கான</p><p>அடையாளங்கள் ஆங்காங்கே விடப்பட்டிருக்கின்றன</p><p>ஒன்றிரண்டாகவோ கூட்டமாகவோ</p><p>இளைப்பாறும் நாய்களின் நடமாட்டம் </p><p>ஏதுமின்றி வெறிச்சென்றிருக்கிறது வெளி</p><p>பலமுறை அவதானித்திருக்கிறேன் </p><p>மரம் வெட்டிய பின்</p><p>ஒவ்வொரு முறையும்</p><p>இப்படித்தானிருக்கிறது தெரு. </p><p> <em><strong> - மகேஷ் சிபி</strong></em></p>.<p><strong>உபதேச சுமை</strong></p><p>உபதேச மூட்டைகளைச்</p><p>சுமந்தபடி சுற்றுகிறார்கள்</p><p>மூட்டை நிறைந்து வழியும்</p><p>இலவச அறிவுரைகள்</p><p>நடக்கத் தடமின்றிச்</p><p>சிதறிக் கிடக்கின்றன</p><p>கால்மிதிபட்டுக் கிடப்பதைக்</p><p>கூட்டிப் பெருக்கிக் கழித்துக்</p><p>குப்பைத் தொட்டியிலிட்டு</p><p>ஆசுவாசமாய் அமர்கையிலும்</p><p>அறையின் சுவரெங்கும்</p><p>அலறும் யோசனைகள்</p><p>எல்லாச் சிக்கல்களுக்கும்</p><p>தீர்வு வைத்திருக்கிறார்கள்</p><p>எல்லா வியாதிகளுக்கும்</p><p>மருந்து சொல்கிறார்கள்</p><p>எல்லாப் பிரச்னைகளையும்</p><p>ஏதுமற்றதாக்குகிறார்கள்</p><p>சங்கடங்களும் நோய்களும்</p><p>தீர்ந்துபோனபோதிலும்</p><p>தீராத அறிவுரைகளை</p><p>அள்ளி மூட்டை கட்டி</p><p>முதுகில் சுமக்கிறேன்</p><p>எதிர்ப்படும் எவருக்கேனும்</p><p>இலவசமாய் வாரி இறைக்க</p><p>ஊரோடு உபதேசித்து வாழ்.</p><p><em><strong>- சௌம்யா</strong></em></p>
<p><strong>பார்வை</strong></p><p>முன்வாசலின்</p><p>கண்ணாடிக் கதவில்</p><p>தன்முகம் பார்த்து</p><p>தினமும் வந்து</p><p>வலுவாகக் கொத்தித் தள்ளும்</p><p>ஒரு கறுப்புவெள்ளைக்குருவி.</p><p>கண்ணாடி உடைந்துவிடுமோ என்று </p><p>கவலைப்படுகிறாய் நீ...</p><p>அலகு உடைந்துவிடுமோ என்று </p><p>பயப்படுகிறேன் நான்!</p><p><em><strong>- ராகவ்.மகேஷ்</strong></em></p>.<p><strong>வெயில் வீதி</strong></p><p>கூடுதலாய் வானம் </p><p>தெருவிற்குள் நுழைந்திருக்கிறது</p><p>திண்ணையின்மேல் கால்களைப் </p><p>பரப்பிக்கொண்டு படுத்திருக்கிறது வெயில் </p><p>வெறுமையின் சிறகுகள் படபடத்துக் கொண்டிருக்கின்றன</p><p>எல்லாவிடத்திலும் இறுக்கத்தின் முணுமுணுப்பை</p><p>நன்றாய்க் கேட்கமுடிகிறது </p><p>எதையோவொன்றை இழந்துவிட்டதற்கான</p><p>அடையாளங்கள் ஆங்காங்கே விடப்பட்டிருக்கின்றன</p><p>ஒன்றிரண்டாகவோ கூட்டமாகவோ</p><p>இளைப்பாறும் நாய்களின் நடமாட்டம் </p><p>ஏதுமின்றி வெறிச்சென்றிருக்கிறது வெளி</p><p>பலமுறை அவதானித்திருக்கிறேன் </p><p>மரம் வெட்டிய பின்</p><p>ஒவ்வொரு முறையும்</p><p>இப்படித்தானிருக்கிறது தெரு. </p><p> <em><strong> - மகேஷ் சிபி</strong></em></p>.<p><strong>உபதேச சுமை</strong></p><p>உபதேச மூட்டைகளைச்</p><p>சுமந்தபடி சுற்றுகிறார்கள்</p><p>மூட்டை நிறைந்து வழியும்</p><p>இலவச அறிவுரைகள்</p><p>நடக்கத் தடமின்றிச்</p><p>சிதறிக் கிடக்கின்றன</p><p>கால்மிதிபட்டுக் கிடப்பதைக்</p><p>கூட்டிப் பெருக்கிக் கழித்துக்</p><p>குப்பைத் தொட்டியிலிட்டு</p><p>ஆசுவாசமாய் அமர்கையிலும்</p><p>அறையின் சுவரெங்கும்</p><p>அலறும் யோசனைகள்</p><p>எல்லாச் சிக்கல்களுக்கும்</p><p>தீர்வு வைத்திருக்கிறார்கள்</p><p>எல்லா வியாதிகளுக்கும்</p><p>மருந்து சொல்கிறார்கள்</p><p>எல்லாப் பிரச்னைகளையும்</p><p>ஏதுமற்றதாக்குகிறார்கள்</p><p>சங்கடங்களும் நோய்களும்</p><p>தீர்ந்துபோனபோதிலும்</p><p>தீராத அறிவுரைகளை</p><p>அள்ளி மூட்டை கட்டி</p><p>முதுகில் சுமக்கிறேன்</p><p>எதிர்ப்படும் எவருக்கேனும்</p><p>இலவசமாய் வாரி இறைக்க</p><p>ஊரோடு உபதேசித்து வாழ்.</p><p><em><strong>- சௌம்யா</strong></em></p>