<p><strong>மு</strong>ந்தைய நாள் ஈரம் உலர்ந்து</p><p>காற்றில் புழுதி பறக்க</p><p>குடிசை முன் விரிந்திருக்கும்</p><p>மண் தரையில் நீர் தெளித்து</p><p>மீண்டும் ஈரம் படரவைத்த பின்</p><p>சிலையெனக் குனிந்து</p><p>அன்றைய கோலத்திற்கான</p><p>அத்தனை புள்ளிகளையும்</p><p>அழகாய் முதலில் வைத்து முடித்து</p><p>அடுத்து கோடு வரைபவளின்</p><p>கோலத்தை அழகாக்கிடப்</p><p>போட்டி போடுகின்றனர்</p><p>மாவைச் சிதறவிடும் சிறுமிகளும்</p><p>பூக்களை நழுவவிடும்</p><p>அருகில் நிற்கும் மரமல்லியும்.</p><p><em><strong>- பாப்பனப்பட்டு வ.முருகன்</strong></em></p>.<p><strong>ஒ</strong>ற்றைக்கல் மூக்குத்தியோடு</p><p>அம்மாவைப் பார்க்கும்போது</p><p>எங்களூர் அம்மனின் சாயல் தெரியும்.</p><p>அவள் அண்மையை</p><p>வாசம் உணர்த்துமென்றால்</p><p>தொலைவில் அவள் வருகையை</p><p>அம்மூக்குத்தியின் பளபளப்பே</p><p>காட்டிக் கொடுத்துவிடும்.</p><p>சீட்டாட்டத் தேவைக்காக</p><p>வாங்கிப் போய் அடகு வைத்த அப்பா</p><p>தோற்றுவிட்டுத் திரும்பிய பின்</p><p>மீட்க முடியாமலேயே விட்டுவிட</p><p>அன்றோடு மறைந்துபோனது</p><p>மூக்குத்தி ஒளியும்</p><p>அம்மாவின் முகப்பொலிவும்.</p><p><em><strong>- பாப்பனப்பட்டு வ.முருகன்</strong></em></p>.<ul><li><p><strong>போ</strong>ன்சாய் மரமே போன்சாய் மரமே</p></li></ul><p>அவ்வப்போது உன் அடியிலமர்ந்து</p><p>சற்று இளைப்பாறுகிறேன்</p><p>யாரிடமும் சொல்லிவிடாதே</p><p>அந்நேரங்களில் </p><p>நான் உன்னைவிடச் சிறிதாகிவிடுவதை.</p>.<ul><li><p>மரபணு மாற்றத்தில்</p></li></ul><p>வளர்ச்சி குறைக்கப்பட்ட</p><p>அரச மரத்தின் அடியில்</p><p>சிறு புத்தர் சிலையை அமர்த்தினேன்</p><p>இப்போதெல்லாம் நீர் ஊற்றாமலே</p><p>சிறு தொட்டியின் மண்</p><p>ஈரப்பதத்துடன் காணமுடிகிறது</p><p>யசோதரையின் கண்ணீராயிருக்கலாம்.</p> <ul><li><p>எவ்வளவு பெரிய ஆலமரம்</p></li></ul><p>இப்படி சுருக்கப்பட்டு வரவேற்பரையில்... </p><p>என் வீட்டிற்கு வரும்போது</p><p>அதன் விழுதுகளைப்பற்றி </p><p>யாரும் ஆடிவிடாதீர்கள்</p><p>விழுந்து நொறுங்கிவிடும்</p><p>உங்கள் பால்யமும்.</p> .<ul><li><p>தொகுப்பகங்களில்</p></li></ul><p>ஆசை ஆசையாய் வளர்க்கப்படுகின்றன</p><p>போன்சாய் காடுகள்</p><p>அதில் பதுங்கியிருக்கும்</p><p>கொடிய வகை மிருகங்கள்</p><p>வெளியே போய் வேட்டையாடுகின்றன.</p><p><em><strong>- வலங்கைமான் நூர்தீன்</strong></em></p>
<p><strong>மு</strong>ந்தைய நாள் ஈரம் உலர்ந்து</p><p>காற்றில் புழுதி பறக்க</p><p>குடிசை முன் விரிந்திருக்கும்</p><p>மண் தரையில் நீர் தெளித்து</p><p>மீண்டும் ஈரம் படரவைத்த பின்</p><p>சிலையெனக் குனிந்து</p><p>அன்றைய கோலத்திற்கான</p><p>அத்தனை புள்ளிகளையும்</p><p>அழகாய் முதலில் வைத்து முடித்து</p><p>அடுத்து கோடு வரைபவளின்</p><p>கோலத்தை அழகாக்கிடப்</p><p>போட்டி போடுகின்றனர்</p><p>மாவைச் சிதறவிடும் சிறுமிகளும்</p><p>பூக்களை நழுவவிடும்</p><p>அருகில் நிற்கும் மரமல்லியும்.</p><p><em><strong>- பாப்பனப்பட்டு வ.முருகன்</strong></em></p>.<p><strong>ஒ</strong>ற்றைக்கல் மூக்குத்தியோடு</p><p>அம்மாவைப் பார்க்கும்போது</p><p>எங்களூர் அம்மனின் சாயல் தெரியும்.</p><p>அவள் அண்மையை</p><p>வாசம் உணர்த்துமென்றால்</p><p>தொலைவில் அவள் வருகையை</p><p>அம்மூக்குத்தியின் பளபளப்பே</p><p>காட்டிக் கொடுத்துவிடும்.</p><p>சீட்டாட்டத் தேவைக்காக</p><p>வாங்கிப் போய் அடகு வைத்த அப்பா</p><p>தோற்றுவிட்டுத் திரும்பிய பின்</p><p>மீட்க முடியாமலேயே விட்டுவிட</p><p>அன்றோடு மறைந்துபோனது</p><p>மூக்குத்தி ஒளியும்</p><p>அம்மாவின் முகப்பொலிவும்.</p><p><em><strong>- பாப்பனப்பட்டு வ.முருகன்</strong></em></p>.<ul><li><p><strong>போ</strong>ன்சாய் மரமே போன்சாய் மரமே</p></li></ul><p>அவ்வப்போது உன் அடியிலமர்ந்து</p><p>சற்று இளைப்பாறுகிறேன்</p><p>யாரிடமும் சொல்லிவிடாதே</p><p>அந்நேரங்களில் </p><p>நான் உன்னைவிடச் சிறிதாகிவிடுவதை.</p>.<ul><li><p>மரபணு மாற்றத்தில்</p></li></ul><p>வளர்ச்சி குறைக்கப்பட்ட</p><p>அரச மரத்தின் அடியில்</p><p>சிறு புத்தர் சிலையை அமர்த்தினேன்</p><p>இப்போதெல்லாம் நீர் ஊற்றாமலே</p><p>சிறு தொட்டியின் மண்</p><p>ஈரப்பதத்துடன் காணமுடிகிறது</p><p>யசோதரையின் கண்ணீராயிருக்கலாம்.</p> <ul><li><p>எவ்வளவு பெரிய ஆலமரம்</p></li></ul><p>இப்படி சுருக்கப்பட்டு வரவேற்பரையில்... </p><p>என் வீட்டிற்கு வரும்போது</p><p>அதன் விழுதுகளைப்பற்றி </p><p>யாரும் ஆடிவிடாதீர்கள்</p><p>விழுந்து நொறுங்கிவிடும்</p><p>உங்கள் பால்யமும்.</p> .<ul><li><p>தொகுப்பகங்களில்</p></li></ul><p>ஆசை ஆசையாய் வளர்க்கப்படுகின்றன</p><p>போன்சாய் காடுகள்</p><p>அதில் பதுங்கியிருக்கும்</p><p>கொடிய வகை மிருகங்கள்</p><p>வெளியே போய் வேட்டையாடுகின்றன.</p><p><em><strong>- வலங்கைமான் நூர்தீன்</strong></em></p>