<p>அவர்கள் எங்கிருக்கிறார்களென</p><p>சாதாரண நாள்களில்</p><p>கண்ணுக்குத் தெரிவதில்லை</p><p>காற்றென கடவுளென</p><p>யாரும் காண முடியாமல் பரவியிருக்கிறார்கள்</p><p>குழாயடிகளில் ஒரு குடம் </p><p>தண்ணீருக்கென பிடிவாதத்தில்</p><p>தங்களை நிரூபிப்பார்கள்</p><p>ஒரு முழம் மல்லிகைப்பூவுக்கென</p><p>காலச் சொற்களையெல்லாம்</p><p>கண்டெடுத்துச் செலவளிப்பார்கள்</p><p>புயற்காலம் பெரு மழைக்காலம்</p><p>பேரிடர்க் காலமென</p><p>ஊழித்துயரைக் கண்டால்</p><p>இவர்கள் கைகள் </p><p>பெருகிவிடுகின்றன</p><p>அண்ணன்கள் தம்பிகள் அப்பாக்கள்</p><p>யாரோ சில நண்பர்கள்</p><p>வேண்டிக்கொள்கிறபோது</p><p>சமைத்து சமைத்துக் குவிக்கிறார்கள்</p><p>எங்கோ யாரோ பசியாறும் காட்சியொன்றில்</p><p>அன்னபூரணிகளென அவதாரமெடுக்கிறார்கள்</p><p>அமுதசுரபிகளின் அடையாளமாகிறார்கள்.</p><p><em><strong>- க.அம்சப்ரியா</strong></em></p>.<p>ஊரடங்கின்போது</p><p>சோக இசைப் பின்புலத்தில்</p><p>நடைபெற்றுக்கொண்டிருக்கிறது</p><p>மியூசிக்கல் சேர் விளையாட்டு.</p>.<p>வறுமை வட்டத்தில்</p><p>ஓட ஆரம்பித்த</p><p>அக்குடும்பத்தினர்</p><p>ஒவ்வொரு கட்டத்திலும்</p><p>தமக்கான உணவைத்</p><p>துறந்தபடி இருந்தனர்.</p>.<p>இதோ ஆட்டம்</p><p>முடியப்போகிறது</p><p>யாரேனும்</p><p>ஒரு கவளம்</p><p>உணவு தாருங்கள்</p><p>இன்னொரு சுற்று</p><p>ஆடிவிடலாம்</p><p>இல்லையேல்</p><p>ஆட்டம் கைவிடப்படும்.</p><p><em><strong>- பா.ரமேஷ்</strong></em></p>.<p>மின்விசிறிக் காற்றில்</p><p>படபடத்துச் சிறகசைத்துக் கொண்டிருக்கும்</p><p>சுவரில் ஒட்டப்பட்ட</p><p>முப்பரிமாணப் பட்டாம்பூச்சியைப் போல்தான்</p><p>பறந்துகொண்டிருப்பதாய்</p><p>நம்பவைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம்...</p><p>சுயம் இழுத்துக் கட்டிய</p><p>வடத்தின் நுனிவரை தரப்பட்டிருக்கும்</p><p>சுதந்திரத்திற்குள்</p><p>சுருட்டிக்கொள்ளப் பழகிவிட்டோம்</p><p>எங்கள் வாழ்வின் தடங்களை...</p><p>இனி மின்விசிறியை மட்டும்</p><p>அடிக்கடி அணைத்துவிடாதீர்கள்...</p><p>நாங்கள் பறந்துகொண்டிருப்பதாகவே</p><p>உணர்ந்தபடி வாழ்ந்துவிட்டுப்போகிறோம்.</p><p><em><strong>- கீர்த்தி கிருஷ்</strong></em></p>.<p>ஒரு நாள் உருளை மசித்து</p><p>ஒரு நாள் பயறு கடைந்து</p><p>ஒரு நாள் ரசத்தில் பிசைந்து</p><p>ஒரு நாள் தண்ணீர் கலந்து, </p><p>நான் யோசித்ததைப்போல் இல்லை</p><p>எங்களோடு சேர்ந்து</p><p>நாங்கள் வைத்த சோற்றை சாப்பிடப்</p><p>பழகியிருந்தது</p><p>எங்கள் வீட்டுப் பூனைக்குட்டி</p><p>இந்த ஊரடங்கில்.</p><p><em><strong>- அரவிந்தன்</strong></em></p>
<p>அவர்கள் எங்கிருக்கிறார்களென</p><p>சாதாரண நாள்களில்</p><p>கண்ணுக்குத் தெரிவதில்லை</p><p>காற்றென கடவுளென</p><p>யாரும் காண முடியாமல் பரவியிருக்கிறார்கள்</p><p>குழாயடிகளில் ஒரு குடம் </p><p>தண்ணீருக்கென பிடிவாதத்தில்</p><p>தங்களை நிரூபிப்பார்கள்</p><p>ஒரு முழம் மல்லிகைப்பூவுக்கென</p><p>காலச் சொற்களையெல்லாம்</p><p>கண்டெடுத்துச் செலவளிப்பார்கள்</p><p>புயற்காலம் பெரு மழைக்காலம்</p><p>பேரிடர்க் காலமென</p><p>ஊழித்துயரைக் கண்டால்</p><p>இவர்கள் கைகள் </p><p>பெருகிவிடுகின்றன</p><p>அண்ணன்கள் தம்பிகள் அப்பாக்கள்</p><p>யாரோ சில நண்பர்கள்</p><p>வேண்டிக்கொள்கிறபோது</p><p>சமைத்து சமைத்துக் குவிக்கிறார்கள்</p><p>எங்கோ யாரோ பசியாறும் காட்சியொன்றில்</p><p>அன்னபூரணிகளென அவதாரமெடுக்கிறார்கள்</p><p>அமுதசுரபிகளின் அடையாளமாகிறார்கள்.</p><p><em><strong>- க.அம்சப்ரியா</strong></em></p>.<p>ஊரடங்கின்போது</p><p>சோக இசைப் பின்புலத்தில்</p><p>நடைபெற்றுக்கொண்டிருக்கிறது</p><p>மியூசிக்கல் சேர் விளையாட்டு.</p>.<p>வறுமை வட்டத்தில்</p><p>ஓட ஆரம்பித்த</p><p>அக்குடும்பத்தினர்</p><p>ஒவ்வொரு கட்டத்திலும்</p><p>தமக்கான உணவைத்</p><p>துறந்தபடி இருந்தனர்.</p>.<p>இதோ ஆட்டம்</p><p>முடியப்போகிறது</p><p>யாரேனும்</p><p>ஒரு கவளம்</p><p>உணவு தாருங்கள்</p><p>இன்னொரு சுற்று</p><p>ஆடிவிடலாம்</p><p>இல்லையேல்</p><p>ஆட்டம் கைவிடப்படும்.</p><p><em><strong>- பா.ரமேஷ்</strong></em></p>.<p>மின்விசிறிக் காற்றில்</p><p>படபடத்துச் சிறகசைத்துக் கொண்டிருக்கும்</p><p>சுவரில் ஒட்டப்பட்ட</p><p>முப்பரிமாணப் பட்டாம்பூச்சியைப் போல்தான்</p><p>பறந்துகொண்டிருப்பதாய்</p><p>நம்பவைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம்...</p><p>சுயம் இழுத்துக் கட்டிய</p><p>வடத்தின் நுனிவரை தரப்பட்டிருக்கும்</p><p>சுதந்திரத்திற்குள்</p><p>சுருட்டிக்கொள்ளப் பழகிவிட்டோம்</p><p>எங்கள் வாழ்வின் தடங்களை...</p><p>இனி மின்விசிறியை மட்டும்</p><p>அடிக்கடி அணைத்துவிடாதீர்கள்...</p><p>நாங்கள் பறந்துகொண்டிருப்பதாகவே</p><p>உணர்ந்தபடி வாழ்ந்துவிட்டுப்போகிறோம்.</p><p><em><strong>- கீர்த்தி கிருஷ்</strong></em></p>.<p>ஒரு நாள் உருளை மசித்து</p><p>ஒரு நாள் பயறு கடைந்து</p><p>ஒரு நாள் ரசத்தில் பிசைந்து</p><p>ஒரு நாள் தண்ணீர் கலந்து, </p><p>நான் யோசித்ததைப்போல் இல்லை</p><p>எங்களோடு சேர்ந்து</p><p>நாங்கள் வைத்த சோற்றை சாப்பிடப்</p><p>பழகியிருந்தது</p><p>எங்கள் வீட்டுப் பூனைக்குட்டி</p><p>இந்த ஊரடங்கில்.</p><p><em><strong>- அரவிந்தன்</strong></em></p>