<p><strong>ஏ</strong>தேனும் இடிபாடுகளுக்கிடையில்</p><p>புதைந்திருக்கக்கூடும்</p><p>அதை வெளிக்கொணர்வதே</p><p>இப்போதைய பணி</p><p>வீரிய முளைத்தலுக்கென</p><p>யாரேனும் புதைத்திருக்கக்கூடும்</p><p>காற்றையும் ஈரப்பதத்தையும்</p><p>கையளித்திடுவதுமே</p><p>இப்போதைய பணியாகட்டும்</p><p>ஏதேனுமொரு மக்கள் திரளில்</p><p>செய்வதறியாது திகைத்து நின்றிருக்கக் கூடும்</p><p>பொருத்தமான வெளிச்சத்தில் அடையாளமாகட்டும்</p><p>மீட்டெடுக்கும் அச்சொல்லே </p><p>இந்த இருளின் தீபமாக இருக்கக்கூடும்</p><p>இக்களைகளை அகற்றும்</p><p>கூராயுதமாகவும் அமையக்கூடும்</p><p>வழியற்றவர்களின்</p><p>பாதையாகி</p><p>இருப்பிடம் சேர்க்கும்</p><p>வழித்துணையாக இருக்கக்கூடும்</p><p>அகவாசலில் </p><p>உங்கள் கண்ணசைவிற்காகக் காத்திருக்கும்</p><p>அச்சொல் இவ்வுலகிற்கான உங்கள் கொடையாக இருக்கக் கூடும்.</p><p><em><strong>- க.அம்சப்ரியா</strong></em></p>.<p><strong>அ</strong>டிபட்டு </p><p>நசுங்கிக்கிடக்கும் </p><p>அணில்குஞ்சின் மரபணுவில் </p><p>நெடுஞ்சாலை என்ற </p><p>குறிப்பேதுமில்லை.</p><p><em><strong>- சதீஷ் குமரன்</strong></em></p>.<p><strong>எ</strong>ன் </p><p>தூண்டிலிலிருந்து </p><p>தப்பித்துக்கொண்டே இருந்தன </p><p>மீன்கள்... </p><p>நீண்ட நேரத்திற்குப்பிறகு </p><p>தூண்டிலில் ஒரு மீன் </p><p>சிக்கிக்கொள்ள </p><p>வந்தபோது </p><p>நான் </p><p>தூண்டிலை </p><p>நகர்த்திக்கொண்டேன்.</p><p><em><strong>- கிருத்திகா தாஸ்</strong></em></p>.<p><strong>இ</strong>ரவின் மழை சேர்த்தே </p><p>குளிப்பாட்டியிருந்தது </p><p>நெடுஞ்சாலையையும் அதனருகில் </p><p>வாழும் கந்தலாடைக்காரியையும்</p><p>நெடுஞ்சாலைக்கு நீண்டநாள் </p><p>தீராமலிருந்த தாகம் தீர்ந்திருந்தது</p><p>அவளுக்கோ அழுக்ககன்ற அவள்</p><p>வெள்ளைத்தோல் தரிசனமாகியிருந்தது</p><p>அவள் குத்திட்டு நிற்கும் விழிகளோடு </p><p>நெஞ்சிலேறிக்கடக்கும் கனரக வாகனங்களின் பாரம் தாங்கும்</p><p>நெடுஞ்சாலையை நோக்கியிருந்தாள்</p><p>அதுவோ அவளின் கிழிசல்களுக்கிடையில் </p><p>ததும்பும் இளமையின் மீதூறும்</p><p>டாஸ்மாக் பார்வைகளுக்கு விபத்தை </p><p>உண்டாக்கிக்கொண்டிருந்தது</p><p>முன்பொரு நாளின் இரவைப்போல் </p><p>இன்றிரவு அவள் மீண்டும் </p><p>மனம்பிறழக்கூடுமென்ற பயத்தில்..!</p><p><em><strong>- திரு. வெங்கட்.</strong></em></p>
<p><strong>ஏ</strong>தேனும் இடிபாடுகளுக்கிடையில்</p><p>புதைந்திருக்கக்கூடும்</p><p>அதை வெளிக்கொணர்வதே</p><p>இப்போதைய பணி</p><p>வீரிய முளைத்தலுக்கென</p><p>யாரேனும் புதைத்திருக்கக்கூடும்</p><p>காற்றையும் ஈரப்பதத்தையும்</p><p>கையளித்திடுவதுமே</p><p>இப்போதைய பணியாகட்டும்</p><p>ஏதேனுமொரு மக்கள் திரளில்</p><p>செய்வதறியாது திகைத்து நின்றிருக்கக் கூடும்</p><p>பொருத்தமான வெளிச்சத்தில் அடையாளமாகட்டும்</p><p>மீட்டெடுக்கும் அச்சொல்லே </p><p>இந்த இருளின் தீபமாக இருக்கக்கூடும்</p><p>இக்களைகளை அகற்றும்</p><p>கூராயுதமாகவும் அமையக்கூடும்</p><p>வழியற்றவர்களின்</p><p>பாதையாகி</p><p>இருப்பிடம் சேர்க்கும்</p><p>வழித்துணையாக இருக்கக்கூடும்</p><p>அகவாசலில் </p><p>உங்கள் கண்ணசைவிற்காகக் காத்திருக்கும்</p><p>அச்சொல் இவ்வுலகிற்கான உங்கள் கொடையாக இருக்கக் கூடும்.</p><p><em><strong>- க.அம்சப்ரியா</strong></em></p>.<p><strong>அ</strong>டிபட்டு </p><p>நசுங்கிக்கிடக்கும் </p><p>அணில்குஞ்சின் மரபணுவில் </p><p>நெடுஞ்சாலை என்ற </p><p>குறிப்பேதுமில்லை.</p><p><em><strong>- சதீஷ் குமரன்</strong></em></p>.<p><strong>எ</strong>ன் </p><p>தூண்டிலிலிருந்து </p><p>தப்பித்துக்கொண்டே இருந்தன </p><p>மீன்கள்... </p><p>நீண்ட நேரத்திற்குப்பிறகு </p><p>தூண்டிலில் ஒரு மீன் </p><p>சிக்கிக்கொள்ள </p><p>வந்தபோது </p><p>நான் </p><p>தூண்டிலை </p><p>நகர்த்திக்கொண்டேன்.</p><p><em><strong>- கிருத்திகா தாஸ்</strong></em></p>.<p><strong>இ</strong>ரவின் மழை சேர்த்தே </p><p>குளிப்பாட்டியிருந்தது </p><p>நெடுஞ்சாலையையும் அதனருகில் </p><p>வாழும் கந்தலாடைக்காரியையும்</p><p>நெடுஞ்சாலைக்கு நீண்டநாள் </p><p>தீராமலிருந்த தாகம் தீர்ந்திருந்தது</p><p>அவளுக்கோ அழுக்ககன்ற அவள்</p><p>வெள்ளைத்தோல் தரிசனமாகியிருந்தது</p><p>அவள் குத்திட்டு நிற்கும் விழிகளோடு </p><p>நெஞ்சிலேறிக்கடக்கும் கனரக வாகனங்களின் பாரம் தாங்கும்</p><p>நெடுஞ்சாலையை நோக்கியிருந்தாள்</p><p>அதுவோ அவளின் கிழிசல்களுக்கிடையில் </p><p>ததும்பும் இளமையின் மீதூறும்</p><p>டாஸ்மாக் பார்வைகளுக்கு விபத்தை </p><p>உண்டாக்கிக்கொண்டிருந்தது</p><p>முன்பொரு நாளின் இரவைப்போல் </p><p>இன்றிரவு அவள் மீண்டும் </p><p>மனம்பிறழக்கூடுமென்ற பயத்தில்..!</p><p><em><strong>- திரு. வெங்கட்.</strong></em></p>