<p>மென் இறக்கைகள் </p><p>பிய்த்தெறியும்</p><p>வன் கரங்களுக்கு</p><p>நிறமிகளைப் </p><p>பரிசளித்துச் சாகும்</p><p>சிறு பட்டாம்பூச்சியாகவே</p><p>இருந்துவிட்டுப் போகிறேன்...</p><p>ஒட்டிய நிறமிகளின்</p><p>ஓராயிரம் </p><p>உணர்வுத் துணுக்குகளில்</p><p>உருப்பெறும் என்னை</p><p>மீண்டும்</p><p>பிய்த்தெறிய முற்படாதீர்கள்...</p><p>உங்கள் விரல்களிலிருந்தும்</p><p>வழியக் கூடும்</p><p>குருதிக் கூறுகள்...</p>.<p><em><strong>- கீர்த்தி கிருஷ்</strong></em></p>.<p>காட்டாறு வந்து கலந்தபோது</p><p>துழந்தும் தொட்டும்</p><p>அருள் வந்து ஆடிய</p><p>குலசாமிகள் நதிகள்</p><p>கொள்ளை நோய்கள் வந்து</p><p>கொத்துக் கொத்தாய்</p><p>குலசாமிகளை</p><p>அள்ளிப் போனது</p><p>அம்மா தேய்த்துக் குளித்த</p><p>அரப்புப் பொடி கலந்த </p><p>ஆற்று மணலையெல்லாம்</p><p>சிட்டிகை அள்ளி வாயிலிட்டதும்</p><p>நாட்டுச் சர்க்கரையாய் இனித்த </p><p>ஆற்று மணலையெல்லாம்</p><p>தொடர்ந்து லாரி லாரியாய்</p><p>வாரிக் கொண்டிருந்தபோது</p><p>மீன்கொத்தியின் சோடிக் கண்களைப் போலவும்</p><p>உலர்ந்துபோன உழிஞைக்கொடியின்</p><p>சல்லி வேர்களைப் போலவும்</p><p>வெறுமனே நின்று</p><p>வேடிக்கை</p><p>பார்த்துக்கொண்டிருந்தேன்.</p>.<p><em><strong>- ஜெயநதி</strong></em></p>.<p>வெள்ளிக்காசுகளை </p><p>எண்ணிக்கொண்டிருந்த</p><p>யூதாசைக் காணநேர்ந்தது.</p><p>“கொஞ்சம்கூட </p><p>வெட்கமில்லையா?” என்றேன்.</p><p>நிமிர்ந்தென்னைப் பார்த்து</p><p>எங்கிருந்து வருகிறாய் </p><p>என்றான்.</p><p>சொன்னேன்...</p><p>என் பின்னால் எட்டிப்பார்த்தவன்</p><p>வெள்ளிக்காசுகளை </p><p>என் கையில் திணித்துவிட்டுப்</p><p>போனான்.</p><p>திரும்பிப் பார்த்தேன்...</p><p>நெஞ்சில் பதிந்துகிடந்த</p><p>தோட்டாக்களோடு </p><p>பாலசந்திரன் புன்னகைத்தான்.</p>.<p><em><strong>- சூர்ய பாரதி</strong></em></p>.<p>பறக்கத்தான் </p><p>ஆசை. </p><p>யுக துக்கத்தைச் </p><p>செயலிழக்கச் செய்து </p><p>சல்லிவேர் உறவைத் </p><p>தவிர்த்து </p><p>சம்பிரதாயக் கடமைகளைக் </p><p>கத்தரித்து </p><p>துயரமற்ற பொழுதை </p><p>ஏந்தி </p><p>மனக்கீற்றை விலக்கி </p><p>வெறுமைப்படலக் காட்சிகளைத் </p><p>தணிக்கையாக்கி </p><p>பறப்பதற்கு </p><p>சாத்தியமில்லாக் </p><p>கால்களுக்கு </p><p>பறக்கத்தான் ஆசை.</p>.<p><em><strong>- நலங்கிள்ளி</strong></em></p>
<p>மென் இறக்கைகள் </p><p>பிய்த்தெறியும்</p><p>வன் கரங்களுக்கு</p><p>நிறமிகளைப் </p><p>பரிசளித்துச் சாகும்</p><p>சிறு பட்டாம்பூச்சியாகவே</p><p>இருந்துவிட்டுப் போகிறேன்...</p><p>ஒட்டிய நிறமிகளின்</p><p>ஓராயிரம் </p><p>உணர்வுத் துணுக்குகளில்</p><p>உருப்பெறும் என்னை</p><p>மீண்டும்</p><p>பிய்த்தெறிய முற்படாதீர்கள்...</p><p>உங்கள் விரல்களிலிருந்தும்</p><p>வழியக் கூடும்</p><p>குருதிக் கூறுகள்...</p>.<p><em><strong>- கீர்த்தி கிருஷ்</strong></em></p>.<p>காட்டாறு வந்து கலந்தபோது</p><p>துழந்தும் தொட்டும்</p><p>அருள் வந்து ஆடிய</p><p>குலசாமிகள் நதிகள்</p><p>கொள்ளை நோய்கள் வந்து</p><p>கொத்துக் கொத்தாய்</p><p>குலசாமிகளை</p><p>அள்ளிப் போனது</p><p>அம்மா தேய்த்துக் குளித்த</p><p>அரப்புப் பொடி கலந்த </p><p>ஆற்று மணலையெல்லாம்</p><p>சிட்டிகை அள்ளி வாயிலிட்டதும்</p><p>நாட்டுச் சர்க்கரையாய் இனித்த </p><p>ஆற்று மணலையெல்லாம்</p><p>தொடர்ந்து லாரி லாரியாய்</p><p>வாரிக் கொண்டிருந்தபோது</p><p>மீன்கொத்தியின் சோடிக் கண்களைப் போலவும்</p><p>உலர்ந்துபோன உழிஞைக்கொடியின்</p><p>சல்லி வேர்களைப் போலவும்</p><p>வெறுமனே நின்று</p><p>வேடிக்கை</p><p>பார்த்துக்கொண்டிருந்தேன்.</p>.<p><em><strong>- ஜெயநதி</strong></em></p>.<p>வெள்ளிக்காசுகளை </p><p>எண்ணிக்கொண்டிருந்த</p><p>யூதாசைக் காணநேர்ந்தது.</p><p>“கொஞ்சம்கூட </p><p>வெட்கமில்லையா?” என்றேன்.</p><p>நிமிர்ந்தென்னைப் பார்த்து</p><p>எங்கிருந்து வருகிறாய் </p><p>என்றான்.</p><p>சொன்னேன்...</p><p>என் பின்னால் எட்டிப்பார்த்தவன்</p><p>வெள்ளிக்காசுகளை </p><p>என் கையில் திணித்துவிட்டுப்</p><p>போனான்.</p><p>திரும்பிப் பார்த்தேன்...</p><p>நெஞ்சில் பதிந்துகிடந்த</p><p>தோட்டாக்களோடு </p><p>பாலசந்திரன் புன்னகைத்தான்.</p>.<p><em><strong>- சூர்ய பாரதி</strong></em></p>.<p>பறக்கத்தான் </p><p>ஆசை. </p><p>யுக துக்கத்தைச் </p><p>செயலிழக்கச் செய்து </p><p>சல்லிவேர் உறவைத் </p><p>தவிர்த்து </p><p>சம்பிரதாயக் கடமைகளைக் </p><p>கத்தரித்து </p><p>துயரமற்ற பொழுதை </p><p>ஏந்தி </p><p>மனக்கீற்றை விலக்கி </p><p>வெறுமைப்படலக் காட்சிகளைத் </p><p>தணிக்கையாக்கி </p><p>பறப்பதற்கு </p><p>சாத்தியமில்லாக் </p><p>கால்களுக்கு </p><p>பறக்கத்தான் ஆசை.</p>.<p><em><strong>- நலங்கிள்ளி</strong></em></p>