<p><strong>இ</strong>யல்பு நிலை இழந்து </p><p>இன்னும் இறுக்கமாகவே இருக்கிறது </p><p>சாவு விழுந்த வீடு.</p> <p>இரண்டு நாள்களாக </p><p>பிரிக்கப்படாமலேயே இருக்கிறது </p><p>தினசரி பேப்பர்.</p> <p>எப்போதும் வாலாட்டிக்கொண்டே </p><p>அங்கும் இங்கும் ஓடும் நாய்க்குட்டி </p><p>அமைதியாக சுருண்டு படுத்திருக்கிறது.</p> <p>வழக்கமாக </p><p>வாசல் மரத்தில் வந்தமரும் </p><p>தேன்சிட்டு இரண்டும்கூட </p><p>வழக்கத்திற்கு மாறாக </p><p>சத்தம் இடாமலும் </p><p>வந்த சுவடு தெரியாமலும் </p><p>பறந்து மறைகின்றன.</p> <p>ஊரிலிருந்து வந்து சேர்ந்த</p><p>இரண்டு வயதுப் பேத்தி </p><p>வீடெங்கும் </p><p>மழலைக் குரலுடன் </p><p>இங்கும் அங்கும் தவழ... </p> <p>மீண்டும் </p><p>மெள்ள மெள்ள</p><p>உயிர்பெற்று </p><p>அசையத் தொடங்குகிறது </p><p>ஜீவன் தொலைந்த </p><p>அந்த வீடு.</p><p><em><strong>- கிணத்துக்கடவு ரவி</strong></em></p>.<p><strong>த</strong>ண்டவாளப் பிரதேசங்களில்</p><p>பறந்திடும் வேளை</p><p>குறுக்கிடும் தொடர்வண்டிகளின்</p><p>மோதலில் சிக்கிவிடாமல்</p><p>சட்டென விலகி</p><p>பறவைகள் தப்பிவிடுவதைப்போல</p><p>எளிதானதாக எப்போதுமே</p><p>இருப்பதில்லை</p><p>மிக மெதுவாகவே நகர்ந்தூறும்</p><p>மரவட்டைகளுக்கும் நத்தைகளுக்கும்!</p><p><em><strong>- தி.சிவசங்கரி</strong></em></p>.<p><strong>நெ</strong>டுநாள்களாய்</p><p>திறக்காத சாளரத்தை</p><p>திறக்க நோ்ந்தபோது</p><p>அதனிடுக்கில் அணிலொன்று</p><p>கூடுகட்டிக் குஞ்சுகளோடிருந்தது</p><p>யாரும் பாா்ப்பதற்குள்</p><p>திறந்த சாளரத்தை மூடிவிட்டு</p><p>கூட்டை எடுத்து</p><p>இங்கு வைத்துவிட்டேன்</p><p>இந்த வாிகளெங்கும்</p><p>குறுகுறுவென ஓடித்திாிவன</p><p>அந்தப் பழைய அணிலின் </p><p>புதிய குஞ்சுகள்தாம்...</p><p><em><strong> - வெள்ளூர் ராஜா</strong></em></p>.<p>அக்காவுக்கு டோரா</p><p>தம்பிக்கு சோட்டா பீம்</p><p>யார் எதைப் பார்க்க வேண்டும்</p><p>என்பதில் தொடங்கிய சண்டையில்</p><p>தூக்கி வீசப்பட்டு </p><p>இரண்டாய்ப் பிளந்துபோனது </p><p>தொலைக்காட்சி ரிமோட்</p><p>இப்போது </p><p>ரிமோட்டை யார் உடைத்தது</p><p>என்று தொடர்ந்த சண்டையை</p><p>வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த</p><p>உடைந்த ரிமோட்டுக்கு </p><p>பொத்தான்கள் இருந்த இடத்தில்</p><p>பொக்கை வாய்ச் சிரிப்புகள்.</p><p><em><strong>- மு.மகுடீசுவரன்</strong></em></p>.<p>காட்டுக் கோயிலில்</p><p>கம்பீரமாக வீற்றிருக்கும்</p><p>அய்யனார் கை</p><p>ஆளுயர அரிவாள் மீது</p><p>பட்டாம்பூச்சிகள்</p><p>வந்தமர்ந்து செல்கின்றன</p><p>அவ்வப்போது.</p><p><em><strong>- மகா</strong></em></p>
<p><strong>இ</strong>யல்பு நிலை இழந்து </p><p>இன்னும் இறுக்கமாகவே இருக்கிறது </p><p>சாவு விழுந்த வீடு.</p> <p>இரண்டு நாள்களாக </p><p>பிரிக்கப்படாமலேயே இருக்கிறது </p><p>தினசரி பேப்பர்.</p> <p>எப்போதும் வாலாட்டிக்கொண்டே </p><p>அங்கும் இங்கும் ஓடும் நாய்க்குட்டி </p><p>அமைதியாக சுருண்டு படுத்திருக்கிறது.</p> <p>வழக்கமாக </p><p>வாசல் மரத்தில் வந்தமரும் </p><p>தேன்சிட்டு இரண்டும்கூட </p><p>வழக்கத்திற்கு மாறாக </p><p>சத்தம் இடாமலும் </p><p>வந்த சுவடு தெரியாமலும் </p><p>பறந்து மறைகின்றன.</p> <p>ஊரிலிருந்து வந்து சேர்ந்த</p><p>இரண்டு வயதுப் பேத்தி </p><p>வீடெங்கும் </p><p>மழலைக் குரலுடன் </p><p>இங்கும் அங்கும் தவழ... </p> <p>மீண்டும் </p><p>மெள்ள மெள்ள</p><p>உயிர்பெற்று </p><p>அசையத் தொடங்குகிறது </p><p>ஜீவன் தொலைந்த </p><p>அந்த வீடு.</p><p><em><strong>- கிணத்துக்கடவு ரவி</strong></em></p>.<p><strong>த</strong>ண்டவாளப் பிரதேசங்களில்</p><p>பறந்திடும் வேளை</p><p>குறுக்கிடும் தொடர்வண்டிகளின்</p><p>மோதலில் சிக்கிவிடாமல்</p><p>சட்டென விலகி</p><p>பறவைகள் தப்பிவிடுவதைப்போல</p><p>எளிதானதாக எப்போதுமே</p><p>இருப்பதில்லை</p><p>மிக மெதுவாகவே நகர்ந்தூறும்</p><p>மரவட்டைகளுக்கும் நத்தைகளுக்கும்!</p><p><em><strong>- தி.சிவசங்கரி</strong></em></p>.<p><strong>நெ</strong>டுநாள்களாய்</p><p>திறக்காத சாளரத்தை</p><p>திறக்க நோ்ந்தபோது</p><p>அதனிடுக்கில் அணிலொன்று</p><p>கூடுகட்டிக் குஞ்சுகளோடிருந்தது</p><p>யாரும் பாா்ப்பதற்குள்</p><p>திறந்த சாளரத்தை மூடிவிட்டு</p><p>கூட்டை எடுத்து</p><p>இங்கு வைத்துவிட்டேன்</p><p>இந்த வாிகளெங்கும்</p><p>குறுகுறுவென ஓடித்திாிவன</p><p>அந்தப் பழைய அணிலின் </p><p>புதிய குஞ்சுகள்தாம்...</p><p><em><strong> - வெள்ளூர் ராஜா</strong></em></p>.<p>அக்காவுக்கு டோரா</p><p>தம்பிக்கு சோட்டா பீம்</p><p>யார் எதைப் பார்க்க வேண்டும்</p><p>என்பதில் தொடங்கிய சண்டையில்</p><p>தூக்கி வீசப்பட்டு </p><p>இரண்டாய்ப் பிளந்துபோனது </p><p>தொலைக்காட்சி ரிமோட்</p><p>இப்போது </p><p>ரிமோட்டை யார் உடைத்தது</p><p>என்று தொடர்ந்த சண்டையை</p><p>வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த</p><p>உடைந்த ரிமோட்டுக்கு </p><p>பொத்தான்கள் இருந்த இடத்தில்</p><p>பொக்கை வாய்ச் சிரிப்புகள்.</p><p><em><strong>- மு.மகுடீசுவரன்</strong></em></p>.<p>காட்டுக் கோயிலில்</p><p>கம்பீரமாக வீற்றிருக்கும்</p><p>அய்யனார் கை</p><p>ஆளுயர அரிவாள் மீது</p><p>பட்டாம்பூச்சிகள்</p><p>வந்தமர்ந்து செல்கின்றன</p><p>அவ்வப்போது.</p><p><em><strong>- மகா</strong></em></p>