<p>ஒரு ரொட்டித் துண்டுக்காக வானத்தை விற்றவனும் </p><p>நட்சத்திரங்களை நம்பி </p><p>தன் வீட்டின் சுடர்களை அணைத்தவனும்</p><p>சந்தித்துக்கொள்ளும் </p><p>ஒரு புள்ளியில்</p><p>அவர்களுக்கான பூமி களவாடப்பட்டிருந்தது.</p><p>கண்மூடித்தனமான பக்தியில் கடவுளே விற்கப்படுவதுபோல </p><p>தேசபக்தியின் பெயரால்தான் தேசமும் விற்கப்படுகிறது.</p><p>போராட்டக்காரர்களின்</p><p>குரல்வளையில் </p><p>பதுங்கி இருந்த </p><p>துப்பாக்கித் தோட்டாக்கள்தான் </p><p>ஆள்பவர்களின் அதிகாரத்தை </p><p>உறுதி செய்கிறது.</p><p>கடல் அலைகளைத் தாண்டிய </p><p>கணக்கற்ற பொய்கள்தான் </p><p>ஆளுகிற தந்திரங்கள் என்று</p><p>ஆட்சியாளர்கள் நம்புகிறார்கள்.</p><p>ஆலயங்களில் மட்டுமா </p><p>ஆராதனைகள்?</p><p>அரசியல் கூட்டங்களுக்குச்</p><p>சென்று பாருங்கள்.</p><p>பக்தியைத் தாண்டி நிற்கிறது</p><p>பகுத்தறிவின் அர்ச்சனைகள்.</p><p>மின்விளக்குகளால் மறைக்கப்படுகின்றன</p><p>பௌர்ணமிப்பொழுதுகள்</p><p><em><strong>- அமீர் அப்பாஸ்</strong></em></p>.<p>பாம்பு வளர்க்க ஆசைப்பட்டவன்</p><p>சுருண்டு படுத்திருக்கிறான்.</p><p>அவன் ஊதும் மகுடிக்கு</p><p>அவனே அவ்வப்போது </p><p>படம் எடுத்து ஆடுவான்.</p><p>பயத்தில் நெளியாமல் </p><p>அந்த ஓலைப்பெட்டியைக்</p><p>கொஞ்சம் திறந்துபாருங்கள்.</p><p>இல்லாத அரவமொன்று</p><p>நீலம்பாரித்துக் கிடப்பதை.</p><p><em><strong>- வலங்கைமான் நூர்தீன்</strong></em></p>.<p><strong>நம்மிடையே...</strong></p><p>நம்மிடையே இருப்பது </p><p>சிறு குன்று </p><p>பெரு மலை </p><p>சிற்றாறு </p><p>பெரு வெள்ளம் சுழித்தோடும் பேராறு </p><p>குறைந்தபட்சம் ஒரு சுவர் </p><p>இவை எதுவுமில்லை </p><p>உன் மீதும் </p><p>என் மீதும் கால் போட்டபடி </p><p>உறக்கத்தில் சிரிக்கும் </p><p>குழந்தையைப் போலொரு காலம் </p><p>அவ்வளவுதான்.</p><p><em>- <strong>வெள்ளூர் ராஜா</strong></em></p>.<p><strong>கதவுகள்</strong></p><p>சில கதவுகளைத் திறக்க தள்ளு</p><p>சில கதவுகளைத் திறக்க இழு</p><p>சில கதவுகள் தானே திறந்து மூடும்</p><p>சில கதவுகள் திறக்கும்போதே சப்தமிடும்</p><p>கதவுகள் எப்போதும் திறந்து </p><p>மூடிக்கொண்டே இருக்கின்றன கவிதைகள்போல.</p><p>திறக்கப்பட்ட அறைகளைப்போல</p><p>கவிதைகளின் நீளம் அகலம் உயரம்</p><p>மாறிக்கொண்டே இருக்கின்றன.</p><p>வாசிப்பவனின் மனக்கதவுகளை</p><p>கவிதைகள்</p><p>திறந்து மூடுகின்றன</p><p>கதவுகளைப்போல.</p><p><em><strong>- ஏந்தல் இளங்கோ</strong></em></p>
<p>ஒரு ரொட்டித் துண்டுக்காக வானத்தை விற்றவனும் </p><p>நட்சத்திரங்களை நம்பி </p><p>தன் வீட்டின் சுடர்களை அணைத்தவனும்</p><p>சந்தித்துக்கொள்ளும் </p><p>ஒரு புள்ளியில்</p><p>அவர்களுக்கான பூமி களவாடப்பட்டிருந்தது.</p><p>கண்மூடித்தனமான பக்தியில் கடவுளே விற்கப்படுவதுபோல </p><p>தேசபக்தியின் பெயரால்தான் தேசமும் விற்கப்படுகிறது.</p><p>போராட்டக்காரர்களின்</p><p>குரல்வளையில் </p><p>பதுங்கி இருந்த </p><p>துப்பாக்கித் தோட்டாக்கள்தான் </p><p>ஆள்பவர்களின் அதிகாரத்தை </p><p>உறுதி செய்கிறது.</p><p>கடல் அலைகளைத் தாண்டிய </p><p>கணக்கற்ற பொய்கள்தான் </p><p>ஆளுகிற தந்திரங்கள் என்று</p><p>ஆட்சியாளர்கள் நம்புகிறார்கள்.</p><p>ஆலயங்களில் மட்டுமா </p><p>ஆராதனைகள்?</p><p>அரசியல் கூட்டங்களுக்குச்</p><p>சென்று பாருங்கள்.</p><p>பக்தியைத் தாண்டி நிற்கிறது</p><p>பகுத்தறிவின் அர்ச்சனைகள்.</p><p>மின்விளக்குகளால் மறைக்கப்படுகின்றன</p><p>பௌர்ணமிப்பொழுதுகள்</p><p><em><strong>- அமீர் அப்பாஸ்</strong></em></p>.<p>பாம்பு வளர்க்க ஆசைப்பட்டவன்</p><p>சுருண்டு படுத்திருக்கிறான்.</p><p>அவன் ஊதும் மகுடிக்கு</p><p>அவனே அவ்வப்போது </p><p>படம் எடுத்து ஆடுவான்.</p><p>பயத்தில் நெளியாமல் </p><p>அந்த ஓலைப்பெட்டியைக்</p><p>கொஞ்சம் திறந்துபாருங்கள்.</p><p>இல்லாத அரவமொன்று</p><p>நீலம்பாரித்துக் கிடப்பதை.</p><p><em><strong>- வலங்கைமான் நூர்தீன்</strong></em></p>.<p><strong>நம்மிடையே...</strong></p><p>நம்மிடையே இருப்பது </p><p>சிறு குன்று </p><p>பெரு மலை </p><p>சிற்றாறு </p><p>பெரு வெள்ளம் சுழித்தோடும் பேராறு </p><p>குறைந்தபட்சம் ஒரு சுவர் </p><p>இவை எதுவுமில்லை </p><p>உன் மீதும் </p><p>என் மீதும் கால் போட்டபடி </p><p>உறக்கத்தில் சிரிக்கும் </p><p>குழந்தையைப் போலொரு காலம் </p><p>அவ்வளவுதான்.</p><p><em>- <strong>வெள்ளூர் ராஜா</strong></em></p>.<p><strong>கதவுகள்</strong></p><p>சில கதவுகளைத் திறக்க தள்ளு</p><p>சில கதவுகளைத் திறக்க இழு</p><p>சில கதவுகள் தானே திறந்து மூடும்</p><p>சில கதவுகள் திறக்கும்போதே சப்தமிடும்</p><p>கதவுகள் எப்போதும் திறந்து </p><p>மூடிக்கொண்டே இருக்கின்றன கவிதைகள்போல.</p><p>திறக்கப்பட்ட அறைகளைப்போல</p><p>கவிதைகளின் நீளம் அகலம் உயரம்</p><p>மாறிக்கொண்டே இருக்கின்றன.</p><p>வாசிப்பவனின் மனக்கதவுகளை</p><p>கவிதைகள்</p><p>திறந்து மூடுகின்றன</p><p>கதவுகளைப்போல.</p><p><em><strong>- ஏந்தல் இளங்கோ</strong></em></p>