<p>முகவரியற்றவர்களால்</p><p>நிரம்பியிருக்கிறது நகரம்</p><p>பழைய முகவரியைத் தொலைத்துவிட்டு</p><p>புதுமுகவரியைத் தேடியபடி</p><p>திரிந்துகொண்டிருக்கிறது ஒரு கூட்டம்</p><p>இத்தனை நாள் வசித்தது</p><p>உண்மையென உறுதிப்படுத்த</p><p>இன்னொரு கூட்டம்</p><p>அலைந்துகொண்டிருக்கிறது</p><p>எட்டாத விலையில்</p><p>வாடகைக்காகவும், விற்பனைக்காகவும்</p><p>நிறைய முகவரிகளும்</p><p>முகவரிக்கான சான்றுகளும்</p><p>காத்துக்கிடக்கின்றன</p><p>நெருக்கடியான சாலையில்</p><p>கட்டில், மெத்தை, பீரோக்களோடு</p><p>முகவரி மாற்றும் வேன் ஒன்று</p><p>கடந்துசெல்கிறது</p><p>அதிலிருந்த தொட்டிச்செடியொன்றில்</p><p>அன்று மலர்ந்த ரோஜா</p><p>மலங்கமலங்க விழிக்கிறது</p><p>வழக்கமான தேனீக்களின்றி...</p><p>நகரின் முக்கிய சந்திப்பொன்றில்</p><p>தங்கள் முகவரியை உறுதிசெய்திட</p><p>பெருந்திரள் பேரணி நடந்துசெல்கிறது</p><p>பள்ளிக்குழந்தைகள் முதல்</p><p>கார்ப்பரேட் பணியாளர்கள்வரை</p><p>வாக்கப்பட்ட பெருமையோடு</p><p>முகவரிகளைக்</p><p>கழுத்தில் கட்டியபடி திரிகிறார்கள்</p><p>சிலர் கூச்சப்பட்டு</p><p>இடுப்பிலும் கட்டியிருக்கிறார்கள்</p><p>ஆதிகாலம் முதல்</p><p>புழங்கிய முகவரிகள் அழிக்கப்பட்டு</p><p>வலுக்கட்டாயமாக</p><p>நகருக்கப்பால் நெடுந்தொலைவிலிருக்கும்</p><p>புதிய முகவரிக்குத் துரத்தியடிக்கப்பட்டவர்கள்</p><p>புகாரளித்துக்கொண்டிருக்கிறார்கள்</p><p>அந்த அலுவலகத்துக்கு</p><p>புதிதாய் வந்த முகவரியற்ற அதிகாரியிடம்.</p><p><em><strong>- வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்</strong></em></p>.<p>இன்னுமொருமுறை</p><p>சொல்லிக் கொடுத்தால்</p><p>நூறாவதை எட்டிவிடும்</p><p>பிறகு இன்னும் இப்படிப் பிழையென</p><p>உலகப்படத்தில் × சிவப்புமைக் குறியிட்டார் ஆசிரியர்</p><p>இனியாவது சரிசெய்து வாவென்று விரட்டுகிறார்</p><p>பத்து இடங்களைச் சரியாகக் குறித்தவள்</p><p>இம்முறையும் தார்ப்பாலைவனத்தை</p><p>பசிபிக் கடலில் மூழ்கடித்தாள்</p><p>கண்ணில் நீர்மல்க</p><p>சிறுமி அதிஸ்யா</p><p>தார்ப்பாலைவனத்துக்குப் பெருங்கொண்டாட்டம்</p><p>தன்னிடம் பசிபிக்கடல் இருப்பதில்.</p><p><em><strong>- க.அம்சப்ரியா</strong></em></p>.<p>கூண்டிலிருந்து எடுத்து</p><p>புறாவை வருடுவதுபோல்</p><p>மனதை வருடிக்கொடுக்கிறேன்</p><p>யாருக்குமே நான் தேவையில்லை</p><p>என்றாலும்</p><p>குறைந்த பட்சம் எனக்கு</p><p>நான் தேவையாக இருக்கிறேன்</p><p>கட்டிலின் அடியில்</p><p>ஒளிந்திருக்கும் பூனையின்</p><p>மஞ்சள் கண்களாய்</p><p>எங்கோ ஒளிர்ந்துகொண்டிருக்கிறது அன்பு.</p><p><em><strong>- என். சுபாஷினி</strong></em></p>.<p>என்றோ நான்</p><p>அசைத்து விட்டுப்போன </p><p>அந்த ஊஞ்சலில் </p><p>இப்போது </p><p>ஆடிக்கொண்டிருக்கிறாள் </p><p>ஒரு பெண் </p><p>என்றோ நான் </p><p>வரைந்து வைத்த ஒரு </p><p>ஓவியப் பெண்ணின் சாயலும் </p><p>அவளுக்கு என்பதே வியப்பெனக்கு!</p><p><em><strong>- கிருத்திகா தாஸ்</strong></em></p>
<p>முகவரியற்றவர்களால்</p><p>நிரம்பியிருக்கிறது நகரம்</p><p>பழைய முகவரியைத் தொலைத்துவிட்டு</p><p>புதுமுகவரியைத் தேடியபடி</p><p>திரிந்துகொண்டிருக்கிறது ஒரு கூட்டம்</p><p>இத்தனை நாள் வசித்தது</p><p>உண்மையென உறுதிப்படுத்த</p><p>இன்னொரு கூட்டம்</p><p>அலைந்துகொண்டிருக்கிறது</p><p>எட்டாத விலையில்</p><p>வாடகைக்காகவும், விற்பனைக்காகவும்</p><p>நிறைய முகவரிகளும்</p><p>முகவரிக்கான சான்றுகளும்</p><p>காத்துக்கிடக்கின்றன</p><p>நெருக்கடியான சாலையில்</p><p>கட்டில், மெத்தை, பீரோக்களோடு</p><p>முகவரி மாற்றும் வேன் ஒன்று</p><p>கடந்துசெல்கிறது</p><p>அதிலிருந்த தொட்டிச்செடியொன்றில்</p><p>அன்று மலர்ந்த ரோஜா</p><p>மலங்கமலங்க விழிக்கிறது</p><p>வழக்கமான தேனீக்களின்றி...</p><p>நகரின் முக்கிய சந்திப்பொன்றில்</p><p>தங்கள் முகவரியை உறுதிசெய்திட</p><p>பெருந்திரள் பேரணி நடந்துசெல்கிறது</p><p>பள்ளிக்குழந்தைகள் முதல்</p><p>கார்ப்பரேட் பணியாளர்கள்வரை</p><p>வாக்கப்பட்ட பெருமையோடு</p><p>முகவரிகளைக்</p><p>கழுத்தில் கட்டியபடி திரிகிறார்கள்</p><p>சிலர் கூச்சப்பட்டு</p><p>இடுப்பிலும் கட்டியிருக்கிறார்கள்</p><p>ஆதிகாலம் முதல்</p><p>புழங்கிய முகவரிகள் அழிக்கப்பட்டு</p><p>வலுக்கட்டாயமாக</p><p>நகருக்கப்பால் நெடுந்தொலைவிலிருக்கும்</p><p>புதிய முகவரிக்குத் துரத்தியடிக்கப்பட்டவர்கள்</p><p>புகாரளித்துக்கொண்டிருக்கிறார்கள்</p><p>அந்த அலுவலகத்துக்கு</p><p>புதிதாய் வந்த முகவரியற்ற அதிகாரியிடம்.</p><p><em><strong>- வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்</strong></em></p>.<p>இன்னுமொருமுறை</p><p>சொல்லிக் கொடுத்தால்</p><p>நூறாவதை எட்டிவிடும்</p><p>பிறகு இன்னும் இப்படிப் பிழையென</p><p>உலகப்படத்தில் × சிவப்புமைக் குறியிட்டார் ஆசிரியர்</p><p>இனியாவது சரிசெய்து வாவென்று விரட்டுகிறார்</p><p>பத்து இடங்களைச் சரியாகக் குறித்தவள்</p><p>இம்முறையும் தார்ப்பாலைவனத்தை</p><p>பசிபிக் கடலில் மூழ்கடித்தாள்</p><p>கண்ணில் நீர்மல்க</p><p>சிறுமி அதிஸ்யா</p><p>தார்ப்பாலைவனத்துக்குப் பெருங்கொண்டாட்டம்</p><p>தன்னிடம் பசிபிக்கடல் இருப்பதில்.</p><p><em><strong>- க.அம்சப்ரியா</strong></em></p>.<p>கூண்டிலிருந்து எடுத்து</p><p>புறாவை வருடுவதுபோல்</p><p>மனதை வருடிக்கொடுக்கிறேன்</p><p>யாருக்குமே நான் தேவையில்லை</p><p>என்றாலும்</p><p>குறைந்த பட்சம் எனக்கு</p><p>நான் தேவையாக இருக்கிறேன்</p><p>கட்டிலின் அடியில்</p><p>ஒளிந்திருக்கும் பூனையின்</p><p>மஞ்சள் கண்களாய்</p><p>எங்கோ ஒளிர்ந்துகொண்டிருக்கிறது அன்பு.</p><p><em><strong>- என். சுபாஷினி</strong></em></p>.<p>என்றோ நான்</p><p>அசைத்து விட்டுப்போன </p><p>அந்த ஊஞ்சலில் </p><p>இப்போது </p><p>ஆடிக்கொண்டிருக்கிறாள் </p><p>ஒரு பெண் </p><p>என்றோ நான் </p><p>வரைந்து வைத்த ஒரு </p><p>ஓவியப் பெண்ணின் சாயலும் </p><p>அவளுக்கு என்பதே வியப்பெனக்கு!</p><p><em><strong>- கிருத்திகா தாஸ்</strong></em></p>