<p><strong>புத்தரின் சாயல் பூனைக்கு</strong></p><p><strong>க</strong>ண்களின் சிமிட்டல்களில்</p><p>சேமித்த நட்சத்திரங்களை,</p><p>உதிர்க்கும்</p><p>ஒவ்வொரு `மியாவ்'க்கும்</p><p>பூனைகளின் பிரபஞ்சங்கள்.</p><p>அதற்குள் நுழையுமுன்</p><p>உங்கள் வாலைச் சுருட்டிக்கொள்ளுங்கள்.</p><p>பூனைகளின் ராஜ்ஜியமென்பது</p><p>மிகச்சிறியதுதான்.</p><p>ராஜாவாகவோ ராணியாகவோ</p><p>கம்பீரமாக அமர்ந்துவிடுகிறது.</p><p>செவ்வனே சேவகம் செய்வது</p><p>நம் கடமையாகிவிடுகிறது.</p><p>பூனை கண்களை மூடியதும்</p><p>இருட்டிவிடும் உலகத்தில்</p><p>இரண்டு மின்மினிப்பூச்சிகள் பறக்கின்றன.</p><p>அதைத் தாவித் தாவிப் பிடித்து விளையாடலாம்</p><p>வால்கள் முளைத்த யாரும்.</p><p>உறி அறியாத பூனைகள்,</p><p>அடுக்ககங்களின்</p><p>கேஸ் ஸ்டவ்களின் மேல் உறங்குகின்றன.</p><p>ஸொமேட்டோக்கள்,</p><p>ஸ்விகி-களின்</p><p>அழைப்புமணிச்சத்தங்கள்தான்</p><p>எழுப்பிவிடுகின்றன அதன் பசியை.</p><p>பூனையை</p><p>உள்ளே வைத்துப் பூட்டிவிட்டு</p><p>வெளியே பாய்ந்தோடுகிறீர்கள்.</p><p>உங்களை</p><p>வெளியே தள்ளிச் சாத்திவிட்டு</p><p>உள்ளே பதுங்கும் பூனைக்கு</p><p>புத்தரின் சாயல்.</p><p><strong>- வலங்கைமான் நூர்தீன்</strong></p>.<p><strong>மௌனமாக்கப்பட்ட இசை</strong></p><p><strong>து</strong>ணியிலிட்டு</p><p>சுவரில் தொங்கவிடப்பட்டுள்ள</p><p>நாகஸ்வரத்திற்கும்</p><p>நல்ல நாகஸ்வரக் கலைஞன் என</p><p>எப்போதோ பரிசு வழங்கப்பட்டதன்</p><p>சாட்சியாக மாட்டப்பட்டிருக்கும்</p><p>புகைப்படத்திற்கும்</p><p>இடையே வலைகட்டி</p><p>பூச்சிகளைப் பிடித்துச் சாப்பிட்டுவிட்டு</p><p>உறங்கிக்கொண்டிருக்கிறது சிலந்தி</p><p>கையிருப்பெல்லாம் கரைந்து</p><p>கருப்பராயன் ஃபைனான்ஸில்</p><p>ஆறு வட்டியென்று வாங்கிய கடனில்</p><p>அடுப்படி இயங்குகிறது</p><p>அப்பா அம்மா போனபின்பு</p><p>அநாதையாகிவிடாமல்</p><p>வளர்த்த பாட்டியின்</p><p>வைத்தியச் செலவுக்கு</p><p>இனி காசில்லை என்பதால்</p><p>போய்ச்சேர்ந்தால் பரவாயில்லை</p><p>என எதிர்பார்ப்பு வந்தாயிற்று</p><p>ஆன்லைன் வகுப்புகளென்று</p><p>வீட்டுக்கு வந்த பள்ளிக்கூடம்</p><p>வங்கி அட்டையில் வைத்திருந்த</p><p>அத்தனை பணத்தையும்</p><p>மொத்தமாய்ச்</p><p>சுருட்டிக்கொண்டுபோய்விட்டு</p><p>இன்னும் பத்தவில்லை என</p><p>மகனையும் மகளையும் விட்டு</p><p>சண்டைபோட வைக்கிறது</p><p>அத்தனை அழுத்தங்களோடு படுத்துத்</p><p>தூக்கம் வராது புரண்டு புரண்டு</p><p>நான்கைந்து பீடி புகைத்து</p><p>பின்னிரவில் தூங்கிப்போகும்</p><p>நாகஸ்வர வித்வான் நமச்சிவாயத்தின் முகம்</p><p>மலர்ந்துவிடுகிறது</p><p>கனவில் தவறாமல் ஒலிக்கும்</p><p>நாகஸ்வரக் கச்சேரி கேட்டு.</p><p><strong>- சௌவி</strong></p>.<p><strong>இரண்டாவது</strong></p><p><strong>க</strong>ண்ணில் பார்க்கப்படும்</p><p>வீடு தேடிப் பொருள் விற்பவளின்</p><p>முதல் கண்</p><p>பள்ளிக்குச் சென்ற</p><p>குழந்தை மீதிருக்கிறது.</p><p>சிலையாய் நிற்கும் கால்களுக்காக</p><p>பூமியே நடந்து சென்று</p><p>மேற்கைக் கடக்கிறது.</p><p>பூமியின் பாதச்சுவடுகள்</p><p>காலத்தின் மீது</p><p>தூசியாய்ப் படிந்திருக்கிறது.</p><p>பாதச்சுவட்டின்</p><p>படிமத்தை அழிப்பதற்கு</p><p>எந்த மழையையும்</p><p>அது தேக்குவதில்லை.</p><p>முருங்கை இலையில்</p><p>பியானோ வாசிக்கும்</p><p>தூறலின் சாதுரியம்</p><p>பாதத்தின் பள்ளத்தில்</p><p>காலில் விழுந்தும்</p><p>நகம்கூட நனையவில்லை.</p><p>இரண்டு கண்களும்</p><p>இணையாத பார்வையில்</p><p>மூன்றாவது கண்ணின்</p><p>முப்பரிமாணக் கலைடாஸ்கோப்பில்</p><p>உடைந்த வளையல் துண்டுகளின்</p><p>கணீர் சத்தங்கள்.</p><p><strong>- காரைக்குடி சாதிக்</strong></p>
<p><strong>புத்தரின் சாயல் பூனைக்கு</strong></p><p><strong>க</strong>ண்களின் சிமிட்டல்களில்</p><p>சேமித்த நட்சத்திரங்களை,</p><p>உதிர்க்கும்</p><p>ஒவ்வொரு `மியாவ்'க்கும்</p><p>பூனைகளின் பிரபஞ்சங்கள்.</p><p>அதற்குள் நுழையுமுன்</p><p>உங்கள் வாலைச் சுருட்டிக்கொள்ளுங்கள்.</p><p>பூனைகளின் ராஜ்ஜியமென்பது</p><p>மிகச்சிறியதுதான்.</p><p>ராஜாவாகவோ ராணியாகவோ</p><p>கம்பீரமாக அமர்ந்துவிடுகிறது.</p><p>செவ்வனே சேவகம் செய்வது</p><p>நம் கடமையாகிவிடுகிறது.</p><p>பூனை கண்களை மூடியதும்</p><p>இருட்டிவிடும் உலகத்தில்</p><p>இரண்டு மின்மினிப்பூச்சிகள் பறக்கின்றன.</p><p>அதைத் தாவித் தாவிப் பிடித்து விளையாடலாம்</p><p>வால்கள் முளைத்த யாரும்.</p><p>உறி அறியாத பூனைகள்,</p><p>அடுக்ககங்களின்</p><p>கேஸ் ஸ்டவ்களின் மேல் உறங்குகின்றன.</p><p>ஸொமேட்டோக்கள்,</p><p>ஸ்விகி-களின்</p><p>அழைப்புமணிச்சத்தங்கள்தான்</p><p>எழுப்பிவிடுகின்றன அதன் பசியை.</p><p>பூனையை</p><p>உள்ளே வைத்துப் பூட்டிவிட்டு</p><p>வெளியே பாய்ந்தோடுகிறீர்கள்.</p><p>உங்களை</p><p>வெளியே தள்ளிச் சாத்திவிட்டு</p><p>உள்ளே பதுங்கும் பூனைக்கு</p><p>புத்தரின் சாயல்.</p><p><strong>- வலங்கைமான் நூர்தீன்</strong></p>.<p><strong>மௌனமாக்கப்பட்ட இசை</strong></p><p><strong>து</strong>ணியிலிட்டு</p><p>சுவரில் தொங்கவிடப்பட்டுள்ள</p><p>நாகஸ்வரத்திற்கும்</p><p>நல்ல நாகஸ்வரக் கலைஞன் என</p><p>எப்போதோ பரிசு வழங்கப்பட்டதன்</p><p>சாட்சியாக மாட்டப்பட்டிருக்கும்</p><p>புகைப்படத்திற்கும்</p><p>இடையே வலைகட்டி</p><p>பூச்சிகளைப் பிடித்துச் சாப்பிட்டுவிட்டு</p><p>உறங்கிக்கொண்டிருக்கிறது சிலந்தி</p><p>கையிருப்பெல்லாம் கரைந்து</p><p>கருப்பராயன் ஃபைனான்ஸில்</p><p>ஆறு வட்டியென்று வாங்கிய கடனில்</p><p>அடுப்படி இயங்குகிறது</p><p>அப்பா அம்மா போனபின்பு</p><p>அநாதையாகிவிடாமல்</p><p>வளர்த்த பாட்டியின்</p><p>வைத்தியச் செலவுக்கு</p><p>இனி காசில்லை என்பதால்</p><p>போய்ச்சேர்ந்தால் பரவாயில்லை</p><p>என எதிர்பார்ப்பு வந்தாயிற்று</p><p>ஆன்லைன் வகுப்புகளென்று</p><p>வீட்டுக்கு வந்த பள்ளிக்கூடம்</p><p>வங்கி அட்டையில் வைத்திருந்த</p><p>அத்தனை பணத்தையும்</p><p>மொத்தமாய்ச்</p><p>சுருட்டிக்கொண்டுபோய்விட்டு</p><p>இன்னும் பத்தவில்லை என</p><p>மகனையும் மகளையும் விட்டு</p><p>சண்டைபோட வைக்கிறது</p><p>அத்தனை அழுத்தங்களோடு படுத்துத்</p><p>தூக்கம் வராது புரண்டு புரண்டு</p><p>நான்கைந்து பீடி புகைத்து</p><p>பின்னிரவில் தூங்கிப்போகும்</p><p>நாகஸ்வர வித்வான் நமச்சிவாயத்தின் முகம்</p><p>மலர்ந்துவிடுகிறது</p><p>கனவில் தவறாமல் ஒலிக்கும்</p><p>நாகஸ்வரக் கச்சேரி கேட்டு.</p><p><strong>- சௌவி</strong></p>.<p><strong>இரண்டாவது</strong></p><p><strong>க</strong>ண்ணில் பார்க்கப்படும்</p><p>வீடு தேடிப் பொருள் விற்பவளின்</p><p>முதல் கண்</p><p>பள்ளிக்குச் சென்ற</p><p>குழந்தை மீதிருக்கிறது.</p><p>சிலையாய் நிற்கும் கால்களுக்காக</p><p>பூமியே நடந்து சென்று</p><p>மேற்கைக் கடக்கிறது.</p><p>பூமியின் பாதச்சுவடுகள்</p><p>காலத்தின் மீது</p><p>தூசியாய்ப் படிந்திருக்கிறது.</p><p>பாதச்சுவட்டின்</p><p>படிமத்தை அழிப்பதற்கு</p><p>எந்த மழையையும்</p><p>அது தேக்குவதில்லை.</p><p>முருங்கை இலையில்</p><p>பியானோ வாசிக்கும்</p><p>தூறலின் சாதுரியம்</p><p>பாதத்தின் பள்ளத்தில்</p><p>காலில் விழுந்தும்</p><p>நகம்கூட நனையவில்லை.</p><p>இரண்டு கண்களும்</p><p>இணையாத பார்வையில்</p><p>மூன்றாவது கண்ணின்</p><p>முப்பரிமாணக் கலைடாஸ்கோப்பில்</p><p>உடைந்த வளையல் துண்டுகளின்</p><p>கணீர் சத்தங்கள்.</p><p><strong>- காரைக்குடி சாதிக்</strong></p>