<p>வகுப்பறைச் சுவரின் மூலையில்</p><p>பல்லி ஒன்று</p><p>பூச்சி தின்னக்</p><p>காத்திருக்கும் சமயம்</p><p>ஆய்வகக் கதவைத் திறந்தபோது </p><p>அதன் குறி தவறிப்போனது...</p><p>கரும்பலகை தன்</p><p>மார்பில் நான் கடைசியாய் எழுதிய சமன்பாடுகளை</p><p>ஜூன் வந்தும்</p><p>ஏன் அழிக்கவில்லை </p><p>என்று என்னைப் பார்த்ததும்</p><p>வினவின...</p><p>கூட்டிப் பெருக்கிக்</p><p>கொட்டிவிட்டேன்</p><p>பள்ளி திறக்கும்</p><p>தேதியையும் சேர்த்து...</p><p>மனதை அரிக்கும்</p><p>கவலையைப் போல அங்கங்கு </p><p>மூலைகளில் முளைத்திருந்தன </p><p>செல்கள்...</p><p>யாரும் இல்லாததால்</p><p>வெறுத்துப்போன </p><p>அறைச்சுவர்கள்</p><p>வெளியே போக வழியில்லை...</p><p>தூசி படிந்த கருவிகள்மீது</p><p>நிச்சயம் வருவார்கள் என்ற நம்பிக்கையின் அளவீடுகள்...</p><p>துருப்பிடித்த பூட்டுக்குள்</p><p>நுழைந்த சாவி மறுப்பதைப்போல</p><p>எனக்கும் பூட்ட மனமில்லை </p><p>இயற்பியல் ஆய்வகத்தை.</p><p><strong>- ந.வீரா</strong></p>.<p>எனது நகரத்தை</p><p>மூதாதையர்களின் நிலத்திலிருந்து</p><p>பிரித்துவிட வேண்டுமென்று,</p><p>உருமாற்றமடைந்த</p><p>உங்களால் ஊகிக்க முடியாது</p><p>அவன் சொன்னான்.</p><p>அவன் </p><p>என் அறையில் ஆங்காங்கே</p><p>இடம் மாறும் பொம்மையுமல்ல</p><p>சன்னல் ஊடாக நுழைந்த</p><p>மாரிக்காலக் குளிருமல்ல</p><p>புனைவுகளோடு வந்து நிற்கும்</p><p>என் கவிதையுமல்ல.</p><p>மூதாதையர்களின் நிலத்திலிருந்து</p><p>எனது நகரத்தைப் பிரித்துவிடவேண்டுமென்று</p><p>அவன் சொல்வதற்கு</p><p>ஒன்றுக்கு மேற்பட்ட பிரதிகள்</p><p>அவன் வசமிருந்தன.</p><p>ஒற்றைப் பிரதியை </p><p>அவன் என்னிடம் முன்வைத்தான்</p><p>அப்பிரதியை</p><p>என்னால் திறந்து பார்க்க முடிந்தது</p><p>பிரதிக்குள்ளிருந்து</p><p>குவியல் குவியலாக</p><p>நிர்வாண மனிதர்கள் வெளிவரத் தொடங்கினார்கள்.</p><p><strong>- ஏ.நஸ்புள்ளாஹ்</strong></p>.<p>மாலைப்பொழுது</p><p>மஞ்சள் வெயிலை</p><p>அனுமதிக்கவில்லை</p><p>மனம்தோறும்</p><p>நிரம்பி வழிகிறது</p><p>எல்லையில் குருதிகள்.</p><p>உலக நிலங்கள் முழுவதும்</p><p>பேரிடர்க் காலக் கல்லறையை</p><p>அமைத்து அழச்செய்கிறது</p><p>உரோமம் உதிர்ந்த காலையும்</p><p>மரணத்தை எண்ணுகிற மாலையும்</p><p>தொலைக்காட்சிப் பெட்டியில்</p><p>நிரம்பி வழிகிறது</p><p>மனித எண்ணிக்கைகளாய்</p><p>சடலங்கள்.</p><p>தேர்தல் முடிவுகளைப்போன்று</p><p>மரணத்தின் முடிவுகளை</p><p>மாவட்டங்களாய் சொல்லி நின்ற</p><p>செய்திகளை</p><p>உலகமே முதல் முறை</p><p>கேட்டுக்கொண்டிருக்கிறது</p><p>இன்று ஊர்ப் பெயரில் மரணத்தை அழைக்கத் தொடங்கிவிட்டது.</p><p>கருணையற்ற முகமான</p><p>கிருமி நுரையீரலை பலம்கொண்டு</p><p>குத்திக் கிழித்துவிடுகிறது</p><p>சரியான மருந்தில்லா</p><p>மாலுமிகள் என்ன செய்வார்கள்</p><p>வெளியில் மனிதப்படகுகள்</p><p>மரணங்களாய் நிலம் ஒதுங்கிறது.</p><p>கடைநிலை மனிதன்</p><p>கர்ச்சீப்பைக் கட்டிக்கொண்டு</p><p>பசிக்காகப் போராடுகிறான்</p><p>ஒரு டைலர் சானிட்டைசர்</p><p>வைத்துக்கொண்டு நூல் கோக்கிறார்</p><p>காசப்புக் கடைக்காரர் கிருமிநாசினியைத்</p><p>தெளித்துவிட்டுக் கறி வெட்டுகிறார்</p><p>எந்தப் பேரிடர் நோய்த்தொற்றாகட்டும்</p><p>காய்கறிகளை விற்றுக்கொண்டும்</p><p>நம் பசியைப் போக்குகிறது கடைத்தெரு.</p><p>கடைநிலை மனிதர்களால்</p><p>நிரம்பியது நம் தேசம்.</p><p>எத்தனையோ வேண்டுதலையும் மீறி</p><p>நரபலியில் சிக்கித்தவிக்கிறது உலகமின்று</p><p>மனங்களும் ஆலயம் என்றார்கள்</p><p>நான் ஆலயத்தின் கதவுகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.</p><p>பாராளுமன்றமும் நாடாளுமன்றமும்</p><p>மூடியே இருக்கட்டும்</p><p>திறந்திருந்தபொழுதும் இப்படித்தான்</p><p>புலர்ந்தது.</p><p><strong>- ப.தனஞ்ஜெயன்.</strong></p>
<p>வகுப்பறைச் சுவரின் மூலையில்</p><p>பல்லி ஒன்று</p><p>பூச்சி தின்னக்</p><p>காத்திருக்கும் சமயம்</p><p>ஆய்வகக் கதவைத் திறந்தபோது </p><p>அதன் குறி தவறிப்போனது...</p><p>கரும்பலகை தன்</p><p>மார்பில் நான் கடைசியாய் எழுதிய சமன்பாடுகளை</p><p>ஜூன் வந்தும்</p><p>ஏன் அழிக்கவில்லை </p><p>என்று என்னைப் பார்த்ததும்</p><p>வினவின...</p><p>கூட்டிப் பெருக்கிக்</p><p>கொட்டிவிட்டேன்</p><p>பள்ளி திறக்கும்</p><p>தேதியையும் சேர்த்து...</p><p>மனதை அரிக்கும்</p><p>கவலையைப் போல அங்கங்கு </p><p>மூலைகளில் முளைத்திருந்தன </p><p>செல்கள்...</p><p>யாரும் இல்லாததால்</p><p>வெறுத்துப்போன </p><p>அறைச்சுவர்கள்</p><p>வெளியே போக வழியில்லை...</p><p>தூசி படிந்த கருவிகள்மீது</p><p>நிச்சயம் வருவார்கள் என்ற நம்பிக்கையின் அளவீடுகள்...</p><p>துருப்பிடித்த பூட்டுக்குள்</p><p>நுழைந்த சாவி மறுப்பதைப்போல</p><p>எனக்கும் பூட்ட மனமில்லை </p><p>இயற்பியல் ஆய்வகத்தை.</p><p><strong>- ந.வீரா</strong></p>.<p>எனது நகரத்தை</p><p>மூதாதையர்களின் நிலத்திலிருந்து</p><p>பிரித்துவிட வேண்டுமென்று,</p><p>உருமாற்றமடைந்த</p><p>உங்களால் ஊகிக்க முடியாது</p><p>அவன் சொன்னான்.</p><p>அவன் </p><p>என் அறையில் ஆங்காங்கே</p><p>இடம் மாறும் பொம்மையுமல்ல</p><p>சன்னல் ஊடாக நுழைந்த</p><p>மாரிக்காலக் குளிருமல்ல</p><p>புனைவுகளோடு வந்து நிற்கும்</p><p>என் கவிதையுமல்ல.</p><p>மூதாதையர்களின் நிலத்திலிருந்து</p><p>எனது நகரத்தைப் பிரித்துவிடவேண்டுமென்று</p><p>அவன் சொல்வதற்கு</p><p>ஒன்றுக்கு மேற்பட்ட பிரதிகள்</p><p>அவன் வசமிருந்தன.</p><p>ஒற்றைப் பிரதியை </p><p>அவன் என்னிடம் முன்வைத்தான்</p><p>அப்பிரதியை</p><p>என்னால் திறந்து பார்க்க முடிந்தது</p><p>பிரதிக்குள்ளிருந்து</p><p>குவியல் குவியலாக</p><p>நிர்வாண மனிதர்கள் வெளிவரத் தொடங்கினார்கள்.</p><p><strong>- ஏ.நஸ்புள்ளாஹ்</strong></p>.<p>மாலைப்பொழுது</p><p>மஞ்சள் வெயிலை</p><p>அனுமதிக்கவில்லை</p><p>மனம்தோறும்</p><p>நிரம்பி வழிகிறது</p><p>எல்லையில் குருதிகள்.</p><p>உலக நிலங்கள் முழுவதும்</p><p>பேரிடர்க் காலக் கல்லறையை</p><p>அமைத்து அழச்செய்கிறது</p><p>உரோமம் உதிர்ந்த காலையும்</p><p>மரணத்தை எண்ணுகிற மாலையும்</p><p>தொலைக்காட்சிப் பெட்டியில்</p><p>நிரம்பி வழிகிறது</p><p>மனித எண்ணிக்கைகளாய்</p><p>சடலங்கள்.</p><p>தேர்தல் முடிவுகளைப்போன்று</p><p>மரணத்தின் முடிவுகளை</p><p>மாவட்டங்களாய் சொல்லி நின்ற</p><p>செய்திகளை</p><p>உலகமே முதல் முறை</p><p>கேட்டுக்கொண்டிருக்கிறது</p><p>இன்று ஊர்ப் பெயரில் மரணத்தை அழைக்கத் தொடங்கிவிட்டது.</p><p>கருணையற்ற முகமான</p><p>கிருமி நுரையீரலை பலம்கொண்டு</p><p>குத்திக் கிழித்துவிடுகிறது</p><p>சரியான மருந்தில்லா</p><p>மாலுமிகள் என்ன செய்வார்கள்</p><p>வெளியில் மனிதப்படகுகள்</p><p>மரணங்களாய் நிலம் ஒதுங்கிறது.</p><p>கடைநிலை மனிதன்</p><p>கர்ச்சீப்பைக் கட்டிக்கொண்டு</p><p>பசிக்காகப் போராடுகிறான்</p><p>ஒரு டைலர் சானிட்டைசர்</p><p>வைத்துக்கொண்டு நூல் கோக்கிறார்</p><p>காசப்புக் கடைக்காரர் கிருமிநாசினியைத்</p><p>தெளித்துவிட்டுக் கறி வெட்டுகிறார்</p><p>எந்தப் பேரிடர் நோய்த்தொற்றாகட்டும்</p><p>காய்கறிகளை விற்றுக்கொண்டும்</p><p>நம் பசியைப் போக்குகிறது கடைத்தெரு.</p><p>கடைநிலை மனிதர்களால்</p><p>நிரம்பியது நம் தேசம்.</p><p>எத்தனையோ வேண்டுதலையும் மீறி</p><p>நரபலியில் சிக்கித்தவிக்கிறது உலகமின்று</p><p>மனங்களும் ஆலயம் என்றார்கள்</p><p>நான் ஆலயத்தின் கதவுகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.</p><p>பாராளுமன்றமும் நாடாளுமன்றமும்</p><p>மூடியே இருக்கட்டும்</p><p>திறந்திருந்தபொழுதும் இப்படித்தான்</p><p>புலர்ந்தது.</p><p><strong>- ப.தனஞ்ஜெயன்.</strong></p>