<p>பெயர் தெரியா மீனொன்றின் கடலென இருந்துவிடப் பிரயத்தனப்படும்</p><p>பிரிவுக் காலங்களின் துயரக்கண்ணீர்</p><p>காலச்சக்கரம் நத்தையின் சாயலில் உருண்டோட மாபெரும் கடலைத் தாண்டிய அசதியில் புரள்கின்றதோர் கனவு</p><p>காரணமற்ற காரணங்களில் சிக்கிய ஒற்றைச் சொல்லின் முற்றுப்புள்ளியைக் </p><p>கடந்துவிட்டு மறையும் ஆச்சர்யக்குறி</p><p>இருளின் தொய்வில் துளிவெளிச்சமென ஒருத்தியின் நிலாச்சிரிப்பில் சரியும் </p><p>ஹார்மோன்களற்றவனின் புகைப்படம்</p><p>நாடித்துடிப்பில் முண்டும் சிசுவை நீவிப்பார்க்கும் கரங்களின் ரேகைப் பிளவில்</p><p>அயல்தேசக் காதலனின் முத்தக் கசிவு</p><p>ஏதுமற்ற வெளியில் இலக்கின்றிப் பறக்கும் </p><p>ஒற்றைப் பறவையின் பசிக்கு இரையென மாறும் மனிதப் பிண்டங்களின் வாடை</p><p><em>- நிவிகா மித்ரை</em></p>.<p>`சொன்ன தேதிக்குப் பணத்தைத் தரல </p><p>வீட்ட தீயவச்சுக் கொளுத்திடுவேன்' என கடன்காரன் மிரட்டுகிறான்.</p><p>`இந்த வீடு வசதி குறைச்சலா இருக்கு இதெல்லாம் ஒரு வீடா’ன்னு</p><p>ஏசினான் விருந்தாளி.</p><p>வந்த எதிரி வீட்டின் எம்மூலையில் </p><p>சூனியம் வைக்கலாமென </p><p>நோட்டம் விட்டான்.</p><p>`டேய் வெளிய வாடா </p><p>இந்த வீட்ல ஒரு தம்கூட அடிக்கமுடியாது' </p><p>என்று கிளம்பினான் நண்பன். </p><p>`எப்படியாவது இந்த வீட்டை விட்டு </p><p>ஓடி வந்துவிடுவேன்' என்றாள் காதலி.</p><p>வாசலில் நின்று ஆத்திரம் தீர </p><p>குரைக்கிறது நாய்.</p><p>நாம் ஏன் யாருக்குமே பிடிக்காத வீடாக இருக்கிறோமென பாரம் தாங்காத அவ்வீடு </p><p>ஆங்காங்கே விரிசல்விட்டது.</p><p><em>- நிவிகா மித்ரை</em></p>.<p>இந்த ஊரில் கல்லூரிப்படிகளைத் தொட்ட முதல் பெண் </p><p>உன் அம்மாதான்</p><p>டிகிரி படித்தாலும்</p><p>டைப்ரைட்டிங், டெய்லரிங், கவிதை என</p><p>எப்போதும் ஏதோவொன்றைச் செய்துகொண்டிருப்பாள்</p><p>கலர் பென்சில்களை அடிக்கடி வாங்குவாள்</p><p>இதோ இந்தச் சுவர்களில் இருப்பதெல்லாம் அவள் வரைந்ததுதான்</p><p>மேற்கொண்டு படிக்க வேண்டும்</p><p>மேல்நாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்பதுதான் </p><p>அவள் கனவு</p><p>சொந்தம் அறுந்துவிடக்கூடாது என்று கல்யாணம் செய்து வைத்தார்கள்</p><p>இதையெல்லாம் அம்மாவுடன் பத்தாவது வரை படித்த சரிதா அத்தை சொன்னாள்</p><p>வானளவு கனவுகள் </p><p>கொண்டிருந்த அம்மா</p><p>இப்போதெல்லாம் மறுநாள் வாசலில் இடம்போகும்</p><p>கோலத்தை</p><p>வெள்ளைத்தாளில்</p><p>கச்சிதமாக வரைந்து பார்க்க மட்டுமே</p><p>பேனாவைக் கையிலெடுக்கிறாள்.</p><p><em>- கு.தினகரன்</em></p>.<p>நானும் ஒருநாள் </p><p>புல்லாங்குழல் ஆவேன் என்று சொல்லிக்கொண்டே இருந்த </p><p>மூங்கிலைப் பாலமாக்கினார்கள் </p><p>நேர்ந்திட்ட நிலையை நினைந்து நினைந்து நீடுதுயரெய்திய அது தனக்குக் கீழ் நகரும் நதியை </p><p>நெடுங்கண்ணீராக்கி நிதமும் அழுதுகொண்டே இருந்தது </p><p>நீண்ட விடுமுறை முடிதலுக்குப்பின் ஒருநாள் அக்கரையிலிருக்கும் பாலர் பள்ளிக்குத் தன்மீது நடந்துசெல்லும் மழலைக் கூட்டங்களின் பிஞ்சுப் பாதங்களால் எழும் இசையால் தன்னைப் புதியதோர் இசைக்கருவியாய் உணரத்தொடங்கி மிகுமகிழ்வெய்தியது </p><p>இப்போது நதியோ </p><p>ஆனந்தக் கண்ணீராய் கரைபுரண்டு ஓடுகிறது.</p><p><em>- இனித்தன்</em></p>
<p>பெயர் தெரியா மீனொன்றின் கடலென இருந்துவிடப் பிரயத்தனப்படும்</p><p>பிரிவுக் காலங்களின் துயரக்கண்ணீர்</p><p>காலச்சக்கரம் நத்தையின் சாயலில் உருண்டோட மாபெரும் கடலைத் தாண்டிய அசதியில் புரள்கின்றதோர் கனவு</p><p>காரணமற்ற காரணங்களில் சிக்கிய ஒற்றைச் சொல்லின் முற்றுப்புள்ளியைக் </p><p>கடந்துவிட்டு மறையும் ஆச்சர்யக்குறி</p><p>இருளின் தொய்வில் துளிவெளிச்சமென ஒருத்தியின் நிலாச்சிரிப்பில் சரியும் </p><p>ஹார்மோன்களற்றவனின் புகைப்படம்</p><p>நாடித்துடிப்பில் முண்டும் சிசுவை நீவிப்பார்க்கும் கரங்களின் ரேகைப் பிளவில்</p><p>அயல்தேசக் காதலனின் முத்தக் கசிவு</p><p>ஏதுமற்ற வெளியில் இலக்கின்றிப் பறக்கும் </p><p>ஒற்றைப் பறவையின் பசிக்கு இரையென மாறும் மனிதப் பிண்டங்களின் வாடை</p><p><em>- நிவிகா மித்ரை</em></p>.<p>`சொன்ன தேதிக்குப் பணத்தைத் தரல </p><p>வீட்ட தீயவச்சுக் கொளுத்திடுவேன்' என கடன்காரன் மிரட்டுகிறான்.</p><p>`இந்த வீடு வசதி குறைச்சலா இருக்கு இதெல்லாம் ஒரு வீடா’ன்னு</p><p>ஏசினான் விருந்தாளி.</p><p>வந்த எதிரி வீட்டின் எம்மூலையில் </p><p>சூனியம் வைக்கலாமென </p><p>நோட்டம் விட்டான்.</p><p>`டேய் வெளிய வாடா </p><p>இந்த வீட்ல ஒரு தம்கூட அடிக்கமுடியாது' </p><p>என்று கிளம்பினான் நண்பன். </p><p>`எப்படியாவது இந்த வீட்டை விட்டு </p><p>ஓடி வந்துவிடுவேன்' என்றாள் காதலி.</p><p>வாசலில் நின்று ஆத்திரம் தீர </p><p>குரைக்கிறது நாய்.</p><p>நாம் ஏன் யாருக்குமே பிடிக்காத வீடாக இருக்கிறோமென பாரம் தாங்காத அவ்வீடு </p><p>ஆங்காங்கே விரிசல்விட்டது.</p><p><em>- நிவிகா மித்ரை</em></p>.<p>இந்த ஊரில் கல்லூரிப்படிகளைத் தொட்ட முதல் பெண் </p><p>உன் அம்மாதான்</p><p>டிகிரி படித்தாலும்</p><p>டைப்ரைட்டிங், டெய்லரிங், கவிதை என</p><p>எப்போதும் ஏதோவொன்றைச் செய்துகொண்டிருப்பாள்</p><p>கலர் பென்சில்களை அடிக்கடி வாங்குவாள்</p><p>இதோ இந்தச் சுவர்களில் இருப்பதெல்லாம் அவள் வரைந்ததுதான்</p><p>மேற்கொண்டு படிக்க வேண்டும்</p><p>மேல்நாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்பதுதான் </p><p>அவள் கனவு</p><p>சொந்தம் அறுந்துவிடக்கூடாது என்று கல்யாணம் செய்து வைத்தார்கள்</p><p>இதையெல்லாம் அம்மாவுடன் பத்தாவது வரை படித்த சரிதா அத்தை சொன்னாள்</p><p>வானளவு கனவுகள் </p><p>கொண்டிருந்த அம்மா</p><p>இப்போதெல்லாம் மறுநாள் வாசலில் இடம்போகும்</p><p>கோலத்தை</p><p>வெள்ளைத்தாளில்</p><p>கச்சிதமாக வரைந்து பார்க்க மட்டுமே</p><p>பேனாவைக் கையிலெடுக்கிறாள்.</p><p><em>- கு.தினகரன்</em></p>.<p>நானும் ஒருநாள் </p><p>புல்லாங்குழல் ஆவேன் என்று சொல்லிக்கொண்டே இருந்த </p><p>மூங்கிலைப் பாலமாக்கினார்கள் </p><p>நேர்ந்திட்ட நிலையை நினைந்து நினைந்து நீடுதுயரெய்திய அது தனக்குக் கீழ் நகரும் நதியை </p><p>நெடுங்கண்ணீராக்கி நிதமும் அழுதுகொண்டே இருந்தது </p><p>நீண்ட விடுமுறை முடிதலுக்குப்பின் ஒருநாள் அக்கரையிலிருக்கும் பாலர் பள்ளிக்குத் தன்மீது நடந்துசெல்லும் மழலைக் கூட்டங்களின் பிஞ்சுப் பாதங்களால் எழும் இசையால் தன்னைப் புதியதோர் இசைக்கருவியாய் உணரத்தொடங்கி மிகுமகிழ்வெய்தியது </p><p>இப்போது நதியோ </p><p>ஆனந்தக் கண்ணீராய் கரைபுரண்டு ஓடுகிறது.</p><p><em>- இனித்தன்</em></p>