<p><strong>ரசனை</strong></p><p>விர்ரென்று</p><p>பறந்துவிடத்தெரிந்தும்</p><p>பட்டாம்பூச்சிகள்</p><p>பறந்துவிடுவதில்லை</p><p>துரத்துவதை</p><p>ரசித்தபடியே</p><p>தாவித்தாவித்தான்</p><p>நகர்கின்றன</p><p>அன்பின்</p><p>ஊடலும் தேடலும்</p><p>ரசனையானவை.</p><p><em><strong>- மங்கைமுருகன்</strong></em></p>.<p><strong>தெய்வத்தின் கருணை</strong></p><p>கூரையைப் பிய்த்துக்கொண்டு</p><p>கொடுக்கும் தெய்வத்திடம்</p><p>பிய்ந்த கூரையை</p><p>மாற்றித் தர மன்றாடிய</p><p>அன்றாடங்காட்சிக்கு</p><p>அருள் மழை</p><p>பொழியத் தொடங்குகிறது</p><p>தெய்வம்</p><p>ஆசி பெறுவதற்கான</p><p>பாத்திரங்களை</p><p>ஆங்காங்கே</p><p>எடுத்து வைக்கும்</p><p>அவனுடைய</p><p>வீட்டுக் கூரையின்</p><p>வால்பேப்பர்கள்</p><p>அனுதினமும்</p><p>மாறிக்கொண்டே</p><p>இருக்கின்றன.</p><p><em><strong>- பா.ரமேஷ்</strong></em></p>.<p><strong>ஞாயிறு ஞானம்</strong></p><p>வேகமாய் விடிந்த ஞாயிற்றை</p><p>இட்லி சட்டியில்</p><p>சுட்டுக்கொண்டிருக்கிறாள் கிழவி</p><p>அரைகுறை விழிப்பில்</p><p>அயிரை மீன் துள்ளல்</p><p>பேத்தி கட்டில் சந்தில்</p><p>அறக்கப்பறக்க</p><p>அநியாயம் பூசி இசை பழுக்க</p><p>வைத்துக்கொண்டிருக்கிறான்</p><p>சங்கீதத் தம்பி</p><p>அம்மாவுக்கு ஆயிரம் வேலை</p><p>அன்றும் அட்டெண்டென்சில்</p><p>அவளே முதலிடம்</p><p>அப்பா கறி எடுக்கக் கிளம்பியாயிற்று</p><p>சரக்குக்கு ஆறு மணிக்கும்</p><p>வழியுண்டு</p><p>எல்லாம் அறிந்தவர் அவர்</p><p>அங்கும் இங்கும்</p><p>ஓடிக்கொண்டிருக்கும்</p><p>அவ்வீட்டு ஞாயிற்றுக்குத்தான் </p><p>நிற்கவும் நேரமில்லை</p><p>செய்யவும் வேலையில்லை.</p><p><em><strong>- கவிஜி </strong></em></p>.<p><strong>கனா</strong></p><p>ஒரு பூங்காவின்</p><p>இருக்கையொன்றில்</p><p>கரையருகே சுருண்டுவரும்</p><p>அலையைப்போல்</p><p>கால்மடக்கிச் சாய்ந்தபடி</p><p>அமர்ந்திருந்தாள் என்னருகில்</p><p>பின்பொரு பிறைநிலவென</p><p>கால்களை நீட்டி வளைந்தவாறு</p><p>அமர்ந்துகொண்டாள்</p><p>அந்திச் செவ்வானத்தை</p><p>சந்தனத்தில் குழைத்தெடுத்த</p><p>அவள் பாதங்களைச் சற்றே</p><p>பற்றிக்கொள்ளச் சம்மதித்தாள்</p><p>காரணம் ஏதுமின்றிக்</p><p>கண்ணீர் உகுத்தாள்</p><p>கோவில் மணியொத்த கணீர்க்</p><p>குரலில் ஏதேதோ பேசினாள்</p><p>கண்விழித்துப் பார்த்தபோது</p><p>காணாமல் போயிருந்தாள்</p><p>இன்னும் கொஞ்சமேனும்</p><p>நீண்டிருக்கலாம் அந்தக் கனவு.</p><p><em><strong>- பழ.மோகன்</strong></em></p>
<p><strong>ரசனை</strong></p><p>விர்ரென்று</p><p>பறந்துவிடத்தெரிந்தும்</p><p>பட்டாம்பூச்சிகள்</p><p>பறந்துவிடுவதில்லை</p><p>துரத்துவதை</p><p>ரசித்தபடியே</p><p>தாவித்தாவித்தான்</p><p>நகர்கின்றன</p><p>அன்பின்</p><p>ஊடலும் தேடலும்</p><p>ரசனையானவை.</p><p><em><strong>- மங்கைமுருகன்</strong></em></p>.<p><strong>தெய்வத்தின் கருணை</strong></p><p>கூரையைப் பிய்த்துக்கொண்டு</p><p>கொடுக்கும் தெய்வத்திடம்</p><p>பிய்ந்த கூரையை</p><p>மாற்றித் தர மன்றாடிய</p><p>அன்றாடங்காட்சிக்கு</p><p>அருள் மழை</p><p>பொழியத் தொடங்குகிறது</p><p>தெய்வம்</p><p>ஆசி பெறுவதற்கான</p><p>பாத்திரங்களை</p><p>ஆங்காங்கே</p><p>எடுத்து வைக்கும்</p><p>அவனுடைய</p><p>வீட்டுக் கூரையின்</p><p>வால்பேப்பர்கள்</p><p>அனுதினமும்</p><p>மாறிக்கொண்டே</p><p>இருக்கின்றன.</p><p><em><strong>- பா.ரமேஷ்</strong></em></p>.<p><strong>ஞாயிறு ஞானம்</strong></p><p>வேகமாய் விடிந்த ஞாயிற்றை</p><p>இட்லி சட்டியில்</p><p>சுட்டுக்கொண்டிருக்கிறாள் கிழவி</p><p>அரைகுறை விழிப்பில்</p><p>அயிரை மீன் துள்ளல்</p><p>பேத்தி கட்டில் சந்தில்</p><p>அறக்கப்பறக்க</p><p>அநியாயம் பூசி இசை பழுக்க</p><p>வைத்துக்கொண்டிருக்கிறான்</p><p>சங்கீதத் தம்பி</p><p>அம்மாவுக்கு ஆயிரம் வேலை</p><p>அன்றும் அட்டெண்டென்சில்</p><p>அவளே முதலிடம்</p><p>அப்பா கறி எடுக்கக் கிளம்பியாயிற்று</p><p>சரக்குக்கு ஆறு மணிக்கும்</p><p>வழியுண்டு</p><p>எல்லாம் அறிந்தவர் அவர்</p><p>அங்கும் இங்கும்</p><p>ஓடிக்கொண்டிருக்கும்</p><p>அவ்வீட்டு ஞாயிற்றுக்குத்தான் </p><p>நிற்கவும் நேரமில்லை</p><p>செய்யவும் வேலையில்லை.</p><p><em><strong>- கவிஜி </strong></em></p>.<p><strong>கனா</strong></p><p>ஒரு பூங்காவின்</p><p>இருக்கையொன்றில்</p><p>கரையருகே சுருண்டுவரும்</p><p>அலையைப்போல்</p><p>கால்மடக்கிச் சாய்ந்தபடி</p><p>அமர்ந்திருந்தாள் என்னருகில்</p><p>பின்பொரு பிறைநிலவென</p><p>கால்களை நீட்டி வளைந்தவாறு</p><p>அமர்ந்துகொண்டாள்</p><p>அந்திச் செவ்வானத்தை</p><p>சந்தனத்தில் குழைத்தெடுத்த</p><p>அவள் பாதங்களைச் சற்றே</p><p>பற்றிக்கொள்ளச் சம்மதித்தாள்</p><p>காரணம் ஏதுமின்றிக்</p><p>கண்ணீர் உகுத்தாள்</p><p>கோவில் மணியொத்த கணீர்க்</p><p>குரலில் ஏதேதோ பேசினாள்</p><p>கண்விழித்துப் பார்த்தபோது</p><p>காணாமல் போயிருந்தாள்</p><p>இன்னும் கொஞ்சமேனும்</p><p>நீண்டிருக்கலாம் அந்தக் கனவு.</p><p><em><strong>- பழ.மோகன்</strong></em></p>