<h4>வாக்கூடு</h4><h4>மண்ணுல ஏர் அழுத்தறப்ப வராத இரக்கம்</h4><p>விதைச்சு</p><p>களை பறிச்சு</p><p>கதிர் அறுத்து</p><p>களம் சேர்த்து</p><p>பிணையல் விடும் வேளையில வந்ததா மனிதா?</p><p>மண்ணைத் தின்னுடும்னும்</p><p>கருது குத்திடும்னும்</p><p>வாகூசாமப் புளுகிட்டு மாட்டி விட்ட...</p><p>சுத்தி வர்ற நேரத்துல என்ன தின்னுடப்போகுதுன்னு எண்ணாம</p><p>சுயநலமாப் பூட்டி விட்ட...</p><p>மூக்கையும் வாயையும் மூடிவிட்டு எங்கள மூச்சிரைக்க வச்ச பாவத்துக்குத்தான்</p><p>இன்னைக்குத் திரியற</p><p>வாக்கூடு மாட்டிக்கிட்டு</p><p><em><strong>- அய்யனார் ராஜன்</strong></em></p>.<p><strong>காத்திருப்பு</strong></p><p>கண் மூடித்</p><p>திறப்பதற்குள்</p><p>வானத்தின்</p><p>வயிற்றைக் கிழித்து</p><p>தடம் தெரியாமல்</p><p>தைத்துவிடுகிறது</p><p>மின்னல்.</p><p>குளிருக்குத் தாங்காத</p><p>என் கிழிந்த போர்வைகளை</p><p>அதனிடம் கடன்</p><p>சொல்லியாவது</p><p>தைத்து விட வேண்டும்.</p><p>இனி எப்பொழுது</p><p>மழை வரும்.</p><p><em><strong>- சிலம்பரசன் சின்னக்கருப்பன்</strong></em></p>.<p><strong>பார்வை</strong></p><p>யாராவது</p><p>பார்த்துவிடுவார்கள் என</p><p>நாம் பாராமல் இருக்கிறோம்,</p><p>நாம் பாராமுகமாய் இருப்பதையும்</p><p>யாராவது</p><p>பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!</p><p><em><strong>- திருப்பூர் சாரதி</strong></em></p>.<p><strong>அடிபம்பு வாழ்க்கை</strong></p><p>நடைபாதையில் ஆழமாய் நடப்பட்டிருந்த</p><p>நன்னீரைப் பொழியும் குழாயடி நோக்கி</p><p>நெகிழிக்குடத்தைச் சுமந்து வந்த ஜெயராணிக்கும்</p><p>ஐஸ்கட்டி வாங்க வந்த ஜெயராஜிற்கும் </p><p>பெயர்ப் பொருத்தத்தில் துவங்கி,</p><p>முகத்துவாரச் சந்திப்புகளினூடாகப்</p><p>பற்றிக்கொண்டது மற்றுமொரு காதல்.</p><p>வெட்டு, குத்து, பலகளேபரங்களில்</p><p>முதலில் அடித்து நொறுக்கப்பட்டது</p><p>ஐஎஸ்ஐ முத்திரை பதிக்கப்பட்ட அடிபம்பு.</p><p>கண்ணீராய்ப் பீறிட்டு எழுந்த தண்ணீர் ஊற்றை</p><p>டம்மி போட்டு மூடிவைப்பதற்குள்,</p><p>காதலர்கள் ஓடிப்போனார்கள் கடல்புறத்துக்கு.</p><p>பிறகொருநாள் வீங்கிய வயிற்றுடன்</p><p>மீன்பாடி வண்டியில் வந்திருந்தவள் </p><p>மூடப்பட்டுக் கிடந்த அடிபம்பைப் பார்த்து,</p><p>பெருமூச்சுடன் சொன்னாள்</p><p>‘எங்க கடற்கரையில தோண்டினாலே</p><p>நல்ல தண்ணி ஊற்று வருது’</p><p><em><strong>- ஸ்ரீநிவாஸ் பிரபு</strong></em></p>
<h4>வாக்கூடு</h4><h4>மண்ணுல ஏர் அழுத்தறப்ப வராத இரக்கம்</h4><p>விதைச்சு</p><p>களை பறிச்சு</p><p>கதிர் அறுத்து</p><p>களம் சேர்த்து</p><p>பிணையல் விடும் வேளையில வந்ததா மனிதா?</p><p>மண்ணைத் தின்னுடும்னும்</p><p>கருது குத்திடும்னும்</p><p>வாகூசாமப் புளுகிட்டு மாட்டி விட்ட...</p><p>சுத்தி வர்ற நேரத்துல என்ன தின்னுடப்போகுதுன்னு எண்ணாம</p><p>சுயநலமாப் பூட்டி விட்ட...</p><p>மூக்கையும் வாயையும் மூடிவிட்டு எங்கள மூச்சிரைக்க வச்ச பாவத்துக்குத்தான்</p><p>இன்னைக்குத் திரியற</p><p>வாக்கூடு மாட்டிக்கிட்டு</p><p><em><strong>- அய்யனார் ராஜன்</strong></em></p>.<p><strong>காத்திருப்பு</strong></p><p>கண் மூடித்</p><p>திறப்பதற்குள்</p><p>வானத்தின்</p><p>வயிற்றைக் கிழித்து</p><p>தடம் தெரியாமல்</p><p>தைத்துவிடுகிறது</p><p>மின்னல்.</p><p>குளிருக்குத் தாங்காத</p><p>என் கிழிந்த போர்வைகளை</p><p>அதனிடம் கடன்</p><p>சொல்லியாவது</p><p>தைத்து விட வேண்டும்.</p><p>இனி எப்பொழுது</p><p>மழை வரும்.</p><p><em><strong>- சிலம்பரசன் சின்னக்கருப்பன்</strong></em></p>.<p><strong>பார்வை</strong></p><p>யாராவது</p><p>பார்த்துவிடுவார்கள் என</p><p>நாம் பாராமல் இருக்கிறோம்,</p><p>நாம் பாராமுகமாய் இருப்பதையும்</p><p>யாராவது</p><p>பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!</p><p><em><strong>- திருப்பூர் சாரதி</strong></em></p>.<p><strong>அடிபம்பு வாழ்க்கை</strong></p><p>நடைபாதையில் ஆழமாய் நடப்பட்டிருந்த</p><p>நன்னீரைப் பொழியும் குழாயடி நோக்கி</p><p>நெகிழிக்குடத்தைச் சுமந்து வந்த ஜெயராணிக்கும்</p><p>ஐஸ்கட்டி வாங்க வந்த ஜெயராஜிற்கும் </p><p>பெயர்ப் பொருத்தத்தில் துவங்கி,</p><p>முகத்துவாரச் சந்திப்புகளினூடாகப்</p><p>பற்றிக்கொண்டது மற்றுமொரு காதல்.</p><p>வெட்டு, குத்து, பலகளேபரங்களில்</p><p>முதலில் அடித்து நொறுக்கப்பட்டது</p><p>ஐஎஸ்ஐ முத்திரை பதிக்கப்பட்ட அடிபம்பு.</p><p>கண்ணீராய்ப் பீறிட்டு எழுந்த தண்ணீர் ஊற்றை</p><p>டம்மி போட்டு மூடிவைப்பதற்குள்,</p><p>காதலர்கள் ஓடிப்போனார்கள் கடல்புறத்துக்கு.</p><p>பிறகொருநாள் வீங்கிய வயிற்றுடன்</p><p>மீன்பாடி வண்டியில் வந்திருந்தவள் </p><p>மூடப்பட்டுக் கிடந்த அடிபம்பைப் பார்த்து,</p><p>பெருமூச்சுடன் சொன்னாள்</p><p>‘எங்க கடற்கரையில தோண்டினாலே</p><p>நல்ல தண்ணி ஊற்று வருது’</p><p><em><strong>- ஸ்ரீநிவாஸ் பிரபு</strong></em></p>