<p><strong>பித்து</strong></p><p><strong>பா</strong>தக்கமலங்கள்</p><p>என்றெல்லாம் இல்லை</p><p>கரிசல் காட்டுச் சூரியன்</p><p>முத்தமிடும்</p><p>மண் விரிசல்போல</p><p>உன்</p><p>பித்த வெடிப்புப் பாதங்களே</p><p>பிடித்தமாயிருக்கிறது.</p><p><em><strong>- வெள்ளூர் ராஜா</strong></em></p>.<p><strong>டார்வினும் முட்டுச்சந்தும் </strong></p><p><strong>ஒ</strong>வ்வொரு முட்டுச்சந்திலும்</p><p>ஒரு வாய்ப்புக்கான இருப்பு</p><p>ஒளிந்திருக்கிறது...</p><p>வாய்ப்பைக் காண்பவன் அதற்கான</p><p>முஸ்தீபுகளை மேற்கொள்ளத் திராணியற்று இருக்கிறான்...</p><p>முஸ்தீபுகளை மேற்கொள்ளும் திராணியுள்ளவனின்</p><p>பார்வைக்கு</p><p>வாய்ப்புகள் தெரிய மறுக்கின்றன...</p><p>இரண்டும் அமையப்பெற்றவனின் நிமித்தமே</p><p>அந்த முட்டுச்சந்து</p><p>தகவமைகிறது...</p><p>பரிணாம வளர்ச்சிக்கோட்பாடானது</p><p>பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை காத்திருந்து</p><p>தன் பொருட்டு</p><p>டார்வினைப் பிரசவித்ததுபோல...</p><p><em><strong>- ராம்பிரசாத்</strong></em></p>.<p><strong>இரங்கல் பயணம்</strong></p><p><strong>யா</strong>ரென்று தெரியவில்லை</p><p>எப்படியென்று</p><p>அறியவில்லை</p><p>எந்த ஊர் எனக்</p><p>கேட்கவில்லை...</p><p>RIP</p><p>என்ற ஒற்றை வார்த்தையில்</p><p>கடந்துகொண்டிருக்கிறோம்...</p><p>ஒவ்வொரு மரணத்தையும்!</p><p><em><strong>- மு.முபாரக்</strong></em></p>.<p><strong>புழுக்கம்</strong></p><p><strong>ந</strong>கரத்தில் நான் கட்டிய</p><p>புது வீட்டில் இயன்றளவு</p><p>நிறைய சன்னலை அமைக்க</p><p>நிர்பந்தித்திருந்தார் அப்பா</p><p>காற்றுக்கும் வெளிச்சத்திற்கும்</p><p>குறைவில்லாமல் இருக்க வேண்டுமென...</p><p>அதன்படியே செய்துவிட்டாலும்</p><p>புழுக்கத்தில் அடைந்து எல்.ஈ.டி.</p><p>பல்புகள் சூழ குடித்தனம்</p><p>நடத்திக்கொண்டிருக்கிறோம்</p><p>கொசுக்களுக்கும் மாசுக்களுக்கும்</p><p>அஞ்சியபடி...</p><p>இப்போதெல்லாம் சன்னலுக்கு</p><p>அப்பால்</p><p>டிராபிக் சத்தங்களையும் மீறி</p><p>அப்பாவிற்கு மட்டுமே சன்னமான குரலில் கேட்கிறது</p><p>அவர் ஏங்கிய</p><p>குளிர்காற்றின் விசும்பலும் வெளிச்சத்தின் முணுமுணுப்புகளும்.</p><p><em><strong>- தி.கலையரசி</strong></em></p>
<p><strong>பித்து</strong></p><p><strong>பா</strong>தக்கமலங்கள்</p><p>என்றெல்லாம் இல்லை</p><p>கரிசல் காட்டுச் சூரியன்</p><p>முத்தமிடும்</p><p>மண் விரிசல்போல</p><p>உன்</p><p>பித்த வெடிப்புப் பாதங்களே</p><p>பிடித்தமாயிருக்கிறது.</p><p><em><strong>- வெள்ளூர் ராஜா</strong></em></p>.<p><strong>டார்வினும் முட்டுச்சந்தும் </strong></p><p><strong>ஒ</strong>வ்வொரு முட்டுச்சந்திலும்</p><p>ஒரு வாய்ப்புக்கான இருப்பு</p><p>ஒளிந்திருக்கிறது...</p><p>வாய்ப்பைக் காண்பவன் அதற்கான</p><p>முஸ்தீபுகளை மேற்கொள்ளத் திராணியற்று இருக்கிறான்...</p><p>முஸ்தீபுகளை மேற்கொள்ளும் திராணியுள்ளவனின்</p><p>பார்வைக்கு</p><p>வாய்ப்புகள் தெரிய மறுக்கின்றன...</p><p>இரண்டும் அமையப்பெற்றவனின் நிமித்தமே</p><p>அந்த முட்டுச்சந்து</p><p>தகவமைகிறது...</p><p>பரிணாம வளர்ச்சிக்கோட்பாடானது</p><p>பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை காத்திருந்து</p><p>தன் பொருட்டு</p><p>டார்வினைப் பிரசவித்ததுபோல...</p><p><em><strong>- ராம்பிரசாத்</strong></em></p>.<p><strong>இரங்கல் பயணம்</strong></p><p><strong>யா</strong>ரென்று தெரியவில்லை</p><p>எப்படியென்று</p><p>அறியவில்லை</p><p>எந்த ஊர் எனக்</p><p>கேட்கவில்லை...</p><p>RIP</p><p>என்ற ஒற்றை வார்த்தையில்</p><p>கடந்துகொண்டிருக்கிறோம்...</p><p>ஒவ்வொரு மரணத்தையும்!</p><p><em><strong>- மு.முபாரக்</strong></em></p>.<p><strong>புழுக்கம்</strong></p><p><strong>ந</strong>கரத்தில் நான் கட்டிய</p><p>புது வீட்டில் இயன்றளவு</p><p>நிறைய சன்னலை அமைக்க</p><p>நிர்பந்தித்திருந்தார் அப்பா</p><p>காற்றுக்கும் வெளிச்சத்திற்கும்</p><p>குறைவில்லாமல் இருக்க வேண்டுமென...</p><p>அதன்படியே செய்துவிட்டாலும்</p><p>புழுக்கத்தில் அடைந்து எல்.ஈ.டி.</p><p>பல்புகள் சூழ குடித்தனம்</p><p>நடத்திக்கொண்டிருக்கிறோம்</p><p>கொசுக்களுக்கும் மாசுக்களுக்கும்</p><p>அஞ்சியபடி...</p><p>இப்போதெல்லாம் சன்னலுக்கு</p><p>அப்பால்</p><p>டிராபிக் சத்தங்களையும் மீறி</p><p>அப்பாவிற்கு மட்டுமே சன்னமான குரலில் கேட்கிறது</p><p>அவர் ஏங்கிய</p><p>குளிர்காற்றின் விசும்பலும் வெளிச்சத்தின் முணுமுணுப்புகளும்.</p><p><em><strong>- தி.கலையரசி</strong></em></p>