<p><strong>தூ</strong>ண்டிலில் பிடிபட்டுத்</p><p>துள்ளும்</p><p>மீனின் குடலில்</p><p>செரிக்கப்படும்வரை</p><p>துள்ளிக்கொண்டுதானிருந்தது</p><p>தலையறுந்த</p><p>மண்புழுவின் வால். </p><p><strong>- அயன் கேசவன்</strong></p>.<p><strong>எப்போதும்</strong></p><p><strong>அ</strong>றையின் மூலையில்</p><p>எப்போதும்</p><p>ஒரு பூங்கொத்தாக வாழ்கிறேன்</p><p>இந்த அறை எப்போதும்</p><p>துர்நாற்றமானது</p><p>வரும் விருந்தாளிகள்</p><p>முகஞ்சுளிக்க வாய்ப்புகள் அதிகம்</p><p>அதனால்தான்</p><p>எல்லாக் காலங்களிலும்</p><p>ஒரு பூங்கொத்தாக இருக்கிறேன்</p><p>எனக்கும்</p><p>உலகம் சுற்ற ஆசைதான்</p><p>தெருவெங்கும் பேசித்தீர்க்க</p><p>இருக்கின்றன சொற்கள்</p><p>ஒரு பூங்கொத்தாக இருப்பது</p><p>எவ்வகையான சிரமம் என்பதைக்</p><p>கூறிவிடவாவது ஆசைதான்</p><p>ஒரு பூங்கொத்தின் பணி</p><p>வாசனையோடு இருப்பது மட்டும்தான் என</p><p>கண்டிக்கவும் செய்கிறார்கள்.</p><p><em><strong>- க.அம்சப்ரியா</strong></em></p><p><strong>சுவரில்லாச் சித்திரங்கள்</strong></p><p><strong>நா</strong>ன் மட்டும் </p><p>வசிக்கும் வீட்டுச்சுவரில்</p><p>இருளில் முட்டிகொண்டு</p><p>‘சாரி’ என்கிறேன்...</p><p>சிறு சுண்ணப்பூச்சுதிர்த்து</p><p>பதிலளிக்கிறது சுவர்...</p><p>நான் மட்டும் வசிக்கும்</p><p>வீடில்லைதானே அது...</p><p><strong>- சுசித்ரா மாரன்</strong></p>.<p><strong>பொம்மை ஞாபகம்</strong></p><p><strong>சி</strong>றுவயதில் வைத்திருந்த</p><p>பொம்மையொன்று ஞாபகத்திற்கு வருகிறது</p><p>நாணயத்தைப் பொத்தான்மேல் வைத்தவுடன்</p><p>கதவைத் திறந்தபடியே </p><p>தாவிவரும் நாய்க்குட்டி</p><p>நாணயத்தைக் காலால் பிடித்தவாறு</p><p>உள்நகர்த்திச் செல்லும்</p><p>நாணயங்கள் இல்லாதபோது</p><p>சிறு கல்லை வைப்பேன்</p><p>நெஞ்சைஅழுத்தும்</p><p>வெறுப்பையும் புறக்கணிப்பையும்</p><p>அன்பென</p><p>இதயம் எளிதில் நம்பிவிடுவதில்லையா...</p><p>அதைப்போலவே</p><p>கல்லையும் தயக்கமின்றி இழுத்துச் சென்று விடும்</p><p>இந்த முறையேனும் நாணயமொன்று</p><p>பொத்தானை அழுத்தாதா</p><p>என ஏங்குவதில்லை</p><p>மாறாக</p><p>பொத்தானை அழுத்தும் அனைத்தையுமே</p><p>நாணயமென நம்பிவிடுகிறது நாய்க்குட்டி.</p><p><strong>- ஹரிகரன்</strong></p>.<p><strong>பயம்!</strong></p><p><strong>மு</strong>ரட்டு மீசையில்</p><p>உருட்டி விழிக்கும் சாமிக்கு</p><p>பயப்படாது</p><p>படையலில் தனக்குப் பிடித்த</p><p>பலகாரமொன்றை</p><p>எடுத்துச் சாப்பிடும் குழந்தை</p><p>பின் பயந்து பணிகிறது </p><p>சாமி கண்ணைக் குத்திடும் என்ற அம்மாவின் மிரட்டலுக்கு!</p><p><strong>- திருமயம் பெ.பாண்டியன்</strong></p>
<p><strong>தூ</strong>ண்டிலில் பிடிபட்டுத்</p><p>துள்ளும்</p><p>மீனின் குடலில்</p><p>செரிக்கப்படும்வரை</p><p>துள்ளிக்கொண்டுதானிருந்தது</p><p>தலையறுந்த</p><p>மண்புழுவின் வால். </p><p><strong>- அயன் கேசவன்</strong></p>.<p><strong>எப்போதும்</strong></p><p><strong>அ</strong>றையின் மூலையில்</p><p>எப்போதும்</p><p>ஒரு பூங்கொத்தாக வாழ்கிறேன்</p><p>இந்த அறை எப்போதும்</p><p>துர்நாற்றமானது</p><p>வரும் விருந்தாளிகள்</p><p>முகஞ்சுளிக்க வாய்ப்புகள் அதிகம்</p><p>அதனால்தான்</p><p>எல்லாக் காலங்களிலும்</p><p>ஒரு பூங்கொத்தாக இருக்கிறேன்</p><p>எனக்கும்</p><p>உலகம் சுற்ற ஆசைதான்</p><p>தெருவெங்கும் பேசித்தீர்க்க</p><p>இருக்கின்றன சொற்கள்</p><p>ஒரு பூங்கொத்தாக இருப்பது</p><p>எவ்வகையான சிரமம் என்பதைக்</p><p>கூறிவிடவாவது ஆசைதான்</p><p>ஒரு பூங்கொத்தின் பணி</p><p>வாசனையோடு இருப்பது மட்டும்தான் என</p><p>கண்டிக்கவும் செய்கிறார்கள்.</p><p><em><strong>- க.அம்சப்ரியா</strong></em></p><p><strong>சுவரில்லாச் சித்திரங்கள்</strong></p><p><strong>நா</strong>ன் மட்டும் </p><p>வசிக்கும் வீட்டுச்சுவரில்</p><p>இருளில் முட்டிகொண்டு</p><p>‘சாரி’ என்கிறேன்...</p><p>சிறு சுண்ணப்பூச்சுதிர்த்து</p><p>பதிலளிக்கிறது சுவர்...</p><p>நான் மட்டும் வசிக்கும்</p><p>வீடில்லைதானே அது...</p><p><strong>- சுசித்ரா மாரன்</strong></p>.<p><strong>பொம்மை ஞாபகம்</strong></p><p><strong>சி</strong>றுவயதில் வைத்திருந்த</p><p>பொம்மையொன்று ஞாபகத்திற்கு வருகிறது</p><p>நாணயத்தைப் பொத்தான்மேல் வைத்தவுடன்</p><p>கதவைத் திறந்தபடியே </p><p>தாவிவரும் நாய்க்குட்டி</p><p>நாணயத்தைக் காலால் பிடித்தவாறு</p><p>உள்நகர்த்திச் செல்லும்</p><p>நாணயங்கள் இல்லாதபோது</p><p>சிறு கல்லை வைப்பேன்</p><p>நெஞ்சைஅழுத்தும்</p><p>வெறுப்பையும் புறக்கணிப்பையும்</p><p>அன்பென</p><p>இதயம் எளிதில் நம்பிவிடுவதில்லையா...</p><p>அதைப்போலவே</p><p>கல்லையும் தயக்கமின்றி இழுத்துச் சென்று விடும்</p><p>இந்த முறையேனும் நாணயமொன்று</p><p>பொத்தானை அழுத்தாதா</p><p>என ஏங்குவதில்லை</p><p>மாறாக</p><p>பொத்தானை அழுத்தும் அனைத்தையுமே</p><p>நாணயமென நம்பிவிடுகிறது நாய்க்குட்டி.</p><p><strong>- ஹரிகரன்</strong></p>.<p><strong>பயம்!</strong></p><p><strong>மு</strong>ரட்டு மீசையில்</p><p>உருட்டி விழிக்கும் சாமிக்கு</p><p>பயப்படாது</p><p>படையலில் தனக்குப் பிடித்த</p><p>பலகாரமொன்றை</p><p>எடுத்துச் சாப்பிடும் குழந்தை</p><p>பின் பயந்து பணிகிறது </p><p>சாமி கண்ணைக் குத்திடும் என்ற அம்மாவின் மிரட்டலுக்கு!</p><p><strong>- திருமயம் பெ.பாண்டியன்</strong></p>