<p><strong>ட்</strong>ரம்ப் வருகிறார்...</p><p>அகமதாபாத் விழாக்கோலம் பூணுகிறது.</p><p>உலகம் முழுக்க விரியும்</p><p>அமெரிக்கக் கழுகின் நிழல்</p><p>அகமதாபாத்தில் விழப்போவது</p><p>மூன்று மணி நேரம் மட்டும்தான்.</p><p>ஆனால், அதற்கு 100 கோடி செலவு.</p><p>இரவு உணவின்றி</p><p>படுக்கைக்குச் செல்வோர்,</p><p>மூடப்படும் அரசுப்பள்ளிகள்,</p><p>தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள்</p><p>ஆகியவை குறித்த புள்ளிவிவரங்கள்</p><p>உங்கள் நினைவுக்கு வராமலிருக்கவேண்டும்.</p><p>இப்போது நாம் சிலவற்றை</p><p>ட்ரம்பின் கண்களில் படாமல்</p><p>மறைக்க வேண்டும்.</p><p>குடிசைகளை...</p><p>அழுக்குத் தொழிலாளர்களை...</p><p>நடைபாதையில் வசிப்பவர்களை...</p><p>தேசத்தின் உடல்களில்</p><p>தேமல்களாய் இருக்கும் சேரிகளை...</p><p>குஜராத் மாடல் எனத் தீட்டிய சித்திரத்துக்கு</p><p>மாறான எல்லாவற்றையும் மறைக்க வேண்டும்.</p><p>இன்னொரு பொய்ச்சித்திரம் தீட்டல் வேண்டும்.</p><p>சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்.</p><p>இப்போது நம் தேசியக் கடமை சுவர் எழுப்புவது.</p><p>சுவர்களை எழுப்புவது நமக்குப் புதிதல்ல....</p><p>பெருமுதலாளிகளுக்கும் ஏழைகளுக்குமிடையில்....</p><p>ஊருக்கும் சேரிக்குமிடையில்...</p><p>மதங்களுக்கு இடையில்...</p><p>மனங்களுக்கு இடையில்...</p><p>எத்தனை சுவர்களை எழுப்பிப் பழகியிருக்கிறோம்!</p>.<p>முதலில் நாம் எழுப்ப வேண்டியது</p><p>சபர்மதி ஆசிரமத்துக்கு முன்னால் ஒரு சுவர்</p><p>முதலில் நாம் மறைக்க வேண்டியது</p><p>விவசாயிகள் அரைநிர்வாணத்துக்காக</p><p>ஆடை துறந்த காந்தி</p><p>இதே குஜராத்தில்தான் பிறந்தார் என்பதையும்!</p>
<p><strong>ட்</strong>ரம்ப் வருகிறார்...</p><p>அகமதாபாத் விழாக்கோலம் பூணுகிறது.</p><p>உலகம் முழுக்க விரியும்</p><p>அமெரிக்கக் கழுகின் நிழல்</p><p>அகமதாபாத்தில் விழப்போவது</p><p>மூன்று மணி நேரம் மட்டும்தான்.</p><p>ஆனால், அதற்கு 100 கோடி செலவு.</p><p>இரவு உணவின்றி</p><p>படுக்கைக்குச் செல்வோர்,</p><p>மூடப்படும் அரசுப்பள்ளிகள்,</p><p>தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள்</p><p>ஆகியவை குறித்த புள்ளிவிவரங்கள்</p><p>உங்கள் நினைவுக்கு வராமலிருக்கவேண்டும்.</p><p>இப்போது நாம் சிலவற்றை</p><p>ட்ரம்பின் கண்களில் படாமல்</p><p>மறைக்க வேண்டும்.</p><p>குடிசைகளை...</p><p>அழுக்குத் தொழிலாளர்களை...</p><p>நடைபாதையில் வசிப்பவர்களை...</p><p>தேசத்தின் உடல்களில்</p><p>தேமல்களாய் இருக்கும் சேரிகளை...</p><p>குஜராத் மாடல் எனத் தீட்டிய சித்திரத்துக்கு</p><p>மாறான எல்லாவற்றையும் மறைக்க வேண்டும்.</p><p>இன்னொரு பொய்ச்சித்திரம் தீட்டல் வேண்டும்.</p><p>சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்.</p><p>இப்போது நம் தேசியக் கடமை சுவர் எழுப்புவது.</p><p>சுவர்களை எழுப்புவது நமக்குப் புதிதல்ல....</p><p>பெருமுதலாளிகளுக்கும் ஏழைகளுக்குமிடையில்....</p><p>ஊருக்கும் சேரிக்குமிடையில்...</p><p>மதங்களுக்கு இடையில்...</p><p>மனங்களுக்கு இடையில்...</p><p>எத்தனை சுவர்களை எழுப்பிப் பழகியிருக்கிறோம்!</p>.<p>முதலில் நாம் எழுப்ப வேண்டியது</p><p>சபர்மதி ஆசிரமத்துக்கு முன்னால் ஒரு சுவர்</p><p>முதலில் நாம் மறைக்க வேண்டியது</p><p>விவசாயிகள் அரைநிர்வாணத்துக்காக</p><p>ஆடை துறந்த காந்தி</p><p>இதே குஜராத்தில்தான் பிறந்தார் என்பதையும்!</p>