<p>வண்ணப் புதுமலரே - எங்கள்</p><p>வாசனைச் சிறுகனவே!</p><p>எண்ணச் சுனைகளிலே - சுற்றும்</p><p>இன்பப் பொன்படகே!</p> <p>வீடு நிறைந்திருக்கும் - எங்கள்</p><p>வெளிச்ச மலரழகே!</p><p>காடு சுமந்திருக்கும் - எங்கள் </p><p>கற்பகச் சிறுவிதையே!</p> <p>பள்ளிச் சிறைக்கதவு - காலை </p><p>பையத் திறக்கையிலே</p><p>சுள்ளி எரிவதுபோல் - நீங்கள்</p><p>சுருங்கிப் போவதென்ன?</p> <p>அமுதப் பாசனங்கள் - உங்கள்</p><p>அடியில் பாய்வதுபோய்</p><p>அமிலப் பெருவெள்ளம் - உம்மை</p><p>அடித்துக் கொண்டோடுவதோ?</p> <p>சந்தனக் கிண்ணங்களாய் - நீங்கள்</p><p>சாய்ந்து நடப்பதற்குள்</p><p>பந்தயக் குதிரைகளாய் - நீங்கள் </p><p>பதறிப் பறப்பதுவோ?</p>.<p>சுயத்தை இனங்கண்டு - பிள்ளை</p><p>சுடர்விடு பொழுதினிலே</p><p>பயத்தை உருவாக்கி - சின்னப் </p><p>பைத்தியம் செய்வதுவோ?</p> <p>நேயக் கனவுகளில் - உள்ளம்</p><p>நீந்திவரும் வயதில்</p><p>மாயப் பேய்களிடம் - நீங்கள் </p><p>மல்லுக்கு நிற்பதுவோ?</p> <p>ஞானச் சிறகுகளைப் - பூட்டும் </p><p>நல்லதோர் வயதினிலே</p><p>ஆணிப் படுக்கையிலே - நீங்கள் </p><p>அறையப் படுவதுவோ?</p> <p>வெண்ணிலா தொடுவதற்கும் - ஆங்கே</p><p>விண்மீன்கள் நடுவதற்கும்</p><p>எண்ணிலாக் கனவுகாணும் - சிறாரின் </p><p>இளங்கண் பறிப்பதுவோ?</p> <p>சிட்டாங் குருவிகட்குப் - பறக்கச்</p><p>சிகரம் காட்டாமல்</p><p>பட்டாம் பூச்சிகளின் - சிறகில்</p><p>பாறாங்கல் கட்டுவதோ?</p> <p>தப்பென்று பிள்ளைகளை - மதிப்பெண் </p><p>தரம்பார்த் தறிவீரோ?</p><p>உப்பென்று கொள்ளுவதால் - கடலை </p><p>ஒப்பாமற் போவீரோ?</p>.<p>தேர்விலே வருவதல்ல - கல்வி</p><p>திணிப்பதில் வருவதல்ல</p><p>ஆர்வத்தில் வருவதல்லால் - ஞானம்</p><p>ஆணையிட் டடைவதல்ல</p>.<p>வதைகளை நிறுத்திவிட்டால் - பள்ளி</p><p>வகுப்பறை பூக்கள்பூக்கும்</p><p>விதைகளை நசுக்கிநட்டால் - ஆங்கே</p><p>விளைச்சலா பெருகக்கூடும்?</p> <p>வெள்ளப் போக்கினிலே - மெல்ல </p><p>விரையும் படகினைப்போல் </p><p>உள்ளப் போக்கினிலே - உங்கள்</p><p>உலகம் அசையட்டும்</p> <p>அச்சத்தை ஓட்டுதற்கே - முன்னோர்</p><p>அருங்கல்வி தந்துவந்தார்</p><p>அச்சத்தை மூட்டுமென்றால் - அந்த </p><p>அழுங்கல்வி தேவையில்லை</p> <p>நின்றதோர் அறிவுகொண்டு - மேலும்</p><p>நீளுமோர் அறிவுகண்டு</p><p>குன்றுபோல் ஊர்நிமிர்த்தும் - நல்ல</p><p>கொள்கையே கல்விக்கொள்கை.</p>
<p>வண்ணப் புதுமலரே - எங்கள்</p><p>வாசனைச் சிறுகனவே!</p><p>எண்ணச் சுனைகளிலே - சுற்றும்</p><p>இன்பப் பொன்படகே!</p> <p>வீடு நிறைந்திருக்கும் - எங்கள்</p><p>வெளிச்ச மலரழகே!</p><p>காடு சுமந்திருக்கும் - எங்கள் </p><p>கற்பகச் சிறுவிதையே!</p> <p>பள்ளிச் சிறைக்கதவு - காலை </p><p>பையத் திறக்கையிலே</p><p>சுள்ளி எரிவதுபோல் - நீங்கள்</p><p>சுருங்கிப் போவதென்ன?</p> <p>அமுதப் பாசனங்கள் - உங்கள்</p><p>அடியில் பாய்வதுபோய்</p><p>அமிலப் பெருவெள்ளம் - உம்மை</p><p>அடித்துக் கொண்டோடுவதோ?</p> <p>சந்தனக் கிண்ணங்களாய் - நீங்கள்</p><p>சாய்ந்து நடப்பதற்குள்</p><p>பந்தயக் குதிரைகளாய் - நீங்கள் </p><p>பதறிப் பறப்பதுவோ?</p>.<p>சுயத்தை இனங்கண்டு - பிள்ளை</p><p>சுடர்விடு பொழுதினிலே</p><p>பயத்தை உருவாக்கி - சின்னப் </p><p>பைத்தியம் செய்வதுவோ?</p> <p>நேயக் கனவுகளில் - உள்ளம்</p><p>நீந்திவரும் வயதில்</p><p>மாயப் பேய்களிடம் - நீங்கள் </p><p>மல்லுக்கு நிற்பதுவோ?</p> <p>ஞானச் சிறகுகளைப் - பூட்டும் </p><p>நல்லதோர் வயதினிலே</p><p>ஆணிப் படுக்கையிலே - நீங்கள் </p><p>அறையப் படுவதுவோ?</p> <p>வெண்ணிலா தொடுவதற்கும் - ஆங்கே</p><p>விண்மீன்கள் நடுவதற்கும்</p><p>எண்ணிலாக் கனவுகாணும் - சிறாரின் </p><p>இளங்கண் பறிப்பதுவோ?</p> <p>சிட்டாங் குருவிகட்குப் - பறக்கச்</p><p>சிகரம் காட்டாமல்</p><p>பட்டாம் பூச்சிகளின் - சிறகில்</p><p>பாறாங்கல் கட்டுவதோ?</p> <p>தப்பென்று பிள்ளைகளை - மதிப்பெண் </p><p>தரம்பார்த் தறிவீரோ?</p><p>உப்பென்று கொள்ளுவதால் - கடலை </p><p>ஒப்பாமற் போவீரோ?</p>.<p>தேர்விலே வருவதல்ல - கல்வி</p><p>திணிப்பதில் வருவதல்ல</p><p>ஆர்வத்தில் வருவதல்லால் - ஞானம்</p><p>ஆணையிட் டடைவதல்ல</p>.<p>வதைகளை நிறுத்திவிட்டால் - பள்ளி</p><p>வகுப்பறை பூக்கள்பூக்கும்</p><p>விதைகளை நசுக்கிநட்டால் - ஆங்கே</p><p>விளைச்சலா பெருகக்கூடும்?</p> <p>வெள்ளப் போக்கினிலே - மெல்ல </p><p>விரையும் படகினைப்போல் </p><p>உள்ளப் போக்கினிலே - உங்கள்</p><p>உலகம் அசையட்டும்</p> <p>அச்சத்தை ஓட்டுதற்கே - முன்னோர்</p><p>அருங்கல்வி தந்துவந்தார்</p><p>அச்சத்தை மூட்டுமென்றால் - அந்த </p><p>அழுங்கல்வி தேவையில்லை</p> <p>நின்றதோர் அறிவுகொண்டு - மேலும்</p><p>நீளுமோர் அறிவுகண்டு</p><p>குன்றுபோல் ஊர்நிமிர்த்தும் - நல்ல</p><p>கொள்கையே கல்விக்கொள்கை.</p>