<p>எழுதியெழுதி அழிக்கிறேன்</p><p>என் அன்பின் மனச்சாயலையொத்த</p><p>ஒரு வார்த்தையும் கிடைக்கவில்லை.</p><p>அந்தியில் கூடு திரும்பிய </p><p>பறவையின் சிறகில் இருந்து</p><p>விழுந்த இறகொன்றை </p><p>உனக்கனுப்புகிறேன்.</p><p>வானமளந்த </p><p>அதன் கதையைச் சொல்ல அல்ல.</p><p>கூடு திரும்பும்</p><p>அதன் அன்பைச் சொல்ல.</p> <p>உன் விழிகளிலிருந்து</p><p>பரவும் காட்டுப்பூவின் மணம்</p><p>தொலைவுகளைக் கடந்து</p><p>என் சுவாசம் நிறைக்கிறது</p><p>ஒளிக்கு நறுமணம்</p><p>உண்டென்பதை உன்னிரு</p><p>விழிகளே சொல்லிச் செல்கின்றன.</p> <p>அரை விழிப்பில்</p><p>பால்குடிப் பிள்ளையைத்</p><p>துழாவித் தேடி</p><p>அணைத்துக்கொள்ளும்</p><p>தாயைப்போல்</p><p>நினைவுகள்</p><p>உன்னை அணைத்துக்கொள்கின்றன.</p> <p>காரிருளுக்குள் அழைத்துச் செல் அன்பே</p><p>அந்தியின் மேல் படரும்</p><p>துயரத்தின் சாயல்</p><p>மேலும் என்னைத் துயருறச் செய்கிறது</p><p>சோளக் கதிரின் பால்மணம் வீசும்</p><p>இருளுக்குத்தான் நம் மணம்.</p> <p>எவ்வளவு பிடிக்கும்</p><p>எப்போ பார்ப்போம்?</p><p>எதற்கெடுத்தாலும்</p><p>குழந்தையைப்போல்</p><p>கேள்விகளும் சிணுங்கலும்</p><p>பிடிவாதமும்தானா?</p><p>இன்னுமா புரியவில்லை,</p><p>குழந்தைகளாகத்தானே</p><p>நாம் காதலர்களானோம் அன்பே.</p>. <p>பசித்த செடிகளுக்கு</p><p>நீருற்றுகிறாய் நீ</p><p>அதன் புன்னகையைப்</p><p>பார்த்துக்கொண்டிருக்கிறேன் நான்.</p> <p>கல்நாகசுரத்தை </p><p>வாசித்து வை</p><p>ஒளிரும் அதன் நாதத்தில்</p><p>சமைந்த கற்சிலையாக</p><p>வேண்டுமெனக்கு.</p> <p>கொன்றை பூக்கும் பருவத்தில்</p><p>நீயென்னைப் பிரிந்து</p><p>சென்றிருக்கலாம்</p><p>ஒளிரும் மஞ்சள் கொன்றை</p><p>பூவாகத் தொலைந்துபோவது</p><p>எளிதெனக்கு.</p> <p>விலகி நில் என்கிறேன் </p><p>உன் நினைவுகளிடம்</p><p>மடியில் அமர்ந்து </p><p>கழுத்தையும் கட்டிக்கொண்டு </p><p>போதுமா என்கிறது.</p>
<p>எழுதியெழுதி அழிக்கிறேன்</p><p>என் அன்பின் மனச்சாயலையொத்த</p><p>ஒரு வார்த்தையும் கிடைக்கவில்லை.</p><p>அந்தியில் கூடு திரும்பிய </p><p>பறவையின் சிறகில் இருந்து</p><p>விழுந்த இறகொன்றை </p><p>உனக்கனுப்புகிறேன்.</p><p>வானமளந்த </p><p>அதன் கதையைச் சொல்ல அல்ல.</p><p>கூடு திரும்பும்</p><p>அதன் அன்பைச் சொல்ல.</p> <p>உன் விழிகளிலிருந்து</p><p>பரவும் காட்டுப்பூவின் மணம்</p><p>தொலைவுகளைக் கடந்து</p><p>என் சுவாசம் நிறைக்கிறது</p><p>ஒளிக்கு நறுமணம்</p><p>உண்டென்பதை உன்னிரு</p><p>விழிகளே சொல்லிச் செல்கின்றன.</p> <p>அரை விழிப்பில்</p><p>பால்குடிப் பிள்ளையைத்</p><p>துழாவித் தேடி</p><p>அணைத்துக்கொள்ளும்</p><p>தாயைப்போல்</p><p>நினைவுகள்</p><p>உன்னை அணைத்துக்கொள்கின்றன.</p> <p>காரிருளுக்குள் அழைத்துச் செல் அன்பே</p><p>அந்தியின் மேல் படரும்</p><p>துயரத்தின் சாயல்</p><p>மேலும் என்னைத் துயருறச் செய்கிறது</p><p>சோளக் கதிரின் பால்மணம் வீசும்</p><p>இருளுக்குத்தான் நம் மணம்.</p> <p>எவ்வளவு பிடிக்கும்</p><p>எப்போ பார்ப்போம்?</p><p>எதற்கெடுத்தாலும்</p><p>குழந்தையைப்போல்</p><p>கேள்விகளும் சிணுங்கலும்</p><p>பிடிவாதமும்தானா?</p><p>இன்னுமா புரியவில்லை,</p><p>குழந்தைகளாகத்தானே</p><p>நாம் காதலர்களானோம் அன்பே.</p>. <p>பசித்த செடிகளுக்கு</p><p>நீருற்றுகிறாய் நீ</p><p>அதன் புன்னகையைப்</p><p>பார்த்துக்கொண்டிருக்கிறேன் நான்.</p> <p>கல்நாகசுரத்தை </p><p>வாசித்து வை</p><p>ஒளிரும் அதன் நாதத்தில்</p><p>சமைந்த கற்சிலையாக</p><p>வேண்டுமெனக்கு.</p> <p>கொன்றை பூக்கும் பருவத்தில்</p><p>நீயென்னைப் பிரிந்து</p><p>சென்றிருக்கலாம்</p><p>ஒளிரும் மஞ்சள் கொன்றை</p><p>பூவாகத் தொலைந்துபோவது</p><p>எளிதெனக்கு.</p> <p>விலகி நில் என்கிறேன் </p><p>உன் நினைவுகளிடம்</p><p>மடியில் அமர்ந்து </p><p>கழுத்தையும் கட்டிக்கொண்டு </p><p>போதுமா என்கிறது.</p>