<p><strong>தா</strong>னியங்களைக் காற்றில்தானே வீசினோம் </p><p>அது எப்படி தரைக்கு வந்தது </p><p>தானியங்களைத் தரையில்தானே விதைத்தோம் </p><p>இடையில் எப்படி நீர் புகுந்தது</p><p>தானியங்களை மிதக்கத்தானே சொன்னோம்</p><p>அது ஏன் நம்பிக்கை இழந்தது</p><p>இங்குவந்து பாருங்கள்</p><p>நீரில் உருவம் பெரிதான தானியங்களை</p><p>இன்னும் சிலபேர் சேர்த்து உண்ணலாம்போல</p>.<p>இப்படி வெறுமனே கதைபேசுவதில் </p><p>ஒரு அர்த்தமும் இல்லை நண்பா </p><p>அந்தப் பளிங்கு நீரில் மூழ்கிய தானியங்கள் </p><p>அதுபாட்டுக்கு ஆழத்திற்குச் சென்றுவிட்டன </p><p>கோழிகள்தான்</p><p>இன்னும் நீரின் மேற்பரப்பைக்</p><p>கொத்திக்கொண்டிருக்கின்றன</p>
<p><strong>தா</strong>னியங்களைக் காற்றில்தானே வீசினோம் </p><p>அது எப்படி தரைக்கு வந்தது </p><p>தானியங்களைத் தரையில்தானே விதைத்தோம் </p><p>இடையில் எப்படி நீர் புகுந்தது</p><p>தானியங்களை மிதக்கத்தானே சொன்னோம்</p><p>அது ஏன் நம்பிக்கை இழந்தது</p><p>இங்குவந்து பாருங்கள்</p><p>நீரில் உருவம் பெரிதான தானியங்களை</p><p>இன்னும் சிலபேர் சேர்த்து உண்ணலாம்போல</p>.<p>இப்படி வெறுமனே கதைபேசுவதில் </p><p>ஒரு அர்த்தமும் இல்லை நண்பா </p><p>அந்தப் பளிங்கு நீரில் மூழ்கிய தானியங்கள் </p><p>அதுபாட்டுக்கு ஆழத்திற்குச் சென்றுவிட்டன </p><p>கோழிகள்தான்</p><p>இன்னும் நீரின் மேற்பரப்பைக்</p><p>கொத்திக்கொண்டிருக்கின்றன</p>