தண்டனை விகடன்
Published:Updated:

நான் மனுஷ்ய புத்திரன் ஆனது எப்படி?

நான் மனுஷ்ய புத்திரன் ஆனது எப்படி?


16 ப்ளஸ் எனர்ஜி பக்கங்கள்
நான் மனுஷ்ய புத்திரன் ஆனது எப்படி?
நான் மனுஷ்ய புத்திரன் ஆனது எப்படி?
நான் மனுஷ்ய புத்திரன் ஆனது எப்படி?
படம்:கே.ராஜசேகரன்
நான் மனுஷ்ய புத்திரன் ஆனது எப்படி?
நான் மனுஷ்ய புத்திரன் ஆனது எப்படி?

ங்களால் நடக்க முடியவில்லையா... பரவாயில்லை. ஓடத் தொடங்குங்கள்!' என்ற வாக்கியத்தை எப்போதோ, எங்கோ படித்து இருக்கிறேன். பைத்தியக்காரத்தனமாகத் தோன் றும் இந்த வாக்கியத்தின் பின்னே ஒரு சவால் இருக்கிறது. நான் அதைக் கொஞ்சம் மாற்றி னேன் 'ஓட முடியவில்லையா... பரவாயில்லை. பறக்க முயற்சிக்கலாம்!' என்று. அந்தச் சவால் எனக்குப் பிடித்திருந்தது.

சொற்களின் ரகசிய உலகத்துக்குள் பறந்து சென்றேன். என்னைப் பிடித்து அழுத்திக்கொண்டு இருந்த தினசரி வாழ்க்கையின் அத்தனை சுமை களில் இருந்தும் என்னை விடுவித்துக்கொண்டு பறந்தேன்.

என் குழந்தைப் பருவத்தில் எப்போதும் என்னைச் சுற்றி பிரியத்தின் நிழல் தழைத்துக் கிடந்தபோதும் தனிமை உணர்ச்சி கடும்வெப்ப மாக என்னுள் நிரம்பிக்கொண்டே இருந்தது. கிராமத்து வீட்டில் எனக்கு ஓர் அறை இருந் தது. உயரமான மரக் கட்டில், சின்னஞ் சிறிய ஜன்னல், என்னுடைய புத்தகங்கள், என்னுடைய கனவுகள்... ஒருநாள் பள்ளிக்குப் போக முடி யாது என்று சொன்னேன். ஏன் என்றுகேட்டார் கள். என்னிடம் பதில் இல்லை. யாரும் என்னை வற்புறுத்தவில்லை. என் தந்தை, காமிக்ஸ்கள், நாவல்கள், இன்னபிற கதைப் புத்தகங்கள் என வாங்கித் தந்த வண்ணம்இருந் தார். நான் அவற்றுக்குள் முழுமையாகமறைந்து போனேன். பத்திரிகைகளில் வரும் சிறிய புத்தக மதிப்புரைகளைப் பார்த்து பணம் அனுப்பி நூல்கள் வாங்கத் தொடங்கினேன். என் கிராமத்து நூலகத்தில் இருந்து எனக்கு

அற்புதமான நூல்கள் கிடைத்தன. எனக்கு அப்போது தெரியாது, இந்தப் படிப்புதான் என்னை விடுதலை செய்யப்போகிறது என்று!

பத்திரிகைகளுக்குக் கடிதங்கள் எழுதத் தொடங்கினேன். வானொலிக்கு எழுதஆரம்பித் தேன். அதில் என் பெயர் ஒலித்தபோது, உலகமே அதைக் கேட்டுக்கொண்டு இருக்கிறது என்று நம்பினேன். இன்னொரு புறம், இந்த வாழ்க்கையின் அநீதிகள்பற்றி எண்ணற்ற கேள்விகள் என்னை அலைக்கழிக்கத் தொடங்கின. நான் முழுக்க முழுக்கப் பெண்களால் வளர்க்கப்பட்டேன். பெண்களோடு வளர்ந்தேன். பெண்கள் அடையக்கூடிய வீழ்ச்சியும் துயரமும் என்னை மனமுடையச் செய்தன. நான் அதை எனது ரகசியக் குறிப்பேடுகளில் இன்னதென்று தெரியாத ஒரு வடிவத்தில் எழுத ஆரம்பித்தேன். எனக்கு மூச்சு முட்டியது. என்னுடைய கடவுள், மதம் சார்ந்தநம்பிக்கைகள் தகரத் தொடங்கின. கடவுள் இருக்கும் உலகில், இவ்வளவு மனிதர்கள் இவ்வளவு துயரத்தை அடைய வேண்டியது இல்லை என்று தோன்றியது. மனித இருப்பைத் தவிர, மனித வாழ்க்கையின் அப்பால் எதுவும் இல்லை என்று தோன்றிய ஒருநாள் காலையில், என் பெயரை மனுஷ்யபுத்திரன் என்று மாற்றிக்கொண்டு, ஏதோ ஒரு பத்திரிகைக்கு வாசகர் கடிதம் எழுதினேன். பெயரை மாற்றிக்கொள்வது நம்முடைய உடலை மாற்றிக்கொள்வதுபோல. அது நம்மை நாமே கடந்து செல்லும் வலி மிகுந்த அனுபவம்!

நான் மனுஷ்ய புத்திரன் ஆனது எப்படி?

வாசகர் கடிதம் மூலமான அறிமுகத்தால் கல்கண்டு இதழின் ஆசிரியர் லேனா தமிழ்வாணனுக்கு ஒரு நோட்டுப் புத்தகம் முழுக்க நான் எழுதிய கவிதை களை அனுப்பிவைத்தேன். சில மாதங்களில் 'மனுஷ்யபுத்திரனின் கவிதைகள்' என்ற தலைப்பில் மணிமேகலைப் பிரசுரம் எனது முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டது. அப்போது எனக்கு வயது 16. அம்மா அந்தப் புத்தகத்தின் பிரதிகளைப் பார்த்து நெகிழ்ந்து அழுதாள். அவளுடைய மாபெரும் துக்கம் அந்தக் கணத்தில் கரைந்ததை உணர்ந்தேன்.

அந்தப் புத்தகம் ஒரு திறவுகோல். அதை நான் முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டேன். அந்தப் புத்தகத்தின் வழியே என்னைத் தேடி வந்த நண்பர்களை இறுகப் பற்றிக்கொண்டேன். அதன் வழியே வேறு பல நண்பர்களை அடைந்தேன். ஒவ்வொரு புதிய மனிதனைச் சந்திக்கும்போதும் என்னைக் கொஞ்சம் மாற்ற அவனை அனுமதித்தேன்.

என் அம்மா இறந்துபோனபோது மீண்டும் நான் இருண்ட பாதாள உலகத்துக்குத் திரும்பினேன். மரணத்தின் தனிமையைப் பார்ப்பது விநோதமாக இருந்தது. அங்கே ஒன்றுமே இருக்கவில்லை. நான் அதைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். 'இருள் என்பது மிகக் குறைந்த ஒளி' என்ற பாரதியின் வாக்கியம்தான் அப்போது துணையாக வந்தது. மீண்டும் ஆவேசமாக எழுதினேன். 'என் படுக்கைஅறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்' தொகுப்பு வெளிவந்தது. 'ஜே.ஜே சில குறிப்புகள்' படித்துவிட்டு, சுந்தர ராமசாமியைப் போய்ப் பார்த்தேன். நவீன இலக்கியத்தின் மீதான ஆழமான பரிச்சயத்தை அவரது நட்பு உருவாக்கியது. 'காலச்சுவடு' இதழை மீண்டும் தொடங்கியபோது அவரது விருப்பத்தின் பேரில் அதன் ஆசிரியர் குழுவில் இணைந்தேன். அதே காலகட்டத்தில் கோவை ஞானி எனக்கு வழிகாட்டிய இன்னோர் ஆசானாக இருந்தார்.

இன்று நான் வந்து சேர்ந்திருக்கும் இடம் சுஜாதாவில் இருந்து தொடங்கியதுதான். 'கால்களின் ஆல்பம்' கவிதையை அவர் ஒரு கருத்தரங்கில் படித்தபோது அதற்குப் பார்வையாளர்களிடம் கிடைத்தவரவேற்பு பற்றி அப்போது பத்திரிகைகளில் எழுதினார். ஓர் இளம் எழுத்தாளனின் மனதுக்கு அது எத்தகைய உத்வேகத்தைக் கொடுக்கும் என்று சொல்ல வார்த்தைகளே இல்லை.

2000-த்தின் ஆரம்ப வருடங்கள் மிகவும் கடினமானவை. அப்போது தான் 'நீராலானது' எழுதினேன். வேலையை விட்டுவிட்டேன். ஒரு நம்ப முடியாத காதலில் இருந்து, நம்ப முடியாத வகையில் வெளியேறினேன். என்னால் எழுத முடியவில்லை. அப்போது சுஜாதாவைப் போய்ப் பார்த்தேன். 'உனக்குத் தேவை மாத்திரைகள் அல்ல; செயல்பாடுகள்' என்றார். தன்னுடைய சில நூல்களை பதிப்பிக்கச் சொன்னார். மீண்டும் இருளில் இருந்து வெளிச்சத்துக்கு!

இதுதான் விளிம்பு என்று நினைத்த நாளில் இதற்கு அப்பாலும் ஒரு நீண்ட பாதை இருக்கிறது என்று எனக்கு மீண்டும் உணர்த்திய தருணம். 2003-ல் புத்தகக் கண்காட்சியில் ஆறே புத்தகங்களுடன் உயிர்மை கடை அமைத்து, இரண்டு லட்ச ரூபாய்க்குப் புத்தகம் விற்றேன். அன்று இது யாரும் நினைத்துப் பார்க்க முடியாத விஷயம். அப்புறம் எனக்கு ஒரு போதும் மாத்திரைகள் தேவைப்படவில்லை!

அதே ஆண்டில் ஒரு பத்திரிகை யைத் தொடங்குவதற்கான எந்தக் கட்டமைப்பும் பொருளாதார வசதியும் இல்லாமல் 'உயிர்மை'யைத் தொடங்கி னேன். சாரு நிவேதிதா, எஸ்.ராம கிருஷ்ணன், ஞானக்கூத்தன், ஜெய மோகன், தியடோர் பாஸ்கரன், ட்ராஸ்கி மருது உள்ளிட்ட நண்பர்கள்தான் எனது ஒரே பலம். இன்று உயிர்மை தமிழின் முன்னணி இலக்கிய இதழ்.

நான் எனது வெற்றிகள், வீழ்ச்சிகள் அனைத்தில் இருந்தும் கற்றுக்கொண் டது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். நாம் யாரும், எப்போதும் முழுமையாகக் கைவிடப்பட்டவர்கள் அல்ல; எந்த இருளிலும் விடிவதற்குச் சற்று நேரமே இருக்கிறது என்பதை நான் அறிந்து வந்திருக்கிறேன். கொஞ்சம் மன வலிமையும் கொஞ்சம்காத்திருக்கவும் முடிந்தால், நாம் விடுபடவேமுடியாத துர்கனவு என்று நினைத்த விஷயங்களில் இருந்தும் விடுபடுவோம்!

நகுலனின் இந்தக் கவிதையைப் படித்திருக்கிறீர்களா?

எந்த நேரத்தில்
எந்தக் கதவு திறக்குமென்று
யார்தான் சொல்ல முடியும்?

நான் மனுஷ்ய புத்திரன் ஆனது எப்படி?
நான் மனுஷ்ய புத்திரன் ஆனது எப்படி?