<div class="article_container"><table><tbody><tr><td align="left" height="500" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" width="609"><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="blue_color_heading" id="Cat. heading" width="609"><tbody><tr><td align="right" class="blue_color" height="25" valign="middle"><div align="right">16 ப்ளஸ் - எனர்ஜி பக்கங்கள்</div></td> <td align="right" valign="middle" width="5"></td></tr></tbody></table></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td align="left" height="500" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" width="609"><tbody><tr><td class="orange_color_heading">''நான் விஜய் ஆண்டனி ஆனது எப்படி?'' </td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="Brown_color_heading" id="Artical Heading" width="100%"> <tbody><tr> <td align="left" class="Brown_color" height="25" valign="top"><div align="right"></div></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td align="left" height="500" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="Brown_color_heading" id="Artical Heading" width="100%"><tbody><tr><td align="left" class="Brown_color" height="25" valign="top"><div align="right">பாரதி தம்பி<br /> </div></td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td align="left" height="500" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="100%"><tbody><tr><td align="left" class="block_color_bodytext" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="block_color_bodytext" width="96%"><tbody><tr><td align="left" class="block_color_bodytext" colspan="3" valign="top"><p align="left"><strong></strong></p> <p align="left"><strong>''நா</strong>ட்டுப்புற இசை, கர்நாடக இசை, மேற்கத்திய இசை, ஸ்வரம், தாளம், ராகம், ஸ்ருதி... இப்படி எதுவும் கல்லூரி முடிக்கும் வரை எனக்குத் தெரியாது. எந்தவித இசையறிவும் இல்லாமல் ஏதோ ஓர் உள்ளுணர்வின் உந்து தலில் இசையை வாழ்வாகத் தேர்ந்தெடுத்தவன் நான்!'' - பணிவு கரைத்த குரலில் பேசுகிறார் விஜய் ஆண்டனி. நவீன தமிழ்த் திரை இசையின் துள்ளிசையும், மெல்லிசையும் கலந்த பாடல்கள் இவருடையவை! </p> <table align="right" border="0" cellpadding="0" cellspacing="0" width="250"> <tbody><tr> <td><div align="center"> </div></td> </tr> </tbody></table> <p>''என் அப்பா, அரசுத் துறை ஒன்றில் கிளர்க் நிலையில் வேலை பார்த்தார். அம்மா வீட்டில் இருந்தார். அப்புறம், நான், என் தங்கை. மிகச் சாதாரணக் குடும்பம். நான் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கும்போது, அப்பா ஒரு விபத்தில் இறந்துபோனார். வேறு எந்த வருமானமும் இல்லாத நிலையில், இரண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டு அம்மா மேரிபாபு தடுமாறி நின்றார். வீட்டு வாடகை, சாப்பாடு, துணி, படிப்பு எல்லாமும் சிக்கலானது. வேறு வழியின்றி என்னையும், என் தங்கையையும் அழைத்துக்கொண்டு எல்லா உறவினர் வீடுகளுக்கும் அலைந்தார். சாத்தூர் அருகே இருக்கும் சின்னக்காமன்பட்டியில் ஓர் உறவினர் வீட்டில் தங்கினோம். அங்கு அரசுப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்தேன். ஒரு வருடத்தில் அடுத்த மாற்றம். சென்னைக்கு ஓர் உறவினர் வீட்டுக்கு வந்தோம். கார்ப்பரேஷன் பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு சேர்ந்தேன். ஆறே மாதங்களில் மறுபடியும் மூட்டை முடிச்சுக்களுடன் எங்களை அழைத்துக்கொண்டு அம்மா நாகர்கோவிலுக்குப் போனார். அங்கும் அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பின் மறுபாதியைப் படித்தேன். திரும்பவும் வாழ்க்கை விரட்டியது. இப்போது திருச்சிக்குப் போனோம். ஆறாம் வகுப்பின் பாதியை திருச்சிப் பள்ளியில் படித்தேன். </p> <p>கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள்... இரண்டு பிள்ளைகளுடன் ஊர் ஊராக அலைந்தார் என் அம்மா. நல்லவேளை, என் அப்பா பார்த்த அரசு வேலை, கருணை அடிப்படையில் அம்மாவுக்குத் தரப்பட்டது. வேலை கிடைத்த இடம்... திருநெல்வேலி. </p> </td></tr></tbody></table></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td align="left" height="500" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="100%"><tbody><tr><td align="left" class="block_color_bodytext" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="block_color_bodytext" width="96%"><tbody><tr><td align="left" class="block_color_bodytext" colspan="3" valign="top"><p>நெல்லை செயின்ட் சேவியர் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்ந்தேன். பாதியில் சேர்ந்தவன் என்பதால் என் நம்பர்தான் வகுப்பின் கடைசி நம்பர். நம்பரில் மட்டுமல்ல... படிப்பிலும் நான்தான் கடைசி. ப்ளஸ் டூ முடிக்கும் வரை ரொம்ப சுமாரான மாணவன் தான். இருந்தாலும், பெரிய மனதுவைத்து சேவியர் கல்லூரியிலேயே ஸீட் கொடுத்தார்கள். காலேஜுக்குப் போவேன். வருவேன். சுமாராகப் படிப்பேன். அம்மாவின் சிரமங்களை உணரும்போது 'எப்படியாவது முன்னேறணும்' என்று தோன்றும். ஆனால், என்ன செய்வதென்று தெரியாது. ஆலோசனை சொல்லவும், ஆதரவு தரவும் யாரும் இல்லை. </p> <p>நண்பர்களைக் கிண்டல் செய்வதற்காக சினிமா பாடல்களை உல்டா பண்ணியும், நானே சொந்தமாகவும் எதையாவது பாடுவேன். அது பசங்க மத்தியில் ஹிட்டானது. உற்சாகமாகி புதிய புதிய பாடல்களை உருவாக்கினேன். அதை எல்லாம் தொகுத்து ஆல்பம் போடலாம் என்று யோசித்து திருச்சியில் இருக்கும் தலைக்காவேரி அமைப்பிடம் போய்க் கேட்டபோது, 'உங்களுக்கு இசை தொடர்பாக என்ன தெரியும்?' என்றார்கள். 'ஒன்றும் தெரியாது' என்று சொல்லிவிட்டுத் திரும்பினேன். கையில் இருந்த 2,500 ரூபாய்க்கு ஒரு கீ-போர்டு வாங்கிக்கொண்டு திருநெல்வேலிக்குப் பஸ் பிடித்தேன். சிறிய கீ-போர்டு. ஜாமென்ட்ரி பாக்ஸைவிடக் கொஞ்சம் பெரியது. ஆனால், அந்தச் சிறிய கருவி எழுப்பிய இசை எனக்குள் ஏதோ செய்தது. கல்லூரிப் பாடல்களை எல்லாம் இந்த கீ-போர்டில் வாசித்துப் பார்த்தேன். எனக்கு இசையின் மீது இருக்கும் ஈர்ப்பை எனக்குப் புரியவைத்தது அந்த குட்டி கீ-போர்டுதான்.</p> <p>கல்லூரி முடிந்தது. அம்மாவிடம், 'நான் இசை அமைப்பாளர் ஆகணும். சென்னைக்குப் போறேன்' என்றேன். அம்மா சம்மதிக்கவில்லை. 'மேலே படிக்கிறேன்!' என்று சொல்லிவிட்டு சென்னைக்கு வந்தேன். 'மேலே படிக்க முடியாது' என்று எனக்கு மட்டும்தான் தெரியும். ஏனென்றால், கல்லூரியில் 30 பேப்பர்களில் 22 அரியர்ஸ். அப்புறம் எங்கே படிப்பது? ஆனாலும், என் திறமை மீது நம்பிக்கைவைத்த ஃபாதர் இன்னாசிமுத்து எனக்கு லயோலாவில் ஸீட் வாங்கித் தந்தார். </p> <p>லயோலாவில் மறுபடியும் யு.ஜி-யில் விஸ்காம் சேர்ந்தேன். ஹாஸ்டலில் தங்கி பார்ட் டைம் வேலை தேடினேன். ஸ்டார் ஸ்டுடியோ என்ற ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் என்னை ஓர் அப்ரன்டீஸாகச் சேர்த்துக்கொண்டார்கள். ஸ்பீக்கரைத் துடைப்பது, இசைக் கருவிகளைத் துடைப்பது என எப்படியாவது உள்ளே போய்விடுவேன். மெள்ள மெள்ள எமி சார், என்னை எல்லாவற்றுக்கும் அனுமதித்தார். சவுண்ட் இன்ஜினீயரிங் கற்றுக்கொண்டேன். பகுதி நேரமாக பியானோ வகுப்புகளுக்கும் போனேன். </p> <p>என் சக்திக்கு 20 கிலோதான் தூக்க முடியும் என்றால், 50 கிலோவில் இருந்து ஆரம்பிப்பதுதான் என் வழக்கம். லயோலாவில் டிகிரி முடித்ததும் அதே ஸ்டுடியோவில் மேலும் ஒரு வருடம் வேலை பார்த்தேன். அடுத்த வருடமே 'ஆடியோ ஃபைல்' என்ற பெயரில் நானே சொந்தமாக ஒரு ரெக்கார்டிங் ஸ்டுடியோ ஆரம்பித்தேன். லட்சங்களில் கடன் வாங்கித் தொடங்கிய தால், கடனை அடைக்க இரவும் பகலுமாக உழைக்க வேண்டியிருந்தது. ஆனால், இசை மீது இருந்த ஆர்வத்தால் தொழிலை நேசித்துச் செய்தேன். ஏராளமானோர் நண்பர் ஆனார்கள். </p> <p>எனக்குக் கிடைத்த முதல் வாய்ப்பு, ஒரு டி.வி. சீரியல். 'சின்னப் பாப்பா, பெரிய பாப்பா' என்ற சீரியலின் டைட்டில் ஸாங் நான் கம்போஸ் செய்ததுதான். பிறகு, நிறைய விளம்பரப் படங்களுக்கு இசை அமைத்தேன். இடையில் சினிமா வாய்ப்பு களையும் தேடினேன். </p> <p>ஒரு நாள் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் சார், இயக்குநர் சசி சாரை அறிமுகப்படுத்தினார். அவருக்கு 'டிஷ்யூம்' பண்ணினேன். அதற்கு முன்பே எஸ்.ஏ.சந்திரசேகரன் சாரிடமும் வாய்ப்பு கேட்டிருந்தேன் என்பதால், அவர் 'சுக்ரன்' வாய்ப்பு கொடுத்தார். முதலில் சுக்ரனும், இரண்டாவதாக டிஷ்யூமும் ரிலீஸ் ஆகின.</p> </td></tr></tbody></table></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td align="left" height="500" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="100%"><tbody><tr><td align="left" class="block_color_bodytext" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="block_color_bodytext" width="96%"><tbody><tr><td align="left" class="block_color_bodytext" colspan="3" valign="top"> <p>இப்பவும் என் அம்மாவுக்குக் காலையில் ஸ்கூட்டரில் கிளம்பி ஆபீசுக்குப் போய், மாலையில் வீடு திரும்பி, இரவு டி.வி. பார்த்து 10 மணிக்குத் தூங்கும் மகன்தான் வேண்டும். </p> <p>வெற்றி, தோல்வி, பணம், புகழ் எல்லா வற்றையும்விட, அம்மாக்களுக்கு முக்கியம் மகனின் உடல்நலம். அம்மாக்களின் அன்பு மட்டுமே பெரியது. என் திருமணம் நடந் தது. காதல் மனைவி ஃபாத்திமா ஹனி டியூ வந்த பிறகு, வாழ்க்கை இன்னும் வண்ண மயமாகி இருக்கிறது. என்னைவிட, எனக் காக அதிகம் உழைக்கும் என் மனைவி எனக்கு இன்னொரு அம்மா.</p> <p>'நான் விஜய் ஆண்டனி ஆனது எப்படி?' என்று கேட்டதால், 'இப்படித்தான் ஆனேன்' என்று சொல்லவே இவற்றை எல்லாம் ரீ-வைண்ட் செய்தேன். மற்றபடி எதையும் சாதித்துவிட்டதான பெருமிதம் ஒரு சத விகிதம்கூட என்னிடம் இல்லை. ஒரு 'நாக்க முக்க'வும், ஒரு 'ஆத்திசூடி'யும், ஒரு 'அழகாய் பூக்குதே'வும் போட்டுவிட்டு, நான் ஏதோ பெரிய ஆள் என நினைக்கவில்லை. உள்ளத்துக்கும் உலகத்துக்கும் உண்மையாக வாழ்ந்தால் அதுதான் வெற்றி!''</p> </td> </tr> <tr> <td align="left" colspan="3" valign="top"> </td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td align="left" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td><table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td></td></tr></tbody></table></td></tr></tbody></table></td></tr></tbody></table></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td align="right" valign="middle" width="5"></td> </tr> </tbody></table> <!-- google_ad_section_end --><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_bluecolor_english_text" width="100%"> <tbody><tr> <td width="300"><div align="right"> </div></td> <td height="25" width="104"> </td> <td align="center" width="105"><a class="big_bluecolor_english_text style1" href="#" onclick="Javascript:history.back()"></a> </td> <td align="right" width="59"><a class="big_bluecolor_english_text" href="#"></a></td> <td width="15"> </td> </tr> </tbody></table></div>
<div class="article_container"><table><tbody><tr><td align="left" height="500" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" width="609"><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="blue_color_heading" id="Cat. heading" width="609"><tbody><tr><td align="right" class="blue_color" height="25" valign="middle"><div align="right">16 ப்ளஸ் - எனர்ஜி பக்கங்கள்</div></td> <td align="right" valign="middle" width="5"></td></tr></tbody></table></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td align="left" height="500" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" width="609"><tbody><tr><td class="orange_color_heading">''நான் விஜய் ஆண்டனி ஆனது எப்படி?'' </td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="Brown_color_heading" id="Artical Heading" width="100%"> <tbody><tr> <td align="left" class="Brown_color" height="25" valign="top"><div align="right"></div></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td align="left" height="500" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="Brown_color_heading" id="Artical Heading" width="100%"><tbody><tr><td align="left" class="Brown_color" height="25" valign="top"><div align="right">பாரதி தம்பி<br /> </div></td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td align="left" height="500" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="100%"><tbody><tr><td align="left" class="block_color_bodytext" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="block_color_bodytext" width="96%"><tbody><tr><td align="left" class="block_color_bodytext" colspan="3" valign="top"><p align="left"><strong></strong></p> <p align="left"><strong>''நா</strong>ட்டுப்புற இசை, கர்நாடக இசை, மேற்கத்திய இசை, ஸ்வரம், தாளம், ராகம், ஸ்ருதி... இப்படி எதுவும் கல்லூரி முடிக்கும் வரை எனக்குத் தெரியாது. எந்தவித இசையறிவும் இல்லாமல் ஏதோ ஓர் உள்ளுணர்வின் உந்து தலில் இசையை வாழ்வாகத் தேர்ந்தெடுத்தவன் நான்!'' - பணிவு கரைத்த குரலில் பேசுகிறார் விஜய் ஆண்டனி. நவீன தமிழ்த் திரை இசையின் துள்ளிசையும், மெல்லிசையும் கலந்த பாடல்கள் இவருடையவை! </p> <table align="right" border="0" cellpadding="0" cellspacing="0" width="250"> <tbody><tr> <td><div align="center"> </div></td> </tr> </tbody></table> <p>''என் அப்பா, அரசுத் துறை ஒன்றில் கிளர்க் நிலையில் வேலை பார்த்தார். அம்மா வீட்டில் இருந்தார். அப்புறம், நான், என் தங்கை. மிகச் சாதாரணக் குடும்பம். நான் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கும்போது, அப்பா ஒரு விபத்தில் இறந்துபோனார். வேறு எந்த வருமானமும் இல்லாத நிலையில், இரண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டு அம்மா மேரிபாபு தடுமாறி நின்றார். வீட்டு வாடகை, சாப்பாடு, துணி, படிப்பு எல்லாமும் சிக்கலானது. வேறு வழியின்றி என்னையும், என் தங்கையையும் அழைத்துக்கொண்டு எல்லா உறவினர் வீடுகளுக்கும் அலைந்தார். சாத்தூர் அருகே இருக்கும் சின்னக்காமன்பட்டியில் ஓர் உறவினர் வீட்டில் தங்கினோம். அங்கு அரசுப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்தேன். ஒரு வருடத்தில் அடுத்த மாற்றம். சென்னைக்கு ஓர் உறவினர் வீட்டுக்கு வந்தோம். கார்ப்பரேஷன் பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு சேர்ந்தேன். ஆறே மாதங்களில் மறுபடியும் மூட்டை முடிச்சுக்களுடன் எங்களை அழைத்துக்கொண்டு அம்மா நாகர்கோவிலுக்குப் போனார். அங்கும் அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பின் மறுபாதியைப் படித்தேன். திரும்பவும் வாழ்க்கை விரட்டியது. இப்போது திருச்சிக்குப் போனோம். ஆறாம் வகுப்பின் பாதியை திருச்சிப் பள்ளியில் படித்தேன். </p> <p>கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள்... இரண்டு பிள்ளைகளுடன் ஊர் ஊராக அலைந்தார் என் அம்மா. நல்லவேளை, என் அப்பா பார்த்த அரசு வேலை, கருணை அடிப்படையில் அம்மாவுக்குத் தரப்பட்டது. வேலை கிடைத்த இடம்... திருநெல்வேலி. </p> </td></tr></tbody></table></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td align="left" height="500" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="100%"><tbody><tr><td align="left" class="block_color_bodytext" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="block_color_bodytext" width="96%"><tbody><tr><td align="left" class="block_color_bodytext" colspan="3" valign="top"><p>நெல்லை செயின்ட் சேவியர் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்ந்தேன். பாதியில் சேர்ந்தவன் என்பதால் என் நம்பர்தான் வகுப்பின் கடைசி நம்பர். நம்பரில் மட்டுமல்ல... படிப்பிலும் நான்தான் கடைசி. ப்ளஸ் டூ முடிக்கும் வரை ரொம்ப சுமாரான மாணவன் தான். இருந்தாலும், பெரிய மனதுவைத்து சேவியர் கல்லூரியிலேயே ஸீட் கொடுத்தார்கள். காலேஜுக்குப் போவேன். வருவேன். சுமாராகப் படிப்பேன். அம்மாவின் சிரமங்களை உணரும்போது 'எப்படியாவது முன்னேறணும்' என்று தோன்றும். ஆனால், என்ன செய்வதென்று தெரியாது. ஆலோசனை சொல்லவும், ஆதரவு தரவும் யாரும் இல்லை. </p> <p>நண்பர்களைக் கிண்டல் செய்வதற்காக சினிமா பாடல்களை உல்டா பண்ணியும், நானே சொந்தமாகவும் எதையாவது பாடுவேன். அது பசங்க மத்தியில் ஹிட்டானது. உற்சாகமாகி புதிய புதிய பாடல்களை உருவாக்கினேன். அதை எல்லாம் தொகுத்து ஆல்பம் போடலாம் என்று யோசித்து திருச்சியில் இருக்கும் தலைக்காவேரி அமைப்பிடம் போய்க் கேட்டபோது, 'உங்களுக்கு இசை தொடர்பாக என்ன தெரியும்?' என்றார்கள். 'ஒன்றும் தெரியாது' என்று சொல்லிவிட்டுத் திரும்பினேன். கையில் இருந்த 2,500 ரூபாய்க்கு ஒரு கீ-போர்டு வாங்கிக்கொண்டு திருநெல்வேலிக்குப் பஸ் பிடித்தேன். சிறிய கீ-போர்டு. ஜாமென்ட்ரி பாக்ஸைவிடக் கொஞ்சம் பெரியது. ஆனால், அந்தச் சிறிய கருவி எழுப்பிய இசை எனக்குள் ஏதோ செய்தது. கல்லூரிப் பாடல்களை எல்லாம் இந்த கீ-போர்டில் வாசித்துப் பார்த்தேன். எனக்கு இசையின் மீது இருக்கும் ஈர்ப்பை எனக்குப் புரியவைத்தது அந்த குட்டி கீ-போர்டுதான்.</p> <p>கல்லூரி முடிந்தது. அம்மாவிடம், 'நான் இசை அமைப்பாளர் ஆகணும். சென்னைக்குப் போறேன்' என்றேன். அம்மா சம்மதிக்கவில்லை. 'மேலே படிக்கிறேன்!' என்று சொல்லிவிட்டு சென்னைக்கு வந்தேன். 'மேலே படிக்க முடியாது' என்று எனக்கு மட்டும்தான் தெரியும். ஏனென்றால், கல்லூரியில் 30 பேப்பர்களில் 22 அரியர்ஸ். அப்புறம் எங்கே படிப்பது? ஆனாலும், என் திறமை மீது நம்பிக்கைவைத்த ஃபாதர் இன்னாசிமுத்து எனக்கு லயோலாவில் ஸீட் வாங்கித் தந்தார். </p> <p>லயோலாவில் மறுபடியும் யு.ஜி-யில் விஸ்காம் சேர்ந்தேன். ஹாஸ்டலில் தங்கி பார்ட் டைம் வேலை தேடினேன். ஸ்டார் ஸ்டுடியோ என்ற ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் என்னை ஓர் அப்ரன்டீஸாகச் சேர்த்துக்கொண்டார்கள். ஸ்பீக்கரைத் துடைப்பது, இசைக் கருவிகளைத் துடைப்பது என எப்படியாவது உள்ளே போய்விடுவேன். மெள்ள மெள்ள எமி சார், என்னை எல்லாவற்றுக்கும் அனுமதித்தார். சவுண்ட் இன்ஜினீயரிங் கற்றுக்கொண்டேன். பகுதி நேரமாக பியானோ வகுப்புகளுக்கும் போனேன். </p> <p>என் சக்திக்கு 20 கிலோதான் தூக்க முடியும் என்றால், 50 கிலோவில் இருந்து ஆரம்பிப்பதுதான் என் வழக்கம். லயோலாவில் டிகிரி முடித்ததும் அதே ஸ்டுடியோவில் மேலும் ஒரு வருடம் வேலை பார்த்தேன். அடுத்த வருடமே 'ஆடியோ ஃபைல்' என்ற பெயரில் நானே சொந்தமாக ஒரு ரெக்கார்டிங் ஸ்டுடியோ ஆரம்பித்தேன். லட்சங்களில் கடன் வாங்கித் தொடங்கிய தால், கடனை அடைக்க இரவும் பகலுமாக உழைக்க வேண்டியிருந்தது. ஆனால், இசை மீது இருந்த ஆர்வத்தால் தொழிலை நேசித்துச் செய்தேன். ஏராளமானோர் நண்பர் ஆனார்கள். </p> <p>எனக்குக் கிடைத்த முதல் வாய்ப்பு, ஒரு டி.வி. சீரியல். 'சின்னப் பாப்பா, பெரிய பாப்பா' என்ற சீரியலின் டைட்டில் ஸாங் நான் கம்போஸ் செய்ததுதான். பிறகு, நிறைய விளம்பரப் படங்களுக்கு இசை அமைத்தேன். இடையில் சினிமா வாய்ப்பு களையும் தேடினேன். </p> <p>ஒரு நாள் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் சார், இயக்குநர் சசி சாரை அறிமுகப்படுத்தினார். அவருக்கு 'டிஷ்யூம்' பண்ணினேன். அதற்கு முன்பே எஸ்.ஏ.சந்திரசேகரன் சாரிடமும் வாய்ப்பு கேட்டிருந்தேன் என்பதால், அவர் 'சுக்ரன்' வாய்ப்பு கொடுத்தார். முதலில் சுக்ரனும், இரண்டாவதாக டிஷ்யூமும் ரிலீஸ் ஆகின.</p> </td></tr></tbody></table></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td align="left" height="500" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="100%"><tbody><tr><td align="left" class="block_color_bodytext" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="block_color_bodytext" width="96%"><tbody><tr><td align="left" class="block_color_bodytext" colspan="3" valign="top"> <p>இப்பவும் என் அம்மாவுக்குக் காலையில் ஸ்கூட்டரில் கிளம்பி ஆபீசுக்குப் போய், மாலையில் வீடு திரும்பி, இரவு டி.வி. பார்த்து 10 மணிக்குத் தூங்கும் மகன்தான் வேண்டும். </p> <p>வெற்றி, தோல்வி, பணம், புகழ் எல்லா வற்றையும்விட, அம்மாக்களுக்கு முக்கியம் மகனின் உடல்நலம். அம்மாக்களின் அன்பு மட்டுமே பெரியது. என் திருமணம் நடந் தது. காதல் மனைவி ஃபாத்திமா ஹனி டியூ வந்த பிறகு, வாழ்க்கை இன்னும் வண்ண மயமாகி இருக்கிறது. என்னைவிட, எனக் காக அதிகம் உழைக்கும் என் மனைவி எனக்கு இன்னொரு அம்மா.</p> <p>'நான் விஜய் ஆண்டனி ஆனது எப்படி?' என்று கேட்டதால், 'இப்படித்தான் ஆனேன்' என்று சொல்லவே இவற்றை எல்லாம் ரீ-வைண்ட் செய்தேன். மற்றபடி எதையும் சாதித்துவிட்டதான பெருமிதம் ஒரு சத விகிதம்கூட என்னிடம் இல்லை. ஒரு 'நாக்க முக்க'வும், ஒரு 'ஆத்திசூடி'யும், ஒரு 'அழகாய் பூக்குதே'வும் போட்டுவிட்டு, நான் ஏதோ பெரிய ஆள் என நினைக்கவில்லை. உள்ளத்துக்கும் உலகத்துக்கும் உண்மையாக வாழ்ந்தால் அதுதான் வெற்றி!''</p> </td> </tr> <tr> <td align="left" colspan="3" valign="top"> </td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td align="left" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td><table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td></td></tr></tbody></table></td></tr></tbody></table></td></tr></tbody></table></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td align="right" valign="middle" width="5"></td> </tr> </tbody></table> <!-- google_ad_section_end --><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_bluecolor_english_text" width="100%"> <tbody><tr> <td width="300"><div align="right"> </div></td> <td height="25" width="104"> </td> <td align="center" width="105"><a class="big_bluecolor_english_text style1" href="#" onclick="Javascript:history.back()"></a> </td> <td align="right" width="59"><a class="big_bluecolor_english_text" href="#"></a></td> <td width="15"> </td> </tr> </tbody></table></div>