அவள் அந்த அறைக்கதவைத் திறந்து பாட்டரி லைட்டை நேராகப் பிடித்துக்கொண்டு, சுவிட்சை அழுத்தப் போனாள். அப்போது...
அவளுக்கருகில் அவளுக்குத் தெரியாமல் கதவோரத்தில் நின்றுகொண்டிருந்த ஒருவன், பளிச்சென்று அவள் கையிலிருந்த பாட்டரி லைட்டைப் பறித்துக் கொண்டு, அவளை பிடித்து உள்ளே தள்ளினான். அடுத்த விநாடி கதவைச் சாத்திவிட்டு வெளியே ஓடிவிட்டான்!
கீழே தரையில் விழுந்த மணி மொழிக்குக் கண்களை இருட்டிக் கொண்டு வந்தது. இருந்தாலும் சமாளித்துக்கொண்டு எழுந்து வெளியே ஓடி வந்தாள்.
வெளியே நல்ல வெளிச்சம் இருந்தது. வெளி விளக்குகளெல் லாம் நன்றாக எரிந்துகொண்டு இருந்தன. வீட்டிலுள்ள விளக்குகள் மட்டும் எரியாததற்குக் காரணம் என்ன? மணிமொழிக்கு விளங்கிவிட்டது!
மணிமொழி, தெருவில் இறங்கி விரைந்து நடந்தாள். தெரு மூலைக்கு வந்ததும், அங்கே நின்றுகொண்டிருந்த ஒரு வாடகைக் காரில் ஏறிக் கொண்டாள். கார் பறந்தது!
மணிமொழி, தன்னந்தனியா கப் போகிறாயே! பாதுகாப்பிற்கு கையில் ஒரு துப்பாக்கிகூட இல்லாமல் போகிறாயே, அம்மா! நீ போகுமிடம் துணையோடோ, அல்லது துப்பாக்கியோடோ போகவேண்டிய இடமாயிற்றே!
13. அந்தப் பையில் என்ன இருக்கிறது?
மணிமொழி சென்றுகொண்டு இருந்த வாடகைக் கார், சாந் தோம் கடற்கரை ஓரமாக ஓரிடத் தில் நின்றது.
''அதோ பார், அந்த நான்காவது வீடுதான்! அங்கே கொண்டு காரை நிறுத்து!'' என்றாள் மணி மொழி.
''எந்த வீடம்மா?''
''அதோ ஒரு கார் நிற்கிறதே, அந்த வீடுதான்! அந்தக் காரைத்தானே நாம் பின்பற்றி வந்து கொண்டிருக்கிறோம்! நாம் புறப் பட்ட நுங்கம்பாக்கத்திலிருந்து தான் அந்தக் காரும் புறப்பட்டது. அதை எப்படியும் பிடித்து விட வேண்டும் என்று நினைத்தேன். பிடித்துவிட்டேன்! போ, அந்தக் காருக்குப் பின்னால் போய் நம் காரை நிறுத்து!'' என்றாள் மணிமொழி.
கார் புறப்பட்டது. காரோட்டி அந்தக் காருக்குப் பின்னால் போய்க் காரை நிறுத்தினான்.
கார் நின்றதும், மணிமொழி கீழே இறங்கி, ''கொஞ்சம் இரு, இதோ வந்துவிடுகிறேன்'' என்று சொல்லிவிட்டுத் தலையில் கிடந்த சேலையைச் சரிப்படுத்திக் கொண்டு, அந்த வீட்டு வாயிற்படி களில் ஏறிக் கதவைத் தட்டி னாள்.
கதவு திறந்தது. திறந்தவள் ஒரு கிழவி. இருட்டில், தனக்கு எதிரே நிற்பது ஒரு பெண் என்பது மட் டுமே அந்தக் கிழவிக்குத் தெரிந் தது.
''ஐயா இருக்கிறார்களா?'' என்று கிழவியைப் பார்த்துக் கேட்டாள் மணிமொழி.
''மேலே மாடியில் இருக்கிறார்!''
''உங்களைப் பார்க்க உங்களுடன் படித்த தோழி ஒருத்தி வந்திருக்கிறாள் என்று போய் ஐயாவிடம் சொல்லுங்கள். வாட கைக் கார் காத்திருக்கிறது. நான் ஐயாவைப் பார்த்துவிட்டு உடனே போக வேண்டும்.''
''என்னடி பெண்ணே, நீ என்னைப் போய் மாடியில் ஏறச் சொல்லுகிறாயே? இந்த வயதிலே என்னாலே மாடி ஏற முடியுமா? மேலே ஐயா மட்டும்தான் இருக் கிறார். நீயே போய்ப் பார்!''
''வழி..?''
''அதோ, அடுத்த கட்டில் இருக்கிறது.''
''சரி'' என்று சொல்லிவிட்டு மணிமொழி உள்ளே போனாள். மணிமொழி உள்ளே போனதும், கிழவி கதவைச் சாத்தித் தாழிட் டாள்.
மணிமொழி மாடிப் படிகளில் ஏறி மேலே வந்து பார்த்தபோது, அவன், இருட்டில் திறந்த வெளி யில் கடலைப் பார்த்து நின்று கொண்டிருந்தான்.
மணிமொழியும் கொஞ்ச நேரத்திற்கு இருளிலேயே நின்று கொண்டு கடலையே பார்த்துக் கொண்டிருக்கும் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். நிலவு நேரமாதலால் வெளிச்சம் இருந்தது.
மௌனமாக நின்றுகொண்டு இருந்த மணிமொழி, ஒரு முடி வுக்கு வந்து, சுவரிலிருந்த சுவிட்சைப் போட்டாள். எங்கும் வெளிச்சம்!
விளக்கைப் போட்டதும் பளிச்சென்று அவன் தன் பையி லிருந்த துப்பாக்கியை எடுத்து நீட்டிப் பிடித்துக்கொண்டு திரும்பிப் பார்த்தான்.
மணிமொழி சோகத்தோடு நின்றுகொண்டிருந்தாள், பதுமை மாதிரி.
''மணிமொழி, நீயா?'' என்று கேட்டுக்கொண்டே துப்பாக்கியைப் பைக்குள் போட்டுக் கொண்டு, மணிமொழிக்கு அருகில் வந்தான் அவன்.
''ஆமாம், தங்கதுரை! உங்கள் சகோதரி மணிமொழிதான் வந்திருக்கிறேன்!''
''மணிமொழி, உனக்கு நான் என்ன செய்யவேண்டும்? சொல்லு, எதுவானாலும் செய்கிறேன்'' என்றான் தங்கதுரை.
''அப்படியானால், என் மாமனாரின் பெட்டகத்திலிருந்து நீங்கள் எடுத்துக்கொண்டு வந்தீர்களே தோல் பை, அதைத் தாருங் கள்'' என்றாள் மணிமொழி.
''மணிமொழி!'' என்று கத்தினான் தங்கதுரை.
''நான் பையை எடுத்துக் கொண்டு வந்தது உனக்கு எப்படித் தெரியும்?''
''தங்கதுரை, நீங்கள் நினைப்பது போல அவ்வளவு அசடு அல்ல நான்!''
''உனக்கு எப்படித் தெரியும் நான்தான் பையை எடுத்துக் கொண்டு வந்தேன் என்று? சொல் மணிமொழி?''
''வீட்டில் நானும் மாமனாரும் மட்டுமே இருக்கும் வேளை பார்த்து நீங்கள் வந்து, கரண்ட் டைக் கட் செய்துவிட்டு, மாமா வின் பெட்டகத்தை உடைத்துப் பையை எடுத்துக்கொண்டு என்னை தள்ளிவிட்டு ஓடினீர் கள்! இருட்டாக இருந்ததால் அதுவரை நீங்கள் யார் என்பது எனக்குத் தெரியாது. வெளியே ஓடி வந்து பார்த்தேன். அப்போது தெரு ஓரத்தில் மரத்தடியில் இருளில் நின்றுகொண்டிருந்த காரில் நீங்கள் ஏறினீர்கள். கார் கதவை நீங்கள் திறந்த போது, காருக்குள் விளக்கு எரிந்தது. அந்த வெளிச்சத்தில் உங்களையும் உங்கள் கையிலிருந்த பையையும் நான் நன்றாகப் பார்த்துவிட்டேன்.'' என்றாள் மணிமொழி.
''மணிமொழி, நீ கெட்டிக்காரி!'' என்றான் தங்கதுரை.
''இல்லை தங்கதுரை, நான் கெட்டிக்காரியாக இருந்திருந்தால் என் அப்பாவைத் தவிக்க விட்டுச் சென்னைக்குத் தனியாக வந்திருக்க மாட்டேன்!''
''தவறு மணிமொழி, தவறு! பம்பாயில் உன் அப்பாவோடு இருந்திருந்தால் நீ கைது செய்யப் பட்டிருப்பாய். இங்கு வந்ததால் தான் தப்பித்திருக்கிறாய்'' என்று சொல்லிவிட்டுத் திரும்பி நடந்து சென்று, முன்பு நின்ற இடத்தி லேயே போய் நின்றுகொண்டு மௌனமாக கடலைப் பார்த்துக் கொண்டிருந்தான் தங்கதுரை.
மணிமொழியும் மெல்ல நடந்து அவனுக்கருகில் போய் நின்று, ''கொடுங்கள் பையை! வாடகைக் கார் காத்துக்கொண்டு இருக்கிறது. நான் போக வேண் டும்'' என்றாள்.
''அந்தப் பையைத் தர முடியாது, மணிமொழி!''
''அந்தப் பை இல்லாமல் நான் இந்த வீட்டை விட்டுப் போக மாட்டேன்!'' என்றாள் மணி மொழி.
''அந்தப் பையில் என்ன இருக்கிறது என்பது உனக்குத் தெரியுமா? அத்தனையும் வைர நகைகள்! லட்சத்திற்கு மேல் பெறுமானமுள்ள இந்த நகை களைக் கொண்டு வருவதற்காக நான் எத்தனை நாள் திட்டமிட்டேன், தெரியுமா? ஆமாம், இந்தப் பையை வாங்கிக்கொண்டு செல்வதில் உனக்கு ஏன் இவ்வ ளவு அக்கறை?''
''சில நாட்களாக நான் அவர் களுடைய சோற்றைத்தானே தின்று வருகிறேன்?''
''நன்றியுணர்ச்சியா?''
''பெண்களுக்கு வேண்டியது கற்புக்கு அடுத்தபடியாக அது தானே?''
''ஒப்புக்கொள்கிறேன். நன்றி யோடு நடந்துகொள்ள வேண்டு மென்ற ஒரே காரணத்திற்காகத் தான் இந்தப் பையை நீ கேட் கிறாயா?''
''கொஞ்சம் சுயநலமும் உண்டு!''
''உனக்கா மணிமொழி? உனக்கா சுயநலம்?''
''ஆமாம் தங்கதுரை! எனக்கும் சுயநலம் உண்டு. சுயநலமற்ற வர்கள் இங்கே யார் இருக்கிறார் கள்?''
''சரி, உன் சுயநலமென்ன இதிலே?''
''சொல்லத்தான் வேண்டுமா தங்கதுரை?''
''சொல்லவேண்டிய நிலைக்கு நீ வந்துவிட்டாய் மணிமொழி!''
''உண்மைதான் தங்கதுரை, நீங்கள் சொல்வது உண்மைதான். என் சுயநலத்தை நான் உங்களி டம் சொல்லவேண்டிய நிலைக்கு வந்துவிட்டது உண்மைதான்! கேட்டுக்கொள்ளுங்கள் என் சுயநலத்தை. நகைப் பையைக் காணோம் என்றதும் என்னைத் தான் எல்லாரும் சந்தேகப்படு வார்கள். அப்புறம், அவர்கள் பார்வையில் நான் திருடியாகி விடுவேன்! திருடி என்ற பெய ரோடு என்னால் வாழ முடியாது தங்கதுரை!'' என்று சொல்லி விட்டு மணிமொழி அழுதாள்.
தங்கதுரை நிமிர்ந்து வானத் தைப் பார்த்தான். மழை வரும் போலிருந்தது.
|