இப்படிப் பல 'ஆக்ஸி டெண்ட்'டுகளிலிருந்து தப்பி படவுலகிலும் 'ஆக்ஸிடெண்ட்'டலாக நுழைந்தவர்தான், இன்றைய இளம் தலைமுறையைச் சேர்ந்த நடிகர் கமலஹாசன்.
''எங்கள் குடும்ப நண்ப ரான டாக்டர் சாரா, ஏவி.மெய்யப்ப செட்டி யார் வீட்டில் நடந்த ஒரு விருந்துக்கு என்னையும் அழைத்துக் கொண்டு போனார். செட்டியார் தம்பதிக்கு என்னை மிகவும் பிடித்துப் போய்விட்டது. அப்போது செட்டியார் 'களத்தூர் கண்ணம்மா' என்ற படத்தை எடுத்துக் கொண்டிருந்தார். அதிலே தான் என்னை ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார். 'எனக்கும் சினிமாவிலே நடிக்க சான்ஸ் வரும், நானும் நடிப்பேன்' என்று முன்னே பின்னேகூட நான் நினைத்ததில்லை. பை ஃப்ளூக், அந்த சான்ஸ் எனக்குக் கிடைச்சுது...'' என்று இரு கைகளையும் மேலே தூக்கிக் காண்பிக் கிறார் கமலஹாசன்.
அன்று, 'களத்தூர் கண்ணம்மா', 'பாத காணிக்கை', 'பார்த்தால் பசி தீரும்' படங் களில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்த மாஸ்டர் கமலஹாசன், இன்று 'அரங்கேற்றம்', 'சொல்லத்தான் நினைக்கிறேன்' படங்களில் இளம் தலைமுறை நட்சத்திரமாக உயர்ந்திருக்கிறார்.
''சின்னக் குழந்தையாகவும் இல்லாம, பெரிய ஆளாகவும் இல்லாம சில காலம் நடுவிலே அகப்பட்டுத் திண்டாடினேன். முகத் திலேயும் அப்போதுதான் பூனை மீசையிருந்தது. சினிமாவிலே சான்ஸ் இல்லாதபோது டிராமா லைன்லே கொஞ்ச நாள் இருந்தேன். டி.கே.எஸ். குழுவிலே சேர்ந்து, 'அப்பா வின் ஆசை' டிராமாவிலே நடிச்சுக்கிட்டிருந்தேன். அப்படியும் சும்மா இருக்க இஷ்டமில்லாம திரு. நடராஜனிடம் டான்ஸ் கத்துக் கிட்டேன்.
|