2015 செப்டம்பர் முதல் விகடன் பிரசுரத்தில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். பார்க்கர்-தமிழியல் ஆய்வு நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பாசிரியராக 9 ஆண்டுகளுக்கு மேல் நூல் உருவாக்கப்பணியில் ஈடுபட்டு 700 நூல்களுக்கு மேல் வடிவமைத்திருக்கிறார். இதே பொறுப்பில் ‘செம்மொழி உயராய்வு மையம்’ அரசுப் பணியில் பணியாற்றிய அனுபவம் உண்டு. கவிதை, கட்டுரை, சிறுகதை, நூல் என இலக்கியத்தில் ஆர்வம் மிக்கவர். பி.லிட்., மற்றும் எம்.ஏ., தமிழ் இலக்கியம் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சிப்பெற்றவர்.