பி.எஸ்ஸி, பி.எட்., ஓய்வுபெற்ற வனத்துறை உதவி வனப்பாதுகாவலர். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே சதுரகிரி மலையடிவாரத்தில் உள்ள சந்தையூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். காரைக்குடி, அழகப்பா பள்ளியில் கணித ஆசிரியராகப் பணிபுரிந்த ராஜசேகரன், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் கலந்துகொண்டு, வெற்றி பெற்று... கோயம்புத்தூர் வனச்சரகக் கல்லூரியில் வனச்சரகர் பயிற்சி பெற்றார். தொடர்ந்து தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் பணியாற்றி இருக்கிறார்.
வன மேலாண்மையில் தன்னுடைய சிறப்பான பணிகளுக்காக, 2010-11-ம் ஆண்டின் முதலமைச்சர் விருது இவருக்கு வழங்கப்பட்டது. தற்போது தமிழ்நாடு அரசு வனப்பணியாளர் பயிற்சிக் கல்லூரியில், வன அலுவலர்களுக்கு நில மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பற்றிப் பயிற்சியளித்து வருகிறார். திண்டுக்கல் நகரில் மரம் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள ‘திண்டி மா வனம்’ அமைப்பின் ஆலோசகராகவும் இருக்கிறார்.