கோவை மாநகராட்சி ஆணையாளர். 2011-ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டார். ஈரோட்டில் பயிற்சி பெற்று பின் கோவில்பட்டியில் சார் ஆட்சியராக பணியைத் தொடங்கினார். அங்கு கோவில்பட்டி ஸ்டடி லீக் என்ற இயக்கத்தைத் தொடங்கி, கிராமப்புற இளைஞர்களுக்கு போட்டி தேர்வுகள் எழுதுவதற்குப் பயிற்சி அளித்தவர். தனது 28-வது வயதில் கோவை மாநகராட்சி ஆணையாளராக 2014-ம் ஆண்டில் பதவியேற்றார். ஸ்மார்ட் சிட்டிக்கான தேர்வில் முதல் சுற்றிலேயே தமிழகத்தின் முதல் நகரமாக கோயம்புத்தூர் தேர்வாகக் காரணமாக இருந்தவர். இவருடைய முதல் புத்தகமான ‘எட்டும் தூரத்தில் ஐ.ஏ.எஸ்’ விகடன் பதிப்பகத்தில் வெளியானது. தொடர்ந்து, ‘அதுவும் இதுவும்’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை அண்மையில் வெளியிட்டார். இளைஞர்களுக்குத் தொடர்ந்து குடிமைப் பணி தேர்வுகள் தொடர்பான ஊக்கத்தையும் பயிற்சியையும் வழங்கி வருகிறார்.
கோவை மாநகராட்சி ஆணையாளர். 2011-ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டார். ஈரோட்டில் பயிற்சி பெற்று பின் கோவில்பட்டியில் சார் ஆட்சியராக பணியைத் தொடங்கினார். அங்கு கோவில்பட்டி ஸ்டடி லீக் என்ற இயக்கத்தைத் தொடங்கி, கிராமப்புற இளைஞர்களுக்கு போட்டி தேர்வுகள் எழுதுவதற்குப் பயிற்சி அளித்தவர். தனது 28-வது வயதில் கோவை மாநகராட்சி ஆணையாளராக 2014-ம் ஆண்டில் பதவியேற்றார். ஸ்மார்ட் சிட்டிக்கான தேர்வில் முதல் சுற்றிலேயே தமிழகத்தின் முதல் நகரமாக கோயம்புத்தூர் தேர்வாகக் காரணமாக இருந்தவர். இவருடைய முதல் புத்தகமான ‘எட்டும் தூரத்தில் ஐ.ஏ.எஸ்’ விகடன் பதிப்பகத்தில் வெளியானது. தொடர்ந்து, ‘அதுவும் இதுவும்’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை அண்மையில் வெளியிட்டார். இளைஞர்களுக்குத் தொடர்ந்து குடிமைப் பணி தேர்வுகள் தொடர்பான ஊக்கத்தையும் பயிற்சியையும் வழங்கி வருகிறார்.