முதலுதவி
எப்படி அளிக்க வேண்டும் என்று தெரியாது என்பதால், காப்பாற்ற
முடிகிற உயிர்களைக்கூட அநியாயமாக இழந்துவிடுகிறோம். இந்த
நிலையை மாற்றுவதற்காகத் தொடங்கப்பட்டதுதான் இந்த அமைப்பு.
விபத்து நடந்தவுடன் உயிருக்குப் போராடிக்கொண்டு இருக்கும்
அந்த ஒரு மணி நேரத்தை, அதி முக்கியமான நேரம் என்று சொல்வார்கள்.
அடிபட்ட நபரை அந்த ஒரு மணி நேரத்துக்குள் காப்பாற்றினால்தான்
உண்டு. அந்த முக்கியமான நேரத்தில் எப்படி விரைந்து செயல்பட
வேண்டும். எப்படி முதலுதவி அளிக்க வேண்டும். யாரை முதலில்
அழைக்க வேண்டும் என்பது போன்ற தகவல்களை அனைவருக்கும்
கொண்டுசேர்க்க வேண்டும் என்கிற நோக்கில் ஆரம்பிக்கப்பட்டதுதான்
இந்த முதலுதவி சிகிச்சைப் பயிற்சி மையம்’’ என்கிறார் கலா.
‘‘பள்ளி, கல்லூரி, அலுவலகம், வீடு, தொழிற்சாலை என ஒவ்வொரு
இடத்திலும் முதலுதவி சிகிச்சை முறைகள் குறித்து ஒரு நாள் வகுப்பு
நடத்துகிறோம். அந்த முகாமில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றவர்களுக்கு
ஒரு சான்றிதழ் வழங்கப்படும். ‘விபத்தில் அடிபட்டவர் முதலுதவி
சிகிச்சை கிடைக்காததால் இறந்து போனார்... ஒரு மணி நேரத்துக்கு
முன்பு மருத்துவமனைக்குக் கொண்டுவந்திருந்தால் உயிர் பிழைத்திருப்பார்’
என்று சொல்லும் நிலை இனி ஏற்படக் கூடாது என்பதே எங்களுடைய
அலெர்ட் அமைப்பின் நோக்கம்’’ என்கிறார் கலா.
‘‘அலெர்ட் அமைப்பின் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு, முதலுதவி
சிகிச்சை முறைகள் குறித்து முறையான, தெளிவான பயிற்சி அளிக்கப்படுகிறது.
இவர்கள் தமிழகத்தின் எல்லா பகுதிகளுக்கும் சென்று பிறருக்குப்
பயிற்சி அளிப்பார்கள். இதற்காக எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கப்பட
மாட்டாது. இந்தச் சேவையில், இந்திய மருத்துவக் கழகமும் (INDIAN
MEDICAL ASSOCIATION) எங்களுடன் இணைந்துள்ளது’’
என்கிறார் டாக்டர் ராஜ்குமார்.
‘‘பயிற்சி அளிப்பதோடு மட்டுமல்லாமல், பயிற்சி பெற்றவர்களுக்கு
முதலுதவி சிகிச்சைப் பெட்டியும் அளிக்கப்படும். இந்தப் பெட்டியில்
முதலுதவி சிகிச்சை அளிப்பதற்குத் தேவையான அனைத்துப் பொருட்களும்
இருக்கும். உதாரணமாக, விபத்து ஏற்பட்டவுடன் உதவி செய்ய
வருபவர்கள், எந்த இடத்தில் எந்தவிதமான அடிபட்டிருக்கிறது என்று
தெரியாமலேயே அடிபட்டவரை அந்த இடத்தில் இருந்து தூக்க முயற்சி
செய்வார்கள். இது மிகவும் |