கெட்டிமேளம் கொட்டப்போகும் நந்தினியின் காதல்!
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருபவர் நந்தினி. மதுரையைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவியான நந்தினி, தன் தந்தையுடன் இணைந்து மதுவிலக்குக்காக உண்ணா விரதப் போராட்டம் நடத்தியவர். மதுவிலக்குக்காக மட்டுமல்ல, மக்களுக்கு எதிராக மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்படும்போதெல்லாம், அதை எதிர்த்துப் போராட்ட அறிவிப்பை முதலில் வெளியிடுவது நந்தினிதான்! ஒவ்வொரு முறையும் கைது, சிறை என்று அடக்குமுறையைச் சந்தித்தாலும், அதைப் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல், அடுத்த போராட்டத்துக்குத் தயாராகிவிடுவார் நந்தினி. இதுவரை கிட்டத்தட்ட 50 முறை சிறை சென்றிருக்கிறார்.