<p>இஸ்லாமியர்கள் பலர் ஷரியா முறைக்கு உட்பட்டு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய விரும்பு கிறார்கள். அவ்வாறு ஷரியா முறைக்கு உட்பட்டு முதலீட்டை மேற்கொள்ளும் ஃபண்டுகள் சந்தையில் வெகுசிலவே உள்ளன. அவற்றுள் நன்றாகச் செயல்பட்டுவரும் டாடா எத்திக்கல் ஃபண்டைப் பற்றி இந்த வாரம் காண்போம்.</p>.<p>டாடா மியூச்சுவல் ஃபண்ட் நம் அனைவருக்கும் தெரிந்த டாடா குழுமத்தைச் சார்ந்த நிறுவனமாகும். டாடா சன்ஸ் இந்த நிறுவனத்தின் புரோமோட்டர் ஆவர். டாடா சன்ஸ்-ன் 66% பங்குகளைத் தர்மம் செய்யும் டிரஸ்ட்டுகள் வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம் ரூ.23,000 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை நிர்வகித்து வருகிறது.</p>.<p>ஷரியா முறை முதலீட்டில் புகையிலை, மதுபானம், சூதாட்டம், லாட்டரி மற்றும் வட்டி சம்பந்தப்பட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங் களின் பங்குகள் இருக்கக்கூடாது. ஆகவே, இந்த ஃபண்டும் அதுபோன்ற நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதில்லை. நிஃப்டி குறியீட்டில் நிதி சார்ந்த பங்குகளின் வெயிட்டேஜ் ஏறக்குறைய 30% உள்ளது.</p>.<p>ஆனால், இந்த ஃபண்டில் ஒரு நிதி சார்ந்த நிறுவனம்கூட இடம்பெற வில்லை. இந்தியாவில் வங்கி மற்றும் நிதி சார்ந்த துறைகள் பங்குச் சந்தையில் பெரும்பங்கு வகிக்கின்றன என்பதால், அந்தத் துறை சார்ந்த முதலீடுகளே இல்லாமல் இருப்பது இந்த ஃபண்டுக்கு ஒரு சவால்தான்.</p>.<p>நிதி தவிர, ஷரியா முறையில் உள்ள பிற முதலீடுகளைத் தவிர்ப்பது இந்த ஃபண்டுக்கு அவ்வளவு சவாலாக இருக்காது. ஏனென்றால், பங்குச் சந்தை குறியீடுகளில் அவற்றின் தாக்கம் குறைவே. ஷரியா முறை முதலீட்டினால், இந்த ஃபண்டை நாம் பிற டைவர்ஸிஃபைடு ஃபண்ட் முதலீடு களுடன் ஒப்பிட முடியாது.</p>.<p>இந்தத் திட்டம் மே 24, 1996-ல் ஆரம்பிக்கப்பட்டது. 2011-ம் ஆண்டு டாடா எத்திக்கல் ஃபண்ட் என்று பெயர் மாற்றப்பட்டு, அன்று முதல் ஷரியா முதலீட்டு விதிகளைக் கடைப்பிடித்து வருகிறது.</p>.<p>அதற்குமுன் இந்த ஃபண்ட் டாடா செலக்ட் ஈக்விட்டி என்று அழைக்கப்பட்டது. இதன் ஃபண்ட் மேனேஜர் பிரதீப் கோகலே. தற்போது ரூ.161 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகித்து வருகிறது.</p>.<p>டெக்னாலஜி, எஃப்எம்சிஜி, எனர்ஜி, ஹெல்த்கேர், இன்ஜினீயரிங் போன்ற துறைகள் இதன் டாப் ஹோல்டிங்ஸாக உள்ளன. டிசிஎஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஓஎன்ஜிசி, லூபின், டிவிஸ் லேபாரட்டரீஸ் போன்ற நிறுவனங்கள் இதன் டாப் 5 பங்குகளாக உள்ளன. இந்த ஃபண்டினுடைய பெஞ்ச்மார்க் சிஎன்எக்ஸ் 500 ஷரியா குறியீடு ஆகும். கடந்த 1 மற்றும் 3 வருடங்களில் இந்தக் குறியீட்டைவிட நன்கு செயல்பட் டுள்ளது. <br /> ஷரியா முறையில் முதலீடு செய்வதில், முதலீட்டாளர்களுக்கு இந்த ஃபண்ட் தவிர, வேறு இரண்டு ஆப்ஷன்கள் உள்ளன. ஒன்று, டாரஸ் எத்திக்கல் ஃபண்ட்; மற்றொன்று, கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் நடத்தும் ஷரியா பீஸ் என்ற இடிஎஃப் ஆகும். அவை இரண்டும் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு மிகவும் குறைவு ஆகும்.</p>.<p>கடந்த 10 வருட வரலாற்றில் நிஃப்டி 50 குறியீட்டைவிட எட்டு முறை அதிக வருமானம் தந்துள்ளது. இந்த ஃபண்டின் ஏற்ற இறக்கம் குறைவாக உள்ளது என்பது இதன் பீட்டாவில் (0.76) இருந்து தெரிய வருகிறது. இதற்கு ஒரு முக்கியக் காரணம், வங்கிப் பங்குகள் போர்ட்ஃபோலியோவில் இடம் பெறாததுதான்.</p>.<p>அதேசமயத்தில், இந்த ஃபண்டின் ஆல்ஃபா 7.13 ஆகும். இதற்கு ஒரு முக்கியக் காரணம், நல்ல ஃபண்ட் மேலாண்மையுடன், இதன் போர்ட்ஃபோலியோவில் மிட் அண்ட் ஸ்மால் கேப் பங்குகள் சுமாராக 44% இருப்பதுதான். லார்ஜ் கேப் பங்குகள் ஏறக்குறைய 55% உள்ளது.<br /> இந்த ஃபண்ட் ஆரம்பித்தபோது (மே 24, 1996) ஒருவர் செய்த முதலீடான ரூ.1 லட்சம், இன்றைய தேதியில் (ஆகஸ்ட் 31, 2014) ரூ.18,38,900-ஆக உள்ளது.</p>.<p>அதேபோல் கடந்த 18 வருடங்களில் ஒருவர் எஸ்ஐபி மூலம் மாதம் ரூ.1,000 செய்த முதலீடானது, தற்போது ரூ.18,58,209-ஆக உள்ளது.<br /> </p>.<p>ஷரியா முறைப்படி, இந்தியச் சந்தையில் மியூச்சுவல் ஃபண்டுகள் மூலமாக முதலீடு செய்ய விரும்புபவர் களுக்கு, டாடா எத்திக்கல் ஃபண்ட் ஒரு சிறந்த முதலீட்டு வாய்ப்பாகும்.</p>.<p>அதேபோல் வங்கிகள் மற்றும் நிதி சார்ந்த பங்குகள் போர்ட்ஃபோலியோ வில் இருக்க வேண்டாம் என நினைப்பவர்களுக்கும், இது ஒரு நல்ல முதலீட்டு வாய்ப்பாகும். முதலீட்டாளர்கள் எஸ்ஐபி மூலமாகவும், மேலும் சரிவுகளைப் பயன்படுத்தி மொத்தமாகவும் முதலீடு செய்யலாம்.<br /> </p>.<p><span style="color: #993300">யாருக்கு உகந்தது? </span></p>.<p>ஷரியா முறைப்படி முதலீடு செய்ய நினைப்பவர்கள், குறைந்த கடன் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்ய விரும்புபவர்கள், பணம் உடனடியாகத் தேவை இல்லாதவர்கள், போர்ட்ஃபோலியோவில் வங்கி மற்றும் நிதி சார்ந்த நிறுவனங்கள் இருக்க வேண்டாம் என நினைப்பவர்கள், சமூக அக்கறை கொண்ட முதலீட்டை நாடுபவர்கள் போன்ற முதலீட்டாளர்களுக்கு இந்த ஃபண்ட் உகந்ததாக இருக்கும்.</p>.<p><span style="color: #993300">யாருக்கு உகந்ததல்ல?</span></p>.<p>குறுகிய காலத்தில் பணம் தேவைப்படு பவர்கள், உறுதியான/ நிலையான வருமானத்தை விரும்புபவர்கள், அதிக ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்கள், ஷரியா முறை முதலீடு தேவைப்படாதவர்கள் போன்றவர்களுக்கு இந்த ஃபண்ட் உகந்தது அல்ல.</p>
<p>இஸ்லாமியர்கள் பலர் ஷரியா முறைக்கு உட்பட்டு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய விரும்பு கிறார்கள். அவ்வாறு ஷரியா முறைக்கு உட்பட்டு முதலீட்டை மேற்கொள்ளும் ஃபண்டுகள் சந்தையில் வெகுசிலவே உள்ளன. அவற்றுள் நன்றாகச் செயல்பட்டுவரும் டாடா எத்திக்கல் ஃபண்டைப் பற்றி இந்த வாரம் காண்போம்.</p>.<p>டாடா மியூச்சுவல் ஃபண்ட் நம் அனைவருக்கும் தெரிந்த டாடா குழுமத்தைச் சார்ந்த நிறுவனமாகும். டாடா சன்ஸ் இந்த நிறுவனத்தின் புரோமோட்டர் ஆவர். டாடா சன்ஸ்-ன் 66% பங்குகளைத் தர்மம் செய்யும் டிரஸ்ட்டுகள் வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம் ரூ.23,000 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை நிர்வகித்து வருகிறது.</p>.<p>ஷரியா முறை முதலீட்டில் புகையிலை, மதுபானம், சூதாட்டம், லாட்டரி மற்றும் வட்டி சம்பந்தப்பட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங் களின் பங்குகள் இருக்கக்கூடாது. ஆகவே, இந்த ஃபண்டும் அதுபோன்ற நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதில்லை. நிஃப்டி குறியீட்டில் நிதி சார்ந்த பங்குகளின் வெயிட்டேஜ் ஏறக்குறைய 30% உள்ளது.</p>.<p>ஆனால், இந்த ஃபண்டில் ஒரு நிதி சார்ந்த நிறுவனம்கூட இடம்பெற வில்லை. இந்தியாவில் வங்கி மற்றும் நிதி சார்ந்த துறைகள் பங்குச் சந்தையில் பெரும்பங்கு வகிக்கின்றன என்பதால், அந்தத் துறை சார்ந்த முதலீடுகளே இல்லாமல் இருப்பது இந்த ஃபண்டுக்கு ஒரு சவால்தான்.</p>.<p>நிதி தவிர, ஷரியா முறையில் உள்ள பிற முதலீடுகளைத் தவிர்ப்பது இந்த ஃபண்டுக்கு அவ்வளவு சவாலாக இருக்காது. ஏனென்றால், பங்குச் சந்தை குறியீடுகளில் அவற்றின் தாக்கம் குறைவே. ஷரியா முறை முதலீட்டினால், இந்த ஃபண்டை நாம் பிற டைவர்ஸிஃபைடு ஃபண்ட் முதலீடு களுடன் ஒப்பிட முடியாது.</p>.<p>இந்தத் திட்டம் மே 24, 1996-ல் ஆரம்பிக்கப்பட்டது. 2011-ம் ஆண்டு டாடா எத்திக்கல் ஃபண்ட் என்று பெயர் மாற்றப்பட்டு, அன்று முதல் ஷரியா முதலீட்டு விதிகளைக் கடைப்பிடித்து வருகிறது.</p>.<p>அதற்குமுன் இந்த ஃபண்ட் டாடா செலக்ட் ஈக்விட்டி என்று அழைக்கப்பட்டது. இதன் ஃபண்ட் மேனேஜர் பிரதீப் கோகலே. தற்போது ரூ.161 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகித்து வருகிறது.</p>.<p>டெக்னாலஜி, எஃப்எம்சிஜி, எனர்ஜி, ஹெல்த்கேர், இன்ஜினீயரிங் போன்ற துறைகள் இதன் டாப் ஹோல்டிங்ஸாக உள்ளன. டிசிஎஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஓஎன்ஜிசி, லூபின், டிவிஸ் லேபாரட்டரீஸ் போன்ற நிறுவனங்கள் இதன் டாப் 5 பங்குகளாக உள்ளன. இந்த ஃபண்டினுடைய பெஞ்ச்மார்க் சிஎன்எக்ஸ் 500 ஷரியா குறியீடு ஆகும். கடந்த 1 மற்றும் 3 வருடங்களில் இந்தக் குறியீட்டைவிட நன்கு செயல்பட் டுள்ளது. <br /> ஷரியா முறையில் முதலீடு செய்வதில், முதலீட்டாளர்களுக்கு இந்த ஃபண்ட் தவிர, வேறு இரண்டு ஆப்ஷன்கள் உள்ளன. ஒன்று, டாரஸ் எத்திக்கல் ஃபண்ட்; மற்றொன்று, கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் நடத்தும் ஷரியா பீஸ் என்ற இடிஎஃப் ஆகும். அவை இரண்டும் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு மிகவும் குறைவு ஆகும்.</p>.<p>கடந்த 10 வருட வரலாற்றில் நிஃப்டி 50 குறியீட்டைவிட எட்டு முறை அதிக வருமானம் தந்துள்ளது. இந்த ஃபண்டின் ஏற்ற இறக்கம் குறைவாக உள்ளது என்பது இதன் பீட்டாவில் (0.76) இருந்து தெரிய வருகிறது. இதற்கு ஒரு முக்கியக் காரணம், வங்கிப் பங்குகள் போர்ட்ஃபோலியோவில் இடம் பெறாததுதான்.</p>.<p>அதேசமயத்தில், இந்த ஃபண்டின் ஆல்ஃபா 7.13 ஆகும். இதற்கு ஒரு முக்கியக் காரணம், நல்ல ஃபண்ட் மேலாண்மையுடன், இதன் போர்ட்ஃபோலியோவில் மிட் அண்ட் ஸ்மால் கேப் பங்குகள் சுமாராக 44% இருப்பதுதான். லார்ஜ் கேப் பங்குகள் ஏறக்குறைய 55% உள்ளது.<br /> இந்த ஃபண்ட் ஆரம்பித்தபோது (மே 24, 1996) ஒருவர் செய்த முதலீடான ரூ.1 லட்சம், இன்றைய தேதியில் (ஆகஸ்ட் 31, 2014) ரூ.18,38,900-ஆக உள்ளது.</p>.<p>அதேபோல் கடந்த 18 வருடங்களில் ஒருவர் எஸ்ஐபி மூலம் மாதம் ரூ.1,000 செய்த முதலீடானது, தற்போது ரூ.18,58,209-ஆக உள்ளது.<br /> </p>.<p>ஷரியா முறைப்படி, இந்தியச் சந்தையில் மியூச்சுவல் ஃபண்டுகள் மூலமாக முதலீடு செய்ய விரும்புபவர் களுக்கு, டாடா எத்திக்கல் ஃபண்ட் ஒரு சிறந்த முதலீட்டு வாய்ப்பாகும்.</p>.<p>அதேபோல் வங்கிகள் மற்றும் நிதி சார்ந்த பங்குகள் போர்ட்ஃபோலியோ வில் இருக்க வேண்டாம் என நினைப்பவர்களுக்கும், இது ஒரு நல்ல முதலீட்டு வாய்ப்பாகும். முதலீட்டாளர்கள் எஸ்ஐபி மூலமாகவும், மேலும் சரிவுகளைப் பயன்படுத்தி மொத்தமாகவும் முதலீடு செய்யலாம்.<br /> </p>.<p><span style="color: #993300">யாருக்கு உகந்தது? </span></p>.<p>ஷரியா முறைப்படி முதலீடு செய்ய நினைப்பவர்கள், குறைந்த கடன் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்ய விரும்புபவர்கள், பணம் உடனடியாகத் தேவை இல்லாதவர்கள், போர்ட்ஃபோலியோவில் வங்கி மற்றும் நிதி சார்ந்த நிறுவனங்கள் இருக்க வேண்டாம் என நினைப்பவர்கள், சமூக அக்கறை கொண்ட முதலீட்டை நாடுபவர்கள் போன்ற முதலீட்டாளர்களுக்கு இந்த ஃபண்ட் உகந்ததாக இருக்கும்.</p>.<p><span style="color: #993300">யாருக்கு உகந்ததல்ல?</span></p>.<p>குறுகிய காலத்தில் பணம் தேவைப்படு பவர்கள், உறுதியான/ நிலையான வருமானத்தை விரும்புபவர்கள், அதிக ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்கள், ஷரியா முறை முதலீடு தேவைப்படாதவர்கள் போன்றவர்களுக்கு இந்த ஃபண்ட் உகந்தது அல்ல.</p>