Published:Updated:

ஆசியாவின் சமூகத் தொண்டு செய்பவர்கள் பட்டியல்... இடம்பிடித்த கௌதம் அதானி, ஷிவ் நாடார், அஷோக் சூடா!

அதானி
News
அதானி

அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, ரூ.60,000 கோடிக்கு சமூக நலப்பணிகளுக்குச் செலவிடுவதாக உறுதி அளித்ததற்காக இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

Published:Updated:

ஆசியாவின் சமூகத் தொண்டு செய்பவர்கள் பட்டியல்... இடம்பிடித்த கௌதம் அதானி, ஷிவ் நாடார், அஷோக் சூடா!

அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, ரூ.60,000 கோடிக்கு சமூக நலப்பணிகளுக்குச் செலவிடுவதாக உறுதி அளித்ததற்காக இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

அதானி
News
அதானி

அமெரிக்க ஊடக நிறுவனமான ஃபோர்ப்ஸ் (Forbes), உலகம் முழுவதுமுள்ள டாப் பில்லியனர்கள், மில்லியனர்கள், வளர்ந்து வரும் பணக்காரர்களின் பட்டியலை அவ்வப்போது ஆய்வு செய்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ஆசியாவின் சமூக தொண்டுக்கான 16-வது பதிப்பு பட்டியலை, டிசம்பர் 6-ம் தேதி செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்டது.

Money
Money

அதில் கௌதம் அதானி, ஷிவ் நாடார், அஷோக் சூடா ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி  ரூ.60,000 கோடிக்கு சமூக நலப்பணிகளுக்குச் செலவிடுவதாக உறுதி அளித்ததற்காக இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். 1996-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட அதானி அறக்கட்டளை இந்தப் பணத்தைச் சுகாதாரம், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுக்கு அளித்து உதவும் என்று தெரிவிக்கப்படுகிறது. 

அடுத்ததாக ஹெச்.சி.எல் டெக்னாலஜியின் ஷிவ் நாடார் தனது அறக்கட்டளை மூலமாக, 1 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக சமூக நலத் திட்டங்களுக்கு அளித்து உதவி வருகிறார். பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங் களுக்கு உதவி வரும் இவர், 1994-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட தன்னுடைய அறக்கட்டளைக்கு சுமார் 11,600 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

ஷிவ் நாடார்
ஷிவ் நாடார்

முதுமை மற்றும் நரம்பியல் தொடர்பான உடல் நலக் கோளாறுகளுக்குத் தீர்வு காணும் வகையில் 2021-ல் தொடங்கப்பட்ட மருத்துவ ஆராய்ச்சி மையத்துக்குத் தொழிலதிபர் அசோக் சூட்டா ரூ.600 கோடி வழங்குவதாகத் தெரிவித்துள்ளார். இந்த ஆராய்ச்சி அறக்கட்டளையை 200 கோடி ரூபாய் செலவில் இவர் தொடங்கினார்.