<p>எடுத்த காரியம் எல்லாவற்றிலும் தோல்வி அடைந்தபின்னரும் ஒருநாள் பெரிய அளவில் வெற்றியை சாதிக்கும் வாய்ப்பு இருக்கிறதா? அப்படிக்கூட நடக்குமா என்ன என்றுதானே நினைக்கிறீர்கள்? நீங்கள் நினைப்பது சரியல்ல. எடுத்த முயற்சி எல்லாவற்றிலும் தோல்வியுற்றபின்னர்கூட வெற்றி பெறமுடியும் என்பதை ஓர் உண்மைக் கதையின் மூலம் சொல்லும் புத்தகத்தைத்தான் இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்துகிறோம்.</p>.<p>'ஹவ் டு ஃபெயில்’ என்கிற இந்தப் புத்தகத்தை எழுதிய ஸ்காட் ஆடம்ஸ் ஒரு கார்ட்டூனிஸ்ட். டில்பர்ட் என்ற அவருடைய கார்ட்டூன் ஸ்ட்ரிப்புகள் (Dilbert.com) உலகளவில் 70 நாடுகளில் 2000 செய்திப்பத்திரிகைகளில் வெளியா கிறது என்பது குறிப்பிடத்தக்கது.</p>.<p>'எனக்குத் தொட்டது எதுவுமே துலங்கவில்லை. ஏன் இப்படி? எப்படி இந்த நிலையை மாற்றுவது? என்பது குறித்து ஆழ்ந்து சிந்தித்துச் செயலாற்ற நான் கண்டுபிடித்த வழிமுறைகளைத்தான் நான் இந்தப் புத்தகத்தில் தந்துள்ளேன்’ என்கிறார் ஆடம்ஸ்.</p>.<p>'இந்த வழிமுறைகள்தான் என்னை வெற்றிப்படியில் ஏறவைத்தது'' என்று சொல்லி ஆரம்பிக்கின்ற ஆடம்ஸ், ''எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால், வாய்ப்பு கையில் கிடைக்கும்போது அதிர்ஷ்டம் நம்மைப் பார்க்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை, எனக்குக் கிடைத்த வாய்ப்பை எப்படி சரியாகக் கையாண்டு அதிர்ஷ்டம் என்னைத் தேடி கண்டுபிடித்து வரச்செய்தேன் என்பதுதான் இந்தப் புத்தகத்தின் சாராம்சம்’ என்று சொல்லும் ஆசிரியர், 'இந்தப் புத்தகத்தில் தரப்பட்டுள்ளவற்றை மற்றத் தொடர் தோல்வியைச் சந்திப்பவர்களின் நடவடிக்கைகளுடன் சரிபார்த்துச் சரியாக இருக்கிறதா என்று நீங்களே சரிபார்த்துக்கொள்ளுங்கள்’ என்கிறார்.</p>.<p>''உங்களுக்கெல்லாம் அட்வைஸ் சொல்லும் அளவுக்கு நான் ஒன்றும் பெரிய ஆளில்லை. சொல்லப்போனால் உலகத்திலேயே நான் மிகச் சின்ன ஆள். நான் ஒரு பெரிய எழுத்தாளனும் இல்லை. நிபுணனும் இல்லை. நான் எப்படி இதுபோன்ற அறிவுரைகளைச் சொல்லும் புத்தகம் எழுதி சம்பாதிக்கிறேன் என்பதே எனக்குப் புரியவில்லை'' என்று ஆரம்பிக்கிறார் ஆடம்ஸ்.</p>.<p>''ஆனால் நான் எதையும் இலகுவாகச் சொல்லும் திறமை கொண்டவன். இலகுவாக ஒரு விஷயத்தைச் சொல்வதால் அதை இலகுவாக நீங்கள் புரிந்துகொண்டு செயல்படுத்தலாம்'' என்கிறார்.</p>.<p>உதாரணத்துக்கு, 'முதலாளித் துவத்தை எடுத்துக்கொள்வோம். முதலாளித்துவத்தை எளிமையாய்ப் புரிந்துகொள்ள என்ன சொல்ல வேண்டும். லாபம்! லாபம்! லாபம்! என்பதைத்தானே! அதற்காகத்தானே இத்தனை போட்டியும், பிரச்னையும், வேற்றுமையும், ஒற்றுமையும் என்கிறார் ஆடம்ஸ். அதற்காக லாபத்தையே குறிக்கோளாகக்கொண்டு அதிவேகத்தில் செயல்பட்டால் சிக்கல்கள் வரத்தானே செய்யும். இதை எப்படிச் சொல்வது? தொழிலில் லாபம் என்பது ஒரு சுத்தியலைப் போன்றது. சுத்தியலை எப்போதுமே ஆணியை அடிக்க அளவாக உபயோகப்படுத்த வேண்டும். மரத்தில் ஆணி முழுவதுமாக இறங்கிய பின்னரும் ஓங்கிஓங்கி அடித்தால் மரம்தான் உடையும். அதேபோல்தான் லாபநோக்கமும்’ என்று நச்செனச் சொல்கிறார் ஆடம்ஸ்.</p>.<p>ஆடம்ஸ் எந்தெந்த தொழில் களில்/வேலைகளில் ஈடுபட்டு எப்படிப்பட்ட தோல்வியை அடைந்தார் என்று ஒரு தனி அத்தியாயத்தில் சொல்லியுள்ளார். இந்த வேலைகளில் கிடைத்த பல சுவையான அனுபவங்களையும் அதில் முன்னேற்றத்தைப் பெற அவர் செய்த பல சுவையான, அதேநேரத்தில் பலசமயம் தோல்விகளைத் தந்த பல யுக்திகளையும் விளக்கமாகக் கொடுத்துள்ளார் ஆடம்ஸ்.</p>.<p>'மனிதனுக்கு எனர்ஜி மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு செயலுக்கும் எனர்ஜியே ஆதாரம். எனர்ஜியை உருவாக்கி செலவழிப்பதில் நமக்கு மிகவும் கவனம் தேவை’ என்று சொல்லும் ஆடம்ஸ், எனர்ஜி எப்படி உருவாகிறது என்பதற்குப் பின்வரும் உதாரணத்தைக் கூறியுள்ளார்.</p>.<p>''உங்களுடைய பாஸ், ஒரு முக்கியமான வேலை இருக்கிறது. இதை முடித்தேயாக வேண்டும். அதனால் இரண்டு வாரத்துக்கு ஞாயிற்றுக்கிழமைகூட விடுமுறையில்லாமல் வேலை பார்த்து இதை முடித்துக்கொடுங்கள் என்று சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். பாஸ் சொல்லும் வேலை அதிமுக்கியமான ஒன்றாக இருந்து, அந்த வேலையை நீங்கள் முடித்துத் தந்தால், அந்தப் பாஸ் உங்களுக்கு புரமோஷனுக்கு உதவுவார் என்று தெரிந்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? ரொம்பவும் எனர்ஜெட்டிக்காகக் கண்ணும் கருத்துமாய் வேலையைச் செய்து சபாஷைப் பெறுவீர்கள்.</p>.<p>வேலையின் முக்கியத்துவம் மற்றும் அதைச் செய்வதால் வரும் நன்மைகள் என்ற இரண்டும் உங்கள் எனர்ஜி லெவலை அதிகரிக்கச் செய்யும். அதற்கு மாறாக, எந்த அதிகாரமும் இல்லாத உங்கள் பாஸ், உப்புச்சப்பில்லாத வேலையை விடுமுறை எடுக்காமல் செய்யச் சொன்னால், உங்கள் எனர்ஜி லெவல் அதலபாதாளத்துக்குச் சென்று விடுகிறது இல்லையா?'' என்று கேட்கிறார் ஆடம்ஸ்.</p>.<p>அதேபோல் சிரிப்பின் பலனையும் விவரிக்கும் ஆசிரியர், மூளை சந்தோஷத்தில் இருந்தால் அது சிரிப்பாக வெளிப்படுகிறது. நீங்கள் (உங்கள் மூளை) கோபத்தில் இருக்கும் போதுகூட நீங்கள் வலிய சிரிக்க முயற்சித்தீர்கள் எனில், அதனாலேயே மூளையும் உற்சாகப்படும் என்று சொல்கிறார்.</p>.<p>இறுதியாக அதிர்ஷ்டம் குறித்துச் சொல்லும் ஆசிரியர், 'உலகத்தில் ஒருவர் பெறுகிற எல்லா வெற்றிக்கும் அதிர்ஷ்டம்தான் காரணம் என்கிறார்.</p>.<p>அட, இவரா இப்படிச் சொல்கிறார்? என ஆச்சர்யப்படுகிறீர்களா? எங்கே, எப்போது பிறந்தீர்கள், உங்கள் பரம்பரை என்ன? உங்கள் ஜீன்கள் எப்படிப்பட்டவை? உங்கள் நண்பர்கள் யார்?, பகைவர்கள் யார்? என்பதெல்லாம் உங்களுடைய வெற்றியை முடிவு செய்கிறது என்றால் இவை எல்லாமே அதிர்ஷ்டமாக இருப்பதால் கிடைப்பதுதானே என்று சொல்லும் ஆசிரியர், அதற்காக அதிர்ஷ்டம் என்ற ஒன்றை நம்பியே ஒன்றும் செய்யாமல் இருந்தால் வெற்றி பெற முடியுமா என்ன? என்றும் கிண்டலாகக் கேட்கின்றார்.</p>.<p>''அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி இருந்தால் அது நமக்கு உதவப் போகிறதோ இல்லையோ, உதவாமல் போவதற்கான வாய்ப்பு நிச்சயம் அதிகமாக இருக்கிறது. ஆனால், முயற்சிகளைத் தளராது தொடர்ந்து செய்தால் அதிர்ஷ்டம் நிச்சயமாக நம்மைத் தேடிக் கண்டுபிடித்து உதவி செய்யும்'' என்று கூறி முடிக்கிறார் ஆடம்ஸ்.</p>.<p>பல தோல்விகளுக்குப் பின்னால் வாழ்வில் வெற்றியைக் கண்டிருக்கும் ஆடம்ஸ் சொல்லும் அனுபவ பாடங்களைப் படித்தால் நம்முடைய வெற்றிப்பாதையை நன்றாக செப்பனிட்டுக்கொள்ளலாம்!</p>.<p style="text-align: right"><span style="color: #800080">- நாணயம் டீம்<br /> (குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் <br /> வெப்சைட்களில் விற்பனைக்கு கிடைக்கக்கூடும்)</span></p>
<p>எடுத்த காரியம் எல்லாவற்றிலும் தோல்வி அடைந்தபின்னரும் ஒருநாள் பெரிய அளவில் வெற்றியை சாதிக்கும் வாய்ப்பு இருக்கிறதா? அப்படிக்கூட நடக்குமா என்ன என்றுதானே நினைக்கிறீர்கள்? நீங்கள் நினைப்பது சரியல்ல. எடுத்த முயற்சி எல்லாவற்றிலும் தோல்வியுற்றபின்னர்கூட வெற்றி பெறமுடியும் என்பதை ஓர் உண்மைக் கதையின் மூலம் சொல்லும் புத்தகத்தைத்தான் இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்துகிறோம்.</p>.<p>'ஹவ் டு ஃபெயில்’ என்கிற இந்தப் புத்தகத்தை எழுதிய ஸ்காட் ஆடம்ஸ் ஒரு கார்ட்டூனிஸ்ட். டில்பர்ட் என்ற அவருடைய கார்ட்டூன் ஸ்ட்ரிப்புகள் (Dilbert.com) உலகளவில் 70 நாடுகளில் 2000 செய்திப்பத்திரிகைகளில் வெளியா கிறது என்பது குறிப்பிடத்தக்கது.</p>.<p>'எனக்குத் தொட்டது எதுவுமே துலங்கவில்லை. ஏன் இப்படி? எப்படி இந்த நிலையை மாற்றுவது? என்பது குறித்து ஆழ்ந்து சிந்தித்துச் செயலாற்ற நான் கண்டுபிடித்த வழிமுறைகளைத்தான் நான் இந்தப் புத்தகத்தில் தந்துள்ளேன்’ என்கிறார் ஆடம்ஸ்.</p>.<p>'இந்த வழிமுறைகள்தான் என்னை வெற்றிப்படியில் ஏறவைத்தது'' என்று சொல்லி ஆரம்பிக்கின்ற ஆடம்ஸ், ''எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால், வாய்ப்பு கையில் கிடைக்கும்போது அதிர்ஷ்டம் நம்மைப் பார்க்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை, எனக்குக் கிடைத்த வாய்ப்பை எப்படி சரியாகக் கையாண்டு அதிர்ஷ்டம் என்னைத் தேடி கண்டுபிடித்து வரச்செய்தேன் என்பதுதான் இந்தப் புத்தகத்தின் சாராம்சம்’ என்று சொல்லும் ஆசிரியர், 'இந்தப் புத்தகத்தில் தரப்பட்டுள்ளவற்றை மற்றத் தொடர் தோல்வியைச் சந்திப்பவர்களின் நடவடிக்கைகளுடன் சரிபார்த்துச் சரியாக இருக்கிறதா என்று நீங்களே சரிபார்த்துக்கொள்ளுங்கள்’ என்கிறார்.</p>.<p>''உங்களுக்கெல்லாம் அட்வைஸ் சொல்லும் அளவுக்கு நான் ஒன்றும் பெரிய ஆளில்லை. சொல்லப்போனால் உலகத்திலேயே நான் மிகச் சின்ன ஆள். நான் ஒரு பெரிய எழுத்தாளனும் இல்லை. நிபுணனும் இல்லை. நான் எப்படி இதுபோன்ற அறிவுரைகளைச் சொல்லும் புத்தகம் எழுதி சம்பாதிக்கிறேன் என்பதே எனக்குப் புரியவில்லை'' என்று ஆரம்பிக்கிறார் ஆடம்ஸ்.</p>.<p>''ஆனால் நான் எதையும் இலகுவாகச் சொல்லும் திறமை கொண்டவன். இலகுவாக ஒரு விஷயத்தைச் சொல்வதால் அதை இலகுவாக நீங்கள் புரிந்துகொண்டு செயல்படுத்தலாம்'' என்கிறார்.</p>.<p>உதாரணத்துக்கு, 'முதலாளித் துவத்தை எடுத்துக்கொள்வோம். முதலாளித்துவத்தை எளிமையாய்ப் புரிந்துகொள்ள என்ன சொல்ல வேண்டும். லாபம்! லாபம்! லாபம்! என்பதைத்தானே! அதற்காகத்தானே இத்தனை போட்டியும், பிரச்னையும், வேற்றுமையும், ஒற்றுமையும் என்கிறார் ஆடம்ஸ். அதற்காக லாபத்தையே குறிக்கோளாகக்கொண்டு அதிவேகத்தில் செயல்பட்டால் சிக்கல்கள் வரத்தானே செய்யும். இதை எப்படிச் சொல்வது? தொழிலில் லாபம் என்பது ஒரு சுத்தியலைப் போன்றது. சுத்தியலை எப்போதுமே ஆணியை அடிக்க அளவாக உபயோகப்படுத்த வேண்டும். மரத்தில் ஆணி முழுவதுமாக இறங்கிய பின்னரும் ஓங்கிஓங்கி அடித்தால் மரம்தான் உடையும். அதேபோல்தான் லாபநோக்கமும்’ என்று நச்செனச் சொல்கிறார் ஆடம்ஸ்.</p>.<p>ஆடம்ஸ் எந்தெந்த தொழில் களில்/வேலைகளில் ஈடுபட்டு எப்படிப்பட்ட தோல்வியை அடைந்தார் என்று ஒரு தனி அத்தியாயத்தில் சொல்லியுள்ளார். இந்த வேலைகளில் கிடைத்த பல சுவையான அனுபவங்களையும் அதில் முன்னேற்றத்தைப் பெற அவர் செய்த பல சுவையான, அதேநேரத்தில் பலசமயம் தோல்விகளைத் தந்த பல யுக்திகளையும் விளக்கமாகக் கொடுத்துள்ளார் ஆடம்ஸ்.</p>.<p>'மனிதனுக்கு எனர்ஜி மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு செயலுக்கும் எனர்ஜியே ஆதாரம். எனர்ஜியை உருவாக்கி செலவழிப்பதில் நமக்கு மிகவும் கவனம் தேவை’ என்று சொல்லும் ஆடம்ஸ், எனர்ஜி எப்படி உருவாகிறது என்பதற்குப் பின்வரும் உதாரணத்தைக் கூறியுள்ளார்.</p>.<p>''உங்களுடைய பாஸ், ஒரு முக்கியமான வேலை இருக்கிறது. இதை முடித்தேயாக வேண்டும். அதனால் இரண்டு வாரத்துக்கு ஞாயிற்றுக்கிழமைகூட விடுமுறையில்லாமல் வேலை பார்த்து இதை முடித்துக்கொடுங்கள் என்று சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். பாஸ் சொல்லும் வேலை அதிமுக்கியமான ஒன்றாக இருந்து, அந்த வேலையை நீங்கள் முடித்துத் தந்தால், அந்தப் பாஸ் உங்களுக்கு புரமோஷனுக்கு உதவுவார் என்று தெரிந்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? ரொம்பவும் எனர்ஜெட்டிக்காகக் கண்ணும் கருத்துமாய் வேலையைச் செய்து சபாஷைப் பெறுவீர்கள்.</p>.<p>வேலையின் முக்கியத்துவம் மற்றும் அதைச் செய்வதால் வரும் நன்மைகள் என்ற இரண்டும் உங்கள் எனர்ஜி லெவலை அதிகரிக்கச் செய்யும். அதற்கு மாறாக, எந்த அதிகாரமும் இல்லாத உங்கள் பாஸ், உப்புச்சப்பில்லாத வேலையை விடுமுறை எடுக்காமல் செய்யச் சொன்னால், உங்கள் எனர்ஜி லெவல் அதலபாதாளத்துக்குச் சென்று விடுகிறது இல்லையா?'' என்று கேட்கிறார் ஆடம்ஸ்.</p>.<p>அதேபோல் சிரிப்பின் பலனையும் விவரிக்கும் ஆசிரியர், மூளை சந்தோஷத்தில் இருந்தால் அது சிரிப்பாக வெளிப்படுகிறது. நீங்கள் (உங்கள் மூளை) கோபத்தில் இருக்கும் போதுகூட நீங்கள் வலிய சிரிக்க முயற்சித்தீர்கள் எனில், அதனாலேயே மூளையும் உற்சாகப்படும் என்று சொல்கிறார்.</p>.<p>இறுதியாக அதிர்ஷ்டம் குறித்துச் சொல்லும் ஆசிரியர், 'உலகத்தில் ஒருவர் பெறுகிற எல்லா வெற்றிக்கும் அதிர்ஷ்டம்தான் காரணம் என்கிறார்.</p>.<p>அட, இவரா இப்படிச் சொல்கிறார்? என ஆச்சர்யப்படுகிறீர்களா? எங்கே, எப்போது பிறந்தீர்கள், உங்கள் பரம்பரை என்ன? உங்கள் ஜீன்கள் எப்படிப்பட்டவை? உங்கள் நண்பர்கள் யார்?, பகைவர்கள் யார்? என்பதெல்லாம் உங்களுடைய வெற்றியை முடிவு செய்கிறது என்றால் இவை எல்லாமே அதிர்ஷ்டமாக இருப்பதால் கிடைப்பதுதானே என்று சொல்லும் ஆசிரியர், அதற்காக அதிர்ஷ்டம் என்ற ஒன்றை நம்பியே ஒன்றும் செய்யாமல் இருந்தால் வெற்றி பெற முடியுமா என்ன? என்றும் கிண்டலாகக் கேட்கின்றார்.</p>.<p>''அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி இருந்தால் அது நமக்கு உதவப் போகிறதோ இல்லையோ, உதவாமல் போவதற்கான வாய்ப்பு நிச்சயம் அதிகமாக இருக்கிறது. ஆனால், முயற்சிகளைத் தளராது தொடர்ந்து செய்தால் அதிர்ஷ்டம் நிச்சயமாக நம்மைத் தேடிக் கண்டுபிடித்து உதவி செய்யும்'' என்று கூறி முடிக்கிறார் ஆடம்ஸ்.</p>.<p>பல தோல்விகளுக்குப் பின்னால் வாழ்வில் வெற்றியைக் கண்டிருக்கும் ஆடம்ஸ் சொல்லும் அனுபவ பாடங்களைப் படித்தால் நம்முடைய வெற்றிப்பாதையை நன்றாக செப்பனிட்டுக்கொள்ளலாம்!</p>.<p style="text-align: right"><span style="color: #800080">- நாணயம் டீம்<br /> (குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் <br /> வெப்சைட்களில் விற்பனைக்கு கிடைக்கக்கூடும்)</span></p>