<p>சில வாரங்களுக்கு முன்பு துறை சார்ந்த ஃபண்டுகளில் ஒன்றான ரிலையன்ஸ் பார்மா ஃபண்ட் குறித்துப் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த வாரம் வங்கித் துறை சார்ந்த ஐசிஐசிஐ புரூ. பேங்கிங் அண்ட் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் ஃபண்ட் குறித்துப் பார்ப்போம்.</p>.<p>பொதுவாக, சாதாரண முதலீட்டாளர் களுக்கு நாம் துறை சார்ந்த ஃபண்டு களைப் பரிந்துரை செய்வதில்லை. காரணம், டைவர்ஸிஃபைடு ஃபண்டு களைவிட துறை சார்ந்த ஃபண்டுகளில் ரிஸ்க் அதிகம். எனவே, ஏற்கெனவே மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் நல்ல அனுபவம் உள்ளவர்கள் மட்டும் இந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம். அதுவும் மொத்தமாக துறை சார்ந்த முதலீடு களுக்காக அதிகபட்சம் 25% ஒதுக்கிக் கொள்ளலாம்.<br /> </p>.<p>நிதித் துறை சார்ந்த பங்குகள் ஏறக்குறைய 28% இடத்தை நமது நிஃப்டி குறியீட்டில் பிடித்துள்ளன. நிதித் துறை எந்த ஒரு பொருளாதாரத்துக்கும் முதுகெலும்பைப் போன்றது. நமது பொருளாதாரம் பிக்-அப் ஆகும்போது, முதலில் மேலெழுந்து வருவது நிதித் துறை சார்ந்த நிறுவனங்கள்தான். மேலும், நமது நாட்டில் வங்கிகள் இல்லாத இடங்கள் எவ்வளவோ உள்ளன. வங்கிச் சேவைக்குள் கொண்டு வரப்பட வேண்டிய மக்கள் ஏராளமானோர் ஆவர். நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்கியுள்ள மக்கள்தான் இன்று மெஜாரிட்டி. நிதி நிறுவனங்களின் சேவைகளை உபயோகிக்கும் மக்கள் தொகை நாளுக்குநாள் அதிகமாகிக் கொண்டுதான் செல்லும். ஆகவே, இந்தத் துறையின் வளர்ச்சி நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டுதான் செல்லும். எனவே, இந்தத் துறை சார்ந்த பங்குகளின் வளர்ச்சியும் மிகவும் நன்றாக இருக்கும்.</p>.<p>இந்த ஃபண்ட் தற்போது ரூ.471 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. இதன் ஃபண்ட் மேனேஜர் வெங்கடேஷ் சஞ்சீவி ஆவார். இதன் போர்ட்ஃபோலியோவில் வங்கிப் பங்குகள், வங்கி சாரா நிதி நிறுவனங் களின் பங்குகள் மற்றும் பிற நிதித் துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகளே முழுக்க முழுக்க இடம்பெற்றுள்ளன. இதன் டாப் ஹோல்டிங்ஸாக ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், சிட்டி யூனியன் பேங்க் மற்றும் மேக்ஸ் இந்தியா ஆகியவை இடம் பெற்றுள்ளன.</p>.<p>இதன் போர்ட்ஃபோலியோ பீட்டா 0.89 ஆகும். இது நிஃப்டி குறியீட்டைவிட குறைவாக உள்ளதைக் குறிக்கிறது. அதேசமயத்தில், இந்த ஃபண்டின் ஆல்ஃபா 7.01 ஆகும். இது நிஃப்டியைவிட 7.01% அதிக வருமானம் கொடுத்துள்ளதைக் காண்பிக்கிறது.</p>.<p>வங்கித் துறை சார்ந்த திட்டங்கள் பத்துக்கும் மேலாக சந்தையில் உள்ளன. கடந்த 1, 2, 3 மற்றும் 5 ஆண்டுகள் அடிப்படையில், இந்தத் திட்டம் பிற திட்டங்களைவிட சிறப்பாகச் செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>.<p>இந்தத் துறையில் அதிகச் சொத்துக் களைக் கொண்டுள்ளது ரிலையன்ஸ் பேங்கிங் ஃபண்டாகும். அந்த ஃபண்ட் இந்த (ஐசிஐசிஐ) ஃபண்டுக்கு அடுத்தபடி யாக நல்ல வருமானத்தைத் தந்துள்ளது.</p>.<p>இந்த ஃபண்ட் ஆரம்பித்தபோது (ஆகஸ்ட் 22, 2008) ஒருவர் செய்த முதலீடான ரூ.1 லட்சம், தற்போது ரூ.3,37,300-ஆக உள்ளது. இது கூட்டு வட்டி அடிப்படையில் ஆண்டுக்கு 21.65% வருமானம் ஆகும்.</p>.<p>இந்த ஃபண்ட் தனது பெஞ்ச்மார்க்காக பிஎஸ்இ பேங்கெக்ஸைக் கொண்டுள்ளது. கடந்த 3 வருடங்களாக (2012–2014) அந்தக் குறியீட்டை தொடர்ந்து பீட் செய்துள்ளது.இந்த ஃபண்டில் எந்த ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காகவும் (உதாரணத்துக்கு, குழந்தைகள் கல்வி/ திருமணம்) முதலீடு செய்யாமல், வெல்த் க்ரியேஷனுக்காக மட்டும் முதலீடு செய்யலாம். அவ்வாறு செய்யும்போது, தேவைப்பட்டால், உங்களால் அதிக நாட்கள் காத்திருக்க முடியும்.</p>.<p>நீண்ட கால அடிப்படையில் இந்த ஃபண்டில் தங்களது மொத்த முதலீட்டில் ஒரு குறிப்பிட்ட தொகையை எஸ்ஐபி முறையில் தாராளமாக முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வரலாம். மேலும், இதுபோன்ற பொருளாதாரம் பிக்-அப் ஆகும் தருணங்களில், சந்தை சரிவைப் பயன்படுத்தி மொத்தமாக எஸ்டிபி முறையிலும் முதலீடு செய்யலாம்.</p>.<p>நமது நாட்டில் பல பெரிய தனியார் துறை வங்கிகள் நல்ல அளவில் பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ளன. ஆகவே, பொதுத்துறை வங்கிகளுடன் ஒப்பிடும்போது, தனியார் துறை வங்கிகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். இந்தக் காரணத்தினால் இந்த ஃபண்ட் தனியார் துறை வங்கிகளில் தனது பெரும்பாலான முதலீட்டை வைத்துள்ளது. தவிர, இந்த ஃபண்டின் நல்ல செயல்பாட்டுக்கு மற்றொரு காரணம், நிதிச் சேவை துறையில் உள்ள நிறுவனங்களின் பங்குகளைப் பெருவாரியாக வைத்துள்ளது.</p>.<p>உதாரணத்துக்கு, ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ரிலையன்ஸ் கேப்பிட்டல், சுந்தரம் ஃபைனான்ஸ், மேக்ஸ் இந்தியா, மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்ஷியல், எஸ்கேஎஸ் மைக்ரோ ஃபைனான்ஸ் போன்ற நிறுவனப் பங்குகள் நல்ல வளர்ச்சியை இந்த ஃபண்டுக்குத் தந்துள்ளன. அடுத்த சில ஆண்டுகளுக்கு இந்தத் துறையின் வளர்ச்சி மிக நன்றாக இருக்கும். ஆகவே, இந்த ஃபண்டின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.</p>.<p><span style="color: #800000">யாருக்கு ஏற்றது?</span></p>.<p>எற்கெனவே மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்துள்ளவர்கள், போர்ட் ஃபோலியோவை பரவலாக்க விரும்பு பவர்கள், இளம் வயதினர், பணம் அதிகம் உள்ளவர்கள், செல்வத்தைப் பெருக்க நினைப்பவர்கள், அதிக ரிஸ்க் எடுக்கக்கூடியவர்கள், பணம் உடனடித் தேவை இல்லாதவர்கள்.</p>.<p><span style="color: #993300">யாருக்கு ஏற்றதல்ல?</span></p>.<p>முதல்முறையாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்கள், சிறிய முதலீடு உள்ளவர்கள், குறுகிய காலத்தில் பணம் தேவைப்படுபவர்கள், உறுதியான / நிலையான வருமானத்தை விரும்புபவர் கள், அதிக ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்கள்.</p>
<p>சில வாரங்களுக்கு முன்பு துறை சார்ந்த ஃபண்டுகளில் ஒன்றான ரிலையன்ஸ் பார்மா ஃபண்ட் குறித்துப் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த வாரம் வங்கித் துறை சார்ந்த ஐசிஐசிஐ புரூ. பேங்கிங் அண்ட் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் ஃபண்ட் குறித்துப் பார்ப்போம்.</p>.<p>பொதுவாக, சாதாரண முதலீட்டாளர் களுக்கு நாம் துறை சார்ந்த ஃபண்டு களைப் பரிந்துரை செய்வதில்லை. காரணம், டைவர்ஸிஃபைடு ஃபண்டு களைவிட துறை சார்ந்த ஃபண்டுகளில் ரிஸ்க் அதிகம். எனவே, ஏற்கெனவே மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் நல்ல அனுபவம் உள்ளவர்கள் மட்டும் இந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம். அதுவும் மொத்தமாக துறை சார்ந்த முதலீடு களுக்காக அதிகபட்சம் 25% ஒதுக்கிக் கொள்ளலாம்.<br /> </p>.<p>நிதித் துறை சார்ந்த பங்குகள் ஏறக்குறைய 28% இடத்தை நமது நிஃப்டி குறியீட்டில் பிடித்துள்ளன. நிதித் துறை எந்த ஒரு பொருளாதாரத்துக்கும் முதுகெலும்பைப் போன்றது. நமது பொருளாதாரம் பிக்-அப் ஆகும்போது, முதலில் மேலெழுந்து வருவது நிதித் துறை சார்ந்த நிறுவனங்கள்தான். மேலும், நமது நாட்டில் வங்கிகள் இல்லாத இடங்கள் எவ்வளவோ உள்ளன. வங்கிச் சேவைக்குள் கொண்டு வரப்பட வேண்டிய மக்கள் ஏராளமானோர் ஆவர். நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்கியுள்ள மக்கள்தான் இன்று மெஜாரிட்டி. நிதி நிறுவனங்களின் சேவைகளை உபயோகிக்கும் மக்கள் தொகை நாளுக்குநாள் அதிகமாகிக் கொண்டுதான் செல்லும். ஆகவே, இந்தத் துறையின் வளர்ச்சி நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டுதான் செல்லும். எனவே, இந்தத் துறை சார்ந்த பங்குகளின் வளர்ச்சியும் மிகவும் நன்றாக இருக்கும்.</p>.<p>இந்த ஃபண்ட் தற்போது ரூ.471 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. இதன் ஃபண்ட் மேனேஜர் வெங்கடேஷ் சஞ்சீவி ஆவார். இதன் போர்ட்ஃபோலியோவில் வங்கிப் பங்குகள், வங்கி சாரா நிதி நிறுவனங் களின் பங்குகள் மற்றும் பிற நிதித் துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகளே முழுக்க முழுக்க இடம்பெற்றுள்ளன. இதன் டாப் ஹோல்டிங்ஸாக ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், சிட்டி யூனியன் பேங்க் மற்றும் மேக்ஸ் இந்தியா ஆகியவை இடம் பெற்றுள்ளன.</p>.<p>இதன் போர்ட்ஃபோலியோ பீட்டா 0.89 ஆகும். இது நிஃப்டி குறியீட்டைவிட குறைவாக உள்ளதைக் குறிக்கிறது. அதேசமயத்தில், இந்த ஃபண்டின் ஆல்ஃபா 7.01 ஆகும். இது நிஃப்டியைவிட 7.01% அதிக வருமானம் கொடுத்துள்ளதைக் காண்பிக்கிறது.</p>.<p>வங்கித் துறை சார்ந்த திட்டங்கள் பத்துக்கும் மேலாக சந்தையில் உள்ளன. கடந்த 1, 2, 3 மற்றும் 5 ஆண்டுகள் அடிப்படையில், இந்தத் திட்டம் பிற திட்டங்களைவிட சிறப்பாகச் செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>.<p>இந்தத் துறையில் அதிகச் சொத்துக் களைக் கொண்டுள்ளது ரிலையன்ஸ் பேங்கிங் ஃபண்டாகும். அந்த ஃபண்ட் இந்த (ஐசிஐசிஐ) ஃபண்டுக்கு அடுத்தபடி யாக நல்ல வருமானத்தைத் தந்துள்ளது.</p>.<p>இந்த ஃபண்ட் ஆரம்பித்தபோது (ஆகஸ்ட் 22, 2008) ஒருவர் செய்த முதலீடான ரூ.1 லட்சம், தற்போது ரூ.3,37,300-ஆக உள்ளது. இது கூட்டு வட்டி அடிப்படையில் ஆண்டுக்கு 21.65% வருமானம் ஆகும்.</p>.<p>இந்த ஃபண்ட் தனது பெஞ்ச்மார்க்காக பிஎஸ்இ பேங்கெக்ஸைக் கொண்டுள்ளது. கடந்த 3 வருடங்களாக (2012–2014) அந்தக் குறியீட்டை தொடர்ந்து பீட் செய்துள்ளது.இந்த ஃபண்டில் எந்த ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காகவும் (உதாரணத்துக்கு, குழந்தைகள் கல்வி/ திருமணம்) முதலீடு செய்யாமல், வெல்த் க்ரியேஷனுக்காக மட்டும் முதலீடு செய்யலாம். அவ்வாறு செய்யும்போது, தேவைப்பட்டால், உங்களால் அதிக நாட்கள் காத்திருக்க முடியும்.</p>.<p>நீண்ட கால அடிப்படையில் இந்த ஃபண்டில் தங்களது மொத்த முதலீட்டில் ஒரு குறிப்பிட்ட தொகையை எஸ்ஐபி முறையில் தாராளமாக முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வரலாம். மேலும், இதுபோன்ற பொருளாதாரம் பிக்-அப் ஆகும் தருணங்களில், சந்தை சரிவைப் பயன்படுத்தி மொத்தமாக எஸ்டிபி முறையிலும் முதலீடு செய்யலாம்.</p>.<p>நமது நாட்டில் பல பெரிய தனியார் துறை வங்கிகள் நல்ல அளவில் பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ளன. ஆகவே, பொதுத்துறை வங்கிகளுடன் ஒப்பிடும்போது, தனியார் துறை வங்கிகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். இந்தக் காரணத்தினால் இந்த ஃபண்ட் தனியார் துறை வங்கிகளில் தனது பெரும்பாலான முதலீட்டை வைத்துள்ளது. தவிர, இந்த ஃபண்டின் நல்ல செயல்பாட்டுக்கு மற்றொரு காரணம், நிதிச் சேவை துறையில் உள்ள நிறுவனங்களின் பங்குகளைப் பெருவாரியாக வைத்துள்ளது.</p>.<p>உதாரணத்துக்கு, ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ரிலையன்ஸ் கேப்பிட்டல், சுந்தரம் ஃபைனான்ஸ், மேக்ஸ் இந்தியா, மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்ஷியல், எஸ்கேஎஸ் மைக்ரோ ஃபைனான்ஸ் போன்ற நிறுவனப் பங்குகள் நல்ல வளர்ச்சியை இந்த ஃபண்டுக்குத் தந்துள்ளன. அடுத்த சில ஆண்டுகளுக்கு இந்தத் துறையின் வளர்ச்சி மிக நன்றாக இருக்கும். ஆகவே, இந்த ஃபண்டின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.</p>.<p><span style="color: #800000">யாருக்கு ஏற்றது?</span></p>.<p>எற்கெனவே மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்துள்ளவர்கள், போர்ட் ஃபோலியோவை பரவலாக்க விரும்பு பவர்கள், இளம் வயதினர், பணம் அதிகம் உள்ளவர்கள், செல்வத்தைப் பெருக்க நினைப்பவர்கள், அதிக ரிஸ்க் எடுக்கக்கூடியவர்கள், பணம் உடனடித் தேவை இல்லாதவர்கள்.</p>.<p><span style="color: #993300">யாருக்கு ஏற்றதல்ல?</span></p>.<p>முதல்முறையாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்கள், சிறிய முதலீடு உள்ளவர்கள், குறுகிய காலத்தில் பணம் தேவைப்படுபவர்கள், உறுதியான / நிலையான வருமானத்தை விரும்புபவர் கள், அதிக ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்கள்.</p>