<p><span style="color: #ff0000"><strong>ந</strong></span>ம் நாட்டில் இ-காமர்ஸின் வளர்ச்சி மின்னல் வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது. மென்பொருள் மற்றும் சேவைகள் குறித்த தேசிய அளவிலான அமைப்பு (The National Association of Software and Services) இந்தியா வில் இ-காமர்ஸ் தற்போதைய விற்பனையான 30 பில்லியன் டாலரிலிருந்து (இந்திய மதிப்பில் சுமார் 1.90 லட்சம் கோடி ரூபாய்), 300 பில்லியன் டாலரை (சுமார் 19 லட்சம் கோடி ரூபாய்) இன்னும் பதினைந்து ஆண்டுகளில் தொட்டுவிடும் எனத் தனது ஆய்வின் மூலம் கணித்திருக்கிறது. உலகளவில் சீனாவுக்கு அடுத்த படியாக ஆன்லைன் வர்த்தகத் தில் வேகமாக வளர்ந்துவரும் நாடு நம் இந்தியாதான்.</p>.<p>மின் வணிக நுகர்வோர்களின் எண்ணிக்கை 2013-ம் ஆண்டு இரண்டு கோடிக்கும் குறைவாகவே இருந்தது.</p>.<p>ஆனால், இந்த ஆண்டு ஏறக்குறைய ஆறு கோடியை எட்டக்கூடும் என இது சார்ந்த அமைப்புகள் கூறி வருகின்றன. இதே கால அளவில், மாதம் ஒன்றுக்கு 40 லட்சம் ஆர்டர்களைப் பெற்றுவந்த இந்த நிறுவனங்கள், 1.2 கோடி ஆர்டர் களைப்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.</p>.<p><span style="color: #ff0000"><strong>என்ன காரணம்?</strong></span></p>.<p>இந்த அபரிமிதமான வளர்ச்சிக்கு (ஏறக்குறைய 30%) பலக் காரணங்கள். இந்தியாவில் இன்டர்நெட் உபயோகிப்பவர் களின் எண்ணிக்கை தற்சமயம் 20%. இதில் 10 சதவிகிதம் பேர் ஆன்லைன்மூலம் ஷாப்பிங் செய்கிறார்கள். சீனாவைப் பொறுத்தளவில், இன்டர்நெட் உபயோகிப்போரின் எண்ணிக்கை ஏறக்குறைய 50%. அதில் ஆன்லைனில் பொருட்களை வாங்குபவர்கள் 50%.</p>.<p>இந்தியாவின் ஸ்மார்ட் போன் வளர்ச்சி, மொத்த ஜனத்தொகையில் இளைஞர் களின் எண்ணிக்கை (10 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் சுமார் 35.6 கோடி) ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு முதலீட்டாளர் கள் இந்தத் தொழிலில் பணத்தை வாரியிறைத்துக் கொண்டிருக் கின்றனர்.</p>.<p><span style="color: #ff0000"><strong>எதற்கு வரவேற்பு!</strong></span></p>.<p>விற்பனை/வருமான ரீதியில் இந்திய மின் வணிகத் துறையைப் பொறுத்தவரை, ‘ஆன்லைன் டிராவல்’தான் (அதாவது, பயணம் சம்பந்தப்பட்ட சேவைகள்) முதலிடம் வகிக்கிறது. அதைத் தொடர்ந்து ரீடெயிலிங் (சில்லறை வணிகம்), நிதி சேவை கள், ஆன்லைன் வரி விளம்பரம் போன்றவை சார்ந்த நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.</p>.<p>மின் வணிகம் மூலம் பொருட்களையும், சேவைகளையும் வாங்குவது நாளுக்குநாள் அதிகரித்து வருவதற்கான முக்கியக் காரணம், ஸ்மார்ட் போன்களின் வளர்ச்சி. 2014-ம் ஆண்டு ஆன்லைனில் பொருட் களை வாங்கியவர்களில் மொபைல் போன் செயலி மூலம் வாங்கியவர்களின் எண்ணிக்கை 11%. ஆனால், 2017-ம் ஆண்டு இது 25 சதவிகிதத்தைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>.<p><span style="color: #ff0000"><strong>குவியும் முதலீடு!</strong></span></p>.<p>ஸ்நாப்டீல், ஃப்ளிப்கார்ட், அமேஸான் போன்ற நிறுவனங் கள் தனது இணையத்தளத்தின் மூலம் விற்பனை செய்யக்கூடிய பொருட்கள் அனைத்தையும் தள்ளுபடி விலையில் வருடம் முழுவதும் விற்பனை செய்வதன் மூலமும், வேகமாக டெலிவரி செய்வதன் மூலமும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான புதிய நுகர் வோர்களைப் பெற்று வருகின்றன. இந்த வளர்ந்துவரும் நுகர்வோர் களின் எண்ணிக்கையைக் காரணமாகக் காட்டி, நிதி நிறுவனங்களிடமிருந்து மேலும் முதலீட்டை இந்த நிறுவனங்கள் பெற்று வருகின்றன.</p>.<p style="text-align: left">அப்படிக் கிடைக்கும் முதலீட்டைக் கொண்டு மேலும் தள்ளுபடி அளிக்கத் தங்களுக்குள் போட்டிபோடுகின்றன இந்த இ-காமர்ஸ் நிறுவனங்கள். இப்படிக் கிடைக்கக்கூடிய நிதி திடீரென ஒருநாள் நின்று போய்விட்டால் என்னவாகும்? இதனால்தான் ‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்’ என்கிற மாதிரி ஐபிஓ வந்துவிடச் சில நிறுவனங்கள் துடியாய்த் துடிக்கின்றன.</p>.<p>கடந்த சில மாதங்களில் பல ஆன்லைன்/மின் வணிக நிறுவனங்கள் பல கோடி ரூபாய் களை முதலீடாகப் பெற்றிருக் கின்றன. அவற்றில் குறிப்பிடத் தக்கது, அர்பன் லேடர் (ஃபர்னிச்சர் விற்பனை செய்யும் ஆன்லைன் கடை) ரூ.493 கோடி, ஷாப்க்ளூஸ் ரூ.746 கோடி, பிக்பாஸ்கெட் ரூ.278 கோடி.</p>.<p>இதுபோல, இந்தியாவின் பெரிய ஆன்லைன் வணிகத் தளங்களான ஃப்ளிப்கார்ட், ஸ்நாப்டீலில் மட்டும் 3 பில்லியன் டாலர்களைப் பன்னாட்டு நிறுவனங்களும், வங்கிகளும் முதலீடு செய்துள்ளன.</p>.<p>ஆன்லைன் வணிகத்தில் டாலர்களைக் கொட்டும் முக்கிய நிறுவனங்கள் ரஷ்யாவைச் சேர்ந்த டிஎஸ்டி குளோபல் (DST Global), அமெரிக்காவைச் சேர்ந்த டைகர் குளோபல் (Tiger Global), ஜப்பானைச் சேர்ந்த சாஃப்ட் பேங்க் (Soft Bank), சீனாவைச் சேர்ந்த அலிபாபா போன்றவை.</p>.<p>இவர்கள் செய்த முதலீட்டுக்கு லாபம் கிடைக்குமா என்பது அடுத்தச் சில ஆண்டுகளில் தெரிந்துவிடும். ஒருவேளை ஜெயிக்கவில்லை எனில், 2018-ல் இவர்கள் இந்தத் துறையிலிருந்து வெளியேறத் தொடங்கிவிடு வார்கள் என்பதே இந்தத் துறையைச் சேர்ந்தவர்களின் அனுமானம்.</p>.<p>2000-மாவது ஆண்டுகளில் சில்லறை வணிகர்களுக்கு ‘கிலி’யை ஏற்படுத்த நினைத்து அபரிமிதமான தள்ளுபடியையும், கண்ணை மூடிக்கொண்டு கடை களுக்கு வாடகை கொடுத்தும் வந்த சில மாடர்ன் ரீடெயில் நிறுவனங்கள் தங்களது ‘கல்லா’வைக் கட்ட முடியாமல் நடையைக் கட்டியது ஊரறிந்த கதை. அதுபோல, இப்போது அதிகத் தள்ளுபடி கொடுத்துவரும் ஆன்லைன் வணிகத்தின் நிலையும் ஆகிவிடுமா?</p>.<p><span style="color: #ff0000"><strong>எகிறும் செலவு!</strong></span></p>.<p>இவர்களுக்கு கடை வாடகை அதிகமில்லை என்றாலும், அதிக நுகர்வோர்களைத் தங்கள் வலைத்தளத்துக்கு வரவைத்து, பொருட்களை வாங்கச் செய்ய வேண்டும் என்பதற்காக விளம்பரத்துக்கும், சந்தைப்படுத் துவதற்கும் ஆண்டுக்கு ரூ.350 கோடியை செலவு செய்திருக் கின்றன மும்மூர்த்திகளான அமேஸான், ஸ்நாப்டீல், ஃப்ளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள்.</p>.<p>2014-ம் ஆண்டு வருவாய், ஆண்டு இறுதிவரை ஏறக்குறைய 195 மில்லியன் (19.5 கோடி) டெலிவரிகளைச் செய்துள்ளன ஆன்லைன் நிறுவனங்கள்.</p>.<p>இதில் 23 சதவிகிதமான டெலிவரிகள் நுகர்வோர்களால் பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டு அல்லது டெலிவரி செய்யும் சமயத்தில் வாங்க மறுத்துத் திரும்ப அனுப்பப்பட்டிருக்கின்றன. 36 மில்லியன் நுகர்வோர்களைக் கொண்ட இந்த நிறுவனங்கள் அவர்களுக்குச் சேவை செய்யும் வகையில் இதுவரை செலவிட்டி ருக்கும் தொகை கிட்டத்தட்ட ரூ.9,774 கோடி. இப்படி அவர்கள் செய்யும் செலவுக்கு ஒரு எல்லை இல்லை.</p>.<p>இந்த ஆன்லைன் நிறுவனங் களில் பெரும்பாலானவை இன்னும் நஷ்டத்தில்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதில் முதலீடு செய்யும் வெஞ்சர் கேப்பிட்டல் நிறுவனங்களும், நிதி நிறுவனங்களும் மற்ற முதலீட்டாளர்களும் ஆன்லைன் நிறுவனங்கள் புதிதாக ‘எத்தனை விற்பனையாளர்’களைத் தங்கள் இணையத்தளத்தில் பதிவு செய்ய வைத்திருக்கின்றன என்பதைவிட ‘எத்தனை நுகர்வோர்களைக் கொண்டிருக்கிறது’ என்பதில் தான் அக்கறை காட்டுகின்றன.</p>.<p>இ-காமர்ஸ் துறையின் வேகமான வளர்ச்சியில் எத்தனை நிறுவனங்கள் பிழைத்து நிற்கப் போகின்றன என்பது முக்கிய மான கேள்வி.</p>.<p>பெரிய நிறுவனங்கள் தவிர்த்து, சிறிய நிறுவனங்கள் காலவோட்டத்தில் கரைந்து போய்விடும் என்பதே இப்போதைக்குத் தெளிவாகத் தெரிகிற உண்மை.</p>.<p> இந்த ஆன்லைன் அலையில் நீந்திக் கரைசேரப் போவது எத்தனை பேர் என்பது தெரிய சில ஆண்டுகளாவது ஆகும். அதுவரை ‘ஆடித் தள்ளுபடி’யுடன் ‘ஆன்லைன் தள்ளுபடி’யையும் அனுபவிப்போமே!</p>.<p><span style="color: #ff0000"><strong>இ-காமர்ஸ் இன்னோவேஷன்கள்!</strong></span></p>.<p>அமேஸான், ஃப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வணிகத்தளங்கள் பின்கோடு அல்லது ஏரியா வாரியாகச் சில சில்லறை வணிகக் கடைகள் அல்லது பெட்ரோல் பங்க்-களைத் தேர்ந்தெடுத்து அங்குப் பொருட்களை டெலிவரி செய்ய, ஆர்டர் செய்தவர்கள் அதன் வழியாக வீட்டுக்கோ அல்லது அலுவலகத்துக்கோ செல்லும்போது எடுத்துக்கொள்ளும் முறையைச் சில நகரங்களில் பரிசோதனை முறையில் செய்யத் தொடங்கி இருக்கின்றன.</p>.<p>பெருநகரங்கள் தவிர்த்து இரண்டாம், மூன்றாம் அடுக்கில் உள்ள சிறுநகரங்களையும், கிராமங்களையும் தங்களது சேவை சென்றடைய 1,54,882 தபால் நிலையங்களை (இதில் கிராமப்புறத்தில் உள்ளவை 89%) கொண்டிருக்கும் ‘இந்திய தபால் துறை’யுடன் கைகோக்க ஆன்லைன் நிறுவனங்கள் போட்டிபோட்டு வருகின்றன. ஸ்நாப்டீல், அமேஸான் போன்றவை ஏற்கெனவே இந்தத் துறையுடன் இணைந்து பணியாற்றி வருகின்றன.2014-15-ம் ஆண்டில் ‘கேஷ் ஆன் டெலிவரி’ முறையின் மூலம் ஆன்லைன் நிறுவனங்களின் சார்பில் பொருட்களை டெலிவரி செய்து தபால்துறை வசூலித்தது சுமார் ரூ.500 கோடி!</p>.<p>பிரபலமான மாடர்ன் ரீடெயில் குழுமங்களும், அடிடாஸ் போன்ற விளையாட்டுப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களும் ஆன்லைன் மூலம் தங்களது பொருட்களை விற்க ஆரம்பித்திருக்கின்றன.</p>.<p> நுகர்வோர்களால் பல காரணங்களினால் திரும்ப அனுப்பப்படும் பொருட்களை அந்தந்த நிறுவனங்களிடமிருந்து (உ-ம் அமேஸான், ஃப்ளிப்கார்ட், மிந்த்ரா போன்றவை) வாங்கி, அந்தப் பொருட்களில் ஏதேனும் குறையிருந்தால், அதைச் சரிசெய்து வாரன்டியுடன், மிகவும் குறைந்த விலையில் விற்பதற்கென்று greendust.com என்கிற இணையதளம் உள்ளது.</p>.<p style="text-align: right"><span style="color: #0000ff"><strong>சித்தார்த்தன் சுந்தரம்</strong></span></p>
<p><span style="color: #ff0000"><strong>ந</strong></span>ம் நாட்டில் இ-காமர்ஸின் வளர்ச்சி மின்னல் வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது. மென்பொருள் மற்றும் சேவைகள் குறித்த தேசிய அளவிலான அமைப்பு (The National Association of Software and Services) இந்தியா வில் இ-காமர்ஸ் தற்போதைய விற்பனையான 30 பில்லியன் டாலரிலிருந்து (இந்திய மதிப்பில் சுமார் 1.90 லட்சம் கோடி ரூபாய்), 300 பில்லியன் டாலரை (சுமார் 19 லட்சம் கோடி ரூபாய்) இன்னும் பதினைந்து ஆண்டுகளில் தொட்டுவிடும் எனத் தனது ஆய்வின் மூலம் கணித்திருக்கிறது. உலகளவில் சீனாவுக்கு அடுத்த படியாக ஆன்லைன் வர்த்தகத் தில் வேகமாக வளர்ந்துவரும் நாடு நம் இந்தியாதான்.</p>.<p>மின் வணிக நுகர்வோர்களின் எண்ணிக்கை 2013-ம் ஆண்டு இரண்டு கோடிக்கும் குறைவாகவே இருந்தது.</p>.<p>ஆனால், இந்த ஆண்டு ஏறக்குறைய ஆறு கோடியை எட்டக்கூடும் என இது சார்ந்த அமைப்புகள் கூறி வருகின்றன. இதே கால அளவில், மாதம் ஒன்றுக்கு 40 லட்சம் ஆர்டர்களைப் பெற்றுவந்த இந்த நிறுவனங்கள், 1.2 கோடி ஆர்டர் களைப்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.</p>.<p><span style="color: #ff0000"><strong>என்ன காரணம்?</strong></span></p>.<p>இந்த அபரிமிதமான வளர்ச்சிக்கு (ஏறக்குறைய 30%) பலக் காரணங்கள். இந்தியாவில் இன்டர்நெட் உபயோகிப்பவர் களின் எண்ணிக்கை தற்சமயம் 20%. இதில் 10 சதவிகிதம் பேர் ஆன்லைன்மூலம் ஷாப்பிங் செய்கிறார்கள். சீனாவைப் பொறுத்தளவில், இன்டர்நெட் உபயோகிப்போரின் எண்ணிக்கை ஏறக்குறைய 50%. அதில் ஆன்லைனில் பொருட்களை வாங்குபவர்கள் 50%.</p>.<p>இந்தியாவின் ஸ்மார்ட் போன் வளர்ச்சி, மொத்த ஜனத்தொகையில் இளைஞர் களின் எண்ணிக்கை (10 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் சுமார் 35.6 கோடி) ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு முதலீட்டாளர் கள் இந்தத் தொழிலில் பணத்தை வாரியிறைத்துக் கொண்டிருக் கின்றனர்.</p>.<p><span style="color: #ff0000"><strong>எதற்கு வரவேற்பு!</strong></span></p>.<p>விற்பனை/வருமான ரீதியில் இந்திய மின் வணிகத் துறையைப் பொறுத்தவரை, ‘ஆன்லைன் டிராவல்’தான் (அதாவது, பயணம் சம்பந்தப்பட்ட சேவைகள்) முதலிடம் வகிக்கிறது. அதைத் தொடர்ந்து ரீடெயிலிங் (சில்லறை வணிகம்), நிதி சேவை கள், ஆன்லைன் வரி விளம்பரம் போன்றவை சார்ந்த நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.</p>.<p>மின் வணிகம் மூலம் பொருட்களையும், சேவைகளையும் வாங்குவது நாளுக்குநாள் அதிகரித்து வருவதற்கான முக்கியக் காரணம், ஸ்மார்ட் போன்களின் வளர்ச்சி. 2014-ம் ஆண்டு ஆன்லைனில் பொருட் களை வாங்கியவர்களில் மொபைல் போன் செயலி மூலம் வாங்கியவர்களின் எண்ணிக்கை 11%. ஆனால், 2017-ம் ஆண்டு இது 25 சதவிகிதத்தைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>.<p><span style="color: #ff0000"><strong>குவியும் முதலீடு!</strong></span></p>.<p>ஸ்நாப்டீல், ஃப்ளிப்கார்ட், அமேஸான் போன்ற நிறுவனங் கள் தனது இணையத்தளத்தின் மூலம் விற்பனை செய்யக்கூடிய பொருட்கள் அனைத்தையும் தள்ளுபடி விலையில் வருடம் முழுவதும் விற்பனை செய்வதன் மூலமும், வேகமாக டெலிவரி செய்வதன் மூலமும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான புதிய நுகர் வோர்களைப் பெற்று வருகின்றன. இந்த வளர்ந்துவரும் நுகர்வோர் களின் எண்ணிக்கையைக் காரணமாகக் காட்டி, நிதி நிறுவனங்களிடமிருந்து மேலும் முதலீட்டை இந்த நிறுவனங்கள் பெற்று வருகின்றன.</p>.<p style="text-align: left">அப்படிக் கிடைக்கும் முதலீட்டைக் கொண்டு மேலும் தள்ளுபடி அளிக்கத் தங்களுக்குள் போட்டிபோடுகின்றன இந்த இ-காமர்ஸ் நிறுவனங்கள். இப்படிக் கிடைக்கக்கூடிய நிதி திடீரென ஒருநாள் நின்று போய்விட்டால் என்னவாகும்? இதனால்தான் ‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்’ என்கிற மாதிரி ஐபிஓ வந்துவிடச் சில நிறுவனங்கள் துடியாய்த் துடிக்கின்றன.</p>.<p>கடந்த சில மாதங்களில் பல ஆன்லைன்/மின் வணிக நிறுவனங்கள் பல கோடி ரூபாய் களை முதலீடாகப் பெற்றிருக் கின்றன. அவற்றில் குறிப்பிடத் தக்கது, அர்பன் லேடர் (ஃபர்னிச்சர் விற்பனை செய்யும் ஆன்லைன் கடை) ரூ.493 கோடி, ஷாப்க்ளூஸ் ரூ.746 கோடி, பிக்பாஸ்கெட் ரூ.278 கோடி.</p>.<p>இதுபோல, இந்தியாவின் பெரிய ஆன்லைன் வணிகத் தளங்களான ஃப்ளிப்கார்ட், ஸ்நாப்டீலில் மட்டும் 3 பில்லியன் டாலர்களைப் பன்னாட்டு நிறுவனங்களும், வங்கிகளும் முதலீடு செய்துள்ளன.</p>.<p>ஆன்லைன் வணிகத்தில் டாலர்களைக் கொட்டும் முக்கிய நிறுவனங்கள் ரஷ்யாவைச் சேர்ந்த டிஎஸ்டி குளோபல் (DST Global), அமெரிக்காவைச் சேர்ந்த டைகர் குளோபல் (Tiger Global), ஜப்பானைச் சேர்ந்த சாஃப்ட் பேங்க் (Soft Bank), சீனாவைச் சேர்ந்த அலிபாபா போன்றவை.</p>.<p>இவர்கள் செய்த முதலீட்டுக்கு லாபம் கிடைக்குமா என்பது அடுத்தச் சில ஆண்டுகளில் தெரிந்துவிடும். ஒருவேளை ஜெயிக்கவில்லை எனில், 2018-ல் இவர்கள் இந்தத் துறையிலிருந்து வெளியேறத் தொடங்கிவிடு வார்கள் என்பதே இந்தத் துறையைச் சேர்ந்தவர்களின் அனுமானம்.</p>.<p>2000-மாவது ஆண்டுகளில் சில்லறை வணிகர்களுக்கு ‘கிலி’யை ஏற்படுத்த நினைத்து அபரிமிதமான தள்ளுபடியையும், கண்ணை மூடிக்கொண்டு கடை களுக்கு வாடகை கொடுத்தும் வந்த சில மாடர்ன் ரீடெயில் நிறுவனங்கள் தங்களது ‘கல்லா’வைக் கட்ட முடியாமல் நடையைக் கட்டியது ஊரறிந்த கதை. அதுபோல, இப்போது அதிகத் தள்ளுபடி கொடுத்துவரும் ஆன்லைன் வணிகத்தின் நிலையும் ஆகிவிடுமா?</p>.<p><span style="color: #ff0000"><strong>எகிறும் செலவு!</strong></span></p>.<p>இவர்களுக்கு கடை வாடகை அதிகமில்லை என்றாலும், அதிக நுகர்வோர்களைத் தங்கள் வலைத்தளத்துக்கு வரவைத்து, பொருட்களை வாங்கச் செய்ய வேண்டும் என்பதற்காக விளம்பரத்துக்கும், சந்தைப்படுத் துவதற்கும் ஆண்டுக்கு ரூ.350 கோடியை செலவு செய்திருக் கின்றன மும்மூர்த்திகளான அமேஸான், ஸ்நாப்டீல், ஃப்ளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள்.</p>.<p>2014-ம் ஆண்டு வருவாய், ஆண்டு இறுதிவரை ஏறக்குறைய 195 மில்லியன் (19.5 கோடி) டெலிவரிகளைச் செய்துள்ளன ஆன்லைன் நிறுவனங்கள்.</p>.<p>இதில் 23 சதவிகிதமான டெலிவரிகள் நுகர்வோர்களால் பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டு அல்லது டெலிவரி செய்யும் சமயத்தில் வாங்க மறுத்துத் திரும்ப அனுப்பப்பட்டிருக்கின்றன. 36 மில்லியன் நுகர்வோர்களைக் கொண்ட இந்த நிறுவனங்கள் அவர்களுக்குச் சேவை செய்யும் வகையில் இதுவரை செலவிட்டி ருக்கும் தொகை கிட்டத்தட்ட ரூ.9,774 கோடி. இப்படி அவர்கள் செய்யும் செலவுக்கு ஒரு எல்லை இல்லை.</p>.<p>இந்த ஆன்லைன் நிறுவனங் களில் பெரும்பாலானவை இன்னும் நஷ்டத்தில்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதில் முதலீடு செய்யும் வெஞ்சர் கேப்பிட்டல் நிறுவனங்களும், நிதி நிறுவனங்களும் மற்ற முதலீட்டாளர்களும் ஆன்லைன் நிறுவனங்கள் புதிதாக ‘எத்தனை விற்பனையாளர்’களைத் தங்கள் இணையத்தளத்தில் பதிவு செய்ய வைத்திருக்கின்றன என்பதைவிட ‘எத்தனை நுகர்வோர்களைக் கொண்டிருக்கிறது’ என்பதில் தான் அக்கறை காட்டுகின்றன.</p>.<p>இ-காமர்ஸ் துறையின் வேகமான வளர்ச்சியில் எத்தனை நிறுவனங்கள் பிழைத்து நிற்கப் போகின்றன என்பது முக்கிய மான கேள்வி.</p>.<p>பெரிய நிறுவனங்கள் தவிர்த்து, சிறிய நிறுவனங்கள் காலவோட்டத்தில் கரைந்து போய்விடும் என்பதே இப்போதைக்குத் தெளிவாகத் தெரிகிற உண்மை.</p>.<p> இந்த ஆன்லைன் அலையில் நீந்திக் கரைசேரப் போவது எத்தனை பேர் என்பது தெரிய சில ஆண்டுகளாவது ஆகும். அதுவரை ‘ஆடித் தள்ளுபடி’யுடன் ‘ஆன்லைன் தள்ளுபடி’யையும் அனுபவிப்போமே!</p>.<p><span style="color: #ff0000"><strong>இ-காமர்ஸ் இன்னோவேஷன்கள்!</strong></span></p>.<p>அமேஸான், ஃப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வணிகத்தளங்கள் பின்கோடு அல்லது ஏரியா வாரியாகச் சில சில்லறை வணிகக் கடைகள் அல்லது பெட்ரோல் பங்க்-களைத் தேர்ந்தெடுத்து அங்குப் பொருட்களை டெலிவரி செய்ய, ஆர்டர் செய்தவர்கள் அதன் வழியாக வீட்டுக்கோ அல்லது அலுவலகத்துக்கோ செல்லும்போது எடுத்துக்கொள்ளும் முறையைச் சில நகரங்களில் பரிசோதனை முறையில் செய்யத் தொடங்கி இருக்கின்றன.</p>.<p>பெருநகரங்கள் தவிர்த்து இரண்டாம், மூன்றாம் அடுக்கில் உள்ள சிறுநகரங்களையும், கிராமங்களையும் தங்களது சேவை சென்றடைய 1,54,882 தபால் நிலையங்களை (இதில் கிராமப்புறத்தில் உள்ளவை 89%) கொண்டிருக்கும் ‘இந்திய தபால் துறை’யுடன் கைகோக்க ஆன்லைன் நிறுவனங்கள் போட்டிபோட்டு வருகின்றன. ஸ்நாப்டீல், அமேஸான் போன்றவை ஏற்கெனவே இந்தத் துறையுடன் இணைந்து பணியாற்றி வருகின்றன.2014-15-ம் ஆண்டில் ‘கேஷ் ஆன் டெலிவரி’ முறையின் மூலம் ஆன்லைன் நிறுவனங்களின் சார்பில் பொருட்களை டெலிவரி செய்து தபால்துறை வசூலித்தது சுமார் ரூ.500 கோடி!</p>.<p>பிரபலமான மாடர்ன் ரீடெயில் குழுமங்களும், அடிடாஸ் போன்ற விளையாட்டுப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களும் ஆன்லைன் மூலம் தங்களது பொருட்களை விற்க ஆரம்பித்திருக்கின்றன.</p>.<p> நுகர்வோர்களால் பல காரணங்களினால் திரும்ப அனுப்பப்படும் பொருட்களை அந்தந்த நிறுவனங்களிடமிருந்து (உ-ம் அமேஸான், ஃப்ளிப்கார்ட், மிந்த்ரா போன்றவை) வாங்கி, அந்தப் பொருட்களில் ஏதேனும் குறையிருந்தால், அதைச் சரிசெய்து வாரன்டியுடன், மிகவும் குறைந்த விலையில் விற்பதற்கென்று greendust.com என்கிற இணையதளம் உள்ளது.</p>.<p style="text-align: right"><span style="color: #0000ff"><strong>சித்தார்த்தன் சுந்தரம்</strong></span></p>