<p style="text-align: center"><span style="color: #ff0000"><strong>பெரிய பதவிகளில் சொந்தபந்தங்கள்! </strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>எ</strong></span>ந்தவொரு தொழிலுக்கும் மனிதவளமே அடிப்படை. சரியான வேலைக்கு சரியான நபர்கள்</p>.<p> நியமிக்கப்பட வேண்டும். காரணம், சரியான ஆட்களை வேலைக்கு அமர்த்துவதில்தான் நாம் நிறைய தவறு செய்கிறோம். இதனால் அந்தத் தொழிலே தோல்வி அடையும் நிலை உருவாகிவிடுகிறது.</p>.<p>தொழில் விஷயத்தில் நம்மில் பலரும் செய்யும் தவறு, சொந்தங்களுக்கு முக்கியத்துவம் தருவது. அண்ணன், தம்பி, மாமன், மச்சான் என நம்முடைய நெருங்கிய உறவினர்கள் தகுதி எதுவும் இல்லாமல் நம் தொழிலில் முக்கியமான பதவிகளில் இருந்தால், அதனால் தொழில் வளர்ச்சி பாதிப்படையும்.</p>.<p>பல தொழில் நிறுவனங்களில் நான் நேரடியாகக் கண்ட உண்மை இது. சொந்தபந்தங்கள் ஆரம்பத்தில் வெகு எளிதாக பெரிய பதவிகளுக்கு வந்துவிடு வார்கள். ஆனால், பிற்பாடு அவர்களை அந்தப் பதவிகளிலிருந்து வெளியே எடுக்க முடியாமல் கஷ்டப்படுகிற நிலைமையை நானே பார்க்கவும் கேட்கவும் செய்திருக்கிறேன்.</p>.<p>இந்த நெருக்கடிக்கு உள்ளாகாமல் இருக்க வேண்டுமெனில், நிறுவனத்துக்கு தேவையான நபர்களை வேலைக்கு அமர்த்தும்போது, விசுவாசத்துக்கு அதிக முக்கியத்துவம் தரக்கூடாது. இவர் எனக்கு நம்பிக்கையாக இருப்பார். இவர் என் நிறுவனத்துக்கு உண்மையாக இருப்பார்' என்று நாம் சிலரை நம்புகிறோம். இந்த குணங்கள் எல்லா ஊழியர்களிடமும் அடிப்படையாக இருக்க வேண்டியவை. இந்த குணங்கள் சிலரிடம் அதிகமாக இருக்கலாம். இன்னும் சிலர் அதை அதிகமாக வெளிப்படுத்தலாம். இந்த ஒரே காரணத்துக்காக அவர்களை முக்கியமான பதவிகளில் கொண்டுவந்து உட்கார வைக்கக்கூடாது.</p>.<p>சொந்தபந்தங்கள், அது மனைவியே ஆனாலும் சரி, தகுதி உடையவராக இருந்தால் மட்டுமே முக்கியமான பதவி களைத் தந்து கவனிக்க சொல்ல வேண்டும். சற்றும் தகுதி இல்லாத ஒருவருக்கு முக்கிய பொறுப்பைத் தருவது, தான் உருவாக்கிய தொழிலுக்கு தானே செய்யும் மிகப் பெரிய துரோகம் என்பதை ஒவ்வொரு பிசினஸ்மேனும் உணரவேண்டும்.</p>.<p>பிசினஸை நடத்துவதில் இரண்டு முறைகள் இருக்கிறது. ஒன்று, ஃபேமிலி பிசினஸ். இன்னொன்று, பிசினஸ் ஃபேமிலி.</p>.<p>ஃபேமிலி பிசினஸ் என்பது ஒரு தொழிலில் குடும்ப உறுப்பினர்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவது. அதாவது, ஒரு தொழிலில் குடும்பத்தில் எல்லா உறுப்பினர்களும் இருப்பார்கள். அந்தத் தொழில் தொடர்பான அனைத்து முக்கியமான முடிவுகளையும் அந்தக் குடும்பத்து உறுப்பினர் களே எடுப்பார்கள். வெளி நபர்களை முக்கிய முடிவுகள் எடுக்க எந்த வகையிலும் அனுமதிக்க மாட்டார்கள். இன்றைக்கு நாம் பார்க்கும் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் இந்த வகையில் செயல்படக்கூடியதாகவே இருக்கின்றன.</p>.<p>ஆனால், பிசினஸ் ஃபேமிலி என்பது இதற்கு நேர் எதிரானது. இவர்களும் குடும்ப சகிதமாக ஒரு தொழிலை செய்கிறவர்கள் தான். ஆனால், தொழில் நிர்வாகம் தொடர்பான அனைத்து பெரிய பதவிகளிலும் தாங்களே இருக்க வேண்டும் என்று நினைக்காமல், புரஃபஷனல்களாக இருக்கும் வெளிநபர்களையே இவர்கள் நியமிப்பார்கள். நிறுவனம் தொடர்பான முக்கிய முடிவு களை குடும்ப உறுப்பினர்களே எடுக்காமல், அந்த முடிவுகளை எடுக்கும் பொறுப்பை புரஃபஷனல்களிடம் தந்து விடுவார்கள். இந்த புரஃபஷனல் கள் எடுக்கும் முடிவுகள் எந்த அளவுக்கு வெற்றி தருகிறது என்பதை பிற்பாடு ஆராய்ந்து, நடவடிக்கை எடுப்பதுதான் இந்த குடும்ப உறுப்பினர்களின் வேலையாக இருக்கும். </p>.<p>இன்றைய காலகட்டத்தில் ஃபேமிலி பிசினஸாக இருக்கும் நிறுவனங்களைவிடவும் பிசினஸ் ஃபேமிலியாக இருக்கும் நிறுவனங்கள் அதிக அளவில் வெற்றி பெறுவதாக இருக்கின்றன.</p>.<p>ஃபேமிலி பிசினஸில் குடும்ப உறுப்பினர்களின் விருப்பு வெறுப்புகளும், சந்தோஷமுமே அதிக முக்கியத்துவம் பெறும் விஷயங்களாக இருக்கின்றன. குடும்பத்தில் ஒரு உறுப்பினருக்கு ஒரு கார் வாங்கும்போது, பிற உறுப்பினர்களுக்கும் கார் வாங்க வேண்டியிருக்கிறது. இதனால் ஒன்றுக்கு மூன்று காரை ஒரே நேரத்தில் வாங்க வேண்டி இருக்கிறது.</p>.<p>தவிர, குடும்ப உறுப்பினர் களுக்கு பணம் தேவைப்படும் போது பிசினஸில் இருந்து பணத்தை எடுக்க ஆரம்பித்து விடுகிறார்கள். பிசினஸ் பணம் தானே; மூலப்பொருள்களை தந்தவருக்கு பிற்பாடு பணம் தரலாம்; வங்கிக் கடனை பிற்பாடு தந்துகொள்ளலாம் என்கிற மாதிரியெல்லாம் நினைக்கத் தொடங்கி விடுகிறார்கள். இதெல்லாம் தவறே அல்ல என்கிற சிந்தனையில் இருக்கும் நமக்கும், இதன் மூலம் நாம் தொடங்கிய தொழிலுக்கு எவ்வளவு பெரிய பாதிப்பு வரப் போகிறது என்பதை உணர்வதே இல்லை. இப்படி அடுத்தடுத்து செய்யும் தவறுகளால் நம் மொத்த பிசினஸும் சிதைந்துபோகும் போதுதான் அதை மனபாரத்துடன் ஏற்றுக் கொள்கிறோம்.</p>.<p>பிசினஸ் நன்றாக இருந்தால் ஃபேமிலியும் நன்றாக இருக்கும் என்று நினைப்பதே பிசினஸ் ஃபேமிலி. பிசினஸின் நலனுக்கு குந்தகமான எதையும் பிசினஸ் ஃபேமிலியில் இருப்பவர்கள் செய்ய மாட்டார்கள். பிசினஸ் என்பது ஒரு கோயில். தங்களது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கும் சந்தோஷங்களுக்கும் அந்த பிசினஸை பலி தரக்கூடாது என்று பிசினஸ் ஃபேமிலியை சேர்ந்தவர்கள் நினைப்பார்கள்.</p>.<p>சொந்தபந்தங்களை நம் நிறுவனத்தில் வேலைக்கு அமர்த்தும்போது இரண்டு முக்கியமான விஷயங்களை நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். ஒன்று, அவர்கள் ஏற்றுக்கொள்ளும் பதவிகேற்ற தகுதி அவர்களிடம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.</p>.<p>உதாரணமாக, நிறுவனத்தின் கணக்குவழக்குகளை கவனிக்கும் பொறுப்பை உறவினர் ஒருவரிடம் தரப் போகிறோம் எனில், அவர் ஒரு ஆடிட்டராக இருப்பாரேயானால், அவர் தனது வேலையை ஒரு புரஃபஷனல் போல செய்வார். அவர் எடுக்கும் எல்லா முடிவு களுக்கும் பின்னால் இருக்கும் காரண, காரியங்களை எடுத்துச் சொல்வார். இதனால் அவரது நடவடிக்கையை நம்மால் சரியாக ஆராய்ந்து பார்க்க முடியும்.</p>.<p>இரண்டாவது முக்கியமான விஷயம், சொந்தபந்தங்களே முக்கியமான பதவிகளில் இருந்தாலும், அவர்களும் அந்த நிறுவனத்தின் ஒரு ஊழியர் என்பதை மறக்கவிடக் கூடாது. ஒரு நிறுவனத்தைத் தொடங்கி யவரே அந்த நிறுவனத்தின் தலைவராகவோ அல்லது நிர்வாக இயக்குநராகவோ இருக்கலாம். அவரே தன்னை அந்த நிறுவனத்தின் முதல் ஊழியர் என்றுதான் நினைப்பார். அப்படி இருக்கும்போது சொந்தபந்தங்கள் மட்டும் பிற ஊழியர்களுக்கு இல்லாத 'ஸ்பெஷல் பவர்' தங்களுக்கு இருப்பதாக நினைக்கக்கூடாது. அப்படி நினைக்க அனுமதிக்கவும் கூடாது.</p>.<p>இந்த இரண்டு விஷயங்களுக் கும் நல்லதொரு உதாரணம், விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அஸீம் பிரேம்ஜியை சொல்லலாம். பிரேம்ஜி தனது மகனை விப்ரோ நிறுவனத்துக்குள் கொண்டுவர நினைத்தபோது, அவரை உடனடியாக அந்த நிறுவனத்தின் தலைவர் ஆக்கிவிடவில்லை. விப்ரோ நிறுவனத்தின் ஒவ்வொரு பிரிவிலும் தனது மகனை ஒரு சாதாரண ஊழியர் போல வேலை பார்க்க வைத்தார். இதன் மூலம் ஒவ்வொரு பிரிவிலும் வேலை அனுபவம் கிடைத்தது. இதனால் அவரது தகுதி வளர்ந்தது. கூடவே, தானும் இந்த நிறுவனத்தின் ஊழியர் என்கிற எண்ணமும் அவரிடமும் வருகிறது.</p>.<p>நான் எனது மகனை பிசினஸுக்குள் கொண்டுவர நினைத்தபோது அவரை என் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் நேரடியாக கொண்டுவந்துவிட வில்லை. முதலில் அவரை தனியாக ஒரு பிசினஸ் செய்ய அனுமதித்தேன். அந்த பிசினஸில் உள்ள கஷ்ட, நஷ்டங்களை அவரே உணரும்போது, ஒரு பிசினஸை எப்படி நடத்த வேண்டும் என்கிற புரிதல் அவருக்கு வரும். அந்த புரிதலு டன் அவர் என் பிசினஸில் வரும்போது ஒரு நிறுவனத்தை சரியாக நடத்தும் தெளிவு அவரிடம் உருவாகி இருக்கும். அந்தத் தெளிவுதான் இத்தனை ஆண்டுகளாக நான் வளர்த்து வந்த தொழில், மேலும் வளர்ச்சி அடையச் செய்யும்!</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>(ஜெயிப்போம்)</strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>தொழில்முனைவோர்கள் கவனத்துக்கு!</strong></span></p>.<p>தொழில்முனைவோர்களுக்கு ஏற்படும் பிசினஸ் தொடர்பான சந்தேகங்களுக்கு ‘கவின்கேர்’ சி.கே.ரங்கநாதன் இந்தப் பகுதியில் பதில் அளிக்க உள்ளார். உங்களின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை <a href="mailto:businesssecrets@vikatan.com">businesssecrets@vikatan.com</a> என்கிற மெயில் ஐடி-க்கு அனுப்பலாம்.</p>
<p style="text-align: center"><span style="color: #ff0000"><strong>பெரிய பதவிகளில் சொந்தபந்தங்கள்! </strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>எ</strong></span>ந்தவொரு தொழிலுக்கும் மனிதவளமே அடிப்படை. சரியான வேலைக்கு சரியான நபர்கள்</p>.<p> நியமிக்கப்பட வேண்டும். காரணம், சரியான ஆட்களை வேலைக்கு அமர்த்துவதில்தான் நாம் நிறைய தவறு செய்கிறோம். இதனால் அந்தத் தொழிலே தோல்வி அடையும் நிலை உருவாகிவிடுகிறது.</p>.<p>தொழில் விஷயத்தில் நம்மில் பலரும் செய்யும் தவறு, சொந்தங்களுக்கு முக்கியத்துவம் தருவது. அண்ணன், தம்பி, மாமன், மச்சான் என நம்முடைய நெருங்கிய உறவினர்கள் தகுதி எதுவும் இல்லாமல் நம் தொழிலில் முக்கியமான பதவிகளில் இருந்தால், அதனால் தொழில் வளர்ச்சி பாதிப்படையும்.</p>.<p>பல தொழில் நிறுவனங்களில் நான் நேரடியாகக் கண்ட உண்மை இது. சொந்தபந்தங்கள் ஆரம்பத்தில் வெகு எளிதாக பெரிய பதவிகளுக்கு வந்துவிடு வார்கள். ஆனால், பிற்பாடு அவர்களை அந்தப் பதவிகளிலிருந்து வெளியே எடுக்க முடியாமல் கஷ்டப்படுகிற நிலைமையை நானே பார்க்கவும் கேட்கவும் செய்திருக்கிறேன்.</p>.<p>இந்த நெருக்கடிக்கு உள்ளாகாமல் இருக்க வேண்டுமெனில், நிறுவனத்துக்கு தேவையான நபர்களை வேலைக்கு அமர்த்தும்போது, விசுவாசத்துக்கு அதிக முக்கியத்துவம் தரக்கூடாது. இவர் எனக்கு நம்பிக்கையாக இருப்பார். இவர் என் நிறுவனத்துக்கு உண்மையாக இருப்பார்' என்று நாம் சிலரை நம்புகிறோம். இந்த குணங்கள் எல்லா ஊழியர்களிடமும் அடிப்படையாக இருக்க வேண்டியவை. இந்த குணங்கள் சிலரிடம் அதிகமாக இருக்கலாம். இன்னும் சிலர் அதை அதிகமாக வெளிப்படுத்தலாம். இந்த ஒரே காரணத்துக்காக அவர்களை முக்கியமான பதவிகளில் கொண்டுவந்து உட்கார வைக்கக்கூடாது.</p>.<p>சொந்தபந்தங்கள், அது மனைவியே ஆனாலும் சரி, தகுதி உடையவராக இருந்தால் மட்டுமே முக்கியமான பதவி களைத் தந்து கவனிக்க சொல்ல வேண்டும். சற்றும் தகுதி இல்லாத ஒருவருக்கு முக்கிய பொறுப்பைத் தருவது, தான் உருவாக்கிய தொழிலுக்கு தானே செய்யும் மிகப் பெரிய துரோகம் என்பதை ஒவ்வொரு பிசினஸ்மேனும் உணரவேண்டும்.</p>.<p>பிசினஸை நடத்துவதில் இரண்டு முறைகள் இருக்கிறது. ஒன்று, ஃபேமிலி பிசினஸ். இன்னொன்று, பிசினஸ் ஃபேமிலி.</p>.<p>ஃபேமிலி பிசினஸ் என்பது ஒரு தொழிலில் குடும்ப உறுப்பினர்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவது. அதாவது, ஒரு தொழிலில் குடும்பத்தில் எல்லா உறுப்பினர்களும் இருப்பார்கள். அந்தத் தொழில் தொடர்பான அனைத்து முக்கியமான முடிவுகளையும் அந்தக் குடும்பத்து உறுப்பினர் களே எடுப்பார்கள். வெளி நபர்களை முக்கிய முடிவுகள் எடுக்க எந்த வகையிலும் அனுமதிக்க மாட்டார்கள். இன்றைக்கு நாம் பார்க்கும் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் இந்த வகையில் செயல்படக்கூடியதாகவே இருக்கின்றன.</p>.<p>ஆனால், பிசினஸ் ஃபேமிலி என்பது இதற்கு நேர் எதிரானது. இவர்களும் குடும்ப சகிதமாக ஒரு தொழிலை செய்கிறவர்கள் தான். ஆனால், தொழில் நிர்வாகம் தொடர்பான அனைத்து பெரிய பதவிகளிலும் தாங்களே இருக்க வேண்டும் என்று நினைக்காமல், புரஃபஷனல்களாக இருக்கும் வெளிநபர்களையே இவர்கள் நியமிப்பார்கள். நிறுவனம் தொடர்பான முக்கிய முடிவு களை குடும்ப உறுப்பினர்களே எடுக்காமல், அந்த முடிவுகளை எடுக்கும் பொறுப்பை புரஃபஷனல்களிடம் தந்து விடுவார்கள். இந்த புரஃபஷனல் கள் எடுக்கும் முடிவுகள் எந்த அளவுக்கு வெற்றி தருகிறது என்பதை பிற்பாடு ஆராய்ந்து, நடவடிக்கை எடுப்பதுதான் இந்த குடும்ப உறுப்பினர்களின் வேலையாக இருக்கும். </p>.<p>இன்றைய காலகட்டத்தில் ஃபேமிலி பிசினஸாக இருக்கும் நிறுவனங்களைவிடவும் பிசினஸ் ஃபேமிலியாக இருக்கும் நிறுவனங்கள் அதிக அளவில் வெற்றி பெறுவதாக இருக்கின்றன.</p>.<p>ஃபேமிலி பிசினஸில் குடும்ப உறுப்பினர்களின் விருப்பு வெறுப்புகளும், சந்தோஷமுமே அதிக முக்கியத்துவம் பெறும் விஷயங்களாக இருக்கின்றன. குடும்பத்தில் ஒரு உறுப்பினருக்கு ஒரு கார் வாங்கும்போது, பிற உறுப்பினர்களுக்கும் கார் வாங்க வேண்டியிருக்கிறது. இதனால் ஒன்றுக்கு மூன்று காரை ஒரே நேரத்தில் வாங்க வேண்டி இருக்கிறது.</p>.<p>தவிர, குடும்ப உறுப்பினர் களுக்கு பணம் தேவைப்படும் போது பிசினஸில் இருந்து பணத்தை எடுக்க ஆரம்பித்து விடுகிறார்கள். பிசினஸ் பணம் தானே; மூலப்பொருள்களை தந்தவருக்கு பிற்பாடு பணம் தரலாம்; வங்கிக் கடனை பிற்பாடு தந்துகொள்ளலாம் என்கிற மாதிரியெல்லாம் நினைக்கத் தொடங்கி விடுகிறார்கள். இதெல்லாம் தவறே அல்ல என்கிற சிந்தனையில் இருக்கும் நமக்கும், இதன் மூலம் நாம் தொடங்கிய தொழிலுக்கு எவ்வளவு பெரிய பாதிப்பு வரப் போகிறது என்பதை உணர்வதே இல்லை. இப்படி அடுத்தடுத்து செய்யும் தவறுகளால் நம் மொத்த பிசினஸும் சிதைந்துபோகும் போதுதான் அதை மனபாரத்துடன் ஏற்றுக் கொள்கிறோம்.</p>.<p>பிசினஸ் நன்றாக இருந்தால் ஃபேமிலியும் நன்றாக இருக்கும் என்று நினைப்பதே பிசினஸ் ஃபேமிலி. பிசினஸின் நலனுக்கு குந்தகமான எதையும் பிசினஸ் ஃபேமிலியில் இருப்பவர்கள் செய்ய மாட்டார்கள். பிசினஸ் என்பது ஒரு கோயில். தங்களது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கும் சந்தோஷங்களுக்கும் அந்த பிசினஸை பலி தரக்கூடாது என்று பிசினஸ் ஃபேமிலியை சேர்ந்தவர்கள் நினைப்பார்கள்.</p>.<p>சொந்தபந்தங்களை நம் நிறுவனத்தில் வேலைக்கு அமர்த்தும்போது இரண்டு முக்கியமான விஷயங்களை நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். ஒன்று, அவர்கள் ஏற்றுக்கொள்ளும் பதவிகேற்ற தகுதி அவர்களிடம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.</p>.<p>உதாரணமாக, நிறுவனத்தின் கணக்குவழக்குகளை கவனிக்கும் பொறுப்பை உறவினர் ஒருவரிடம் தரப் போகிறோம் எனில், அவர் ஒரு ஆடிட்டராக இருப்பாரேயானால், அவர் தனது வேலையை ஒரு புரஃபஷனல் போல செய்வார். அவர் எடுக்கும் எல்லா முடிவு களுக்கும் பின்னால் இருக்கும் காரண, காரியங்களை எடுத்துச் சொல்வார். இதனால் அவரது நடவடிக்கையை நம்மால் சரியாக ஆராய்ந்து பார்க்க முடியும்.</p>.<p>இரண்டாவது முக்கியமான விஷயம், சொந்தபந்தங்களே முக்கியமான பதவிகளில் இருந்தாலும், அவர்களும் அந்த நிறுவனத்தின் ஒரு ஊழியர் என்பதை மறக்கவிடக் கூடாது. ஒரு நிறுவனத்தைத் தொடங்கி யவரே அந்த நிறுவனத்தின் தலைவராகவோ அல்லது நிர்வாக இயக்குநராகவோ இருக்கலாம். அவரே தன்னை அந்த நிறுவனத்தின் முதல் ஊழியர் என்றுதான் நினைப்பார். அப்படி இருக்கும்போது சொந்தபந்தங்கள் மட்டும் பிற ஊழியர்களுக்கு இல்லாத 'ஸ்பெஷல் பவர்' தங்களுக்கு இருப்பதாக நினைக்கக்கூடாது. அப்படி நினைக்க அனுமதிக்கவும் கூடாது.</p>.<p>இந்த இரண்டு விஷயங்களுக் கும் நல்லதொரு உதாரணம், விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அஸீம் பிரேம்ஜியை சொல்லலாம். பிரேம்ஜி தனது மகனை விப்ரோ நிறுவனத்துக்குள் கொண்டுவர நினைத்தபோது, அவரை உடனடியாக அந்த நிறுவனத்தின் தலைவர் ஆக்கிவிடவில்லை. விப்ரோ நிறுவனத்தின் ஒவ்வொரு பிரிவிலும் தனது மகனை ஒரு சாதாரண ஊழியர் போல வேலை பார்க்க வைத்தார். இதன் மூலம் ஒவ்வொரு பிரிவிலும் வேலை அனுபவம் கிடைத்தது. இதனால் அவரது தகுதி வளர்ந்தது. கூடவே, தானும் இந்த நிறுவனத்தின் ஊழியர் என்கிற எண்ணமும் அவரிடமும் வருகிறது.</p>.<p>நான் எனது மகனை பிசினஸுக்குள் கொண்டுவர நினைத்தபோது அவரை என் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் நேரடியாக கொண்டுவந்துவிட வில்லை. முதலில் அவரை தனியாக ஒரு பிசினஸ் செய்ய அனுமதித்தேன். அந்த பிசினஸில் உள்ள கஷ்ட, நஷ்டங்களை அவரே உணரும்போது, ஒரு பிசினஸை எப்படி நடத்த வேண்டும் என்கிற புரிதல் அவருக்கு வரும். அந்த புரிதலு டன் அவர் என் பிசினஸில் வரும்போது ஒரு நிறுவனத்தை சரியாக நடத்தும் தெளிவு அவரிடம் உருவாகி இருக்கும். அந்தத் தெளிவுதான் இத்தனை ஆண்டுகளாக நான் வளர்த்து வந்த தொழில், மேலும் வளர்ச்சி அடையச் செய்யும்!</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>(ஜெயிப்போம்)</strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>தொழில்முனைவோர்கள் கவனத்துக்கு!</strong></span></p>.<p>தொழில்முனைவோர்களுக்கு ஏற்படும் பிசினஸ் தொடர்பான சந்தேகங்களுக்கு ‘கவின்கேர்’ சி.கே.ரங்கநாதன் இந்தப் பகுதியில் பதில் அளிக்க உள்ளார். உங்களின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை <a href="mailto:businesssecrets@vikatan.com">businesssecrets@vikatan.com</a> என்கிற மெயில் ஐடி-க்கு அனுப்பலாம்.</p>