<p><span style="color: #ff0000"><strong>‘இ</strong></span>து என்னங்க அநியாயமா இருக்கு..? நாலஞ்சு பஸ் இருக்கறவங்க எல்லாம், லட்சம் லட்சமா லாபம்</p>.<p> பார்க்கறாங்க.. நாலாயிரம்... அஞ்சாயிரம் பஸ்ஸு வச்சிக்கிட்டு, இத்தனை கோடி நஷ்டம்னா எப்படிங்க..? இதே கட்டணம்தானே அவங்களும் வாங்கறாங்க? அவங்களுக்கு மட்டும் எப்படி கட்டுப்படி ஆவுது? லாபமா வருது? கார்ப்பரேஷன் வண்டிங்க மட்டும் எப்பவும் ஏன், நஷ்டத்துலயே ஓடுது?’</p>.<p>இங்கே ‘கார்ப்பரேஷன்’ பஸ் என்பது ஒரு உதாரணம்தான். தொலைபேசித் துறை, அஞ்சல் அலுவலகம் என மத்திய, மாநில அரசாங்கங்கள் நடத்தும் பல்வேறு நிறுவனங்கள் மீது இப்படிப்பட்ட விமர்சனங்கள் பல எழுவதுண்டு. இந்த கேள்விக்கான பதிலைப் பார்ப்பதற்கு முன்...</p>.<p>பொருளாதாரத்தில், ஒரு குறிப்பிட்ட சொல் அடிக்கடி பயன்படுத்தப்படு கிறது. அந்த சொல்தான் உற்பத்தித் திறன்(Productivity) என்பது. மேலோட்டமாகப் பார்த்தால், உற்பத்தி செய்வதில் உள்ள திறமை. இப்படித் தானே பொருள் வருகிறது?</p>.<p>அது ஓரளவுக்குத்தான் சரி. காரணம், ‘திறமை’, ‘திறன்’ இரண்டுக்கும் இடையே, சட்டென்று புரிந்துகொள்ள முடியாத படிக்கு, மிக மெல்லிய வேறுபாடு இருக்கிறது. </p>.<p>திறமை (Talent), ஒருவரின் அறிவு மற்றும் உழைப்பு சார்ந்தது. திறன் (Capacity) என்பதோ, ஒருவரின் அதிகபட்ச பங்களிப்பு பற்றியது. விசைத் திறன், குதிரைத் திறன் என்றெல்லாம் நாம் எதைக் குறிப்பிடுகிறோம்? ஒரு இயந்திரத்தின் அதிகபட்ச செயல்பாட்டின் அளவீடு.</p>.<p>‘திறன்’ என்பது, 1) ஒருவரின் திறமை; 2) அவரது செயலின் உண்மையான விளைவு (Actual Result) இரண்டுக்கும் இடையிலான விகிதம் எனலாம். இதற்கு மேல், டெக்னிக்கலா போக வேண்டாம்.</p>.<p>ஆனால், உற்பத்தித் திறனைப் பற்றி இந்த அளவுக்கேனும் தெரிந்துவைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.</p>.<p>பொதுத்துறை நிறுவனங்கள் என்றாலே, எடுத்த எடுப்பில் வருகிற கேள்வி லாபமா - நஷ்டமா? இந்த வினாவுக்கான விடை, உற்பத்தித் திறனில் அடங்கி உள்ளது. இந்த விகிதம் ஆரோக்கியமானதாக இருந்தால், வினாவுக்கான விடையும் அதே அளவு ஆரோக்கியமானதாக இருக்கும். </p>.<p>இப்போதைக்கு நம்மைப் பொறுத்தவரை, ஒரே ஒரு அம்சம்தான் பிரதானம். அதுதான் செலவு!</p>.<p>உற்பத்தித் திறனுக்கும் செலவு களுக்கும் நேரடியான தொடர்பு உண்டு. ஒருவர், தனது சபரிமலை யாத்திரைக்கு, பத்தாயிரம் செலவு செய்கிறார். அதையே, வேறு ஒருவர், இரண்டாயிரத்தில் நிறைவேற்றி விடுகிறார்.</p>.<p>முன்னவருக்கு ‘வசதியாக’ இருந்த யாத்திரை, பின்னவருக்கு ‘திருப்தியாக’ இருந்தது. (இருவருக்குமே வசதியாகவும் திருப்தியாகவும் இருந்து இருக்கலாம்.) ஆனால், ‘விளைவு’ என்பது ஒன்றுதான்.</p>.<p>ஒருவருக்கு செலவு பத்தாயிரம் ரூபாய்; மற்றவருக்கோ இரண்டாயிரம் ரூபாய். பிற அம்சங்களைத் தவிர்த்து, செலவுத் தொகையை மட்டுமே கணக்கில்கொண்டு பார்த்தால், முன்னவரைவிட, பின்னவரின் உற்பத்தித் திறன் ஐந்து மடங்கு அதிகம்! எப்படி..? பத்தாயிரம் ரூபாயில், பின்னவரைப் போல், ஐந்து பேர் சென்று வரலாமே!</p>.<p>சுமாரான மாத சம்பளத்தில் இருக்கும் ஒருவர், தனது மகனின் முதல் பிறந்த நாளைக் கொண்டாட நினைக்கிறார். ஒரு லட்சம் ரூபாய் செலுத்தி, ஒரு நல்ல ஓட்டலில் தனது மகனின் பிறந்த நாள் விழாவை நடத்தலாம்.</p>.<p>இன்னும் சிறப்பாகவும், குறைவான செலவிலும், வீட்டிலேயே, நன்கு திட்டமிட்டு, கொண்டாடலாம். எந்த அளவுக்குக் குறைந்த செலவில் ஒரு செயலை செய்து முடிக்கிறோம் என்பதுதான் முக்கியம்.</p>.<p>ஒருவர் 100 ரூபாயில் தயாரிக்கிற ஒரு பொருளை, ஏறத்தாழ அதே தரத்தில், 110 ரூபாய்க்கு நாம் தயாரித்தால், நம்முடைய உற்பத்தித் திறன் குறைவுதானே? (அவர் 120 ரூபாய்க்கு விற்கிறார்; நான் 150-க்கு விற்கிறேன் என்பதெல்லாம், ‘அவுட் ஆஃப் சிலபஸ்’)</p>.<p>இனிவர இருக்கும் பகுதிகளை தயவு செய்து, ‘பொதுத் துறை நிறுவனங்களில் செலவு மேலாண்மை’ என்கிற கண்ணோட்டத்தில் இருந்து மட்டும் பார்க்கவும். கூரிய கத்தி மேல் நடப்பது போன்று ஆபத்தானது இது. இதனாலேயே இது குறித்து எழுத பேச விவரம் அறிந்தவர்கள் தயங்குகிறார்கள்.</p>.<p>எந்தவொரு மனக் கிலேசத்துக்கும் இடம் தராமல், இதுவும் ஒரு ‘சப்ஜெக்ட்’; இதையும் நாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற மனநிலையில் பார்க்கவும்.</p>.<p>‘குறைந்த செலவில் நிறைந்த லாபம்’. இதுதான், செலவு மேலாண்மை பரிந்துரைக்கும் உற்பத்தித் திறன். இந்தியாவில் உள்ள பொதுத் துறை நிறுவனங்கள், தோல்வியைச் சந்திக்கிற களம். இத்தனை பொதுத் துறை நிறுவனங்கள் லாபம் சம்பாதிக் கின்றனவே... அதை ஏன் யாரும் சொல்வது இல்லை..?</p>.<p>காரணம், இந்த லாபம் இன்னமும் கூட அதிகமாக இருந்திருக்கலாம் என்கிற எண்ணம்தான். அதாவது, கிடைத்திருக்கும் இந்த அளவு லாபமும், சரியான செலவு மேலாண்மையினால் வந்ததல்ல; மாறாக, தவறான செலவுகளையும் மீறி கிடைத்தது.</p>.<p>எளிமையாகச் சொல்வதானால், இன்னமும் அதிக லாபம் கிடைத்து இருக்க முடியும். ஆனாலும், கிடைத்ததைக் கொண்டு திருப்திப் பட்டுக் கொள்கிறோம்.</p>.<p>ஒருவர், தனியார் பஸ் முதலாளி. ஓட்டுநர், நடத்துனர் ஆகியோருக்கு எவ்வளவு சம்பளம் தருவார்..? பயணிகளிடம் இருந்து கட்டணம் வசூலிக்கிற வேலையே செய்கிற, அரசுப் பேருந்துகளின் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தைவிட குறைவாக தருவார்.</p>.<p>ஒரு பேருந்துக்கு மாதம் ஒன்றுக்கு, தொழிலாளர் ஊதியத்துக்கு என்று சுமார் இரண்டு லட்சம் ரூபாய் வரை (எட்டு மணி நேரப் பணி அடிப்படையில், இரண்டு ஓட்டுநர், இரண்டு நடத்துனர் ஆகியோருக்கு) அரசுப் போக்குவரத்தில் செலவு ஆகிறது.</p>.<p>இதன் மீது, எரிபொருள் விலை, பராமரிப்புச் செலவு ஆகியன சேர்த்தால், ஒரு பேருந்துக்கு, ஒரு மாதத்துக்கு, சுமார் மூன்று லட்ச ரூபாய் செலவு. அதாவது, நாள் ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய்.</p>.<p>நாள்தோறும் இவ்வளவு பணம், வசூல் ஆகுமா..?</p>.<p>தனியார் துறையில், அனைத்துச் செலவுகளும், வசூல் தொகைக்குள் அடங்கி விடுவதை உறுதி செய்து கொள்கிறார்கள். வேறு விதமாகச் சொன்னால், ஊதியம், இன்னம் பிற வசூலுடன் இணைக்கப்பட்ட செலவுகள். (Collection linked Expenditure) அதனால் லாபம் ஈட்ட முடிகிறது.</p>.<p>தனியார் செய்வது சரி; அரசுத் துறையில் நடப்பது தவறு என்பதல்ல. அரசுக்கு என்று, சில சமூகக் கடமைகள் உண்டு. பொறுப்புகள் உண்டு. <br /> தொழிலாளர் நலன், சாமான்யர்களின் வாழ்க்கை நிலை, அரசாங்கத்தின் கொள்கைகள் என்று பல அம்சங்கள் இதில் அடங்கியிருப்பதால், பொதுத் துறை நிறுவனங்களில் செலவு மேலாண்மை விதிகளை முழுவதுமாகக் கடைபிடிக்க முடிவதில்லை. </p>.<p>இந்த விஷயத்தில் ‘ஏதாவது செய்ய வேண்டும்’ என்பதற்காக, சிறிய அளவிலேனும், ‘சிக்கன நடவடிக்கைகள்’ என்று அவ்வப்போது அறிவிக்கப்படும். கடுமையான எதிர்ப்பின் காரணமாக நாளடைவில் அது தானாகவே மறைந்தும் போகும்.</p>.<p>பொதுத் துறை நிறுவனங்கள் லாபகரமாக இயங்க வேண்டும் என்றால், நிதிகளைக் கையாள்வதில் கட்டுப்பாடு (Fiscal Discipline) மிக அவசியம்.</p>.<p>நம் நாட்டைப் பொறுத்தவரையில், மறு நடவடிக்கை, மறு ஆய்வு, மறு சீரமைப்பு என்று எதுவாக இருந்தாலும், அதன் விளைவு என்னவோ, கூடுதல் செலவு என்று மட்டுமே இருந்து வருகிறது.</p>.<p>நேர்மையான விலையில், தரமான மூலப் பொருட்கள் தடையின்றி கிடைக்கச் செய்தல், இயந்திரங்களின் கொள்முதல், தொடர்ந்த நீடித்த பராமரிப்பு போன்றவற்றின் ஒப்பந்தப் பணிகளில் முறைகேடுகளுக்கு வழியில்லாத அமைப்பு முறையை (Fool-proof system) ஏற்படுத்துதல், அதி நவீனத் தொழில்நுட்ப முறையை அமல்படுத்துதல், சீரான சுமூகமான நிர்வாகம் - தொழிலாளர் நல்லுறவைப் பேணுதல், வணிகத்தில் இடைத் தரகர்களின் தலையீட்டை அறவே ஒழித்தல் ஆகியனவற்றை செய்தாலே போதும்; லாபம் ஈட்டுவது உறுதி.</p>.<p>ஆனால்... பல திசைகளில் இருந்தும் எழுகிற ‘இழுப்புகளும்’ அழுத்தங்களும், போதாக் குறைக்கு வலுவான அரசியல் காரணிகளும் சேர்ந்துகொண்டு, பொதுத் துறை நிறுவனங்களில் செலவு மேலாண்மை என்பது, ஏட்டில்கூட இல்லாத நிலையை ஏற்படுத்தி விட்டது.</p>.<p>செலவு மேலாண்மையின் விதிகளுக்கு உட்பட்டு நிர்வகிக்க முடியுமானால், இந்தியாவில் உள்ள பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்களுமே லாபம் ஈட்டக் கூடியனதாம். இனி, பொதுப் பணத்தைக் கையாள்வோருக்கான செலவு விதிகள் சில...</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>(சேர்ப்போம்)</strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>இந்தியர்களின் வெளிநாட்டு முதலீடு குறைந்தது!</strong></span></p>.<p>கடந்த அக்டோபர் மாதத்தில் இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் மேற்கொள்ளும் முதலீடு ரூ.15,000 கோடியாக குறைந்துள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது. 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்திய நிறுவனங்கள் 2.88 பில்லியன் டாலர் (ரூ.19,000 கோடி) அளவில் வெளிநாடுகளில் முதலீடுகளை மேற்கொண்டிருந்தன.</p>.<p>ஆனால், இந்த ஆண்டு அந்த முதலீடு 21% சரிந்து, 2.28 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. இதில் 1.72 பில்லியன் டாலர் கடன் பத்திரங்களிலும், 210.94 மில்லியன் டாலர் கடன்களிலும், 341.82 மில்லியன் டாலர் ஈக்விட்டி திட்டங்களிலும் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p>
<p><span style="color: #ff0000"><strong>‘இ</strong></span>து என்னங்க அநியாயமா இருக்கு..? நாலஞ்சு பஸ் இருக்கறவங்க எல்லாம், லட்சம் லட்சமா லாபம்</p>.<p> பார்க்கறாங்க.. நாலாயிரம்... அஞ்சாயிரம் பஸ்ஸு வச்சிக்கிட்டு, இத்தனை கோடி நஷ்டம்னா எப்படிங்க..? இதே கட்டணம்தானே அவங்களும் வாங்கறாங்க? அவங்களுக்கு மட்டும் எப்படி கட்டுப்படி ஆவுது? லாபமா வருது? கார்ப்பரேஷன் வண்டிங்க மட்டும் எப்பவும் ஏன், நஷ்டத்துலயே ஓடுது?’</p>.<p>இங்கே ‘கார்ப்பரேஷன்’ பஸ் என்பது ஒரு உதாரணம்தான். தொலைபேசித் துறை, அஞ்சல் அலுவலகம் என மத்திய, மாநில அரசாங்கங்கள் நடத்தும் பல்வேறு நிறுவனங்கள் மீது இப்படிப்பட்ட விமர்சனங்கள் பல எழுவதுண்டு. இந்த கேள்விக்கான பதிலைப் பார்ப்பதற்கு முன்...</p>.<p>பொருளாதாரத்தில், ஒரு குறிப்பிட்ட சொல் அடிக்கடி பயன்படுத்தப்படு கிறது. அந்த சொல்தான் உற்பத்தித் திறன்(Productivity) என்பது. மேலோட்டமாகப் பார்த்தால், உற்பத்தி செய்வதில் உள்ள திறமை. இப்படித் தானே பொருள் வருகிறது?</p>.<p>அது ஓரளவுக்குத்தான் சரி. காரணம், ‘திறமை’, ‘திறன்’ இரண்டுக்கும் இடையே, சட்டென்று புரிந்துகொள்ள முடியாத படிக்கு, மிக மெல்லிய வேறுபாடு இருக்கிறது. </p>.<p>திறமை (Talent), ஒருவரின் அறிவு மற்றும் உழைப்பு சார்ந்தது. திறன் (Capacity) என்பதோ, ஒருவரின் அதிகபட்ச பங்களிப்பு பற்றியது. விசைத் திறன், குதிரைத் திறன் என்றெல்லாம் நாம் எதைக் குறிப்பிடுகிறோம்? ஒரு இயந்திரத்தின் அதிகபட்ச செயல்பாட்டின் அளவீடு.</p>.<p>‘திறன்’ என்பது, 1) ஒருவரின் திறமை; 2) அவரது செயலின் உண்மையான விளைவு (Actual Result) இரண்டுக்கும் இடையிலான விகிதம் எனலாம். இதற்கு மேல், டெக்னிக்கலா போக வேண்டாம்.</p>.<p>ஆனால், உற்பத்தித் திறனைப் பற்றி இந்த அளவுக்கேனும் தெரிந்துவைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.</p>.<p>பொதுத்துறை நிறுவனங்கள் என்றாலே, எடுத்த எடுப்பில் வருகிற கேள்வி லாபமா - நஷ்டமா? இந்த வினாவுக்கான விடை, உற்பத்தித் திறனில் அடங்கி உள்ளது. இந்த விகிதம் ஆரோக்கியமானதாக இருந்தால், வினாவுக்கான விடையும் அதே அளவு ஆரோக்கியமானதாக இருக்கும். </p>.<p>இப்போதைக்கு நம்மைப் பொறுத்தவரை, ஒரே ஒரு அம்சம்தான் பிரதானம். அதுதான் செலவு!</p>.<p>உற்பத்தித் திறனுக்கும் செலவு களுக்கும் நேரடியான தொடர்பு உண்டு. ஒருவர், தனது சபரிமலை யாத்திரைக்கு, பத்தாயிரம் செலவு செய்கிறார். அதையே, வேறு ஒருவர், இரண்டாயிரத்தில் நிறைவேற்றி விடுகிறார்.</p>.<p>முன்னவருக்கு ‘வசதியாக’ இருந்த யாத்திரை, பின்னவருக்கு ‘திருப்தியாக’ இருந்தது. (இருவருக்குமே வசதியாகவும் திருப்தியாகவும் இருந்து இருக்கலாம்.) ஆனால், ‘விளைவு’ என்பது ஒன்றுதான்.</p>.<p>ஒருவருக்கு செலவு பத்தாயிரம் ரூபாய்; மற்றவருக்கோ இரண்டாயிரம் ரூபாய். பிற அம்சங்களைத் தவிர்த்து, செலவுத் தொகையை மட்டுமே கணக்கில்கொண்டு பார்த்தால், முன்னவரைவிட, பின்னவரின் உற்பத்தித் திறன் ஐந்து மடங்கு அதிகம்! எப்படி..? பத்தாயிரம் ரூபாயில், பின்னவரைப் போல், ஐந்து பேர் சென்று வரலாமே!</p>.<p>சுமாரான மாத சம்பளத்தில் இருக்கும் ஒருவர், தனது மகனின் முதல் பிறந்த நாளைக் கொண்டாட நினைக்கிறார். ஒரு லட்சம் ரூபாய் செலுத்தி, ஒரு நல்ல ஓட்டலில் தனது மகனின் பிறந்த நாள் விழாவை நடத்தலாம்.</p>.<p>இன்னும் சிறப்பாகவும், குறைவான செலவிலும், வீட்டிலேயே, நன்கு திட்டமிட்டு, கொண்டாடலாம். எந்த அளவுக்குக் குறைந்த செலவில் ஒரு செயலை செய்து முடிக்கிறோம் என்பதுதான் முக்கியம்.</p>.<p>ஒருவர் 100 ரூபாயில் தயாரிக்கிற ஒரு பொருளை, ஏறத்தாழ அதே தரத்தில், 110 ரூபாய்க்கு நாம் தயாரித்தால், நம்முடைய உற்பத்தித் திறன் குறைவுதானே? (அவர் 120 ரூபாய்க்கு விற்கிறார்; நான் 150-க்கு விற்கிறேன் என்பதெல்லாம், ‘அவுட் ஆஃப் சிலபஸ்’)</p>.<p>இனிவர இருக்கும் பகுதிகளை தயவு செய்து, ‘பொதுத் துறை நிறுவனங்களில் செலவு மேலாண்மை’ என்கிற கண்ணோட்டத்தில் இருந்து மட்டும் பார்க்கவும். கூரிய கத்தி மேல் நடப்பது போன்று ஆபத்தானது இது. இதனாலேயே இது குறித்து எழுத பேச விவரம் அறிந்தவர்கள் தயங்குகிறார்கள்.</p>.<p>எந்தவொரு மனக் கிலேசத்துக்கும் இடம் தராமல், இதுவும் ஒரு ‘சப்ஜெக்ட்’; இதையும் நாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற மனநிலையில் பார்க்கவும்.</p>.<p>‘குறைந்த செலவில் நிறைந்த லாபம்’. இதுதான், செலவு மேலாண்மை பரிந்துரைக்கும் உற்பத்தித் திறன். இந்தியாவில் உள்ள பொதுத் துறை நிறுவனங்கள், தோல்வியைச் சந்திக்கிற களம். இத்தனை பொதுத் துறை நிறுவனங்கள் லாபம் சம்பாதிக் கின்றனவே... அதை ஏன் யாரும் சொல்வது இல்லை..?</p>.<p>காரணம், இந்த லாபம் இன்னமும் கூட அதிகமாக இருந்திருக்கலாம் என்கிற எண்ணம்தான். அதாவது, கிடைத்திருக்கும் இந்த அளவு லாபமும், சரியான செலவு மேலாண்மையினால் வந்ததல்ல; மாறாக, தவறான செலவுகளையும் மீறி கிடைத்தது.</p>.<p>எளிமையாகச் சொல்வதானால், இன்னமும் அதிக லாபம் கிடைத்து இருக்க முடியும். ஆனாலும், கிடைத்ததைக் கொண்டு திருப்திப் பட்டுக் கொள்கிறோம்.</p>.<p>ஒருவர், தனியார் பஸ் முதலாளி. ஓட்டுநர், நடத்துனர் ஆகியோருக்கு எவ்வளவு சம்பளம் தருவார்..? பயணிகளிடம் இருந்து கட்டணம் வசூலிக்கிற வேலையே செய்கிற, அரசுப் பேருந்துகளின் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தைவிட குறைவாக தருவார்.</p>.<p>ஒரு பேருந்துக்கு மாதம் ஒன்றுக்கு, தொழிலாளர் ஊதியத்துக்கு என்று சுமார் இரண்டு லட்சம் ரூபாய் வரை (எட்டு மணி நேரப் பணி அடிப்படையில், இரண்டு ஓட்டுநர், இரண்டு நடத்துனர் ஆகியோருக்கு) அரசுப் போக்குவரத்தில் செலவு ஆகிறது.</p>.<p>இதன் மீது, எரிபொருள் விலை, பராமரிப்புச் செலவு ஆகியன சேர்த்தால், ஒரு பேருந்துக்கு, ஒரு மாதத்துக்கு, சுமார் மூன்று லட்ச ரூபாய் செலவு. அதாவது, நாள் ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய்.</p>.<p>நாள்தோறும் இவ்வளவு பணம், வசூல் ஆகுமா..?</p>.<p>தனியார் துறையில், அனைத்துச் செலவுகளும், வசூல் தொகைக்குள் அடங்கி விடுவதை உறுதி செய்து கொள்கிறார்கள். வேறு விதமாகச் சொன்னால், ஊதியம், இன்னம் பிற வசூலுடன் இணைக்கப்பட்ட செலவுகள். (Collection linked Expenditure) அதனால் லாபம் ஈட்ட முடிகிறது.</p>.<p>தனியார் செய்வது சரி; அரசுத் துறையில் நடப்பது தவறு என்பதல்ல. அரசுக்கு என்று, சில சமூகக் கடமைகள் உண்டு. பொறுப்புகள் உண்டு. <br /> தொழிலாளர் நலன், சாமான்யர்களின் வாழ்க்கை நிலை, அரசாங்கத்தின் கொள்கைகள் என்று பல அம்சங்கள் இதில் அடங்கியிருப்பதால், பொதுத் துறை நிறுவனங்களில் செலவு மேலாண்மை விதிகளை முழுவதுமாகக் கடைபிடிக்க முடிவதில்லை. </p>.<p>இந்த விஷயத்தில் ‘ஏதாவது செய்ய வேண்டும்’ என்பதற்காக, சிறிய அளவிலேனும், ‘சிக்கன நடவடிக்கைகள்’ என்று அவ்வப்போது அறிவிக்கப்படும். கடுமையான எதிர்ப்பின் காரணமாக நாளடைவில் அது தானாகவே மறைந்தும் போகும்.</p>.<p>பொதுத் துறை நிறுவனங்கள் லாபகரமாக இயங்க வேண்டும் என்றால், நிதிகளைக் கையாள்வதில் கட்டுப்பாடு (Fiscal Discipline) மிக அவசியம்.</p>.<p>நம் நாட்டைப் பொறுத்தவரையில், மறு நடவடிக்கை, மறு ஆய்வு, மறு சீரமைப்பு என்று எதுவாக இருந்தாலும், அதன் விளைவு என்னவோ, கூடுதல் செலவு என்று மட்டுமே இருந்து வருகிறது.</p>.<p>நேர்மையான விலையில், தரமான மூலப் பொருட்கள் தடையின்றி கிடைக்கச் செய்தல், இயந்திரங்களின் கொள்முதல், தொடர்ந்த நீடித்த பராமரிப்பு போன்றவற்றின் ஒப்பந்தப் பணிகளில் முறைகேடுகளுக்கு வழியில்லாத அமைப்பு முறையை (Fool-proof system) ஏற்படுத்துதல், அதி நவீனத் தொழில்நுட்ப முறையை அமல்படுத்துதல், சீரான சுமூகமான நிர்வாகம் - தொழிலாளர் நல்லுறவைப் பேணுதல், வணிகத்தில் இடைத் தரகர்களின் தலையீட்டை அறவே ஒழித்தல் ஆகியனவற்றை செய்தாலே போதும்; லாபம் ஈட்டுவது உறுதி.</p>.<p>ஆனால்... பல திசைகளில் இருந்தும் எழுகிற ‘இழுப்புகளும்’ அழுத்தங்களும், போதாக் குறைக்கு வலுவான அரசியல் காரணிகளும் சேர்ந்துகொண்டு, பொதுத் துறை நிறுவனங்களில் செலவு மேலாண்மை என்பது, ஏட்டில்கூட இல்லாத நிலையை ஏற்படுத்தி விட்டது.</p>.<p>செலவு மேலாண்மையின் விதிகளுக்கு உட்பட்டு நிர்வகிக்க முடியுமானால், இந்தியாவில் உள்ள பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்களுமே லாபம் ஈட்டக் கூடியனதாம். இனி, பொதுப் பணத்தைக் கையாள்வோருக்கான செலவு விதிகள் சில...</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>(சேர்ப்போம்)</strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>இந்தியர்களின் வெளிநாட்டு முதலீடு குறைந்தது!</strong></span></p>.<p>கடந்த அக்டோபர் மாதத்தில் இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் மேற்கொள்ளும் முதலீடு ரூ.15,000 கோடியாக குறைந்துள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது. 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்திய நிறுவனங்கள் 2.88 பில்லியன் டாலர் (ரூ.19,000 கோடி) அளவில் வெளிநாடுகளில் முதலீடுகளை மேற்கொண்டிருந்தன.</p>.<p>ஆனால், இந்த ஆண்டு அந்த முதலீடு 21% சரிந்து, 2.28 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. இதில் 1.72 பில்லியன் டாலர் கடன் பத்திரங்களிலும், 210.94 மில்லியன் டாலர் கடன்களிலும், 341.82 மில்லியன் டாலர் ஈக்விட்டி திட்டங்களிலும் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p>