<p><strong><span style="color: rgb(255, 0, 0);">“க</span></strong>டந்த இதழில் பெண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டம் பற்றி விரிவாகக் குறிப்பிட்டிருந்தீர்கள். இதேபோல், ஆண் குழந்தைகளின் எதிர்காலத் தேவைக்குச் சேமிக்க ஏதாவது திட்டம் தபால் அலுவலகத்தில் இருக்கிறதா?” என நெல்லை மாவட்டம் கடையத்தைச்சேர்ந்த கமலக்கண்ணன் கேட்டிருக்கிறார். அதுகுறித்து இப்போது பார்ப்போம்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong> பொன் மகன் பொது வைப்பு நிதித் திட்டம்</strong></span><br /> <br /> ஆண் குழந்தைகளின் எதிர்காலத் தேவைக்கு முதலீடு செய்ய, ‘பொன் மகன் பொது வைப்பு நிதித் திட்டம்’ தபால் அலுவலகத்தில் இருக்கிறது. இந்தத் திட்டத்தில் செலுத்தப்படும் தொகைக்கு, 80சி பிரிவில், வருமானவரி விலக்கு அளிக்கப்படு கிறது. வட்டி வருமானத்துக்கும் வரிச் சலுகை அளிக்கப்படுகிறது. <br /> <br /> 10 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள், பெற்றோர்/ பாதுகாப்பாளர் உதவியுடன் இந்தத் திட்டத்தில் கணக்குத் தொடங்கலாம்; 10 வயதுக்கு மேற்பட்ட ஆண் குழந்தைகள் இந்தத் திட்டத்தில் தாங்களாகவே கணக்குத் தொடங்கலாம். இந்தத் திட்டத்தின்கீழ் கணக்குத் தொடங்க அதிகபட்ச வயது வரம்பு எதுவும் கிடையாது. <br /> <br /> ஆண்டுக்கு, 100 ரூபாய் முதல் 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். கணக்குத் தொடங்கிய மூன்றாம் ஆண்டிலிருந்து, கடன் வசதி இருக்கிறது. ஏழாம் ஆண்டில், 50 சதவிகிதத் தொகையைத் திரும்பப் பெறலாம். இது 15 ஆண்டு காலத் திட்டம். அதாவது, பொதுமக்கள் சேமநல நிதித் திட்டமான பிபிஎஃப்-ன் (பப்ளிக் பிராவிடென்ட் ஃபண்ட்) அம்சங்களை அப்படியே கொண்டு, இந்தத் திட்டத்துக்கு ‘பொன் மகன் பொது வைப்பு நிதித் திட்டம்’ என மத்திய அரசு பெயர் வைத்திருக்கிறது. <br /> <br /> பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் ஆண்டுக்கு 8.5% வட்டி வழங்கும் மத்திய அரசு, பொன் மகன் பொது வைப்பு நிதித் திட்டத்தில் ஆண்டுக்கு 8 சதவிகிதமே வட்டி வழங்குவது கவனிக்கத்தக்கது. <br /> <strong><br /> </strong><span style="color: rgb(255, 0, 0);"><strong> மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்! </strong></span><br /> <br /> அடுத்து, தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்களில் ஒன்றான, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizen Savings Scheme (SCSS) Account) பற்றி விரிவாகப் பார்ப்போம். <br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong> அடிப்படைத் தகுதி</strong></span><br /> <br /> கடந்த 2004-ம் ஆண்டு இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்ட மிகவும் மூத்த குடிமக்களுக்கு வருமானவரியைச் சேமிக்கும் திட்டம் இது. <br /> <br /> விருப்ப ஓய்வுத் திட்டத்தின் கீழ் முன்கூட்டியே ஓய்வுபெற்ற 55 வயதுள்ளவர்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். பணி ஓய்வுபெற்ற ஒரு மாதத்துக்குள் இதில் முதலீடு செய்துவிட வேண்டும். முதலீட்டுத் தொகை பணி ஓய்வின்போது கிடைத்தத் தொகையை விட அதிகமாக இருக்கக்கூடாது. ராணுவப் பணியிலிருந்து ஓய்வுபெற்றவர்கள், வயது வரம்பு எதுவும் இல்லாமல் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong> குறைந்த முதலீட்டுத் தொகை</strong></span><br /> <br /> இந்தத் திட்டத்தில் குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ.1,000 ஆக உள்ளது. அதன் பிறகு, ஆயிரத்தின் மடங்குகளில் முதலீடு செய்யலாம். அதிகபட்ச முதலீட்டுத் தொகை ரூ.15 லட்சம். கணவன் - மனைவி கூட்டாக இந்தக் கணக்கை ஆரம்பிக்கலாம். <br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>எங்கே முதலீட்டை ஆரம்பிப்பது?</strong></span><br /> <br /> தபால் அலுவலகம், எஸ்பிஐ, ஐசிஐசிஐ போன்ற வங்கிகள் மூலம் முதலீடு செய்யலாம். தற்போதைய நிலையில், சில வங்கிகளில் இந்தத் திட்டத்தில் ஆன்லைன் மூலம் சேர்ந்துகொள்ளும் வசதி இருக்கிறது. <br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong> தேவையான ஆதாரங்கள்</strong></span><br /> <br /> அடையாளம், வயது, முகவரிக்கான ஆதாரங்களைக் கொடுக்க வேண்டும். மார்பளவு புகைப்படங்கள் இரண்டு தேவைப்படும்.<br /> <br /> கணக்குத் தொடங்கும்போது, அசல் சான்றிதழ்களை உடன் எடுத்துச்செல்வது அவசியம். <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);"> <br /> </span></strong><span style="color: rgb(255, 0, 0);"><strong> வட்டி வருமானம், முதலீட்டுக் காலம்! </strong></span><br /> <br /> தற்போதைய நிலையில், ஆண்டுக்கு 8.5% வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும். மார்ச் 31, ஜூன் 30, செப்டம்பர் 30, டிசம்பர் 31 ஆகிய தேதிகளில் வட்டி வழங்கப்படும். <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);"><br /> </span></strong><span style="color: rgb(255, 0, 0);"><strong>வட்டி கணக்கிடும் ஃபார்முலா</strong></span><br /> <br /> வட்டி கணக்கிடுவதற்கான ஃபார்முலா இதுதான்... Pr / (4X100). இதில் P என்பது Principal, அதாவது, அசல்; r என்பது Interest Rate, அதாவது வட்டி விகிதம். இந்த ஃபார்முலாவை ஓர் உதாரணத்துடன் சொன்னால் நன்றாகப் புரியும். <br /> <br /> ஒருவர் ரூ. 1 லட்சம் ரூபாயை இந்தத் திட்டத்தில் முதலீடு செய்கிறார். வட்டி ஆண்டுக்கு 8.5%. அவருக்கு மூன்று மாதங்கள் கழித்து எவ்வளவு தொகை கிடைக்கும்? வட்டி = (1,00,000 X 8.5) / (4X100) = 1,00,000 / 400 = 2,125.<br /> ஐந்து ஆண்டுகள் வரை முதலீட்டைத் திரும்ப எடுக்க முடியாது. அதன்பிறகு முதலீட்டுத் தொகை திரும்ப அளிக்கப்படும்போது எடுத்துக் கொள்ளலாம். தேவைப்பட்டால், மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்துக்கொள்ளலாம்.<br /> <br /> இந்தத் திட்டத்தின்கீழ் செய்யப்படும் முதலீட்டுக்கு மூத்த குடிமக்கள் நிபந்தனைக்கு உட்பட்டு, நிதி ஆண்டில் ரூ. 1.5 லட்சம் வரைக்கும் வரிச் சலுகை பெற முடியும். வட்டி வருமானத்துக்கு வரி உண்டு. <br /> <br /> நிதி ஆண்டில் வட்டி வருமானம் 10,000 ரூபாயைத் தாண்டும்போது மூலத்தில் வரி (டிடிஎஸ்) பிடிக்கப்படும். இதைத் தவிர்க்க, படிவம் 15ஜி அல்லது 15 ஹெச் சமர்ப்பிக்க வேண்டும். இந்தத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் வட்டி வருமானம், ஒருவரின் இதர வருமானமாகக் கருதப்படும். அது அவரின் வருமானத்துடன் சேர்க்கப்பட்டு, அடிப்படை வருமான வரம்புக்கு ஏற்ப (10%, 20%, 30 %) வரி கட்ட வேண்டிவரும். <br /> <br /> இந்த மூத்த குடிமக்கள் திட்டத்தில் சேர்ந்துவிட்டு, இடையில் விலகினால் அபராதம் உண்டு. ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளுக்குள் கணக்கை முடித்தால், முதலீட்டுத் தொகையில் 1.5% அபராதமாகச் செலுத்த வேண்டும். இரண்டு ஆண்டுகள் கழித்த நிலையில், 1% அபராதம் உண்டு. இதை ஓர் உதாரணம் மூலம் பார்ப்போம். <br /> <br /> ஒருவர் ரூ.1 லட்சம் முதலீடு செய்துவிட்டு, இரண்டு ஆண்டுக்குள் கணக்கை முடித்தால் ரூ.1,500 அபராதமாகச் செலுத்த வேண்டும். வெளிநாட்டு இந்தியர்கள், இந்துக் கூட்டுக் குடும்பத்தினர் இதில் முதலீடு செய்ய அனுமதி இல்லை.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் முக்கியமான 10 அம்சங்கள்</strong></span><br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">1. </span></strong>ரிஸ்க் தேவையில்லை என்று நினைக்கும் மூத்த குடிமக்களுக்கு ஏற்றது.<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">2. </span></strong>தபால் அலுவலகச் சேமிப்புத் திட்டங்களில் அதிக வட்டி கிடைக்கும் திட்டம் இது.<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">3.</span></strong> வட்டி வருமானம் ஐந்தாண்டுகளுக்கு மாறாது.</p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">4. </span></strong>முதலீட்டுச் செலவுக்கு இல்லை.<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">5. </span></strong>நாமினி நியமன வசதி உண்டு. கணக்கை முடிக்கும்முன் எப்போது வேண்டுமானலும் நாமினியை நியமித்துக்கொள்ளலாம். <br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">6. </span></strong>ஒருவரே ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை இயக்கலாம். ஆனால், முதலீட்டு உச்சவரம்பு ரூ.15 லட்சம்தான். <br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">7. </span></strong>ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு கணக்கை மாற்றிக்கொள்ள முடியும்.<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">8. </span></strong>மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வட்டி வருமானம் வங்கி சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்படும். <br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">9</span></strong>. ஐந்தாண்டுகளுக்குப் பின், முதலீட்டை மூன்றாண்டுகளுக்கு நீடித்த நிலையில், ஓராண்டு நிறைவு பெற்றபிறகு எடுக்கப்படும் தொகைக்கு அபராதம் இல்லை. <br /> <span style="color: rgb(255, 0, 0);"><br /> 10.</span> ஆன்லைன் மூலம் சேர்ந்துகொள்ளும் வசதியும் இந்தத் திட்டத்தில் உண்டு. <br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">(பணம் பெருகும்)</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">செல்வ மகள் திட்டம்: வங்கிகளின் பட்டியல்!</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">செ</span></strong>ல்வ மகள் சேமிப்புத் திட்டத்தைத் தொடங்க அனுமதி பெற்ற இந்திய பொதுத் துறை வங்கிகள் பற்றிய விவரம்:<br /> <br /> எஸ்பிஐ மற்றும் அதன் துணை வங்கிகள், அலகாபாத் வங்கி, ஆந்திரா வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, கார்ப்பரேஷன் வங்கி, தேனா வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஐடிபிஐ வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், பஞ்சாப் தேசிய வங்கி, பஞ்சாப் & சிந்து வங்கி, சிண்டிகேட் வங்கி, யூகோ வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா, விஜயா வங்கி.</p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">பிரதமரின் புத்தாண்டுப் பரிசு!</span></strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);">பி</span>ரதமர் நரேந்திர மோடி, புத்தாண்டுப் பரிசாக மூத்தக் குடிமக்கள் ரூ.7.5 லட்சம் வரையில் செய்யும் முதலீட்டுக்கு ஆண்டுக்கு 8% வட்டி வழங்கப்படும் என அறிவித்தார். பத்தாண்டுத் திட்டமான இதில் மாதம் தோறும் வட்டி வழங்கப் படும். முதலீடு மற்றும் வட்டி வருமானத்துக்கு வரிச் சலுகை உண்டா என்பது இன்னும் தெளிவு படுத்தப்படாமல் இருக்கிறது. விரைவில் தாக்கல் செய்யப்பட இருக்கும் மத்திய பட்ஜெட் டில் இது தெளிவாகும். </p>
<p><strong><span style="color: rgb(255, 0, 0);">“க</span></strong>டந்த இதழில் பெண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டம் பற்றி விரிவாகக் குறிப்பிட்டிருந்தீர்கள். இதேபோல், ஆண் குழந்தைகளின் எதிர்காலத் தேவைக்குச் சேமிக்க ஏதாவது திட்டம் தபால் அலுவலகத்தில் இருக்கிறதா?” என நெல்லை மாவட்டம் கடையத்தைச்சேர்ந்த கமலக்கண்ணன் கேட்டிருக்கிறார். அதுகுறித்து இப்போது பார்ப்போம்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong> பொன் மகன் பொது வைப்பு நிதித் திட்டம்</strong></span><br /> <br /> ஆண் குழந்தைகளின் எதிர்காலத் தேவைக்கு முதலீடு செய்ய, ‘பொன் மகன் பொது வைப்பு நிதித் திட்டம்’ தபால் அலுவலகத்தில் இருக்கிறது. இந்தத் திட்டத்தில் செலுத்தப்படும் தொகைக்கு, 80சி பிரிவில், வருமானவரி விலக்கு அளிக்கப்படு கிறது. வட்டி வருமானத்துக்கும் வரிச் சலுகை அளிக்கப்படுகிறது. <br /> <br /> 10 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள், பெற்றோர்/ பாதுகாப்பாளர் உதவியுடன் இந்தத் திட்டத்தில் கணக்குத் தொடங்கலாம்; 10 வயதுக்கு மேற்பட்ட ஆண் குழந்தைகள் இந்தத் திட்டத்தில் தாங்களாகவே கணக்குத் தொடங்கலாம். இந்தத் திட்டத்தின்கீழ் கணக்குத் தொடங்க அதிகபட்ச வயது வரம்பு எதுவும் கிடையாது. <br /> <br /> ஆண்டுக்கு, 100 ரூபாய் முதல் 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். கணக்குத் தொடங்கிய மூன்றாம் ஆண்டிலிருந்து, கடன் வசதி இருக்கிறது. ஏழாம் ஆண்டில், 50 சதவிகிதத் தொகையைத் திரும்பப் பெறலாம். இது 15 ஆண்டு காலத் திட்டம். அதாவது, பொதுமக்கள் சேமநல நிதித் திட்டமான பிபிஎஃப்-ன் (பப்ளிக் பிராவிடென்ட் ஃபண்ட்) அம்சங்களை அப்படியே கொண்டு, இந்தத் திட்டத்துக்கு ‘பொன் மகன் பொது வைப்பு நிதித் திட்டம்’ என மத்திய அரசு பெயர் வைத்திருக்கிறது. <br /> <br /> பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் ஆண்டுக்கு 8.5% வட்டி வழங்கும் மத்திய அரசு, பொன் மகன் பொது வைப்பு நிதித் திட்டத்தில் ஆண்டுக்கு 8 சதவிகிதமே வட்டி வழங்குவது கவனிக்கத்தக்கது. <br /> <strong><br /> </strong><span style="color: rgb(255, 0, 0);"><strong> மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்! </strong></span><br /> <br /> அடுத்து, தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்களில் ஒன்றான, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizen Savings Scheme (SCSS) Account) பற்றி விரிவாகப் பார்ப்போம். <br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong> அடிப்படைத் தகுதி</strong></span><br /> <br /> கடந்த 2004-ம் ஆண்டு இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்ட மிகவும் மூத்த குடிமக்களுக்கு வருமானவரியைச் சேமிக்கும் திட்டம் இது. <br /> <br /> விருப்ப ஓய்வுத் திட்டத்தின் கீழ் முன்கூட்டியே ஓய்வுபெற்ற 55 வயதுள்ளவர்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். பணி ஓய்வுபெற்ற ஒரு மாதத்துக்குள் இதில் முதலீடு செய்துவிட வேண்டும். முதலீட்டுத் தொகை பணி ஓய்வின்போது கிடைத்தத் தொகையை விட அதிகமாக இருக்கக்கூடாது. ராணுவப் பணியிலிருந்து ஓய்வுபெற்றவர்கள், வயது வரம்பு எதுவும் இல்லாமல் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong> குறைந்த முதலீட்டுத் தொகை</strong></span><br /> <br /> இந்தத் திட்டத்தில் குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ.1,000 ஆக உள்ளது. அதன் பிறகு, ஆயிரத்தின் மடங்குகளில் முதலீடு செய்யலாம். அதிகபட்ச முதலீட்டுத் தொகை ரூ.15 லட்சம். கணவன் - மனைவி கூட்டாக இந்தக் கணக்கை ஆரம்பிக்கலாம். <br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>எங்கே முதலீட்டை ஆரம்பிப்பது?</strong></span><br /> <br /> தபால் அலுவலகம், எஸ்பிஐ, ஐசிஐசிஐ போன்ற வங்கிகள் மூலம் முதலீடு செய்யலாம். தற்போதைய நிலையில், சில வங்கிகளில் இந்தத் திட்டத்தில் ஆன்லைன் மூலம் சேர்ந்துகொள்ளும் வசதி இருக்கிறது. <br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong> தேவையான ஆதாரங்கள்</strong></span><br /> <br /> அடையாளம், வயது, முகவரிக்கான ஆதாரங்களைக் கொடுக்க வேண்டும். மார்பளவு புகைப்படங்கள் இரண்டு தேவைப்படும்.<br /> <br /> கணக்குத் தொடங்கும்போது, அசல் சான்றிதழ்களை உடன் எடுத்துச்செல்வது அவசியம். <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);"> <br /> </span></strong><span style="color: rgb(255, 0, 0);"><strong> வட்டி வருமானம், முதலீட்டுக் காலம்! </strong></span><br /> <br /> தற்போதைய நிலையில், ஆண்டுக்கு 8.5% வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும். மார்ச் 31, ஜூன் 30, செப்டம்பர் 30, டிசம்பர் 31 ஆகிய தேதிகளில் வட்டி வழங்கப்படும். <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);"><br /> </span></strong><span style="color: rgb(255, 0, 0);"><strong>வட்டி கணக்கிடும் ஃபார்முலா</strong></span><br /> <br /> வட்டி கணக்கிடுவதற்கான ஃபார்முலா இதுதான்... Pr / (4X100). இதில் P என்பது Principal, அதாவது, அசல்; r என்பது Interest Rate, அதாவது வட்டி விகிதம். இந்த ஃபார்முலாவை ஓர் உதாரணத்துடன் சொன்னால் நன்றாகப் புரியும். <br /> <br /> ஒருவர் ரூ. 1 லட்சம் ரூபாயை இந்தத் திட்டத்தில் முதலீடு செய்கிறார். வட்டி ஆண்டுக்கு 8.5%. அவருக்கு மூன்று மாதங்கள் கழித்து எவ்வளவு தொகை கிடைக்கும்? வட்டி = (1,00,000 X 8.5) / (4X100) = 1,00,000 / 400 = 2,125.<br /> ஐந்து ஆண்டுகள் வரை முதலீட்டைத் திரும்ப எடுக்க முடியாது. அதன்பிறகு முதலீட்டுத் தொகை திரும்ப அளிக்கப்படும்போது எடுத்துக் கொள்ளலாம். தேவைப்பட்டால், மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்துக்கொள்ளலாம்.<br /> <br /> இந்தத் திட்டத்தின்கீழ் செய்யப்படும் முதலீட்டுக்கு மூத்த குடிமக்கள் நிபந்தனைக்கு உட்பட்டு, நிதி ஆண்டில் ரூ. 1.5 லட்சம் வரைக்கும் வரிச் சலுகை பெற முடியும். வட்டி வருமானத்துக்கு வரி உண்டு. <br /> <br /> நிதி ஆண்டில் வட்டி வருமானம் 10,000 ரூபாயைத் தாண்டும்போது மூலத்தில் வரி (டிடிஎஸ்) பிடிக்கப்படும். இதைத் தவிர்க்க, படிவம் 15ஜி அல்லது 15 ஹெச் சமர்ப்பிக்க வேண்டும். இந்தத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் வட்டி வருமானம், ஒருவரின் இதர வருமானமாகக் கருதப்படும். அது அவரின் வருமானத்துடன் சேர்க்கப்பட்டு, அடிப்படை வருமான வரம்புக்கு ஏற்ப (10%, 20%, 30 %) வரி கட்ட வேண்டிவரும். <br /> <br /> இந்த மூத்த குடிமக்கள் திட்டத்தில் சேர்ந்துவிட்டு, இடையில் விலகினால் அபராதம் உண்டு. ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளுக்குள் கணக்கை முடித்தால், முதலீட்டுத் தொகையில் 1.5% அபராதமாகச் செலுத்த வேண்டும். இரண்டு ஆண்டுகள் கழித்த நிலையில், 1% அபராதம் உண்டு. இதை ஓர் உதாரணம் மூலம் பார்ப்போம். <br /> <br /> ஒருவர் ரூ.1 லட்சம் முதலீடு செய்துவிட்டு, இரண்டு ஆண்டுக்குள் கணக்கை முடித்தால் ரூ.1,500 அபராதமாகச் செலுத்த வேண்டும். வெளிநாட்டு இந்தியர்கள், இந்துக் கூட்டுக் குடும்பத்தினர் இதில் முதலீடு செய்ய அனுமதி இல்லை.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் முக்கியமான 10 அம்சங்கள்</strong></span><br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">1. </span></strong>ரிஸ்க் தேவையில்லை என்று நினைக்கும் மூத்த குடிமக்களுக்கு ஏற்றது.<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">2. </span></strong>தபால் அலுவலகச் சேமிப்புத் திட்டங்களில் அதிக வட்டி கிடைக்கும் திட்டம் இது.<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">3.</span></strong> வட்டி வருமானம் ஐந்தாண்டுகளுக்கு மாறாது.</p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">4. </span></strong>முதலீட்டுச் செலவுக்கு இல்லை.<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">5. </span></strong>நாமினி நியமன வசதி உண்டு. கணக்கை முடிக்கும்முன் எப்போது வேண்டுமானலும் நாமினியை நியமித்துக்கொள்ளலாம். <br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">6. </span></strong>ஒருவரே ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை இயக்கலாம். ஆனால், முதலீட்டு உச்சவரம்பு ரூ.15 லட்சம்தான். <br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">7. </span></strong>ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு கணக்கை மாற்றிக்கொள்ள முடியும்.<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">8. </span></strong>மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வட்டி வருமானம் வங்கி சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்படும். <br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">9</span></strong>. ஐந்தாண்டுகளுக்குப் பின், முதலீட்டை மூன்றாண்டுகளுக்கு நீடித்த நிலையில், ஓராண்டு நிறைவு பெற்றபிறகு எடுக்கப்படும் தொகைக்கு அபராதம் இல்லை. <br /> <span style="color: rgb(255, 0, 0);"><br /> 10.</span> ஆன்லைன் மூலம் சேர்ந்துகொள்ளும் வசதியும் இந்தத் திட்டத்தில் உண்டு. <br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">(பணம் பெருகும்)</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">செல்வ மகள் திட்டம்: வங்கிகளின் பட்டியல்!</span></strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">செ</span></strong>ல்வ மகள் சேமிப்புத் திட்டத்தைத் தொடங்க அனுமதி பெற்ற இந்திய பொதுத் துறை வங்கிகள் பற்றிய விவரம்:<br /> <br /> எஸ்பிஐ மற்றும் அதன் துணை வங்கிகள், அலகாபாத் வங்கி, ஆந்திரா வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, கார்ப்பரேஷன் வங்கி, தேனா வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஐடிபிஐ வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், பஞ்சாப் தேசிய வங்கி, பஞ்சாப் & சிந்து வங்கி, சிண்டிகேட் வங்கி, யூகோ வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா, விஜயா வங்கி.</p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">பிரதமரின் புத்தாண்டுப் பரிசு!</span></strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);">பி</span>ரதமர் நரேந்திர மோடி, புத்தாண்டுப் பரிசாக மூத்தக் குடிமக்கள் ரூ.7.5 லட்சம் வரையில் செய்யும் முதலீட்டுக்கு ஆண்டுக்கு 8% வட்டி வழங்கப்படும் என அறிவித்தார். பத்தாண்டுத் திட்டமான இதில் மாதம் தோறும் வட்டி வழங்கப் படும். முதலீடு மற்றும் வட்டி வருமானத்துக்கு வரிச் சலுகை உண்டா என்பது இன்னும் தெளிவு படுத்தப்படாமல் இருக்கிறது. விரைவில் தாக்கல் செய்யப்பட இருக்கும் மத்திய பட்ஜெட் டில் இது தெளிவாகும். </p>