<table align="left" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p>இசையும், இலக்கியமும்...</p>.<p>''ஒரே மனநிலையில் நம்மால் எப்போதும் இருக்க முடிவதில்லை. நாம் சில முடிவுகளை எடுப்போம்; சூழல், சில முடிவுகளை நம்மை எடுக்க வைக்கும். எடுத்துள்ள முடிவு நடைமுறையில் என்ன விளைவைத் தரும் என்கிற யோசனை எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும். தொழிலின் ஒவ்வொருநாள் நிலைமையும் சவால் நிறைந்ததாகவே இருக்கும். இத்தனை ஆர்ப்பாட்டங்களில் இருந்தும் என்னை ஆசுவாசப்படுத்துவது புத்தகங்களும், இசையும்தான்.</p>.<p>ஒவ்வொரு நாளும் அலுவலகத்துக்கு கிளம்பும்போது பல வேலைகளைக் குறித்து வைத்துக்கொண்டு போவேன். வீடு திரும்பும்போது சில வேலைகள் முடிக்கப்படாமலே இருக்கும். இந்த மனநிலையிலிருந்து என்னை முற்றிலுமாக மாற்றிவிடும் சக்தி இசை, இலக்கியத்துக்கு உண்டு.</p>.<p>சிறு வயது முதலே புத்தகங்களை ஆர்வமாகப் படிப்பேன். அது இப்போதும் தொடர்கிறது. சங்க இலக்கிய நூல்கள் இப்போதும் என்னை வசீகரிக்கின்றன. கண்ணதாசன் என் மனம் கவர்ந்த எழுத்தாளர். சுஜாதா படைப்புகளை என்னை மறந்து படிப்பேன்.</p>.<p>என்னை இலகுவாக்கும் இன்னொரு விஷயம், இசை. புத்தகம் படிக்கும்போதுகூட பின்னணியில் மெலிதான இசை ஒலிப்பதை விரும்புவேன். பழைய தமிழ் பாடல்கள், இந்தி பாடல்கள் இன்றும் என் இனிய தேர்வாக உள்ளது. காரில் தனிமையில் பயணிக்கும்போதுகூட மெல்லிய இசை ஒலித்துக்கொண்டிருந்தால் ஆசுவாசமாக உணர்வேன்.</p>.<p>இசையும், இலக்கியமும் எனக்குள் இருக்கும் பரபரப்பை அடக்கி, என்னை அமைதியடையச் செய்துவிடுவதால் வேறுமாதிரியான எந்தவகை ரிலாக்ஸேஷனையும் நான் விரும்புவதில்லை. நல்ல இசை கேட்டு, நல்ல இலக்கியம் படிக்க எனக்கு இன்னொரு ஜென்மம் வேண்டும்!</p>.<p style="text-align: right"><span style="color: #800080">- நீரை.மகேந்திரன்,<br /> படம்: தே.தீட்ஷித்.</span></p>
<table align="left" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p>இசையும், இலக்கியமும்...</p>.<p>''ஒரே மனநிலையில் நம்மால் எப்போதும் இருக்க முடிவதில்லை. நாம் சில முடிவுகளை எடுப்போம்; சூழல், சில முடிவுகளை நம்மை எடுக்க வைக்கும். எடுத்துள்ள முடிவு நடைமுறையில் என்ன விளைவைத் தரும் என்கிற யோசனை எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும். தொழிலின் ஒவ்வொருநாள் நிலைமையும் சவால் நிறைந்ததாகவே இருக்கும். இத்தனை ஆர்ப்பாட்டங்களில் இருந்தும் என்னை ஆசுவாசப்படுத்துவது புத்தகங்களும், இசையும்தான்.</p>.<p>ஒவ்வொரு நாளும் அலுவலகத்துக்கு கிளம்பும்போது பல வேலைகளைக் குறித்து வைத்துக்கொண்டு போவேன். வீடு திரும்பும்போது சில வேலைகள் முடிக்கப்படாமலே இருக்கும். இந்த மனநிலையிலிருந்து என்னை முற்றிலுமாக மாற்றிவிடும் சக்தி இசை, இலக்கியத்துக்கு உண்டு.</p>.<p>சிறு வயது முதலே புத்தகங்களை ஆர்வமாகப் படிப்பேன். அது இப்போதும் தொடர்கிறது. சங்க இலக்கிய நூல்கள் இப்போதும் என்னை வசீகரிக்கின்றன. கண்ணதாசன் என் மனம் கவர்ந்த எழுத்தாளர். சுஜாதா படைப்புகளை என்னை மறந்து படிப்பேன்.</p>.<p>என்னை இலகுவாக்கும் இன்னொரு விஷயம், இசை. புத்தகம் படிக்கும்போதுகூட பின்னணியில் மெலிதான இசை ஒலிப்பதை விரும்புவேன். பழைய தமிழ் பாடல்கள், இந்தி பாடல்கள் இன்றும் என் இனிய தேர்வாக உள்ளது. காரில் தனிமையில் பயணிக்கும்போதுகூட மெல்லிய இசை ஒலித்துக்கொண்டிருந்தால் ஆசுவாசமாக உணர்வேன்.</p>.<p>இசையும், இலக்கியமும் எனக்குள் இருக்கும் பரபரப்பை அடக்கி, என்னை அமைதியடையச் செய்துவிடுவதால் வேறுமாதிரியான எந்தவகை ரிலாக்ஸேஷனையும் நான் விரும்புவதில்லை. நல்ல இசை கேட்டு, நல்ல இலக்கியம் படிக்க எனக்கு இன்னொரு ஜென்மம் வேண்டும்!</p>.<p style="text-align: right"><span style="color: #800080">- நீரை.மகேந்திரன்,<br /> படம்: தே.தீட்ஷித்.</span></p>