
ஒருவருக்கு வீட்டுக் கடன் கிடைப்பதில் சிபில் அறிக்கைக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. அது என்ன சிபில் அறிக்கை என்கிறீர்களா?
இந்தியாவிலுள்ள வங்கிகள் மற்றும் நிதிச் சேவை நிறுவனங்களில் பல்வேறு கடன் வாங்கியவர்களின் விவரங்களைக் கொண்டிருக்கும் அமைப்புதான் சிபில் (CIBIL - Credit Information Bureau India Limited).

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
##~## |
ஒருவர் வீட்டுக் கடன் கேட்டு வங்கிக்குச் செல்லும்போது, அந்த நபர் இதற்கு முன் வாங்கிய கடன்களை ஒழுங்காகத் திருப்பிச் செலுத்தி இருக்கிறாரா, நிலுவை ஏதாவது வைத்திருக்கிறாரா என்ற விவரத்தை சிபில் அமைப்பில் உறுப்பினராக உள்ள வங்கியால் நொடியில் அறிந்துகொண்டு, அவருக்குக் கடன் கொடுப்பதா, வேண்டாமா என்ற முடிவை விரைந்து எடுக்க முடியும்.
சிபில் அறிக்கையில், ஒருவருக்குக் கடன் கொடுக்கலாமா என்பதைக் குறிக்கும் வகையில் அதில் ஸ்கோர்கள் குறிக்கப் பட்டிருக்கும்.
கடன் வாங்கியவர் அதனை திருப்பிச் செலுத்துவதை வைத்து 300 முதல் 900 வரையில் ஸ்கோர் கொடுக்கப்படுகிறது. இதில் ஸ்கோர் 600-க்கு மேல் உள்ளவர்களுக்கு அதிக விசாரணை இல்லாமல் எளிதாக வீட்டுக் கடன் கிடைக்கும். கடனை ஒழுங்காகச் செலுத்தி வருபவர்களுக்கு சிபில் அறிக்கை பலமாக, நண்பனாகவே இருக்கிறது.

கடன் வாங்கப் போகிறவர் சிபில் அறிக்கையில் தன்னைப் பற்றிய விவரங்கள் எப்படி இருக்கின்றன என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் வசதி இருக்கிறது.
புகைப்படத்துடன் கூடிய ஆதாரம் (செல்லத்தக்க பான் கார்ட், பாஸ் போர்ட், ஓட்டுநர் உரிமம்) மற்றும் முகவரிக்கான ஆதாரத்துடன் (வங்கிக் கணக்கு, தொலைபேசி மற்றும் மின்சாரக் கட்டண ரசீது - இவை கடந்த மூன்று மாதத்துக்குள் பெற்றதாக இருக்க வேண்டும்) சிபில் இணைய தளத்திலிருந்து டௌன்லோட் செய்த விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். இதற்கான கட்டணம் ரூ.154-ஐ சிக்ஷீமீபீவீt மிஸீயீஷீக்ஷீனீணீtவீஷீஸீ ஙிuக்ஷீமீணீu (மிஸீபீவீணீ) என்ற பெயருக்கு மும்பையில் மாற்றத்தக்க வகையில் டிமாண்ட் டிராப்ட்டாக எடுத்து அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
Consumer Relations, Credit Information Bureau (India) Limited, Hoechst House, 6th Floor, 193, Backbay Reclamation, Nariman Point, Mumbai 400 021.
- சேனா சரவணன்
62% ஃபிளாட்தான் சரியான டெலிவரி..! சென்னையைச் சேர்ந்த கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன்ஸ் ஆஃப் இந்தியா மற்றும், எம்.ஓ.பி. வைஷ்ணவா பெண்கள் கல்லூரி இணைந்து அண்மையில் சென்னையில் ரியல் எஸ்டேட் சர்வே ஒன்றை நடத்தியது அதன் முடிவுகள்.... 62 சதவிகித ஃபிளாட்கள்தான் சரியான நேரத்தில் கட்டி முடிக்கப்பட்டு டெலிவரி கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், 53% பேருக்குதான் பில்டர்கள் வாக்குறுதி கொடுத்தபடி பல விஷயங்களை செய்து கொடுத்திருக்கிறார்கள். வீட்டுக் கட்டுமானம் தாமதமாகவதற்கு 54% அரசு அப்ரூவல் பெறுவதிலுள்ள தாமதங்களும், 24% வங்கிக் கடன் பெறுவதிலுள்ள கால தாமதமும் காரணமாக இருக்கிறது. கால தாமதம் மற்றும் வாக்குறுதியை நிறைவேற்றாததற்கு 33% பில்டர்கள்தான் இழப்பீடு வழங்கி இருக்கிறார்கள். சுமார் 75 சதவிகிதம் பில்டர்களிடம் பிரச்னைகளை கொண்டு செல்லவோ, அவர்கள் மீது புகார் கொடுக்கவோ இல்லை..! |