வணக்கம் சுட்டி நண்பர்களே...
இன்றைய நவீன தொழில்நுட்பம், உலகைச் சுருக்கி உள்ளங்கையில் கொடுத்துள்ளது. உலகின் எந்த மூலையில் என்ன நடந்தாலும் உடனடியாக அறியமுடிகிறது. எந்த நூற்றாண்டில் நடந்த விஷயம் என்றாலும் அந்தப் பெயரைத் தட்டினால் தெரிந்துகொள்ள முடிகிறது. இது, நிச்சயமாக அறிவியலின் அதை உருவாக்கிய மனித மூளையின் மாபெரும் சாதனையே.
உலகின் மறுபக்கத்தைத் தெரிந்துவைத்திருக்கும் அதேநேரம், நமக்கு மிக அருகில், நம் வசிப்பிடத்தைச் சுற்றி இருக்கும் வரலாற்றை, பண்பாட்டை, கலாசாரத்தை, அதை உருவாக்கிய மேதைகளைத் தெரிந்துவைத்திருப்பது மிக முக்கியம். பக்கத்து வீட்டில் வசிப்பவரின் பெயரே தெரியாமல், எங்கோ நடப்பதைப் பற்றி பேசுவதில் என்ன பயன்?