சத்யாவும் மாயப் பென்சிலும்
ஃபேன்டஸி, இயற்கை மீதான நேசம், விலங்குகள் மீதான பாசம், நகைச்சுவை என இதில் இடம்பெற்றிருக்கும் 10 சிறுகதைகளையும் ஒவ்வொரு சுவையில் எழுதியிருக்கிறார், எழுத்தாளரும் பள்ளி ஆசிரியருமான க.சரவணன். கதைகளுக்கு அவரின் மகள் வரைந்திருக்கும் ஓவியங்கள் புத்தகத்துக்கு மேலும் அழகு சேர்க்கிறது. இந்தத் தொகுப்பில் இருக்கும் ‘சத்யாவும் மாயப் பென்சிலும்’ கதையைக் குறித்து சுட்டி ஸ்டார்களின் விமர்சனம்...